Showing posts with label Defending Rights. Show all posts
Showing posts with label Defending Rights. Show all posts

Monday, May 13, 2013

33 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஈரான் ஒரு உண்மையான வல்லரசு

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 33 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுமுகமாக ஈரானில் பல முக்கிய நகரங்களில் ஊர்வலங்களும்  பொதுக் கூட்டங்களும் கோலாகல வைபங்களும் நடை பெற்றன. இக் கூட்டங்களில் மிகப் பிரமாண்டமான கூட்டம் வழமை போல் ஈரானின் தலை நகரான தெஹ்ரானில் உள்ள அஸாதி சதுக்கத்தில் நடை பெற்றதுடன் அதன் போது சுமார் 30 இலட்சம் மக்கள் அதில் பங்கேற்றனர். தலை நகரின் வட மேல் திசையில் அமைந்துள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சதுக்கத்தை  நோக்கி தேசத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் சாரி சாரியாக வந்து  குழுமி இருந்தனர். 

ஷாவும் அவனது குடும்பத்தினரும்,
கூட்டாளிகளும் 1979 ஜனவரி 16 ஆம்
 திகதி ஈரானை விட்டு தப்பி ஓட்டம்.
  
33 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய புரட்சியின் மிக முக்கியமான கட்டத்தில் கொடுங்கோலன் ஷா இப்புரட்சியை தூண்டி விட்ட இமாம் கொமைனி அவர்களை நாட்டை விட்டு தூரமாக்கி வைப்பதால் புரட்சியின் சீற்றத்தை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இமாம் அவர்களை பிரான்சின் தலை நகரான பாரிசிற்கு நாடு கடத்தினான். ஆனால் அங்கு இருந்தபடியே தொடர்ந்தும் தன்னுடைய உணர்ச்சி பூர்வ சொற் பொழிவுகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்து இரகசியமாக ஈரானுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் புரட்சியின் அக்கினிப் பிலம்புகள் அணையாமல் எரிந்து விடப்பட்டன. இறுதியில் அதன் சீற்றத்தைத் தாங்க முடியாமல் போன ஷாவும் அவனது குடும்பத்தினரும் கூட்டாளிகளும் 1979 ஜனவரி 16 ஆம் திகதி ஈரானை விட்டு தப்பி ஓடியதன் மூலம் ஈரானனுக்கு பிடித்திருந்த பீடை ஒழிந்தது.

எயார் பிரான்ஸ் ஜம்போ ஜெட் விமானம்
 மூலம் இமாம் கொமைனி அவர்கள்
 ஈரானுக்கு வந்து சேர்ந்தார்கள்.
  
அன்றில் இருந்து இரு வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரி முதலாம் திகதி விஷேடமாக அமர்த்தப்பட்ட எயார் பிரான்ஸ் ஜம்போ ஜெட் விமானம் மூலம் இமாம் கொமைனி அவர்கள் ஈரானுக்கு வந்து சேர்ந்தார்கள். அதன் போது இமாம் அவர்களை வரவேற்பதற்காக தலை நகர் தெஹ்ரானுக்கு வந்திருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 60 இலட்சம் ஆகும். இவ்வாறு அன்று உதித்த ஈரான் இஸ்லாமிய குடியரசு சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இன்று ஒரு உண்மையான வல்லரசாக தலை நிமிர்ந்து நிற்கின்றது என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத்  அஹ்மட் நெஜாத் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
 
'பரஸ்பர கண்ணியத்தைப் பேணிய வண்ணம் ஈரானுடன் பேச்சு வார்த்தை நடாத்த ஐக்கிய அமெரிக்கா தயாராகும் பட்சத்தில் ஈரான் அதனை ஏற்கவே செய்யும். பெயரளவு மாற்றம் ஒன்று அல்லாமல் உண்மையான அடிப்படைக் கொள்கை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வொஷிங்டன் தாயாராகும் நிலையில் மாத்திரமே இவ்வாறான சந்திப்பு ஒன்று சாத்தியமாகும்' என்றும் நெஜாத் வலியுறுத்தினார்.
 
தொடர்ந்து பல ஆண்டுகளாக அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் துணை நின்று தானும் நேரடியாக அவைகளில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக ஐக்கிய அமெரிக்கா உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளது மாத்திரம் அல்லாது அநீதியை வெறுத்து ஒதுக்கும் சகல நாடுகளினதும் வெறுப்பிற்கு இலக்காகி உள்ளது. இந்த  நிலையில் அமெரிக்கா பெரும் பொருளாதார சிக்கலிலும் சிக்கித் தவிப்பதை காணலாம். இவ்வாறான அவல நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு மாற்றம் தேவை என்பதை வொஷிங்டன் காலம் கடந்தேனும் உணர்ந்து உள்ளது. இருந்து போதிலும் அது கூறும் மாற்றம் உண்மையான மாற்றங்களாக இருக் வேண்டும் என ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 
'ஜோர்ஜ் புஷ்ஷின் இருண்ட ஆட்சிக் காலம் போன்றதொரு காலத்தை மீண்டும் கொண்டு வர எண்ணுபவர்கள் புஷ்ஷினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழிவை விட பாரிய ஒரு இழிவையே பெறுவார்கள். அதன் மூலம்  அமெரிக்க மக்கள் இப்போது உள்ளதை விட மிக கேவளமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.' என்றும் அஹ்மத் நெஜாதி எச்சரித்தார்.
 
தொடர்ந்து பேசிய ஈரானிய ஜனாதிபதி, 'அல்லாஹ்வின் அருளாலும் ஈரானிய மக்களின் திட நம்பிக்கையின் காரணமாகவும் ஈரானுக்கு இருந்த பல தடைகள் தற்போது நீங்கி உள்ளன' என்றும் கூறினார். மேலும் அவர் ஈரான் விண்வெளி, அணு சக்தி தொழில் நுட்பம், அதி உயர் மருத்துவத் துறை போன்ற துறைகளில் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிகளை குறிப்பிட்டு தான் ஈரான் ஒரு வல்லரசாக உயர்ந்து உள்ளதை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாக கூறினார். 
 
கடந்த பல ஆண்டுகளாக ஈரான் விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளில் பெற்று வந்துள்ள முன்னேற்றத்தைக் கண்ணுறும் சர்வதேச அரசியல் ஆய்வாலர்கள் ஈரான் இன்று ஒரு முக்கிய பலமிக்க நாடாக உயர்ந்து இருப்பதை மறுப்பதற்கு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் சகல முக்கிய துறைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ள ஈரான், தன்னுடைய எந்த தேவைக்காகவும் பிற நாடுகளிடம் கை ஏந்தும் நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இந்த அம்சங்களே ஒரு நாட்டை வல்லரசு என வகைப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.
 
குறிப்பாக மருத்துவத் துறையில் ஈரான் பாரிய வெற்றிகளை பெற்று வருகின்றது. சில தசாப்தங்களுக்கு முன்பு முக்கிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களின் துணையை நாடவேண்டிய நிலையில் இருந்து ஈரானை நோக்கி இன்று மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கும் ஏனைய அதி உயர் தொழில் நுட்ப சிகிச்சைகளுக்கும் நோயாளர்கள் வெளி நாடுகளில் இருந்து வரும் நிலைக்கு ஈரான் முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதையும் சர்வதேச அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tuesday, January 31, 2012

அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பதே உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும்

 
மக்கள் தங்களது உரிமைகளைக் கேட்டு நிற்பதும் அதற்காகப் போராடுவதும் அவர்கள் முன்னேறுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளில்  உள்ளதாகும் என ஈரானிய புரட்சியின் அதி உயர் தலைவர் ஆயாத்துல்லாஹ் செய்யித் அலி காமனேயி குறிப்பிட்டார்.
 
தெஹ்ரானுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி ரபாயல் கொரையா தெல்காதோவை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போதே தலைவர் காமனேயி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற போராட்டங்களில் மக்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருப்பதும் அவசியம் என்று  அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 'லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இவ்வாறான தலைவர்கள் அமைந்திருப்பது அம்மக்களின் அதிர்ஷ்டமே' என்றும் பாராட்டினார்.
 
'எம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக பொங்கி எழுவது சிறந்த ஒரு தன்மையாக இருந்து போதிலும், இன்று பெரும்பான்மை மக்கள் அச்சுறுத்தல்களைக்; கண்டு பின்வாங்குவதையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது' என்றும் தலைவர் கவலை தெரிவித்தார்.
 
தொடர்ந்த பேசிய அவர், தங்களது உரிமைகளுக்காக வீறு கொண்டு பொங்கி எழும் விடயத்தில் ஈரான் முழு உலகிற்கும் முன் உதாரணம் காட்டியுள்ளது என்பதையும் நினைவு படுத்தினார். கொடுங்கோளன் ஷா விடமிருந்து விடுதலை பெற்றதட்குப் பிறகும் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான தீய சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைக்கு எதிராகவும் ஈரான் இடை விடாது போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில வருடங்களுக்கு முன்பு அண்டை நாடாகிய ஈராக்கினால் தமது தேசதிற்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றியும், அதைத் தொடர்ந்து சுமார் ஒன்பது ஆண்டு காலமாக ஈராக்குடன் மேற்கொள்ள நேரிட்ட யுத்தம் பற்றியும் தலைவர் காமனேயி நினைவு கூர்ந்தார்.

எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி
ரபாயல் கொரையா தெல்காதோ
  
அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முன்னால் வலைந்து கொடுக்காமல் நிற்கும் பன்பை ஈரானிய மக்கள் தலைவர் இமாம் கொமேனியிடம் இருந்து கற்றதாக அவர் குறிப்பிட்டதோடு, அப் பன்பில் நிலைத்திருப்பதன் காரணமாக ஈரான் இன்று வெற்றி வாகைகள் பல சூடி வருவதையும், சர்வதேச அரங்கில்; ஈரான் ஒரு பலம் வாய்ந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளதையும் தலைவர் காமனேயி இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
'உண்மையில் இது போன்ற வெற்றிகளை அடைவதற்காக பெரும் விலை ஒன்றைக் கொடுக்க வேண்டி வரும் என்பதிலும் சந்தேகமில்லை. இருந்த போதிலும், அதைத் தொடர்ந்து அம்மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றியும் கண்ணியமும் அவர்கள் கொடுத்த அந்த விலை வீணானதல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.' என்றும் அவர் தைரியப்படுத்தினார்.
 
ஈரான் இஸ்லாமிய புரட்சிக் குடியரசு வீணான மோதல்களை என்றுமே விரும்பியதில்லை  என்றும் சுட்டிக்காட்டிய தலைவர் காமனேயி, இதை எவரும் ஈரான் தன்னுடைய உரிமைகள் பரிக்கப்படும் போது அமைதியாக இருந்துவிடும் என்பதற்கான சமிக்ஞை என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்.
 
இதன் போது கருத்துத் தெரிவித்துப் பேசிய ஜனாதிபதி ரபாயல் தெல்காதோ ஈரானின் மீது கடந்த முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகள் என்று தங்களைக் கூறி வருகின்ற தீய சக்திகள் இட்டு வருகின்ற தடைகளையும் அச்சக்திகளின் தூண்டதலினால் ஈராக் தொடுத்து, ஒன்பது ஆண்டுகள் நீடித்த பாரிய யுத்தத்தின் காரணமாகவும் ஈரான் நலிவடைந்து விடாது சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தளவு பாரிய முன்னேற்றங்களை பல துறைககளில் பெற்றிருப்பது தன்;னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய நாடு ஈரனுடன் பல துறைகளி;ல் ஒப்பந்தங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்திருப்பது தொடர்பாக தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அத்துடன் தம் இரு நாடுகளின் தலை நகரங்களில் இரு நாடுகளது தூதுவராலயங்களை  நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தன்னுடைய நாட்டில்  தொழில் திட்டங்களை ஆரம்பிக்க முன்வருமாறு ஈரானிய தொழில் அதிபர்களை கேட்டுக்கொண்டார். குறிப்பாக உல்லாசத் துறை போக்குவரத்து, விவசாயம், மர உற்பத்தி;கள், உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் போன்ற பல துறைகளில் தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எக்குவேட்டரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் சீமெந்து தேவைப்படுவதை தான் ஜனாதிபதி நெஜாத்திற்குத் தெரிவித்த போது, சீமெந்து தொழிற்சாலைகளை எக்குவெடரில் நிறுவுதற்கு தாம் ஈரானிய தொழில் அதிபர்களை ஊக்குவிப்பதாக நெஜாத் வாக்களித்தார் என்றும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அதே போன்று சுங்க சட்டங்களிலும் சில அனுகூலங்களை எக்குவெடர் விடயத்தில் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் தாம் ஆராயந்து பார்ப்பதாக நெஜாத் வாக்களித்ததையும் தெல்காதோ நன்றியுடன் குறிப்பிட்டார்.
 
இவ்விஜயத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச் சபையின் செயலாளர் நாயகம் சய்யித் ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி சந்தித்தார். அதன் போது பேசிய அவர் ஈரானுடன் தமது நாட்டிட்கு உள்ள உறவை மேம் படுத்த தாம் ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், எக்வெடர் லதின் அமரிக்க பிராந்தியத்தில் முக்கிய ஒரு நாடாக மாற வேண்டுமாயின் தமது நாட்டிட்கு ஐக்கிய அமெரிக்காவின் மூலம் ஏற்படக் கூடிய சகல இடையூறுகளுதம் நீங்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒரு நிலை எற்படுவதற்கு ஈரானைப் போன்ற, அமெரிக்காவின் சவால்களை சமாலிப்;பதில் அனுபவம் உள்ள நாடொன்றின் உறவும் துணையும் தமது நாட்டிட்கு மிகுந்த பயன் தரும் என்றும் தெரிவித்தார். மேலும் எக்வேடர் ஈரானுடன் ஏற்படுத்திக் கொள்ள என்னும் உறவு வெறும் வணிக் அடிப்படையிலானதாக மாத்திரம் இருக்காது என்றும் தெல்காதோ நம்பிக்கை தெரிவித்தார்.
 
பதில் அளித்துப் பேசிய ஜலீலீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை மேம் படுத்திக் கொள்ள ஈரான் என்றும் சித்தமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக எக்வேடருடன் பரஸ்பரம் சகல துறைகளிலும் பங்களிப்புகளை செய்து கொள்ள தெஹெரான் தயாராக இருப்பதாகவும் ஜலீலீ கூறினார்.

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச்
 சபையின் செயலாளர் நாயகம் சய்யித்
 ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி
சந்தித்தார்.
  
எக்வேடர் ஜனாதிபதி தெல்காதோ இந்த பயனத்தின் போது 'மஜ்லீஸின்' (ஈரானின் பாராளுமன்றம்) சபாநாயகர் அலீ லரிஜானியையும் சந்தித்த பேசினார். அதன் போது கருத்துத் தெரிவித்த லரிஜானீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்வதானது ஈரானின் புதிய ராஜ தந்திர வியுகங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள விடயமாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக பொருளாதார மற்றம் கலாசார பரிமாற்றங்கள் விடயங்களில் அதிக கவனத்தை ஈரான் செலுத்த உள்ளதாகவும் அவர் விவரித்தார். எக்வேடர் ஜனாதிபதியின் ஈரான் வருகை இது தொடர்பாக ஈரான் தொடர்ந்து பெற்று வரும் சாதகமான சமிஞ்சைகளில் உள்ளதமாகும் என்றும் சபாநாயகர் மகிழ்ச்சியுடன குறிப்பிட்டார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்ள 'மஜ்லிஸீன்'  பூரணு அனுமதி கிடைத்துள்ளதாகவும் லரிஜானி தெரிவித்தார்.
 
இதன் போது ஈரானின் அணு சக்தி திட்டம் பற்றியும் பேசப்பட்டதோடு, ஈரானின் எதிர்கால சந்ததியினரின் நலன் கறுதி இது போன்ற அதியுயர் தொழில் நுட்பங்களை அடைவதற்கு ஈரான் முடிவு செய்ததாக சபாநாயகர் ஜனாதிபதி தெல்காதோவுக்கு தெளிவு படுத்தினார்.
 
பதிலளித்துப் பேசிய எக்வேடர் ஜனாதிபதி, கடந்த பல ஆண்டுகாளக ஈரானுக்கு தரப்பட்ட இடையூறுகளை நோக்கும் போது ஈரான் அவைகளுக்கிடையே பல விஞ்ஞான மற்றம் அதியுயர் தொழில் நுட்பத் துறைகளில் பெற்றுள்ள வெற்றிகளும் நிலை நிறுத்தியுள்ள சாதனைகளும் மிக ஆச்சர்யமானவை என்று பாராட்டினார். மேலும் உலகில் பெருமதியான எதையும் இலகுவாகவோ தியாகங்கள் எதையும் செய்யாமலோ அடைந்து விட முடியாது என்பதற்கு ஈரான் ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெல்காதோ சுட்டிக் காட்டினார். 
 
மேலும், பல சாதனைகளை செய்திட்ட போதிலும் ஈரானியர்கள் மிகவும் பனிவுடனும் அடக்கத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் ஜனாதிபதி தெல்காதோ பாராட்டுத் தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளுக்கு முன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் நாட்டு விடயங்களில் அமெரிக்கா தலையிட்டு பெரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை நினைவு படுத்திய எக்வேடர் ஜனாதிபதி, தற்பொழுது ஈரான் விடயத்திலும் தன்னுடை மூக்கை நுழைக்கும் போக்கை சிறிதும் மாற்றாமல் அமெரிக்கா இடைஞ்சல் தந்த வருவது விடயமாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார்.