Saturday, June 22, 2019

ஈரானை இலக்கு வைத்தல் : பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை


ஓமான் வளைகுடா. உலகம் முழுவதும் எரிபொருளை விநியோகிக்கும் கடற்பாதை. அங்குள்ளகுறுகலான நீரிணை. இரு கப்பல்களில் திடீரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்பல்கள்தீப்பற்றி எரிகின்றன.
ஒரு கப்பலில் 75,000 தொன் எரிபொருள். மற்றைய கப்பலில் 25,000 தொன் எரிபொருள். கடற்கலங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் மாலுமிகள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஒருகப்பல் கைவிடப்படுகிறது.
கடந்த வியாழனன்று இடம்பெற்ற சம்பவம். இது தனியொரு சம்பவம் அல்ல. கடந்த மே மாதம்12ஆம் திகதி நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சி.
அன்றைய தினம் நான்கு கப்பல்கள் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச்சம்பவங்களால் கப்பல்கள் பெரும் சேதம் அடைந்திருந்தன.
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கின் பாதுகாப்பு பற்றி கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ மோதல்கள் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதற்குக் காரணம் உண்டு. பிந்திய தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்காசாடுவதும், அதனை ஈரான் மறுப்பதும் முதன்மைக் காரணம்.
கப்பல்கள் தாக்கப்பட்டிருந்தால், தாக்கியது யார் என்பதை ஆராய வேண்டும். தீர்க்கமானஆதாரங்களின் அடிப்படையில் தாக்கியவரை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, ஈரானே கப்பல்களை நாசமாக்கியது என்பதை புலனாய்வுத் தகவல்கள்உறுதிப்படுத்தியிருப்பதாக  அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோசெய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப், அமெரிக்காவின்கற்பனைக்கு அமைய சந்தேகம் கூட எழ மாட்டாதெனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், பதிலளிப்புகளுக்கும் காரணமாக சம்பவங்கள் இருவிடயங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகம் முழுவதற்குமான எரிபொருள் விநியோகம் என்பது முதல் விடயம். ஈரான் மீதுஅமெரிக்கா கொண்டுள்ள பகைமை என்பது இரண்டாவது விடயம்.
பாரசீக வளைகுடா என்பது உலகில் ஆகக்கூடுதலான எரிபொருட்கள் கப்பலில் ஏற்றிச்செல்லப்படும் கடற்பாதையொன்றிற்கு அருகில் உள்ளதாகும்.
Map
ஓமான் வளைகுடாவும், Hormuz நீரிணையும் (பட உதவி:BBC)
இந்தக் கடற்பாதையானது அரசியல் அடிப்படையில் மத்திய கிழக்கை இரண்டாக பிளவுபடுத்தும்கோடாகவும் திகழ்கிறது.
ஒருபுறத்தில் ஈரான் இருக்கிறது. மறுபுறத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகள் காணப்படுகின்றன.
இரு தரப்புக்களும் தமக்கு சார்பான படைகளைப் பயன்படுத்தி, லெபனான், ஈராக், சிரியா, பஹ்ரேன் முதலான நாடுகளில் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன.
யெமனில் ஈரானுக்கு சார்பான குழுவொன்றை தோற்கடிப்பதற்காக சவூதி அரேபியப்படைகளும், எமிரேட்ஸ் படைகளும் நான்காண்டுகளாக நேரடியாக களத்தில் போரிடுகின்றன.
இந்த சண்டைக்கு மத்தியில், மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகஅமெரிக்காவும் படைகளைக் குவித்திருக்கிறது.
எனவே, வேறு நாடுகளது கொடிகள்பறக்கும் கப்பல்களை ஈரானே தாக்கியதாக அமெரிக்காமேலோட்டமாகக் கூறுவதன் தாத்பர்யத்தை ஆராய வேண்டும்.
மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்பது அமெரிக்காவின் அவா. ஆதற்காகஈரானை ஓரங்கட்டுதல் என்ற மூலோபாயத்தை அமெரிக்கா அனுசரிக்கிறது.
அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கைகள் சகல விதங்களிலும் தோல்வி கண்டுள்ளன. இந்தத் தோல்வியைப் பல வடிவங்களில் வெளிப்படையாகக் காணலாம்.
இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சனையில் தீர்வு என்பது எட்டாக்கனி. இன்று இஸ்ரேலில்வலுவான அரசாங்கத்தை அமைப்பது கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது.
சிரியாவில் சிவில் யுத்தம். யெமனில் பெரும் மனிதப் பேரவலம். ஈராக்கில் குழுக்களுக்குஇடையிலான சண்டை. புpராந்தியம் முழுவதும் ஐஎஸ் முதலான இயக்கங்களின் ஆதிக்கம்.
இத்தகைய சூழ்நிலையில், ஈரானை வம்புக்கு இழுத்து, அதனை ஓரங்கட்டுவதன் மூலம், தாம்வெற்றி பெற்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது அமெரிக்காவின் மூலோபாயமாகக்காணப்படுகிறது.
இந்த நடைமுறையில், ஈரானிய அரசாங்கத்தை எப்படியாவது ஆட்சிபீடத்தில் இருந்து கவிழ்த்துவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி திட்டம் போட்டார்.
இது மூன்று அம்சங்களைக் கொண்டது.
  1. ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்துவிலகுதல்,
  2. பொருளாதாரத் தடைகளை விதித்தல்,
  3. ஈரானுக்கு எதிரான கூட்டணியைஉருவாக்குதல்.
அணு உடன்படிக்கை முக்கியமானது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளன.
Iran Nuclear Deal
ஈரானிய அணு உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட நாடுகள்

இதன் கீழ், ஈரான் சர்ச்சைக்குரிய அணு உற்பத்தி செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பதிலுக்குஉலக நாடுகள் ஈரான் மீதான தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். .
இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு டொனல்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தையும் அறிவித்தார்.
அணுவாயுதங்கள் என்ற அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அமெரிக்காவை எவரும் பணயக்கைதியாக்க முடியாது என்பது ட்ரம்பின் விளக்கமாக இருந்தது.
உலக வல்லரசுகள் ஒன்றுகூடி உருவாக்கிய உடன்படிக்கை. அதில் இருந்து விலகுவதற்குஅமெரிக்க ஜனாதிபதியால் தர்க்க ரீதியான காரணமொன்றைக் கூற முடியவில்லை.
இதன்மூலம், சர்வதேச அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்துவது அமெரிக்க ஜனாதிபதியின்நோக்கம். தனிமைப்படுத்தினால் ஈரானுக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படும். ஆட்சியைக்கவிழ்க்கலாமென அவர் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், அவரது கணக்கு தப்புக் கணக்காகியது. அணு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவிலகியதால் ஈரான் அஞ்சவில்லை. உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் அதனைக்கைவிட விரும்பவில்லை.
அணு உடன்படிக்கையைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகள் கோரின. ஈரானுடன் பிரச்சனை இருந்தால், அதனைஅமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறு கோரின. இவற்றில் நான்கு நாடுகள்பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தவர்கள்.
மறுபுறத்தில், அணு உடன்படிக்கையை மதித்தன் மூலம் சர்வதேச கடப்பாடுகள் மீதானவிசவாசத்தை ஈரான் வெளிப்படுத்தியது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றி, அதில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் வெற்றி பெற்றது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால், ஈரானியபொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஏனைய நாடுகள் தொடர்ந்து ஈரானுடன்வர்த்தகம் செய்தன. ஈரானின் எரிபொருளை காசு கொடுத்து வாங்கின.
ஈரானுக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது அமெரிக்காவிற்கு சிரமமானதாகஇருக்கவில்லை. ஈரானிய மக்கள் பெரும்பாலும் ஷியா கோட்பாடுகளை அனுசரிப்பவர்கள். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகளின் எதேச்சாதிகார அதிகாரிகள்சுன்னத்துல் ஜமாஅத் பிரிவினர்.
சவூதி, எமிரேட்ஸ் கூட்டணியுடன் இஸ்லாமிய நாடுகளின் ஸ்தாபனத்தை இணைத்துஈரானுக்கு எதிராக திருப்ப முனைந்தார், ட்ரம்ப். இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தையும்இணைத்துக் கொள்ளும் வகையில் காய்களை நகர்த்தினார்.
இந்த நகர்வுகளால் ஈரானிய மக்களை அச்சுறுத்த முடியவில்லை. மாறாக, இறைமையுள்ளபாரசீக தேசத்தவர்களாக ஈரானிய மக்கள் ஒன்றுபட்டார்கள். அயல்நாடுகளில் இருந்துவிடுக்கப்படும் அச்சுறுத்தல் ஈரானிய மக்கள் மத்தியிலான பிளவுகளையும் நீக்கியது எனலாம்.
பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளதாகக் கூறிக்கொண்டு, 2003ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள்ஈராக்கை ஊடுருவியதன் விளைவுகளை ஈரானிய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, அந்நிய ஆக்கிரமிப்பிற்கு இடமளிக்கக்கூடாது என்ற எண்ணம் ஈரானியர்கள் மத்தியில்மேலோங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி இன்னொரு காரியத்தையும் செய்தார். தமது மக்களவையின் எதிர்ப்பைமீறி, சவூதி அரேபியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் நவீன ரக ஆயுதங்களைபெருமளவில் விற்பனை செய்தார். யெமன் யுத்தத்தில் ஈரானை தோல்வி காணச் செய்தல்அவரது தந்திரோபாயம்.
யெமனில், ஹவுத்தி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஈரானியப் படைகள்; உதவுகின்றன. சவூதி, எமிரேட்ஸ் படைகள் இணைந்து நடத்தும் தாக்குதலில், ஈரானின் மூக்கு உடைபட வேண்டும். இதன் மூலம், தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என ட்ரம்ப் நினைத்தார்.
ஆனால் நடந்தது வேறு. சுவூதி, எமிரேட்ஸ் படைகளுக்கு கிடைத்த ஆயுதங்கள் மூலம்கூடுதலாக பொது மக்களே கொல்லப்பட்டார்கள். யெமன் போர்க்களமாக மாறி, அங்கு பசியும்பட்டினியும் தாண்டவமாடும் நிலை தோன்றியது. இதற்கு அமெரிக்காவே காரணம் என்றஎண்ணம் வலுப்பெற்றது.
A Picture and its Story: Girl survives air strike that killed her family
யெமன் தலைநகரில் சவூதி படைகளின் தாக்குதலால் விளைந்த பேரழிவுகள்

ஈரானிக்கு எதிரான துப்பாக்கி ராஜதந்திரத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்காஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. எனவே, இன்னொரு வழியில் ஈரானைத்தனிமைப்படுத்தக்கூடிய வழியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்பிற்கு எழுந்திருக்கலாம்.
இந்த நிர்ப்பந்தமே கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது பழிபோடும் படலமாகமாறியிருக்கிறது. ஈரானைக் குற்றவாளியாக நிரூபித்து விட்டால், உலக அளவிலானஎரிபொருள் விநியோகத்தை முடக்கிய தேசமாக முத்திரை குத்தி விடலாம் என்பது ட்ரம்பின்எண்ணம்.
இந்தக் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டுமாயின் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில்பயனில்லை. மாறாக தகுந்த ஆதாரங்களுடன் ஈரான் குற்றவாளி என்பதை அமெரிக்க ஜனாதிபதிநிரூபிக்க வேண்டும்.
எப்படியென்றால், பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கருதி ஈராக்கிய மண்ணைஆக்கிரமித்த பின்னர், அங்கு எந்தவொரு ஆயுதத்ததையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப்போல. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் மத்தியில் தார்மீக குற்றவாளியாக நின்றதைப்போலவேனும் நிரூபிக்கலாம்.
(2019ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரையின் இணைய வடிவம்)

Wednesday, March 27, 2019

වසන්තයේ උදාව සමරන පර්සියානු නව වසර නව්රුස්

NAWRUZ 
Celebrating the Spring


පසුගිය මාර්තු 21 වැනි දා සුපුරුදු ලෙස පාර්සි ජාතිකයෝ ඔවුන්ගේ නව වසර උත්සවශ්‍රීයෙන් සැමරුවා. පාර්සි භාෂාව කතාකරන සහ පාර්සි සංස්කෘතියට සම්බන්ධ ජන කොටස් ජීවත්වන සෑම ප්‍රදේශයකම මෙම සාම්ප්‍රදායික උත්සවය ජන ජීවිතයට සතුට සහ සිනහව එකතු කළා.

ඉරානය, ඇෆ්ගනිස්ථානය, තාජිකිස්තානය, අසර්බයිජාන්, තුර්කමනිස්තාන්, කිර්කසිස්තාන්, උස්බකිස්තාන්, තුර්කිය, පාකිස්තානය, ඉන්දියාව වැනි රටවල මෙන්ම ලෝකයේ අනෙක් රටවලත් මෙම නව වසර උදාව සනිහුටන් කරමින් උත්සව පැවැත්වෙනවා.

පර්සියානු දින දර්ශනය ඍතු සතරකට බෙදී තිබෙනවා. සෑම රිතුවක්ම මාස තුනකින් සමන්විතයි. මාර්තු 21 වසන්තයේ උදාව සටහන් වුණා. එදින සිට මාස තුනක් වසන්ත සමයයි. සුන්දරම ඍතුව මෙයයි. සොභා දහමේ විශිෂ්ට ආශ්චර්යයන් මිහිමත විහිදී යන කාල වකවානුවයි.

අනතුරුව පැමිණෙන්නේ ගිම්හානයයි. ඇතැම් විට දරා ගැනීමට පවා නොහැකි තරමට අධික උෂ්ණත්වය පවතිනවා. පාසැල්, සරසවි වාගේ ස්ථාන මෙ කාලයට නිවාඩුයි. දිවා කාලය දිගයි. රාත්‍රිය කෙටියි.

ගිම්හානයේ මාස තුනෙන් පස්සේ උදාවෙන්නේ සරත් ඍතුව. මේ කාලෙට ගස්වලින් කොළ වැටෙනවා. වැහි බර කාලගුණයක් පවතිනවා. වාතය ටිකින් ටික සීතල වෙනවා. සරත් ඍතුව මාස තුනක් පවතිනවා.

ඉන් පසු උදාවෙන්නේ ශීත ඍතුව. සම හිම පතිතවී මුළු ප්‍රදේශයම සුදු වස්ත්‍රයෙන් පොරවා ගත අන්දමට දිස්වෙනවා . චමත්කාරයි. මේ  කාලෙට රාත්‍රිය දිගයි. දවල් කොටයි.

වසන්තය උදාවෙන්නේ සීත ඍතුව පහවී යනවාත් සමග මල් පිපිලා, ගස් දළු දාලා. ජීවිතය නැවත උදාවෙනවා වාගේ. සීතල නිසා සීමාවුණු ජන ජීවිතය නිදහසේ ගලා යන්න පටන් ගන්නවා.


නව්රුස්  නමැති සම්ප්‍රදාය වසර දෙදහස් පන්සීයකට වඩා පැරණි කාලයේ සිටම පවතින දෙයක්. සොරොස්ත්‍රීයානු පසුබිමක් සහිත මෙම උත්සව මාලාව කලින් කලට ඔප්වෙමින් දැනට පවතින ඉහල සංස්කෘතික ලක්ෂණයන් සහිතව වැජඹෙනවා.

ඉස්ලාමයේ ව්‍යාප්තියෙන් පසුවද මෙම සම්ප්‍රදායය කිසිදු වෙනස්වීමකින් හෝ විකෘතිවීමකින් තොරව පැවැත්වෙනවා.



අවුරුදු උදාව සිදු වන ශුභ මොහොත මෙම සම්ප්‍රදායයේ වැදගත් අංගයක්. ආහාර වර්ග ගණනාවකින් යුත් තුරුනක් හෝ මේසයක් සකස් කරනු ලබනවා. පාර්සි භාෂාවෙන් ස අකුරෙන් පටන්ගන්නා නම් සහිත භාණ්ඩ හතක් එම මේසයේ ප්‍රදර්ශනය කෙරෙනවා. ඊට අමතරව ශුද්ධ කොරානයේ පිටපතක්, කන්නාඩියක් මෙන්ම ජීවමාන බව සංඛේතවත් කරමින් මාළුවක් සහිත ජාල බඳුනක් ද එකතු කරනවා.

පවුලේ අය එම තුරුන වටේ එකතු වී අවුරුදු උදාවට ආවේනික ආගමික වතාවත් ඉටු කිරීම, සුභ පැතුම් සහ තෑගි බෝග බෙදාගැනීම, වැඩිහිටියන්ට ගරු බුහුමන් දැක්වීම වැනි වතාවත් ඉටු කරනවා.

අවුරුදු උදාවට දවස් කීපයකට පෙර ගේ දොර අස්පස්කර ශුද්ධ පවිත්‍ර කිරීම නව වසරට සූදානම් වීමේ එක්තරා වැදගත් අංගයක්. මෙය සෑම ගෙදරකම සිදුවෙනවා. ගෙදරින් පිටකරනු ලබන අනවශ්‍ය පරණ බුමුතුරුණු, බඩුමුට්ටු, ඇඳුම් ආයිත්තම් සියල්ල එකතු කර රාත්‍රියක දී ගිනි තිබෙන සිරිතක් පැරණි කාලයේ පැවතුණා. දැන් එය සමරනු ලබන්නේ ගිනිමැලයක් මොලවා ඒ වටා රැස්වී විනෝද වීමෙන්. විශේෂයෙන්ම මෙම වසර අවසන් විනෝදවීම සිදුවන්නේ වසරේ අන්තිම බදාදා රාත්‍රියේ. මෙම චාරිත්‍රය ‘චහාර් ශන්බේ සූරී’ ලෙස හඳුන්වනු ලබනවා. එහි තේරුම ‘බදාදා රාත්‍රී ගිනි මෙලවීම’ යන්නයි. මෙහි තිබෙන අනතුරු සලකමින් බොහෝ අය මීට සම්බන්ධ වෙන්නේ නෑ.


වසර උදාව සමගම නෑදෑ හිතමිතුරන් බැහැ දැකීම, ගමන් බිම යාම, සංචාරය කිරීම, ක්‍රීඩා සහ විනෝද උත්සව පැවැත්වීම යනාදිය සති දෙකක පමණ කාලයක් සිදුවෙනවා. නව වසරෙන් දහතුන් වන දවස උත්සව සමය අවසන් කරන දවසයි.

දහතුන්වන දවස සොභා දහම සමග ජීවත්වෙන දවසයි. එදා සැවොම එළිමහනේ, උද්‍යාන වල සොභා දහම සමග ගත කරමින් සවස නිවසට ආපසු එනවා. ඒ සමගින් නව වසර සැමරුම් උළෙල අවසන් වෙනවා. පසු දින සිට නැවත සුපුරුතු දෛනික කටයුතුවල සැවොම නිරතවෙනවා.



Tuesday, February 12, 2019

40 වසරක ජයග්‍රාහී ගමන ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවය



ඉරාන ඉස්ලාමීය විප්ලවයේ 40 වැනි සංවත්සරය සැමරීම සඳහා, වසර 2019 පෙබරවාරි මස 11 වැනි දින, ඉරානය පුරාම කෝටි සංඛ්‍යාත ජනයා වීදි බැස පෙළපාලි ගියා. විප්ලවය ජයග්‍රහණය කළ 1979 සිට වසරක් පාසාම මෙදින ඉරානය පුරාම උත්සවශ්‍රීයෙන් සමරනු ලබනවා. 
සෑම නගරයක්, ගම්මානයක් පාසාම මහාමාර්ග දිගේ පවත්වනු ලබන රැස්වීම්, සැණකිලි, සංදර්ශන සමගින් මෙම දිනය වර්ණවත් වෙනවා.
ඇත්තෙන්ම ඔවුන්ට සමරන්න දෙයක් තිබෙනවා. එය ඔවුන්ට පමණක් නොව, ලෝකයේ ස්වාධීනත්වය අගයන සියලු දෙනාම සමරන්න වටිනා සංවත්සරයක්. 
එදා ඇමෙරිකාව ප්‍රමුඛ මහබලවතුන්ගේ සම්පූර්ණ අනුග්‍රහය ලත් පහ්ලවී රාජාණ්ඩුව සම්පූර්ණයෙන්ම බිඳවැටුණා. වසර 2500ක් තිස්සේ ඉරානය [පර්සියාව] පාලනය කළේ රජ පෙළපත් විසින්. 
මහජන විපලවයක් මගින් කලාපයේ ප්‍රබලම රාජාණ්ඩුව මහජන පෙලපාලවලින් ජයගනු ලැබුවේ එදිනයි.
ඉමාම් ආයතුල්ලාහ් කොමෙයිනි ඉරාන ජනයාගේ හිත දිනාගත් නිහතමානී ධර්මවේදියෙක්. රාජාණ්ඩුවේ මර්දනකාරී, මහජන විරෝධී ප්‍රතිපත්ති සහ ව්‍යාපෘතීන්ට විරුද්ධව ඔහු හඬ නැගුවා. ඉරානයේ ජනතාව ඔහු සමග අත්වැල් බැඳගත්තා. 
විප්ලවය ජයගැනීමට පහළොස් වසරකට ඉහත දීම ඉමාම් කොමෙයිනි අත් අඩංගුවට ගෙන රටෙන් පිටුවහල් කරනු ලැබුවා. ඉරාකයේ නජාෆ් නුවර දේවධර්ම ආයතනවල ඉස්ලාමීය දර්ශනය, නීති ශාස්ත්‍රය වැනි පාඩම් උගන්වමින් විශාල ශිෂ්‍ය පිරිසකට ධර්ම ශික්ෂණය ඔහු විසින් ලබා දුන්නා. ඉරානයේ පැවති මර්දනය ගැන විටින් විට ප්‍රකාශ නිකුත් කළා. මහජනයා මෙම ඉමාම්වරයාගේ නායකත්වය යටතේ කළ සටනේ, පරිත්‍යාගයේ ප්‍රතිපලයක් ලෙස විප්ලවය ජයගත්තා.
එම ජයග්‍රහණය ඔවුන්ගෙන් උදුරා ගැනීමට ලෝක මහා බලවතුන් සහ කලාපයේ ප්‍රතිගාමී රාජාණ්ඩු සහ හමුදා පාලන මගින් ඇති කරන ලද සියලුම බාධා ඔවුන් ජයගත්තා. කලාපයේ රාජාණ්ඩු සහ මිලිටරි පාලන සියල්ල විප්ලවයට බියවුණේ මෙම රැල්ල තමන්ගේ ද ඉරණම විසඳනු ඇතැයි යන සිතුවිල්ලෙන්. වසර අටක යුද්ධය, ආර්ථික සම්භාධක, විවධ තහංචි, මාධ්‍ය මඩගැසීම්, ආගමික කොන්කිරීම් සියල්ල අභිබවා ඉරාන ජනයා 40 වසර සමරන්නේ විප්ලව ජයග්‍රණයට වඩා මාහැඟි ජයග්‍රාහී ලීලාවෙනි.
ලෝකයේ සහ කලාපයේ බලවතුන්ට මෙම දශක හතර තුල විප්ලවීය ඉරානය දනගැස්සීමට හැකිවුණේ නෑ. ඒ වෙනුවට අද ඉරානය ලෝකය දියුණු තාක්ෂණ අත්පත් කරගත් සර්ව ස්වාධීන රටක් ලෙස අභිමානයෙන් නැගී සිටිනවා.
ඉමාම් කොම්යිනි නැවත ඉරානයට සම්ප්‍රාප්ත වූ පෙබරවාරි පළවෙනිදා සිට දවස් දහයකින්, එනම් 11 වැනිදා විප්ලවය සම්පූර්ණයෙන්ම ජයගත්තා. එම දවස් දහය පුරාම ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවයේ ජයග්‍රහණය සමරන උත්සව ලෝකය පුරාම පවත්වනු ලබනවා.
ශ්‍රී ලංකාවේත් ඉරාන සංස්කෘතික සංදර්ශන, ප්‍රදර්ශන, ච්ත්‍රපටි උළෙල වැනි වැඩසටහන් සාර්ථක ලෙස සංවිධානය කර තිබුනා.
ඉරානයේ ජනයාටත් ජන නායකයින්ටත් මෙම ජයග්‍රහණය වෙනුවෙන් ශුභ පතමු.
අල්ලාහු අක්බර්. කොමෙයිනි රහ්බර්
[අල්ලාහ්මයි ශ්‍රේෂ්ටයා. කොමෙයිනිමයි නායකයා]

Monday, June 4, 2018

பலஸ்தீன் விடுதலைக்கான சர்வதேச 'குத்ஸ்' தினம்








அல்லாஹ் அருள்பாலித்த பூமியும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்பட்டு இற்றைக்கு 51 வருடங்களாகின்றன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக பலஸ்தீன் மாற்றப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 1979 ஆம் ஆண்டில் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹும் இமாம் கொமைனி முன்னெடுத்த இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) சர்வதேச குத்ஸ் (பைத்துல் முக்கதிஸ்) தினம் முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. (அந்தவகையில் இவ்வருட குத்ஸ் தினம் வரும்  8ந் திகதி வெள்ளிக்கிழைம அனுஷ்டிக்கப்படுகிறது).

இந்த சர்வதேச தினத்தைப் பிரகடனப்படுத்திய இமாம் கொமெய்னி 'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாள்' என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும், ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.

என்றாலும் சிலர் குறிப்பிடுவது போன்று குத்ஸ் தினம் என்பது ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்று. அது இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன் மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட இத்தினத்தை அனுஷ்டிக்கின்றனர். குத்ஸ் தினம் அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றது, உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளையும் எடுத்து நோக்கினால் கூட குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விடவும் சுன்னிகளே அதிகமாகப் பங்கு கொள்கின்றனர்.

இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகள் முன்னெடுக்கப்படுவதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றே கோருகின்றனர்.

ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சியோனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், சியோனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதேவேளை சியோனிஸவாதிகள் பல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகின்றனர். குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிலும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாக உள்ளனர். இதன் ஊடாக சியோனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன.

அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், சியோனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, சியோனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை முழுமையாக முன்னெடுத்து சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி ​ெடாலகளைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்துவதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.

வரலாறு

முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகவே திகழ்ந்து வந்தது.

சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்டத்தை ஸலாஹுத்தீன் அல்- அய்யூபி தலைமை தாங்கி முன்னெடுத்தார். அது கி.பி.1187ல் இடம்பெற்றதோடு ஜெருஸலமும், மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அல் அக்ஸாவும் பலஸ்தீனும் சுதந்திரமானது.

என்றாலும் கி.பி.1918ல் நவீன கால பிரித்தானியரும், பிரான்ஸியரும் சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது

என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம் தான், 1947ல் சியோனிஸ இஸ்ரேலின் சட்ட விரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.

சியோனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், அரபு ஆட்சியாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிப்பதற்கான இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தல்களளுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் சியோனிஸவாதிகளுடன் இணைந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உலக முஸ்லிம்களின் புனித தளங்களான மக்காவிலும் மதீனாவிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ, பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்பற்றியோ வாய் திறக்க முடியாதளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது

 ஆனால் சுமார் 39வருடங்களுக்கு முன்னர் இமாம் கொமெய்னியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் சியோனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய நிகழ்ச்சிகள், அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய சியோனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளன அதேநேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. பலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்பு அணியினர் சியோனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இத்தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து விடாமல் எரியச் செய்வது -இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.