Tuesday, January 31, 2012

சாவேஸிடம் இருந்து அறபிகள் கற்க வேண்டியவை நிறைய உள்ளன: நஸ்ரல்லாஹ்

 

இன்று அறபு உலகத்தில் ஒப்பற்ற தலைவர் என கருதப்படும் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் கடந்த 2009 ஜனவரி 7ம் திகதி  லெபனானில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து உரையொன்றை நிகழ்த்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவரது முழு உரை இவ்வாறிருந்தது:
 
'அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
 
இஸ்ரேலுடன் இருக்கும் சகல தொடர்புகளையும் துண்டித்தல், காஸாவில் அவர்கள் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் முக்கியமானத மாத்திரம் அல்ல அது முஸ்லிம்காளகிய எமது கடமைகளில் ஒன்றாகும். மேலும் இதுவே அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்கள் மற்றும் மக்கள் செய்யக்கூடிய எளிதான பதிலடியுமாகும்.
 
நேற்று வென்ஸியூலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அங்கிருந்து இஸ்ரேல் தூதுவரை நாடு கடத்தினார். இதை சாவேஸ் பலஸ்தீன மக்களுக்கு அவர் காட்;டும் ஆதரவாகவே செய்து காட்டினாh. இவ்வளவிட்கும் வெனிஸியூலா அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நாடாகும். அதாவது அது ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாகும். இது தான் சாவேஸ! இதை அவர் ஏன் செய்தார்? மனிதாபிமானத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்தார்.; தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதுவர்களுக்கு எதிராக ஒரு வார்த்ததையை கூட கூற தையரியமில்லாமல் இருக்கும் அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்களுக்கு சாவேஸின் இந்த செயல் ஒரு பயங்கர அடியாகும்.
 
இதை நோக்கும் போது இன்று அறபித் தலைவர்கள் சாவேஸிடம் இருந்து கற்க வேண்டியவை பல உள்ளன. பலஸ்தீன மக்களுக்கு எவ்வாறு ஆதரவு காட்டுவது என்பதை பற்றி அவர்கள் சாவேஸை பார்த்துக் கற்க வேண்டும்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
 
இந்த ஸியோனிஸ கொலை காரர்கள் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு பாராட்டுக்கள் தரப்படவதை விடுத்து தக்க தண்டனை தரப்பட வேண்டும். காஸாவில் பல நூறு பெண்களையும், சிறு பிள்ளைகளையும், சிசுக்களையும் கொன்று குவித்ததன் பின் இந்த யூத அரக்காகளுக்கு தொடர்ந்தும் அனுகூலங்கள் தரப்படக்கூடாது. முஸ்லிம் உம்மத்து இந்த அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்தே தீரும் என்பதை நான் உங்களுக்கு உறுதியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இந்தத் தலைவர்கள் என்றும் இஸ்ரேலின் கொடூரச் செயல்களை பொருட்படுத்தாத போக்கையே கையாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலின் செயல்களை இந்த நாடுகளில் உள்ள மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் இந்த அரசாங்கங்கள் தமது மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தருவதும் கட்டாயமாகும். அத்துடன் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் தொடர்ந்தும் பேச்ச வாhத்தைகளை நடத்துவதையும் இவர்கள் நிறுத்தி விட வேண்டும். மேலும் அறபுத் தலைவர்கள் ஹமாஸ் போராளிகள் தமது இலக்கை அடைவதற்கு உதவி செய்வதுடன், இஸ்ரேல் காஸாவிட்கு இட்டுள்ள தடைகளை நீக்கவும், அதன் இராணுவ செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் கட்டாயமாகும்;. எல்லாவற்றிட்கும் மேலாக இஸ்ரேல் காஸா மக்களுக்குத் தினிக்கும் இழிவான கட்டளைகளை ஏற்க வேண்டும் என காஸா மக்களை வற்புறுத்தவதை இந்த அறபித் தலைவர்கள் முற்றாக நிறுத்த வேண்டும்.
 
'நேற்ற எகிப்து அதிகாரியொருவர் ஒரு சுவாரசியமான விடயமொன்றை கூறியிருந்தார். 'ஒரு முடிவொன்றை பெறுவதற்கும் பொருப்புள்ளவர்களாக இனி நடப்பதட்கும் ஹமாஸ் போராளிகளுக்கு 650 உயிர் தியாகிகளும் 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா?' என்று அவர் கேட்டிருந்தார். இது மிக அழகிய வாhத்தைகளாக இருக்கின்றன. ஆனால் இதையே நான் திருப்பி எகிப்து அரசையும் இது போல பேசக்கூடிய அதிகாரிகளையும் கேட்க விரும்புகின்றென். எகிப்திட்கும் அதன் ரபஃh எல்லையை நிரந்தரமாக திறப்பதட்கு 650 உயிர்களும்; 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா? 
 
'இந்த சந்தர்ப்பத்தில் எகிப்து செய்ய வேண்டியதாக இருந்தது தனது ரபஃh எல்லையை திறப்பது மாத்திரமே. எகிப்தை யுத்தப் பிரகடணம் செய்யுமாறு எவரும் கோரவில்லை. எகிப்து அரசிட்குச் சார்பான சில அந்நாட்டு வழக்கறிஞர்கள் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நான் எனது நன்பர்கள் சிலர் மூலம் நேற்று அறிந்தேன்;. ரபஃh எல்லையை எகிப்து திறந்து விடவும் எகிப்து அரசை காஸா விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் எகிப்தின் இராணுவம் அரசிட்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஷுரா தினத்தன்று நான்; கூறிய கூற்றிட்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். என்னுடைய இந்த கூற்று எகிப்து அரசிட்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை தூண்டும் விதத்தில் உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
'என்னுடைய கூற்றின் முக்கிய அம்சம் ரபஃh எல்லையை திறக்க வேண்டும் என்பதே. எவ்வாறிருந்த போதிலும் என்னுடைய பேச்சை பற்றி நான் பெருமிதமே அடைகின்றேன். இதற்காக ஒரு வழக்கை எனக்கு எதிராக தொடுக்கப் படுவதையும் நான் பெருமையாகவே கருதுகின்றேன். குறிப்பாக இந்த அச்சுறுத்தல் காஸா மக்களுக்காக எதையுமே செய்யாத ஒரு அறபிகளது நாட்டில் இருந்து வந்ததை தொட்டு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. அதுவும் லெபனானிலும், ஜபலியாவிலும் பலஸ்தீனத்திலும் பல அட்டூழயங்கள் செய்த, ஏன் எகிப்து இராணுவத்தினருக்கும் எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்ட யூதர்களுக்கு சார்பாக இந்த கூற்றை அவர்கள் கூறியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமே. ஆம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்திட்கு பக்கபலமாக நான் நின்ற குற்றத்திட்காக இவ்வாறு குற்றவாளிக் கூண்டில் ஏறுவது எனக்கு மிகவும் பெருமையான விடயமே. இது தொடர்பாக நான் மரணித்த பிறகும் பெருமை பட்டுக்கொண்டே இருப்பேன்.
 
'ஆனால் ஒரு விடயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன். அதாவது நான் பகைமையை வளர்க்க விரும்புபவன் அல்ல. நாம் எதிரிகள் அல்ல. எமக்கு துணை புரிந்தோருடன் பகைமை எற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. 2006 ஜுலை மாத யுத்தத்தின்போது எமக்கு எதிராக செயற்பட்ட அறபிகளுக்கு எதிராக நாம் பகைமையை எற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அந்த அறபிகளை காஸா மக்களுக்கு எதிராக தூண்ட திட்மிட்ட ஸியோனிஸ சதிகாரர்களின் எதிரிகளாகவே நாம் இருப்பொம்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
இதெ சமயம் மேலும் ஒரு கூற்றையும் நாம் செவியுற்றோம். அது தான் முன்பு அமெரிக்க அரச நிர்வாகத்தில் இருந்த ஒர யூதராகிய ஜோன் போல்டனின் கூற்று. அவர் தனது இணத்தின் செயற்பாடுகளால் வெறுப்புற்றுள்ளார். இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் அசல் நோக்கம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பலஸ்தீனத்தை முற்றாக அழிப்பதே அந்த நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காஸாவையும் மெற்குக் கறையையும் பிரிப்பது பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை வைத்திருப்பதுடன் மேற்குக் கறையை ஜோர்தானுக்கும் காஸாவை எகிப்திட்கும் கொடுப்பதே சிறந்தது என அவர் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
 
இரண்டு நாடுகள் பற்றி நாம் முன்பு கேள்வி பட்டதெல்லாம் வெறும் பேச்சே. இதுவே அமெரிக்கா மற்றும் யூதர்களின் உண்மையான நிலைப்பாடாகும். பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாட்டை முடிவு செய்யும் போது ஒரு நாட்டை நிறுவுவதட்கான தேihயான அளவு நிலப்பரப்பைக் கொண்ட எல்லைகளை தர அவர்கள் விரும்புவதில்லை. பிறகு இரு நாடுகளை ஏற்படுத்த முடியாதெனக் கூறி பலஸ்தீனத்தையே புறக்கனிக்க அவர்கள் முனைகின்றனர்.
 
 
  'இந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க முதலில் தேவைப்படுவது ஒற்றுமையேயாகும். ஹமாஸ், பதாஹ், இஸ்லாமிய ஜிஹாத் என்ற எல்லா பலஸ்தீன இயக்கங்களும் ஒன்று பட வேண்டும். ஏனெனில் ஒரே நோக்கம் எமது இலக்காக அமைய வேண்டியுள்ளது.
 
'எதிரிகள் ஹமாஸையோ பதாஹ்வையோ அழிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்த பலஸ்தீனக் குறிக்கோளையே அழிக்க நினைக்கின்றனர். ஆனால், இன்ஷா அல்லாஹ் அது ஒரு போதும் நடைபெறாது.
 
'என் அன்புக்குரிய சகொதர சகோதரிகளே!
 
'2006 எமது யுத்தம் மற்றும் தற்போதைய காஸா யுத்தம் ஒரு விடயத்தை எமக்குத் தெளிவு படுத்தியுள்ளது. லெபனானில் ஆகட்டும் அல்லது பலஸ்தீனத்தில் ஆகட்டும், எம்மிடம் ஒரு சிறந்த பாதுகாப்பு வியூகம் இருப்பது அவசியம் என்பதே அது.
 
'உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இராணுவங்களில் ஒன்றை கொண்டுள்ள மற்றும் மத்திய கிழக்கிலேயே மிகவும் பலம் வாய்ந்த விமாப் படையை கொண்டுள்ள இஸ்ரேல், சிறு பூமிப் பிரதேசத்தில் இருந்த செயற்படும் சிறிய போராளிகள் அமைப்பொன்றை முற்றாக அழிக்க முடியாமல் பல ஆண்டுகளாக தினறுவதற்குக் காரணம் அந்த போராளிகளதும் அதைச் சார்ந்துள்ள மக்களின் அசைக்க முடியாத மன உறுதியுமேயாகும். ஒரு சமூகத்தின் திடமான நம்பிக்கையும் மன உறுதியும் ஆக்கிரமிப்பதற்கு என்னும் உலகில் உள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த படையையும் தோல்வி அடையச் செய்யும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இந்த நிலை நாம் சரியான பாதையில் தான் நடை போடுகின்றோம் என்ற நம்பிக்கையை எமக்கத் தந்துள்ளது.
 
'சற்று சிந்தித்துப் பாருங்கள் எனதருமை சகொதர சகோதரிகளே! ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையோ வேறு எந்த சர்வதேச அமைப்போ காஸா மக்களுக்கு பாதுகாப்பையும் நியாயத்தையும் பெற்றுத் தரப்பொவதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. அது ஸியோனிஸ அக்கிரமங்களை தட்டிக் கேட்காது என்பதும் தெளிவாகியுள்ளது. சிறு பிள்ளைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படாத இந்த அமைப்புகள், ஒரு போராளிக்ள குழுவின் குறிக்கோள்களுக்கு எவ்வாறு துணை நிற்கப் போகின்றது?
 
'எனதருமை சகோதர சகோதரிகளே! இன்று நடக்கும் விடயங்கள் நாம்; அனைவரும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். லெபனானில் ஒரு பகுதியின் கவனம் உங்கள் மீது இருப்பதை நான் நன்கு அறிவேன். நாம் அனைவருமே இன்று சரித்திரத்தின் ஒரு முக்கிய மையத்தில் இருக்கினறோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸியோனிஸ மற்றும் யூதர்களின் இரகசிய சதிகளின் பிரம்மாண்டத்தையும் அது ஏற்படுத்தப் போகும் தாக்த்தின் தீவிரத்தையும் நாம் அறியமாட்டோம். ஆகையால் நாம் எல்லோரும் சகல விடயங்களைப் பற்றியும் கண்கானிப்புடனும் விழிப்புடனும் இருப்பது அவசியம். ஏனென்றால் எதிரிகள் எதையும் செய்யத் துணியலாம்.
 
'நேற்றும் ஒல்மட் (இஸ்ரேலின் பிரதமர்) கூறியதாக ஒரு விடயம் வெளியாகியுள்ளது. அதாவது மிக விரைவில் ஹமாஸுக்கு எதிராக ஒரு போரும் ஹிஸ்புல்லாஹ்விட்கு எதிராக ஒரு போரும் தொடுக்கப் படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் லெபனானில் தோல்வியை சந்தித்;த ஒல்மட்டுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூற விரும்புகின்றேன். அவரால் ஒரு போதும் ஹமாஸையோ ஹிஸ்புல்லாஹ்வையோ அழிக்க முடியாது.
 
'இது மாத்திரமல்ல. சில நாட்களுக்கு முன்பும், சில வாரங்களுக்கு முன்பும், ஏன் காஸாவின் மீது தாக்கதல் ஆரம்பமாவதட்கு பல மாதங்களுக்கு முன்பும் இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் கேட்டவன்னமே இருக்கின்றொம். சிலர் எம்மை சில நாட்களில் அழித்த விட வேண்டும் என்றும் மேலும் சிலர் எங்களை சில மணி நேரத்தில் அழித்து விட முடியும் என்றும் சவால் விட்ட வன்னம் உள்ளனர். ஆனால் இவர்கள் அறிந்து கொள்ளட்டும், எம்மை அழிப்பதற்கோ குறைந்த பட்சம் பயமுறுத்துவதற்கோ அல்லது பலஹீனப்படுத்துவதற்கோ இவர்களால் முடியவே முடியாது. நாம் எம்முடைய போராட்டத்தை விடப்போவதும் இல்லை. உங்களது வான் படைகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதுமில்லை. உங்கள் பயங்கர ஆயுதங்களைக் கண்டும் நாம் அஞ்சப் போவதுமில்லை. நாங்கள் இங்கு தான் இருப்போம். மேலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்கதலுக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
 
'நீங்கள் எம்முடைய பகுதிகளுக்கு வரத் துணிந்தால், எம்முடைய கிராமங்களுக்கும், வீதிகளுக்கும், வீடுகளுக்கும் வரும் தைரியம் உங்களக்கு இருந்தால் வாருங்கள், வந்து பாருங்கள். அப்போது எம்முடைய எதிர் தாக்ககுதல் 2006 ஜுலை யுத்ததின்போது நீங்கள் எங்களிடம் வாங்கிய அடி மிகச் சாதாரனமானது என்று நீங்கள் என்னுவீர்கள்.
 
'நாம் இங்கு தான் இருக்கின்றொம். மேலும் எம்முடைய ஆயதங்களை நாம் விட்டு விட மாட்டோம். இஸ்ரேல் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் போது எந்த சலசலப்பும் ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசும்போது இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறப்படுகின்றது, ஹிஸ்புல்லாஹ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தைரியம் கூறப்படுகின்றது.
 
'என்னுடைய அருமை சகோதர, சகோதரிகளே!
 
'நாம் நம்பும் இந்த கொள்கைக்காக எமது கடந்த கால மண்ணின் மைந்தர்கள் செய்த உயிர்த் தியாகங்களையும் எற்றுக் கொண்ட துன்பங்களையும் நாமும் ஏற்க என்றும் தயாராகவே உள்ளோம். கடந்த காலங்கள் நாம் செல்லும் திசை சரியானதே என்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சரியானதே என்றும் எமக்கு உணர்த்தியுள்ளது.இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இவ்வாறே சத்தியத்திட்காக உயிர் நீத்தார்கள். சத்தியத்திட்காக போராடும் படி அவர்கள் விடும் அழைப் பை நாம் ஏற்க என்றும் சித்தமாகவே இருக்கின்றொம்.
 
'இஸ்ரேல் எம்முடைய மாத்திரமல்ல, முழு உம்மத்தினதும் எதிரியாகும். எம்மில் சிலர் அவர்களுடன் உறவாடிய போதிலும் யூதர்கள் எங்கள் எதிரிகளே. அதே போன்ற இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்காவுடன் நம்மில் சிலர் நட்பு பாராட்டிய போதும் அமெரிக்காவும் நம்முடைய எதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
'உங்கள் அனைவரது உண்மையான பங்களிப்பிட்காக நான் எனது நன்றியை மிண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிரிகளின் முன் மண்டியிட்டு இழிவடைவதா? அல்லது எமது கண்ணியத்தை பாதுகாத்துக் கொள்ள போராடி உயிர்துரப்பதா?என்ற நிலை வந்தால் நாம் கண்ணியமான வீர மரணத்தையே சற்றும் தயங்காமல் தேர்ந்தெடுப்போம். எம்முடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் எதிரிகள் காண மாட்டார்கள்.
 
'எமது அருமை நபிகள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளான இமாம் ஹுஸைன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மீதும் அவர்களது சந்ததியினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
சிந்தியுங்கள்! அறபிகளின் பேடித்தனத்தையும் நயவஞ்சகப் போக்கையும் வெளிச்சம் காட்ட இதை விட என்ன சான்று தேவை? இதோ இரு முஸ்லிம் அல்லாத சிறு நாடுகளது தலைவர்கள் காஸா மக்களின் துயர் துடைக்க தங்களால் இயன்றதை செய்ய முன் வந்துள்ளார்கள். அவ்விருவரில் ஒருவர் கிறிஸ்தவர் என்பதையும் இந்த அறபித் தலைவர்கள் கவனிப்பார்களாக! பிறரை காபிர் என்றும் முனாபிக் என்றும் நரகவாதி எய்றும் தாராளமாக மார்க்கத் தீர்ப்புக்களை அள்ளி வீசும் இந்த அறபி மன்னர்களினதம் என்னெய் ஷேகுகளினதும் 'ஆஸ்தான' முப்தீக்களும் அல்லாஹ்வுக்காக அல்ல ஊதியத்திற்காக ஊழியம் செய்யும் அங்குள்ள உலமாக்களும் இனி முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகின்றார்கள். அமெரிக்கர்களதும் யூதர்களதும் வைப்பாட்டிகளாக இருக்கும் இந்த ஈனர்கள் இனியாவது உணர்வு பெறுவார்களா?

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம்: ஒரு நோக்கு





 
உலகில் உள்ள இஸ்லாமிய ஆண்மீக மற்றும் உலகாயுத கல்வி நிறுவனங்களில் அல்- அஸ்ஹர் மிகவும் பழைமை வாய்ந்ததும் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனமுமாகும்.
 
இஸ்லாமிய ஆண்மீக விடயங்களை அறபு மொழியில் பயிற்றுவிப்பதுடன் நவீன விஞ்ஞானத் துறையில் உள்ள விடயங்களையும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. இதில் மருத்துவம், பொறியியல், சட்டம் என்ற விடயங்கள் 1961 ஆம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டன. மேலும், இப்பல்கலைக்கழகத்தில் எகிப்தை சேர்ந்த மாணவர்களைத் தவிர உலகில் உள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்கின்றனர்.
 
அல் - அஸ்ஹர் பல்கலைக்கழத்தின் கல்விக் கொள்கை:
 
அல் அஸ்ஹரின் சரித்திரம் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதுடன், உலகில் உள்ள மிக பழைமையான பல்கலைக்கழகமும் இதுவே. மேலும், மேற்கத்தேய மற்றும் கீழ் திசை நாடுகளின் நன்மதிப்பை ஒருங்கே பெற்ற ஒரு கல்வி நிறுவமனமாகவும் இது திகழ்கின்றது.

 
அல் அஸ்ஹரின் ஒரு பகுதி இஸ்லாத்தைப் கற்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்து. மேலும் இப்பல்கலைக்கழகத்திற்கு விஷேடமான சில ஒழுக்க முறைகளையும் இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இடையே அறிவு பூர்வமான தொடர்பு ஒன்று ஏற்படுத்துவதற்கு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. மேலும், ஆண்மீக உறவு முறைகளை முஸ்லிம்களிடையே பலப்படுத்துவதும் அல் - அஸ்ஹரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அத்துடன் அறபிகள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு ஏற்படுத்துவதும், அவர்களிடையே நெருக்கத்தை உறுதி செய்வதும், அறபி மொழியை மேம்படுத்துவதும், அறபு மற்றும் இஸ்லாமிய கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதும், தேவை ஏற்படும் இடங்களில் சீர் திருத்தங்களை ஏற்படுத்துவதும் இஸ்லாத்தின் ஊடாக பிற மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகளை ஆராய்வதையும் தன்னுடைய முக்கிய செயற்பாடுகளாக அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
 
மேலும், இப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுபவர்கள் தத்தமது நாடுகளுக்குச் சென்று அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் செயல்படுவதற்கும் திட்டங்களை மேற்கொள்வதற்கும் தேவையான உதவி ஒத்தாசைகளையும் அல் - அஸ்ஹர் வழங்கி வருகின்றது.
 
பல்கலைக்கழகத்தின் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு தகுதியான ஆசான்களும் சிறந்த விரிவுரையாளர்களும் இருப்பது விடயத்தில் அல் - அஸ்ஹர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் சகல நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்து வருகின்றது.
 
இதே போன்று புலமைப் பரிசில்கள் வழங்கும் விடயத்தில் அல் - அஸ்ஹர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு மாணவனுக்கு இருக்க வேண்டிய திறமை அவனுடைய வறுமையின் காரணமாக புதைபட்டுப் போவதையோ அத்திறமையினால் உலகிற்கு பயன் கிட்டாது போவதையோ அல் - அஸ்ஹர் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
 
மேலும், உயர் கல்வி, புதிய துறைகளுக்கான ஆராய்ச்சி போன்ற விடயங்களிலும் அல் - அஸ்ஹர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. அதே போன்று உலகில் உள்ள ஏனைய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் கண்டுபிடிப்புகளையும் தம்முடைய கண்டுபிடிப்புகளுடன் இணைத்துக்  கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் அல் - அஸ்ஹர் என்றும் செயல்பட்டு வந்துள்மை குறிப்பிடத்தக்கது.
 
இதற்காக தம்முடைய விரிவுரையாளர்கள், ஆராய்ச்சி நிபுணர்கள் போன்றோரை பிற நாட்டு கல்வி நிலயைங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைப்பதுடன், அவைகளுடைய விரிவுரையாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அல் - அஸ்ஹர் தருவித்து தம்மாணவர்கள் பயன் பெறுவதற்கும் ஏற்பாடு செய்கின்றது.
 
சரித்திரப் பின்னணி

 
சிசிலியன் ஜௌஹர் என்ற தளபதியின் கீழ் பாத்திமித் கலீபா அல் முஈஸ் என்பவரால் எகிப்தைக் கைப்பற்ற ஹிஜ்ரி 362 ஆம் ஆண்டு (கி.பி. 969) ஒரு படை அனுப்பப்பட்டது. அத்தளபதி எகிப்தை வென்று கெய்ரோ என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பினார். அதைத் தொடர்ந்து அல் - அஸ்ஹர் என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலையும் அங்கு அவர் கட்டினார். இப்பள்ளி வாசலைக் கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும்  அதிக காலம் செலவானதாக சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இப்பள்ளிவாசல் தொழுகைக்காக உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது ஹிஜ்ரி 385 ரமழான் மாதம் ஏழாம் நாளில் ஆகும். அது முதல் உலகில் உள்ள மிக பழைமையான பள்ளிவாசல்களில் அல் - அஸ்ஹர் முதன்மையானதாகத் திகழ்ந்து வருகின்றது.
 
அல் - அஸ்ஹர் என்ற பெயர் இதற்கு ஏன் இடப்பட்டது என்பது தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்த பள்ளிவாசல் கட்டப்பட்ட காலக் கெடுவில் கெய்ரோவில் பல பிரமாண்டமான கட்டிடங்கள் இருந்ததானால் இப்பெயர் அதற்கு சூட்டப்பட்டு இருக்ககலாம் என்று சிலர் கூறுகின்றனர்.; மேலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வஸல்லம்) அவர்களின் அருமை மகள் பாத்திமா ஸஹ்ராவின் பெயரில் இரண்டாவது பகுதியை அவர்களுடைய ஞாபகார்த்தமாக இடப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த பள்ளிவாசல் பாத்திமித் கலீபா காலத்தில் கட்டப்பட்டதால் இந்தக் கருத்திற்கு அதிக அறிஞர்கள் ஆதரவு தருகின்றனர்.
 
ஒரு வணக்கஸ்தளமாக ஆரம்பமான அல் - அஸ்ஹர் மூன்றரை  ஆண்டுகளில் ஒரு  பல்கலைக்கழகமாகவும் பரிணமித்தது. அத்தருனத்தில் எகிப்தை அல் முஈஸ் என்ற கவர்ணரே ஆட்சி செய்து வந்தார். இப்பல்கலைக்கழக திறப்பு விழாவின் போது சமூம் தந்திருந்த முக்கியஸ்தர்களினதும் பிரமுகர்களினதும் பெயர்கள் சரித்திர ஏடுகளில் பதிவாகியுள்ளன. இதன் ஆரம்பத்தில் 21 ஆசிரியர்களுடைய சேவையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டதுடன் அவரகள்; தங்குவதற்காக விடுதிகளும் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே கட்டப்பட்டன. மேலும் அவர்களது ஊதியம் தொடர்பான ஏற்பாடுகளையும் கிலாபத்தே ஏற்றது.
 
இதன் ஆரம்பத்தில் சுமார் 200 ஆண்டு பாலமாக கெய்ரோவின் வரி சேகரிக்கும் அதிகாரிகளின் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வந்ததுடன் பிரதம கண்காய்வாளரின் அலுவலகமாகவும் அல் - அஸ்ஹர் செயற்பட்டு வந்தது.
 
8 ஆவது மற்றும் 9 ஆவது நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்து வந்ததுடன் அன்டிலூசியாவில் இருந்த சிறு முஸ்லிம் ராஜ்யங்கள் பலமிழக்கலாயின. அதன் போது முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்த  அறிஞர்களுக்கு பாதுகாப்பான புகழிடம் வழங்கக் கூடிய ஒரே பல்கலைக்கழகமாக அல் - அஸ்ஹர் திகழ்ந்து வந்தது. இந்த காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானத் துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பித்ததுடன் அத்துறையில் அல் - அஸ்ஹரியும் முன்னணியில் இருந்தது. இந்த சமயத்தில் எகிப்தில் பாரிய அரசியல் மற்றும் கல்வித் துறை மாற்றங்கள் ஏற்படலாயின. அத்துடன் அல் - அஸ்ஹர் அறிஞர்கள் கணிதம், புவியியல், மருத்துவம், சரித்திரம் போன்ற கல்வித் துறைகளில் பெரும் புலமை பெற்றிருந்தனர். இந்த தருனத்தில் ஒட்டோமன்ட் சாம்ராஜ்யம் உருவாக ஆரம்பித்ததால் அதன் மூலம் பொது நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வக்பு முறை அல் - அஸ்ஹருக்கும் இணைக்கப்பட்டதால் அது ஒரு சுதந்திரமான கல்வி நிறுவனமாக இயங்கும் வாய்ப்பு விரிவாகியது. இதைத் தொடர்ந்து அல் - அஸ்ஹரிக்கு முன்பு என்றும் இருக்காத அளவிற்கு சுதந்திரங்கள் கிடைத்தன. இதன் மூலம் அதன் ஆசிரியர்களும் பல செயற்பாட்டு சுதந்திரங்களைப் பெற்றனர். இக்கால கட்டத்தில் இது போன்ற சுதந்திரங்கள் ஏனைய நாடுகளில் உள்ள அறிஞர் பெருமக்களுக்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இது போன்ற ஒப்பற்ற சுதந்திரம் ஒன்றைப் பெற்ற அல் - அஸ்ஹரின் தனித் தன்மையை ஒட்டோமன்ட் ஆட்சியளர்கள் நன்கு உணர்ந்து, தங்களில் எவரையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு தலைவராகவோ அல்லது மஸ்ஜிதின் தலைமை இமாமாகவோ நியமிக்காமல் இருக்கும் விடயத்தில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தி, இவ்வுயர் பதவிகளை எகிப்திலேயே பிறந்த அறபி அறிஞர்களுக்கே அவர்கள் வழங்கி வந்தனர். பிரான்ஸ் மன்னன் நெப்போலியன்  பொனபாட் எகிப்தைத் தாக்கிய தருனத்தில் (ஹிஜ்ரி 1213) இப் பல்கலைக்கழகத்திற்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று அம்மன்னன் கட்டளை இட்டான். பின்னொரு காலத்தில் சாந்த ஹெலேனா தீவிட்கு அம்மன்னன் நாடு கடத்தப்பட்டிருந்த போது தன்னுடைய நாளேட்டில் தான் எகிப்தை தாக்கிய காலகட்டத்தையும் அதில் குறிப்பிட்டிருந்ததோடு அதில் அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை பாராட்டியும், வர்ணித்தும் எழுதியிருந்தான். அது பிரான்ஸின் சோபோன் பல்கலைக்கழகத்திற்கு சமமான உயர்ந்த ஒரு அறிவு பீடம் என அவன் அதில் வர்ணித்திருந்தான். மேலும் அதில் அல் - அஸ்ஹரின் அறிஞர்கள், ஆசிரியர்கள் பற்றியும் பிரான்ஸ் மன்னன் மிகவும் கண்ணியத்துடன் குறிப்பிட்டிருந்தான். மேலும், கெய்ரோவை கைப்பற்றிய சமயத்தில் அதன் நிர்வாகப் பொறுப்பை தன்னுடைய தளபதிகள் எவருக்கும் கொடுக்காது அல் - அஸ்ஹரின் பிரதம இமாம் அவர்களிடம் ஒப்படைத்ததன் மூலம் அல் - அஸ்ஹரின் மீது அம்மன்னன் வைத்திருந்த கௌரவம் புலனாகின்றது. இவ்வாறு அல் - அஸ்ஹரின் மீது பிற நாட்டுத் தலைவர்களும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். அது ஆக்கிரமிப்புகளின் சமயமாக இருந்த போதிலும் சரியே.
இதே போன்று எகிப்து நாடு எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படும் சமயங்களில் அவர்களை விரட்டியடிக்கும் திட்டங்களை வகுக்கும் ரகசிய இடமாகவும் எகிப்தியர்கள் மத்தியில் அல் - அஸ்ஹர் பள்ளிவாசல் பிரபல்யம் அடைந்திருந்தது. முஹம்மது அல் ஸாதாத் என்பவரின் புரட்சி இயக்கம் தாபிக்கப்பட்டிருந்தது அல் - அஸ்ஹரில் ஆகும்.
எகிப்தை பிரான்ஸ் ஆக்கிரமித்த பின்ப அதற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமான போது அல் - அஸ்ஹர் கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏறப்படாமல் இருக்க அதை மூடி விடுவது என்று அதன் நிர்வாகம் தீர்மானித்ததால் அல் - அஸ்ஹர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் உத்தியோக பூர்வமாக மூடப்பட்டிருந்தது. இப் பல்கலைக்கழகத்தின் சுமார் 100 ஆண்டு சரித்திரத்தில் அது மூடப்பட்டு இருந்தது இந்த இரு ஆண்டுகளில் மாத்திரமே. ஆக்கிரமிப்பாளர்கள் எகிப்தை விட்டு  விரட்டி அடிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகம் பரிபூரணமாக செயல் பட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எகிப்து மாத்திரம் அல்லாது பிற நாடுகளில் இருந்தும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு மீண்டும் தடையின்றி ஆரம்பமாயிற்று.

கி.பி. 1805 ஆம் ஆண்டில் எகிப்தை ஆட்சி செய்த முஹம்மத் அலி என்ற கலீபா எகிப்தை ஒரு சிறந்த நாடாக உயர்த்துவதாக உறுதி பூண்ட போது அதற்கான ஒத்துழைப்பை அவர் வேண்டி நின்றது அல் - அஸ்ஹர் அறிஞர்களிடம் இருந்தே. கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளின் காரணமாக எகிப்தில் உள்ள சகல துறைகளிலும் ஏற்பட்ட நிர்வாகத் தடைகளின் காரணமாக ஆய்வு நடவடிக்கைகளின் அல் - அஸ்ஹரிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்ததை அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்த போது முஹம்மது அலி கண்டு கொண்டதால் அல் - அஸ்ஹர் மாணவர்களையும், ஆசான்களையும் ஐரோப்பிய கண்டத்திற்கு அனுப்பி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் பெற்றிருந்த புதிய விஞ்ஞான அறிவுகளை பெற்று வர கலீபா ஏற்பாடு செய்தார். இவ் அறிவுகளை தமது நாட்டிற்கு எடுத்து வரும் பொறுப்பை எகிப்தில் உள்ள ஏனைய கல்வி நிறுவனங்களிம் ஒப்படைக்காது, அல் - அஸ்ஹர் ஆசிரியர்களுக்கும் முன்னணி மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்பை  தான் அளித்ததன் மூலம் சிறந்த ஒரு முடிவை தான் எடுத்ததை கலீபா வெகுவிரைவில் உணர்ந்து கொண்டார்.
 
இது தவிர எகிப்தை எவரேனும் ஆக்கிரமிக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அம் முயற்சிகளை முறியடிக்கும் அல்லது எதிரிகளை விரட்டி அடிக்கும் கைங்கரியத்தில் முக்கிய இடத்தைப் பெறுபவர்களாக அரச அதிகாரிகளை விட அல் - அஸ்ஹரின் ஆசான்களும் மாணவர்களுமே முன்னணியில் திகழ்ந்து வந்துளள்னர்.

 

அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பதே உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும்

 
மக்கள் தங்களது உரிமைகளைக் கேட்டு நிற்பதும் அதற்காகப் போராடுவதும் அவர்கள் முன்னேறுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளில்  உள்ளதாகும் என ஈரானிய புரட்சியின் அதி உயர் தலைவர் ஆயாத்துல்லாஹ் செய்யித் அலி காமனேயி குறிப்பிட்டார்.
 
தெஹ்ரானுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி ரபாயல் கொரையா தெல்காதோவை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போதே தலைவர் காமனேயி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற போராட்டங்களில் மக்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருப்பதும் அவசியம் என்று  அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 'லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இவ்வாறான தலைவர்கள் அமைந்திருப்பது அம்மக்களின் அதிர்ஷ்டமே' என்றும் பாராட்டினார்.
 
'எம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக பொங்கி எழுவது சிறந்த ஒரு தன்மையாக இருந்து போதிலும், இன்று பெரும்பான்மை மக்கள் அச்சுறுத்தல்களைக்; கண்டு பின்வாங்குவதையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது' என்றும் தலைவர் கவலை தெரிவித்தார்.
 
தொடர்ந்த பேசிய அவர், தங்களது உரிமைகளுக்காக வீறு கொண்டு பொங்கி எழும் விடயத்தில் ஈரான் முழு உலகிற்கும் முன் உதாரணம் காட்டியுள்ளது என்பதையும் நினைவு படுத்தினார். கொடுங்கோளன் ஷா விடமிருந்து விடுதலை பெற்றதட்குப் பிறகும் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான தீய சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைக்கு எதிராகவும் ஈரான் இடை விடாது போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில வருடங்களுக்கு முன்பு அண்டை நாடாகிய ஈராக்கினால் தமது தேசதிற்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றியும், அதைத் தொடர்ந்து சுமார் ஒன்பது ஆண்டு காலமாக ஈராக்குடன் மேற்கொள்ள நேரிட்ட யுத்தம் பற்றியும் தலைவர் காமனேயி நினைவு கூர்ந்தார்.

எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி
ரபாயல் கொரையா தெல்காதோ
  
அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முன்னால் வலைந்து கொடுக்காமல் நிற்கும் பன்பை ஈரானிய மக்கள் தலைவர் இமாம் கொமேனியிடம் இருந்து கற்றதாக அவர் குறிப்பிட்டதோடு, அப் பன்பில் நிலைத்திருப்பதன் காரணமாக ஈரான் இன்று வெற்றி வாகைகள் பல சூடி வருவதையும், சர்வதேச அரங்கில்; ஈரான் ஒரு பலம் வாய்ந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளதையும் தலைவர் காமனேயி இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
'உண்மையில் இது போன்ற வெற்றிகளை அடைவதற்காக பெரும் விலை ஒன்றைக் கொடுக்க வேண்டி வரும் என்பதிலும் சந்தேகமில்லை. இருந்த போதிலும், அதைத் தொடர்ந்து அம்மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றியும் கண்ணியமும் அவர்கள் கொடுத்த அந்த விலை வீணானதல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.' என்றும் அவர் தைரியப்படுத்தினார்.
 
ஈரான் இஸ்லாமிய புரட்சிக் குடியரசு வீணான மோதல்களை என்றுமே விரும்பியதில்லை  என்றும் சுட்டிக்காட்டிய தலைவர் காமனேயி, இதை எவரும் ஈரான் தன்னுடைய உரிமைகள் பரிக்கப்படும் போது அமைதியாக இருந்துவிடும் என்பதற்கான சமிக்ஞை என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்.
 
இதன் போது கருத்துத் தெரிவித்துப் பேசிய ஜனாதிபதி ரபாயல் தெல்காதோ ஈரானின் மீது கடந்த முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகள் என்று தங்களைக் கூறி வருகின்ற தீய சக்திகள் இட்டு வருகின்ற தடைகளையும் அச்சக்திகளின் தூண்டதலினால் ஈராக் தொடுத்து, ஒன்பது ஆண்டுகள் நீடித்த பாரிய யுத்தத்தின் காரணமாகவும் ஈரான் நலிவடைந்து விடாது சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தளவு பாரிய முன்னேற்றங்களை பல துறைககளில் பெற்றிருப்பது தன்;னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய நாடு ஈரனுடன் பல துறைகளி;ல் ஒப்பந்தங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்திருப்பது தொடர்பாக தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அத்துடன் தம் இரு நாடுகளின் தலை நகரங்களில் இரு நாடுகளது தூதுவராலயங்களை  நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தன்னுடைய நாட்டில்  தொழில் திட்டங்களை ஆரம்பிக்க முன்வருமாறு ஈரானிய தொழில் அதிபர்களை கேட்டுக்கொண்டார். குறிப்பாக உல்லாசத் துறை போக்குவரத்து, விவசாயம், மர உற்பத்தி;கள், உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் போன்ற பல துறைகளில் தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எக்குவேட்டரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் சீமெந்து தேவைப்படுவதை தான் ஜனாதிபதி நெஜாத்திற்குத் தெரிவித்த போது, சீமெந்து தொழிற்சாலைகளை எக்குவெடரில் நிறுவுதற்கு தாம் ஈரானிய தொழில் அதிபர்களை ஊக்குவிப்பதாக நெஜாத் வாக்களித்தார் என்றும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அதே போன்று சுங்க சட்டங்களிலும் சில அனுகூலங்களை எக்குவெடர் விடயத்தில் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் தாம் ஆராயந்து பார்ப்பதாக நெஜாத் வாக்களித்ததையும் தெல்காதோ நன்றியுடன் குறிப்பிட்டார்.
 
இவ்விஜயத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச் சபையின் செயலாளர் நாயகம் சய்யித் ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி சந்தித்தார். அதன் போது பேசிய அவர் ஈரானுடன் தமது நாட்டிட்கு உள்ள உறவை மேம் படுத்த தாம் ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், எக்வெடர் லதின் அமரிக்க பிராந்தியத்தில் முக்கிய ஒரு நாடாக மாற வேண்டுமாயின் தமது நாட்டிட்கு ஐக்கிய அமெரிக்காவின் மூலம் ஏற்படக் கூடிய சகல இடையூறுகளுதம் நீங்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒரு நிலை எற்படுவதற்கு ஈரானைப் போன்ற, அமெரிக்காவின் சவால்களை சமாலிப்;பதில் அனுபவம் உள்ள நாடொன்றின் உறவும் துணையும் தமது நாட்டிட்கு மிகுந்த பயன் தரும் என்றும் தெரிவித்தார். மேலும் எக்வேடர் ஈரானுடன் ஏற்படுத்திக் கொள்ள என்னும் உறவு வெறும் வணிக் அடிப்படையிலானதாக மாத்திரம் இருக்காது என்றும் தெல்காதோ நம்பிக்கை தெரிவித்தார்.
 
பதில் அளித்துப் பேசிய ஜலீலீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை மேம் படுத்திக் கொள்ள ஈரான் என்றும் சித்தமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக எக்வேடருடன் பரஸ்பரம் சகல துறைகளிலும் பங்களிப்புகளை செய்து கொள்ள தெஹெரான் தயாராக இருப்பதாகவும் ஜலீலீ கூறினார்.

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச்
 சபையின் செயலாளர் நாயகம் சய்யித்
 ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி
சந்தித்தார்.
  
எக்வேடர் ஜனாதிபதி தெல்காதோ இந்த பயனத்தின் போது 'மஜ்லீஸின்' (ஈரானின் பாராளுமன்றம்) சபாநாயகர் அலீ லரிஜானியையும் சந்தித்த பேசினார். அதன் போது கருத்துத் தெரிவித்த லரிஜானீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்வதானது ஈரானின் புதிய ராஜ தந்திர வியுகங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள விடயமாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக பொருளாதார மற்றம் கலாசார பரிமாற்றங்கள் விடயங்களில் அதிக கவனத்தை ஈரான் செலுத்த உள்ளதாகவும் அவர் விவரித்தார். எக்வேடர் ஜனாதிபதியின் ஈரான் வருகை இது தொடர்பாக ஈரான் தொடர்ந்து பெற்று வரும் சாதகமான சமிஞ்சைகளில் உள்ளதமாகும் என்றும் சபாநாயகர் மகிழ்ச்சியுடன குறிப்பிட்டார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்ள 'மஜ்லிஸீன்'  பூரணு அனுமதி கிடைத்துள்ளதாகவும் லரிஜானி தெரிவித்தார்.
 
இதன் போது ஈரானின் அணு சக்தி திட்டம் பற்றியும் பேசப்பட்டதோடு, ஈரானின் எதிர்கால சந்ததியினரின் நலன் கறுதி இது போன்ற அதியுயர் தொழில் நுட்பங்களை அடைவதற்கு ஈரான் முடிவு செய்ததாக சபாநாயகர் ஜனாதிபதி தெல்காதோவுக்கு தெளிவு படுத்தினார்.
 
பதிலளித்துப் பேசிய எக்வேடர் ஜனாதிபதி, கடந்த பல ஆண்டுகாளக ஈரானுக்கு தரப்பட்ட இடையூறுகளை நோக்கும் போது ஈரான் அவைகளுக்கிடையே பல விஞ்ஞான மற்றம் அதியுயர் தொழில் நுட்பத் துறைகளில் பெற்றுள்ள வெற்றிகளும் நிலை நிறுத்தியுள்ள சாதனைகளும் மிக ஆச்சர்யமானவை என்று பாராட்டினார். மேலும் உலகில் பெருமதியான எதையும் இலகுவாகவோ தியாகங்கள் எதையும் செய்யாமலோ அடைந்து விட முடியாது என்பதற்கு ஈரான் ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெல்காதோ சுட்டிக் காட்டினார். 
 
மேலும், பல சாதனைகளை செய்திட்ட போதிலும் ஈரானியர்கள் மிகவும் பனிவுடனும் அடக்கத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் ஜனாதிபதி தெல்காதோ பாராட்டுத் தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளுக்கு முன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் நாட்டு விடயங்களில் அமெரிக்கா தலையிட்டு பெரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை நினைவு படுத்திய எக்வேடர் ஜனாதிபதி, தற்பொழுது ஈரான் விடயத்திலும் தன்னுடை மூக்கை நுழைக்கும் போக்கை சிறிதும் மாற்றாமல் அமெரிக்கா இடைஞ்சல் தந்த வருவது விடயமாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார்.
 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்து

 

ஐக்கிய நாடுகள் அமைப்பிட்கான
ஈரானிய பிரதிநிதி ஸெய்யிது
முஹம்மத் ரிஸா ஸஜ்ஜாதி
 தற்காலத்தில் உலக நாடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நியாயமான முறையில் தீர்த்து வைக்கக்கூடிய அமைப்புகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முக்கயமானது. இருந்த போதிலும் கடந்த பல தசாப்தங்களாக அதன் பாரபட்சமான மற்றும் அநீதிக்கு சார்பாக இயங்கும் போக்கை நோக்கும் போது அவ் அமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது கட்டாயமாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிட்கான ஈரானிய பிரதிநிதி ஸெய்யிது முஹம்மத் ரிஸா ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார்.
 
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் சர்வதேச அரசியல் விவகாரங்கள் பிரிவின் இயக்குனராகவும் செயலாற்றும் ஸஜ்ஜாதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத் தொடர் ஒன்று சமீபத்தில் அங்க ஒன்று கூடியது. அமைப்பின்  பாதுகாப்புச் சபை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்காக அதன்  அங்கத்தவர்கள் ஒன்று கூடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈரானிய பிரதிநிதி, அமைப்பின்; ஒழிவு மறைவு அற்ற தன்மை, அதனுடைய செயற்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கும் தன்மை போன்ற விடயங்களில் பாரிய மாற்றங்கள் செய்வதை இனியும் புறக்கணிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
 
இதே கருத்தை அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பொதிலும் இதற்காக சில கண்துடைப்புகளைத் தவிர காத்திரமான எந்த முடிவையும் ஐ. நா. அமைப்பு மேற்கொள்ளாததையும் சுட்டிக் காட்டிய ஸஜ்ஜாதி, இது பெரும் துரதிஷ்டமாகும் என்றும் கவலை தெரிவித்ததார்.
 
மேலும் கருத்து தெரிவித்த ஸஜ்ஜாதி, சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் உலக ஐக்கியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் சில பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை இவ்வமைப்பின் பாரபட்சமான போக்கையும் அதன் செயல் திறனற்ற தன்மையையுமே பறைசாற்றுகின்றன என்று குறிப்பிட்டார். குறிப்பாக சியோனிஸ அநியாயக்காரர்கள் மூலம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் தொடர் அநீதிகளையும் அக்கிரமங்களையும் தட்டிக் கேட்காமல் அவ்வக்கிரமங்களுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பு  மேற்கொண்டு வருவதானது, உலக சமாதானத்திற்கு மாத்திரமன்றி இவ்வமைப்பின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான UNRWA அமைப்பும் யூத கொலைகாரர்களின் செயற்பாடுகளை 'கொடூரமானது' என்றும் 'மனிதாபிமானம் அற்றது' என்றும் வர்ணித்து இருப்பதையும், அவைகளை வன்மையாக கண்டித்துள்ளதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். இருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்போ  இது விடையமாக எந்த வித காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காமல் அசஅந்தப்  போக்கையே மேற்கொள்வதாகவும் ஈரானிய பிரதிநிதி குற்றம் சாட்டினார். அது மற்றும் அல்லாது நியாமான முறையில் செயற்பட எத்தனிக்கும் ECOSAC மற்றம் IAEA போன்ற அதன் அங்கத்துவ அமைப்புகளின் செயற்பாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்  இடையூறு விளைவித்த சந்தர்பங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னுடைய நியாயமான தேவைகளுக்காகவும் சமாதான நோக்கத்துடனும்  மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சியை பற்றிய விபரங்களை பல முறை அமைப்பிடம் எடுத்துக் கூறியும், அதற்கு எதிராக நியாயமற்ற முறையில்; பலத்தை உபயோகித்து அமைப்பின் சில அங்கத்தவர்களின் உள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்க  அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது சட்ட விரோதமாக சில நாடுகள் அதிகாரம் செலுத்த முற்பட்டு வந்தமைக்கு சிறந்த ஒரு உதாரணம் ஆகும் என்றும் ஸஜ்ஜாதி குறிப்பிடார்.
 
தொடர்ந்து பேசிய அவர் இது போன்ற செயற்பாடுகளாவன இவ்வுயரிய அமைப்பை தாபித்ததன் உண்மை நோக்கங்கள் புதைபட்டுப் போகச் செய்யக் கூடிய விடயங்களாகும் என்று கவலை தெரிவித்ததார்.
 
ஈரானின் அணுத்திட்டம் முற்றிலும் சட்ட ரீதியானது என்பதை முழு உலகமும் ஏற்றிருக்கும் இந்த நிலையில், மேலும் அது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு பிரிவிற்கும் உட்படாத ஒரு விஞ்ஞான ஆய்வு நடவடிக்கையாக இருக்கும் நிலையிலும், அதை  உலக பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் போல் காட்டி அந் நாட்டின் மீது  யுத்த நடவடிக்கை எடுக்கும் படி சில அங்கத்தவர்கள் அமைப்பை வற்புறுத்தி வருவதையும் அவர் வன்மையாக கண்டித்தார்.
 
இது போன்ற செயற்பாடுகளினால் அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளுக்கு இடையே ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்ணியத்தையும் நம்பிக்கையையும் இழந்து அது ஒரு நகைப்பிற்கிடமான நிறுவனமாக தாழ்ந்து வருவதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். மேலும், கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகள் நியாயமாக நோக்கும் போது உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் கருத்தை பிரதிபளிக்க வேண்டியதாக இருக்க, குறைந்த பட்சம் அது அமைப்பின் அங்கத்தவர்களின் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபளிப்பதாகக் கூடி இருப்பது இல்லை என்றும் ஈரானிய பிரதிநிதி சுட்டிக் காட்டினார்.
 
இவைகளை நோக்கும் போது உலக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளே இருக்கும் இவ்வாறான பூசல்களையும் சிக்கல்களையும் குறைபாடுகளையும் தீர்ப்பது அவசியமாகும் என்றும் ஸஜ்ஜாதி கூறினார். மேலும், அங்கத்துவம் தரப்படாமல் இருக்கும் பல முஸ்லிம் நாடுகளுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்குவது பற்றி தீவிரமாக ஆராய்வதுடன் இவைகளை சாத்தியமாக்குவற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிர்வாக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதை இனியும் பிற்படுத்தக் கூடாது என்று ஈரானிய பிரதிநிதி வலியுறுத்தினார்.

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்'

 

'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்',கும்மில்

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்' மன்றம்
சர்வதேச குழு: வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு எனத் தலைப்பிடப்பட்ட இஸ்லாமும் பௌத்த மதமும் மன்றத்தின் இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 18ம் திகதி, கும் நகரிலுள்ள சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.



இலங்கை, களனி பல்கலைககழக பேராசிரியர் ஞணரத்தன(Gnanaratana), பேராசிரியர் உதித்த கருசிங்க, கலாநிதி ராஜித்த குமாரா ஆகியோர் இவ்வமர்வில் கலந்து கொண்டு மன்றத்தை சிறப்பித்தனர். மற்றும் முஹம்மது ரிஸா தெஹ்ஷஹ்ரி, இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின கல்வி, ஆராய்ச்சி விவகாரத்தின் பொறுப்பாளர், மன்றத்தில் பிற மத ஆராய்ச்சி பிரிவின் பல்கலைக்கழ பேராசிரியர்களான முஹம்மது அலி ரஷ்தமியான், முஹ்மமது ஹூஸைன் முஸப்பரி, முஹம்மது அலி ஷூமாலி, செய்யது ஜவாத் மீரி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.



சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பொறுப்பாளர் முஹம்மட் ரிசா அகாயா இக்னாவுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மன்றத்தின் இரண்டாம் அமர்வு, இஸ்லாத்திற்கும் ஏனைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான உள்ளக உரையாடலை வாய்ப்பளிக்கும் மன்றத்தொடர்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது என்றார்.


இவ்வியக்கம், கல்விமான்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரினால் முன்னெடுக்கப்படுகின்ற அளவிலும் தரத்திலும் சிறந்த ஆய்வுத் தளங்களை எதிர்பார்த்து நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன், சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மன்றம், இலங்கையின் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகங்களின் கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் பலரை, இது தொடர்பான ஈரானிய வகிபாகம் குறித்து கலந்துரையாடும் பொருட்டு அழைத்து வரவேற்றுள்ளது.

இரு பகுதிகளாக இடம்பெற்ற இச்சந்திப்பு, 'வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு', மற்றும் 'பூகோள யுகத்தில் உள்ளகத் தொடர்புகளையும் நட்புறவையும் வளர்த்துக் கொள்வதில் சமயத்தின் வகிபாகம்' ஆகிய இரு கருப்பொருள்களில் கலந்துரையாடலை அமைத்துக் கொண்டது.



இச்சந்திப்பானது ஷஹ்ரக்கே பரிதீஸான் நகரில் காணப்படும் பிறமத ஆராய்ச்சி சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 9 – பிற்பகல் 18 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Tuesday, January 24, 2012

இஸ்லாத்தின் தோற்றமும் பெண்களும்

இஸ்லாத்தின் தோற்றம் பெண்களைப் பற்றி உலகத்தின் கருத்தை மாற்றியமைத்ததுடன், தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பலத்தையும் அவர்களுக்கு தந்தது.

பெண்களை ஒரு வகை இழிவானப் பிறவிகளாக ஒதுக்கித் தள்ளும் போக்கை நாம் சரித்திரம் முழுவதும் காணலாம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன் சில அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததை அவதானிகல்லாம். பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தின் கோட்டைகள் என புகழப்பட்டு வந்த எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களின் பாத சேவைக்கு மாத்திரம் தகுதியானவர்களாகவே கணிக்கப்பட்டனர்.

சுருங்கக்கூறின் பண்டைய கிரேக்க அறிஞசர்களாலும் பெண்கள் சுலபத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய, மிகவும் பலஹீனமான சிந்தனைச் சக்தி உள்ள, சதாவும் ஆண்களால் கண்கானித்து வரவேண்டிய ஒரு பரிதாபத்திற்குரிய பிரிவினராகவே கருதப்பட்டனனர்.

பெண்கள் என்பதற்கு இரண்டு விதமான வரைவிளக்கனங்களே அன்று இருந்தது. ஒன்று 'மனைவி' என்ற சட்ட அந்தஸ்த்து கொடுக்கப்டடவள். அவளது பயன் ஆணுக்கு சிற்றின்பத்தை தருவதும் சட்ட ரீதியான பிள்ளைகளை அவனுக்குப் பெற்றுத் தருவதுமேயாகும். பெண்களுக்குத் தரப்பட்ட இரண்டாவது நிலை 'மனைவியல்லாத' வெறுமனே ஆண்கள் பலருக்கு இன்பமளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும், வேலைகளை செய்வதற்காகவும், ஆண்களுடைய பணிவிடைகளுக்குப் உபயோகிக்கும், உள்ளமோ உணர்ச்சியோ இல்லாத பிண்டம் என்ற நிலையாகும்.

பண்டைய உரோமர்கள் பெண் எனப்படுபவள் சிறு பிள்ளைகளை போன்று அறிவு வளர்ச்சி அதிகம் பெறாதவள் என்றே நம்பினர். அவர்களது சொந்தக் குடும்பங்களில் கூட அவர்களுக்கு சொத்துரிமையோ வேறு வகையான உரிமைகளோ இல்லாத பரிதாப நிலையிலேயே அவர்கள் இருந்து வந்தனர். பெண் எனப்படுபவள் அவளை மனந்து ஆண் அல்லது அவளை உரிமை கொண்டுள்ள ஆண் நினைத்தால் எதையும் செய்யக்கூடிய, கேட்பாரற்ற ஒரு வகை ஜீவனாகவே கணிக்கப்பட்டு வந்தாள். மனைவியை, மகளை அல்லது தனது சகோதரியை மற்றொருவருக்கு தனக்குச் சொந்தமான அடிமையை விற்பது போன்று விற்பனை செய்து விடக்கூடிய அதிகாரமும் பண்டைய ரோமர்களுக்கு இருந்தது. ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் தந்தைக்குப் பின் அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனுக்குச் சொந்தமாகும் ஒரு சொத்தைப் போன்றே கணிக்கப்பட்டனர்.

இதை விட மோசமான நிலை பண்டைய எகிப்தில் பெண்களுக்கு இருந்தது. ஒருவன் இறந்து விட்டால் அவனது சொத்துக்களுடன் அவனுடைய மனைவியரையும் சேர்;த்தே கல்லறையில் வைத்து மூடி விடுவது அல்லது புதைத்து விடுவது அவர்களது சம்பிரதாயமாக இருந்து வந்தது.

இவ்வாறு பெண்களை மரணமடையும் அவர்களது கணவர்களுடன் சிதையில் இட்டு உயிரோடு எரித்து விடவேண்டும் என்ற நியதி ஹிந்து மதத்தில் இன்றும் இருப்பது மற்றுமன்றி அதை பலவந்தமாக நடைமுறைப்படுத்தப்படும் செய்திகள் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இன்றும் வந்தவண்ணம் இருப்பதை நாம் நன்கு அறிவோம். மனிதனாக பிறந்த எவரும் ஏற்காத இவ்வாறான கொடூரமான அனுஷ்டாணங்களை சட்டவிரோதமானது என எச்சரித்துள்ள நிலமையிலும் இவைகள் இன்றைய செய்மதி யுகத்திலும் தொடரும் நிலை, பண்டைய காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையை எங்களுக்குத் தெளிவாகவே உணர்த்துகின்றன.

பிரிட்டனில் கூட மணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டங்கள் 19 நூற்றாண்டிட்குப் பிறகே இயற்றபட்டதுடன் இந்த ஞானோதயம் வெள்யையர்களுக்கே தோன்றியது இஸ்லாம் உலகில் உதித்துச் சுமார் 13 நூற்றாண்டுகளுக்குப் பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் நிலைப்பாடு



ஒரு வீட்டில் பெண் குழந்தையொன்று பிறப்பது இறைவனின் அருளின் அடையாளமென நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர் மீது இறைவனின் கிருபையின் விஷேடமான பார்லை என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இறைவனின் தூதரவர்கள் அடிக்கடி தன் பெண் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவார்கள். தன்னுடைய பெண் மக்களுக்கு ஒரு தந்தை காட்டும் பரிவானது அவரை இறைவனிடத்தல் நெறுங்கச் செய்யும் செயல்களில் மிக மேலான செயல் என்றும் அவர்கள் சிலாகித்தார்கள்.

பெண்கள் எனப்படுபவர்கள் இறைவனால் ஆண்களுக்கு அருளப்படும் ஒரு விலை மதிபற்ற பொக்கிஷம் என்றும் இறைவனின் அருள் என்றுமே இஸ்லாம் வர்ணிக்கின்றது. மேலும் ஒருவனுடைய பெண் பிள்ளைகளின் திருப்தி அவனை சுவனபதிக்கே இட்டுச் செல்லும் சக்தியுள்ளவை என்றும் இஸ்லாம் கூறுகின்றது. மேலும் ஒருவன் தன்னுடைய தாயின் முகத்தை அன்புடன் நோக்குவது அவனுடைய பாவங்களை மண்ணிக்கப்படுவதற்குப் போதுமான ஒரு நற்செயல் என இஸ்லாம் மெச்சுகின்றது.


Group of young Muslim women talking in
Omayad mosque courtyard, Damascus, Syria
 இந்த அடிப்படையில் இஸ்லாம் பெண்மைக்கும் பெண்களுக்கும் மிகவும் மதிப்பளிப்பதை காணலாம். இறைவனின் பொருத்தத்தை பெருவதற்கு உள்ள ஒரே தகுதி இறையச்சம் என்று வலியுறுத்தும் இஸ்லாம் மதமே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்மையான சமத்துவத்ததை தந்துள்ள ஒரே மதமாகும்.

பெண்கள் தொடர்பான பல தீய பழக்க வழக்கங்களை இஸ்லாம் ஒழித்ததொடு பெண்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அதில் முதன்மையானதாகும். அதே போன்று பெண்களும் கல்வி கற்க வேண்டும் என அதை வற்புறுத்தும் ஒரே மதமும் இஸ்லாமேயாகும். நபிகள் (ஸல்) அவர்களின் பல்லாயிரக்கணக்கான ஹதீஸ் அறிவித்தல்களை பெண்கள் அறிவித்திருக்கும் நிலை இந்த உண்மைக்குப் போதுமான சான்றாகும். நபியவர்களின் அருமை மகளான பாதிமா (அலை) மற்றும் மனைவியர் களில் பலர் அறிவித்த பல ஹதீஸ்கள் இன்றும் போற்றப்பட்டு வருவதை நாம் இஸ்லாமிய உலகில் காணலாம். இவைகளை இஸ்லாமிய ஷரீயாச் சட்டங்களை இயற்றவதற்குப் போதுமான ஆதாரங்களாகவும் இஸ்லாமிய அறிஞர்கள்; ஏற்கின்றனர்.


ஒரு திருமணமான பெண் சம்பாதிக்கும் பணத்தில் அவளது கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையெனக் கூறும் இஸ்லாம், அதை குடும்பச் செலவிற்காக தர வேண்டுமெனக கணவன் ஒரு போதும் வற்புறுத்த முடியாது என்றே வலியுறுத்துகின்றது. குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பு ஆணையே சாரும் என்றும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. பெற்றோர் வழியால் ஒரு பெண்ணுக்குச் சொந்தமாகும் சொத்துக்கள் தொடர்பான சட்டமும் இது போன்றதே. நபிகள் (ஸல்) அன்னவர்கள் மணந்த கதீஜா (அலை) மக்காவிலேயே இருந்த மிகப்பெரும் செல்வந்தப் பெண்மனியாக இருந்தும் அவரது அநுமதியுடனேயே அவரது சொத்துக்களை நபிகள் (ஸல்) அவர்கள் பராமரித்து வந்தார்கள்.

பெண்கள் விடயத்தில் இஸ்லாம் இட்டுள்ள சட்டங்கள் இவை மாத்திரமல்ல. ஒரு பெண்ணை மணப்பவன் அப்பெண் தனது பிறந்த வீட்டில் எந்தெந்த வசதிகளை அனுபவித்து வந்;தாளோ, அத்தனை வசதிகளையும் தனக்குத் தரவேண்டும் என அவள் நிபந்தனை விதிக்கும் பட்சத்தில் அவ்வனைத்து சௌகரியங்களையும் அம்மனைவிக்கு செய்து தருவது கணவனின் கட்டாயக் கடமையாகும். பிள்ளைகளை வளர்ப்பது, உணவு தயாரிப்பது, ஆடைகளை துவைப்பது போன்ற எந்த வீட்டு வேலைகளையும் செய்ய முடியாது என்றோ அல்லது அதற்கு வேலைக்காரர்களை அமர்த்த வேண்டும் என்றோ அப்பெண் கூறினால் அவை அனைத்தையும் செய்து தர வேண்டியதும் கணவனின் கடமையாகும். ஆனால் தற்கால முஸ்லிம் பெண்கள் தங்களது கணவன்களின் மீதுள்ள கிருபையால் இவ்வாறெல்லாம் அவர்களை சிறமம்படுத்தாது 'போனால் போகட்டும்' என்று இவ்வத்துனைக் காரியங்களையும் தாமே இலவசமாக செய்து தருகின்றனர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

இஸ்லாமிய சட்டங்கள் பெண்கள் விடயத்தில் இவ்வாறே உள்ளன. இஸ்லாம் சாதாரணப் பெண்களுக்கு அளிக்கும் இந்த அந்தஸ்த்துக்களும் சௌகரியங்களும் நாம் முன்பு குறிப்பிட்ட பண்டைய எகிப்திய, உரோம மற்றும் கிரேக்கக் காலத்து அரசிகளும் அரசிளங்குமரிகளும் மட்டுமே அனுபவித்து வந்த சுகபோகங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்று வாழ்ந்த பெண்கள் மட்டுமல்ல ஆண் பெண் சமத்துவம் பேசும் இந்த நவீன யுகத்தில் அமெரிக்கா ஐரோப்பாவில் வாழும் ஏனைய பெண்கள் கூட கனவிலும் நினைத்துப்பாக்க முடியாத வசதிகளே இவை.

ஆனால் இஸ்லாத்தில் உள்ள இது போன்ற ஒப்பற்ற பல விடயங்கயுளும் உண்மைகளும் மறைக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் இந்த மேலான வாழ்வு வழிமுறையைப்பற்றி தவரானதொரு சித்திரத்தையே இஸ்லாத்தின் எதிரிகள் உலகிற்கு காட்ட முயன்று வருகின்றனர்.

திருமணச் சட்டங்கள் தொடர்பாகவும் இஸ்லாம் பெண்களுக்கு பூரணச் சுதந்திரத்தை அளித்துள்ளது. ஒரு கணவனை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அவள் தனது பெற்றோர்களதும் உறவினர்களதும் முடிவை மதித்து ஏற்கும் வழக்கத்தை நாம் நமது நட்டில் காண்கின்றோம். பெண் பிள்ளைகள் வீடுகளை விட்டு அதிகம் வெளியே செல்லாத அமைப்புள்ள எம் போன்ற நாடுகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு இதுவே சிறந்த லழிமுறையுமாகும். இருந்த போதிலும் பெற்றோர் தெரிவு செய்யும் மணவாளனை திருமணம் செய்தே ஆக வேண்டுமென இஸ்லாத்தில் எந்த கட்டாயமும் இல்லை. அவள் விரும்பாவிட்டால் அதை தெரிவிப்பதற்கு ஒரு பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்றே இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறு மணப்பெண்ணின் விருப்பத்திற்கு மாற்றமாக செய்யப்பட்ட திருமணத்தை 'செல்லாதது' என்றே ஷரீயா கூறுகின்து.

இதே போன்ற தமது வாக்கை பயன்படுத்தும் உரிமையையும் இஸ்வாம் பெண்களுக்கத் தந்துள்ளது.

இவையல்லவா பெண்களுக்குத் தரப்பட வேண்டிய உண்மையான சுதந்திரங்கள்? இவையல்லவா அவர்களும் விரும்பக்கூடிய சமூக அந்தஸ்த்து?

இவைகளை விட்டு விட்டு அவர்களுக்கு சமத்துவம் தருகின்றோம் சுதர்திரம் தருகின்றோம் என்று கூறிக்கொண்டு அவர்களை அரைநிர்வானப்படுத்து காட்சிப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும் மாற்றுவiதையே இன்றை உலகு சுதந்திரங்களாக அவர்களுக்குக் காட்டி வருகின்றது.

எவர் மறைக்கவும் தடுக்கவும் முயன்றாலும் கதிரசவனின் ஒளியைப் போன்றே உண்மையும் வெளிப்பட்டே தீரும். இஸ்லாம் என்பதோ உண்மைகளில் மிகவும் மேலான உண்மையாகும். அது சற்று தாமதித்தேனும் வந்தே தீரும். சத்தியத்தின் தன்மை அதுவே!

எமது அறிவுபூர்வ பாரம்பரியத்தில் பெண்களின் பாத்திரம்



தற்போதைய எமது காலத்தில் அலசப்படும் முக்கியமான விடயங்களில் இன்றைய பல்வேறுபட்ட துறையகளில் பெண்களின் பாத்திரங்கள்; எவ்வாரு இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இது விடயமாக ஆண்களும் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

ஆணாதிக்கம் இத்தனை ஆண்டுகள் நடை பெற்றப் பின்னர் அவர்களுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? எப்படி இந்த திடீர் ஞானோதயம்? இது, ஆண் பெண் சமத்துவதத்திற்காக தேட்டம் பொதுவாக அதிகரித்துள்ளதாலா? அல்லது இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத விதத்தில் ஆண்கள் 'அச்சுறுத்தலுக்கு' ஆளாகி இருப்பதாக அவர்கள் உணர ஆரம்பித்ததாலா?

உலகில் 'புகழ் பெற்ற' ஆண்கள் 'புகழ் பெற்ற' பெண்களை விட எப்பொழுதும் அதிகமான எண்ணிக்கையிலேயே இருப்பர். ஆயினும் ஒரு மரபிட்கான பங்களிப்பில் ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிப்புச் செய்வது அவசியமென்றே நான் கருதுகின்றேன். ஒருவருடைய துணையின்றி மற்றவருக்கு எதுவுமே சாத்தியமாகாது என்பதே உண்மை நிலை.


திருக்குர்ஆனும் அல் ஹதீஸும் இந்த விடயத்தைப் பற்றி இவ்வாரான கோட்பாடுகளையே கொண்டுள்ளது. இருப்பினும் இந்த விடயத்தைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு நான் முன் வந்திருந்தாலும், நான் ஒரு ஆசிரியையே தவிர, மார்க்க அறிவை முழுமையாக கற்றவளோ அல்லது இந்த விடயத்தில் நிபுனத்துவம் பெற்றவளோ அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, எல்லாவற்றிட்கும் மேலாக, ஒரு பெண் என்ற கோதாவில் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே நான் வந்துள்ளேன்.

இது போன்ற விடயங்களை நிபுனத்துவம் உள்ள அறிவு ஜீவிகள் விவரிக்கும்போது, மிக விசித்திரமான புதிய வார்த்தைகளை கையாள்வதுண்டு. உதாரணமாக ஆங்கிலத்தில் epistemology, ontology, teleology போன்ற சொற்களை அவர்கள் அள்ளி வீசுவார்கள். இவ்வாரு அவர்கள் செய்வதன் நோக்கம் தாங்கள் ஒரு விஷேட அறிவு ஜீவிகள் குழுவொன்றை சேர்ந்தவர்கள் என்பதை நாம் மறக்காமல் இருப்பதற்கேயன்றி, அவர்கள் கூறும் விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற என்னத்தினால் அல்ல என்று நான்  நினைப்பதுண்டு. இவ்வாரான, எமது 'தலைக்கு மேலே' செல்லக்கூடிய வார்த்தை பிரயோகங்களால், அவ்விடயம் நமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பானது என்ற நினைப்பே எம்மை விட்டு வெறுண்டோடி விடுவதுண்டு. ஆகையால் நான் நம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் சம்பாஷிக்கவே விரும்புகின்றேன். என்னால் முடிந்ததும் அது மாத்திரம்தான்.




என்னை பொருத்தமட்டில் பாரம்பரியம், மரபுறிமை என்றால் மனிதர்களே. மனிதர்கள் என்றால் சிந்தனையும் செயலுமாகும். பாரம்பரியமாகவும் மரபாகவும் பிற்காலத்தில் ஆவது மனிதர்களின் இந்த சிந்தனையும் செயல்களுமே.

இஸ்லாமிய பாரம்பரியம் என்றால், அல்லாஹ்வை திருப்திப் படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல்களென்றே நான் நம்புகின்றேன். அதைத் தவிர உள்ள அனைத்தும் வெரும் சரித்திறமேயன்றி இஸ்லாமிய மரபுறிமையாக கொள்ள முடியாது.

எனது வாழ்க்கை பிள்ளைகளையும் வாலிபர்களையும் சுற்றிச் சுழன்றுகொண்டிருப்பதாகும். அவர்களே என் ஆசான்கள். 12 முதல் 20 வயதான இவர்களில் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து மரபுறிமை என்று அவர்கள் நினைப்பது எதை என்று நான் கேட்டேன். அவர்களில் பெருமபான்மையானோர், கலை, கட்டிடடக்கலை என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த பதில்கள் எனக்கு ஏமாற்றத்தை தந்தாலும் ஆச்சரியத்தைத் தரவில்லை.

பிறகு நான் அதே கேள்வியை வேறு விதமாக கேட்டேன். அறிவுபூர்வ மரபுறிமை என்றால் என்ன என்று கேட்டேன். அப்பொழுது பதில்கள் இலக்கியம், காவியம் என்ற ரீதியில் வெளிப்பட்டது. மேலும் சில் கருத்துப் பரிமாற்றலுக்குப் பிறகு நப்ஸுடன் (அதாவது உள்ளுணர்வுடன்) செய்யப்படும் போராட்டங்களை ஏற்படுத்துவதே அறிவுபூர்வ மரபுறிமை என்று அவர்கள் கூறினர்.

இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது 'இஸ்லாத்தில் உள்ள பெண்' என்பதற்கும் 'முஸ்லிம் பெண்' என்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம் பெண் என்பவள் வேறு எங்கும் காண முடியாத, ஒப்புவமையற்றவள் ஆவாள். பொதுவாக தவறாக கருதப்படும் 'ஆண் பெண் சமத்துவம்' என்ற விடயத்தை போலல்லாது, இஸ்லாம் கூறும் இச்சமத்துவம் ஆணையும் பெண்ணையும் மனிதப் பிறவிகளாக கருதும் அடிப்படையில் எழுந்ததாகும். அவர்கள் இருவரையும் சமமானவர்கள் என்று பொய்யாக குறிப்பிட விரும்பாததன் காரணம், இஸ்லாம் எப்பொழுதும் நயவஞ்சகத்தனமாக விடயங்களை கூற விரும்பாததனாலேயாகும்.

மனித சமுதாயத்தின் சரித்திறத்தில் நாகரீகங்களின் தோற்றம் முதலிய முக்கியமான விடயங்களை நோக்கும் போது அவ்வெதிலுமே பெண்ணின் பாத்திரம்; குறிப்பிடுமளவு இருந்ததில்லை என்பது தெளிவாகும். கிரேக்க சிந்தனையாளர்களையும் ஏனைய மேதைகளையும் எடுத்துக்கொண்டால்; அவர்கள் அனைவருமே ஆண்களே. பிரெஞ்சுப் புரட்சி மற்றும் ரஷ்யப் புரட்சி ஆகியவற்றின் பின்னனியும் ஆண்களே. ஐக்கிய அமெரிக்காவை கட்டியெழுப்பியவர்களும் ஆண்களே.

ஆனால், இஸ்லாத்தை கட்டியெழுப்புதலில் பெண்கள் குறிப்பிடுமளவு பங்கேற்றுளமையை நாம் காணலாம். அதே போன்று இஸ்லாமியக் கல்வியின் முக்கிய அம்சமொன்றாகிய ஹதீஸ் அறிவிப்புக்களை பாதுகாத்து அறிவித்ததன் மூலம் பிறகு தோன்றிய சமுதாயங்களுக்கு இஸ்லாhத்தை கிடைக்கச் செய்யும் மாபெரும் கைங்கரியத்திலும் முஸ்லிம் பெண்களின் பங்கு மகத்தானதாக இருப்பதை நாம் காணலாம்.

ஆணையும் பெண்ணையும் ஒரே ஆத்மாவில் இருந்து படைத்ததாகவே திரு மறை கூறுகின்து. 'மனிதர்களே! ஒரே ஆன்மாவில் இருந்து உங்களை படைத்து பிறகு அதிலிருந்து அதன் துணையை படைத்த உங்கள் இரட்சகனை பயந்துகொள்ளுங்கள்' (அந்நிஸா: 1)


ஆக, உடல் ரீதியாகவே இவ்விருவரும் வேறுபடுகின்றார்கள். மறுமை எனும் ஒரு பொதுவான குறிக்கோளை அடைவதற்கு அல்லாஹ்வினால் வித்தியாசமான 'உடல்கள்' எனும் மாறுபட்ட 'கறுவிகள்' தரப்பட்ட, ஆனால் ஒரே மூலத்தில் இருந்து படைக்கப்பட்டவர்களே இந்த ஆணும் பெண்ணும். பெண்ணுடன் ஒப்பிடுகையில் ஆணை பலமிக்கவனாகவும், பிடிவாதமுள்ளவனாகவும் வெளிப்புற வாழ்க்கையை அதிகம் விரும்புபவனாகவும்; அறிவுமிக்கவனாகவும் அல்லாஹ் படைத்திருப்பதை காணலாம். ஆனால் இதற்கு மாறாக பெண்கள் தனது உணர்வுகளை மறைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும், தனது கண்ணியம் பற்றி அதிகம் கவலை கொள்ளக்கூடியவளாகவும் இருப்பதை காணலாம். இதை பலஹீனங்களின் அடையாளங்களாக தவறாக எடை போடப்பட்டாலும், இதுவே உண்மையான மனித பலங்களாகும்.

ஜலாலுத்தீன் றூமி இது பற்றி இவ்வாரு கருத்துத் தெரிவித்துள்ளார்.

'அறிவு என்ற விடயத்தை நோக்கும்போது ஆண் வானமாகவும் பெண் பூமியாகவும் இருக்கின்றனர். வானம் வீசக்கூடியதை பூமி காத்துக்கொள்;கின்றது'

எனவே, உணர்ச்சி எனும் சக்தியை கட்டுப்படுத்தி கடிவாளமிடுவதில் பெண்கள் அதிக ஆற்றலுள்ளவர்கள் எனக் குறிப்பிடலாம். ஆகவே, மனிதர்கள் தங்களது வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்குத் தேவையான அரூபமான அந்த ஆற்றலின் அஸ்திவாரத்தை இடுபவள்; பெண் என்றே நான் கருதுகிறேன். இந்த அஸ்திவாரத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்காக, நமது வீட்டின் அன்றாட விடயங்களில் இந்த அஸ்திவாரம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தின் பக்கம் நமது கவனத்தை செலுத்துவது பயனளிக்கும். துரதிருஷ்டம் என்வெனில், இதற்காக நாம் வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை என்பதுதான்.

வீடு என்பது இப்பிரபஞ்சத்தின் ஒரு அணுவாகும். ஒரு வீட்டில் இடப்படும் சரியான, உறுதியான அஸ்திவாரமானது, அவ்வீட்டில் மற்றுமன்றி ஏனைய வீடுகளுடனான மற்றும் சமூகத்துடனான தொடர்புகளில் அமைதி, ஒற்றுமை, சந்தோஷம் பேன்றவற்றை உறுதிப்படுத்தும். ஆகவே இந்த அஸ்திவாரத்தை இடும் தன்னுடைய பாரிய பொறுப்பை பற்றிப் பெண்கள் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த பயனளிக்கும். இதில் பயிற்சி பெறும் பெண் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் ஈடுபடும்போது பல சமயம் ஆண்களை விட வெற்றிகரமாக அத்துறைகளில் செயலாற்றக்கூடியவளாகின்றாள்.

இதற்காக, பெண்களுக்கு கல்வியறிவு தரப்படுவது அவசியமாகும். இதனால் மாத்திரமே மனித சமுதாயம் சரியான வெற்றியை அடையும். கல்வி என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது உலகாதாயக் கல்வியை மாத்திரமல்ல. வாழ்க்கையை புரிந்த கொள்ளும் கல்வியே உன்னதக் கல்வியாகும். மத்திம யுகத்திலும் கல்வியின் நோக்கமாக இருந்தது ஆன்மாவை மேம்படுத்தும் இத்தகைய அறிவூட்டல்களே. இதற்காக மனிதர்களால் வரையறுக்கப்படடுள்ள விடயங்களை விட்டு விட்டு, படைத்த நாயனால் வகுக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான திட்டத்தை பற்றி ஆராய முனைவது மிகுந்த பயன் அளிக்கும். இதனால் பெண்கள் உலகக் கல்வியை கற்கக் கூடாது என்பதோ, அவர்கள் உத்தியோகம் பார்க்கக் கூடாது என்பதோ கருத்தல்ல. ஆண்களுக்கு பணிவிடை செய்து கொன்டு அடிமை வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணை நீங்கள் இப்பொழுதே கற்பனையில் கண்டுகொண்டிருந்தால் நீங்கள் அதை விட உண்மையை விட தூரமாக முடியாது. நான் கூறுவதன் அர்த்தம் அதுவல்ல. பெண்களை 'அவர்களாக ஆக விடுங்கள்' என்றே நான் வேண்டுகிறேன்.

ஆணாதிக்கத்தை தினிக்கும் விதத்தில் ஆண்கள் பற்பல நூற்hண்டுகளாக செயற்பட்டதன் விளைவாக தாம் புறக்கனிக்கப்பட்டு வருகிறோம் என்ற என்னத்தில் பெண்களும் ஆண்களை விட பிடிவாத குனம் உள்ளவர்களாக மாறி விட்டிருப்பதை நாம் இன்று காண்கிறோம். ஏனெனில் பெண்கள் எவ்வாரு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ, அவ்வாரு இருக்க வேண்டிவர்களேயன்றி அவர்கள் ஆண்களோ சமுதாயமோ விரும்பும் விதத்தில இருக்க வேண்டியவர்கள் அல்ல. தாங்கள் பலஹீனமானவர்கள் என்று என்னும் விதத்தில் பெண்கள் நடாத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதை நீங்கள் புரிந்துகொண்ட நிலையிலேயே நான் மேலும் தொடர விரும்புகின்றேன்.

உதராணப் பெண்களை தேடும்போது, தாங்கள் பாட்டிகளாக, தாய்மார்களாக, மனைவியராக, சகோதரிகளாக, மகள்களாக இருப்பதை ஒரு காரணியாக கருதாது, சமுதாயத்தை சீராக்கும் பணியில் வெற்றி கண்ட மற்றும் சமூகத்தில் முத்திரை பதித்த பெண்களையே தேட நான் முற்பட்டேன்.

இதற்காக நான் முதலில் ஆராய்ந்தது திருக்குர்ஆனையாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களில் உதாரணங்களில் முதலில் ஸையிதா ஹாஜரா நாயகியை முன்வைக்க எண்ணுகின்றேன்.

அவர் (நபி இப்றாஹீம்) ஒரு மகத்தான இறை தூதராக இருந்தார்கள். ஹாஜராவோ இறைவனின் ஒரு பாக்கியம் பெற்ற அடிமையாக இருந்தார்.

அவர் ஒரு வீட்டை கட்டினார். ஹாஜரா அதைச் சூழ அலங்கரித்தார்கள்.

அவரது பாதங்களின சுவடு கல்லொன்றில் பதியப்படடிருந்தது. ஹாஜரின் சுவடுகளோ 'ஸஈ' யாக மாறியது.

அவர் பலியிடும் ஒரு கனவைக் கண்டார். ஹாஜரின் மகன் அதை நனவாக்கினார்.

மற்றுமொரு உதாரணமாக பிர்அவுனின் மனைவி ஆஸியாவை குறிப்பிடலாம். ஒரு முழு இனத்தையே துன்புறுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த ஒரு கொடுங்கோள் அரசுனுக்கு எதிராக ஆஸியா நின்றார்கள் என்று கூறுவதே அவர்களின் சிறப்பிற்கு போதுமானதாகும். அதுவும் ஆஸியாவுடைய விடயத்தில் அந்த கொடுங்கோளன் அவருடைய கணவனாகவே இருந்தான். அப்பொழுது அவர் அல்லாஹ்வை அழைத்து பிரார்தித்ததாக ஏக வல்லவன் தனது திரு மறையில் சிலாகித்து இவ்வாரு கூறுகின்றான். 'என்னுடைய இரட்சகனே! சுவனபதியில் உன்னிடத்தில் எனக்கொரு வீட்டைக் கட்டுவாயாக' (தஹ்ரீம:; 11)

இவ்வாரு அவர் வேண்டி நின்றது அல்லாஹ்வின் திருப்தியையே ஆகும். தன் மனைவியுடைய மன உறுதி பிர்அவுனை நிலை தடுமாறச் செய்தது. அவனது மனதிற்கு விருப்பமான அந்த மனைவியின் வாயை அடைக்கும் நிலை அவனுக்கு ஏற்பட்டது.

மற்றுமொரு உதாரணம் ஸையிதா மர்யமுடையதாகும். அவர் உலகம் என்ன நினைக்கும் என்பதை பொருட்படுத்தவில்லை. ஒரு ஒழுக்கமிக்க கண்ணிப் பெண்ணுக்கு தன்னுடைய கற்பும் நற்பெயரும் எந்தளவு முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். ஆனால் தனது இரட்சகனின் வாக்கின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக திருமணமாகாமலேயே சிசுவொன்றை சுமக்கும் அவப்பெயரை ஏற்கத் துனிந்து, பிறகு தைரியமாக அந்த கைக்குழந்தையுடன் தனது ஊர் மக்களை சந்திக்கச் சென்ற அவரைப் போன்ற நம்பிக்கை உறுதி மிக்க வேறொரு கண்ணிப் பெண்ணை நாம் எங்கும் காண முடியாது. அது மட்டுமல்ல. இதே போன்ற ஒரு சோதனையை தாங்கிய வேறு ஒரு ஆணை காணவும் முடியாது.

மேற்குறிப்பிட்ட அப்பெண்மணிகள் அனைவரும் தங்களுக்கும் தன் இரடசகனுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையை சரியாக புரிந்து கொண்டதனாலேயே மாபெரும் வெற்றிகளை பெற்றார்கள்.

இதே போன்று ஹதீஜா அம்மையார், பாத்திமா நாயகி, ஜைனப் போன்ற மாதர்குல மானிக்கங்களை நாம் குறிப்பிடலாம். திருக்குர்ஆனில் சிலாகிக்கப்பட்ட பெண்களுக்கான அனைத்து நற்குனங்களும் இவர்களிடமும் இருந்தன. இவர்கள் எல்லோரும் ஹாஜராவின் பொறுமையை கைகொண்டார்கள். ஆஸியாவின் தைரியத்தை பெற்றிருந்தார்கள். மர்யமின் மன உறுதியோடு செயற்பட்டார்கள்.

சரித்திற ஏடுகளை புரட்டிப் பார்க்கும்போது, இவ்வுயர்ந்த மாதர்களை பின்பற்றிய புகழ்பெற்ற பல முஸ்லிம் பெண்மணிக்ளை நான் கண்டு வியப்புற்;றேன். மொங்கோல் காதூன்ஸ், துர்க்கியின் அரசி ஸஜாரத் அல் தூர், யெமனில் வாழ்ந்த அரசிகளான அஸ்மா மற்றும் அற்வா, மேலும் மாலைத்தீவிலும் இந்தோநேசியாவிலும் வாழ்ந்த அரசிளங்குமரிகள், சமீபத்தில் பங்களாதேஷில் ஆட்சி புரிந்த காலிதா ஸியா, ஷேக் ஹஸீனா, பாகிஸ்தானின் பெனாஸிர் பட்டோ போன்ற உதாரணப் பெண்கள் பலர் முஸ்லிம்களில் இருந்துள்ளனர்.



இவர்கள் எல்லோரும் அரசியல் துறையில் ஆண்களுக்கு சமமாக, ஏன் சில சமயம் ஆண்களை விட திறமையாக, செயற்பட்டவர்கள்.

இதே போன்று விஞ்ஞானம், மருத்துவம், விமானத்துறை, கட்டிடக்கலை போன்ற பல துறைகளில் பெண்கள் தம்முடைய முத்திரையை பதித்துள்ளனர். அறிவியல் துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர்கள் என நான் கருதும் 3 பெண்களை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் முன்பு குறிப்பிட்டது போன்று தன்னுடைய இரட்சகனுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை சிறந்த முறையில் பேனியவர்களாக இவர்களை நான் காண்கின்றேன். தங்களுடைய கருத்துக்களுக்கு வரவேற்பு இல்லாதிருந்த போதிலும் அவைகளுக்கு தேவை இருந்த இடங்களில் அவற்றை தைரியமாக வெளிப்படுத்தியவர்கள் என இவர்களை குறிப்பிடலாம். சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தருனங்களில் பலமிக்கவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் இவர்கள் தளரவில்லை. அவர்களது வாழ்க்கை சரிதையை படிக்கும்போது அவர்கள் அடைந்த துன்பங்களை என்னாலும் உணர முடிந்தது. அவர்கள் ஒப்பற்றவர்கள். இருப்பினும், அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு சராசரி பெண்ணின் கரத்திட்கும் எட்டும் தூரத்தில் உள்ளவைகள் என்றே நான் நம்புகின்றேன்.

பின்தல் ஹுதா (1940-1980) இவருடைய பெயரின் பொருளே 'நேர்வழி நடத்துபவரின் மகள்' என்பதாவதுடன் இவருடைய இயற்பெயர் அமீனாவாகும். இவருடைய தந்தையின் பெயர் ஸெய்யித் ஹைதர் அஸ் ஸத்ராவதுடன், இவருடைய பரம்பரை பல தலைமுறைகளாக ஈராக்கில் உள்ள முஸ்லிம்களை வழிநடத்தியவர்கள் ஆவார்கள்.



அமீனா தன்னுடைய சகோதரனிடமிருந்து மார்க்கக் கல்வியை கற்றதோடு தன்னுடைய திறமையை மிகவும் ஆரம்ப வாலிபப் பருவத்திலேயே வெளிப்படுத்த முற்பட்டார். அவர் சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தபோது, அவை மக்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆரம்பித்ததுடன் உலமாக்களின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது. இஸ்லாமிய கோட்பாடுகளை மிகவும் எளிய நடையில் பாமர மக்களுக்கும் புரியும் வித்தில் அமீனாவின் கட்டுரைகள் அமைந்திருந்தன. அவர் எழுதிய நூற்களில்,Virtues and Victories, Empty and Lost, O! If Only I Have Known and Struggled போன்றவை குறிப்பிடத்தக்கவை.

O! If Only I Have Known and Struggled  ஒரு சிறுகதை தொகுப்பாவதுடன் இந்நூல் பற்றி அமீனா இவ்வாரு கூறுகின்றார்:

'வாழ்க்கையின் பல்வேறு லியடங்களைப் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தை மானசீக சித்திரங்களாக விவரிப்பது இந்த சிறுகதை தொகுப்பின் நோக்கமாகும். ஒரு விடயம் வெறும் சித்தாந்தமாக இருக்கும் வரை அதற்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளாக ஆகும்போது அது பயன்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் அல்லாஹ் இஸ்லாத்தின் வழி காட்டல்களை வெறும் அறிவுரைகளாக மாத்திரம் உபதேசிக்காது, தனது தூதர்களது வாழக்கையின் நடந்த உண்மை சம்பவங்ளாக விவரிக்கின்றான். மேலும் அவைகளின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் பிரம்மாண்டமான நிகழ்வுகள் மூலம் வலியுறுத்துகின்றான்'

பெண்மை பற்றி குறிப்பிடும் அவர் இவ்வாரு கேள்வி எழுப்புகின்றார்: 'மார்க்கத்தை கற்று அதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ் பெண்களுக்கு திருக்குர்ஆனில் இடாத சங்கிலிகளையும் வேலிகளையும் இடுவதற்கு முயற்சிப்பது ஏன்?'

பிந்தல் ஹுதா என்கிற அமீனா கத்மயான் நகரில் பெண்களுக்காக ஒரு கல்விக்கூடத்தை ஆரம்பித்தார். சில அரசியல் காரணங்களுக்காக அமீனாவின் சகோதரர் பாகிர் அல் ஸத்ர் 1979ல் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுவிப்பதற்காக அமீனா ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். அதன் பயனாக ஸத்ர் விடுதலை செய்யப்பட்டார். இருந்த போதிலும் மீண்டும் பாகிர் மறு ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி கைது செய்யப்பட்டபோது அதிகாரிகள் அமீனாவையும் சேர்த்தே கைது செய்தனர். அதற்குப் மூன்று நாட்களுக்குப் பிறகு இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

நனா அஸ்மாவு (1793-1865) இவர் ஷேஹ் சேகு உத்மான் டான் போடியோ (போடியோ என்றால் 'பகீஹ்' என்று பொருள்) என்பவரின் மகளாவார். 'சொகோடோ கிலாபத்' எனும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கட்சியும் சிறந்த கல்விமான்களின் அங்கத்துவமும் பெற்ற அமைப்பின் தாபகரான போடியோ, ஒரு சிறந்த அறிவாலியாகவும் இருந்ததுடன், அவருடைய புரட்சிக் கருத்துக்களின் காரணமாக 1804ம் ஆண்டு அவரது தாய் நாடான நய்ஜீரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி, குறிப்பாக பெண்கள் கல்வி பெறுவது பற்றிய முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்த போடியோ அதை தனது செய்றபாட்டு இலக்குகளில் முதலாவதாக வைத்திருந்ததோடு, தனது பெண் மக்களின் கல்வி தொடர்பான விடயங்களில் தனிப்பட்ட விதத்தில் தீவிரக் கண்கானிப்புள்ளவராக இருந்தார்.

நனா என்று இன்றும் அன்புடன் நினைவுகூரப்படும் நனா அஸ்மாவு தனது தந்;தையின் இந்த ஆவலை நன்கு புரிந்துகொண்டவராக தனது கல்வி விடயத்தில் மிகவும் அக்கறை காட்டி வந்தவர், நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பொன்றை எழுதினார். அதில் நபியவர்களின் இறைதூது, திருக்குர்ஆனின் உபதேசங்கள், அல்லாஹ்வின் தூதரின் ஒப்பற்ற நற்குனங்கள் முதலிய விடயங்களை சிலாகித்துப் பல கவிதைகளை இயற்றியிருந்தார். இவரது கவிதைகள் ஆண்களாலும் பெண்களாலும் மாணவ மாணவியராலும் மணணம் செய்யப்பட்டு அவை கல்வி கற்கும் வட்டாரங்களில் எல்லாம் ரீங்காரமிட்டது. பலவிமதான யுத்தங்கள், மோதல்கள் மற்றும் பகைமையின் காரணமாக உலகிற்கு ஏற்படும் அழிவைப் பற்றி தொடர்ந்து கவலை தெரிவித்து வந்த நனா, மனிதர்களுக்கு இடையிலும் நாடுகளுக்கிடையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் முதலியவற்றை பலத்தையும் ஆயுதத்தையும் பயன் படுத்தி தீர்த்துக்கொள்ள முயன்று அழிந்து பொவதற்கு பதிலாக, இறைவன் மனித குலத்திற்கு தந்தருளியிருக்கும் அறிவையும் ஆன்மிக ஞானத்தையும் கொண்டு நியாயமான முறையில் தீர்த்துக் கொள்வதன் சிறப்பு பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதிகமாக பேசவும் எழுதவுமானார்.

இதே போன்று கிறாமப்புறங்களில் உள்ள சில பெண்களை அழைத்து வந்து அவர்களுக்குச் சில விடயங்களைக் கற்றுக்கொடுத்து பிறகு அவர்களை தத்தமது ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள ஏனைய பெண்களுக்கு அவைகளைக் கற்றுக்கொடுக்கும் ஒரு திட்டத்தை நனா ஆரம்பித்தார். இவரின் இந்தத் திட்டம் இன்றும் நைஜீரியாவில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இவ்வாரு கல்வி கற்பவர்களை 'யான்-தாரு' என்று நைஜீரியாவில் அழைப்பதுண்டு. இதன் பொருள் 'ஒத்தாசைப் புரிந்துகொள்பவர்கள்' என்பதாகும். இது பிற்காலத்தில் நைஜீரியாவில் மட்டுமன்றி பல தென் ஆபிரிக்க நாடுகளிலும் மக்கள் ஆதரவு பெற்றதொரு பலம் மிக்க இயக்கமாகவே எழுச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிறகு நனாவின் தந்தையும் கணவரும் இறந்து போகவே நைஜீரிய வளக்குப்படி நனா தன் சகோதரனின் வீட்டில் வாழ்ந்து வந்ததோடு, தொடர்ந்தும் தன்னுடைய புரட்சி எழுத்துப் பணியை மேற்கொண்டு வந்தார். நனா இறைவனடி சேர்ந்தபோது பல்லாயிரக் கணக்கில் மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் வாழ்ந்து வந்த சிறிய வீட்டிற்கு வந்து கூடினர். அப்பொழுது அவரது சகோதரர் ஈசா இவ்வாரு கூறினார்: 'சேகு போடியாவின் பிள்ளைகளாகிய நாம்  அனைவரும் எங்கள் மதிப்பிற்குரிய சகோதரி நனாவின் வழிகாட்டலி லேயே எமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். அந்த பிரகாசமான வழிகாட்டும் ஒளி விளக்கு எங்களை விட்டும் பறிக்கப்பட்டு விட்டது. அவர் மாந்தரின் இதயங்களை சுகமாக்கியவர் என்பதை எல்லோரும் அறிவர்'.

நனா அவரது தந்தையின் கல்லறையின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டதோடு இன்றும் மக்கள் அங்கு வந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

குல்தூம் குலாம் ஹுசேன் காசிம் (திருமதி ஹிம்ஜீ) (1899-1976) இவர் இந்தியாவில் 'குச்' பிரதேசத்தில் பிறந்தார். தனது 14 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ஏழே மாதங்களில் கணவனை இழந்து விதவைக் கோளம் பூண்டார். தனது தனிமையை போக்குதல் மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதை விரும்பிய குல்தூம், ஒரு மத்ரஸாவை ஆரம்பித்து அதில் எழுத்து, வாசிப்பு, திருக்குர்ஆன், தொழுகை பேன்ற மார்க்க அனுஷ்டானங்களையும் உர்து மற்றும் குஜராத்தி மொழிகளையும் கற்றுக் கொடுத்தார். மேலும் இரவு பாடசாலையொன்றை பெண்களுக்காக ஆரம்பித்து அவர்களுக்கும் மார்க்க சட்டங்கள் மற்றும் எழுதும் படிக்கும் அறிவையும் கற்றுக்கொடுத்தார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த, காலம் சென்ற கணவனின் பெற்றோரும் இறந்து விடவே குல்தூம் ஸன்ஜிபாருக்கு புளம்பெயர்ந்து அங்கு 'மஜாலிஸ்' கற்க ஆரம்பித்தார். அவரது ஒரே மகளான ஜைனப்பின் திருமணத்திற்குப் பிறகு பலரின் வேண்டுகோளுக்கிணங்க குல்தூம் மறுமணம் செய்துகொள்ள இசைந்தார். தனக்குள்ள கடன்களை கொடுத்து முடிப்பதையே 'மகராக' அவர் வேண்டி நின்றதோடு தன்னுடை எஞ்சிய வாழ்நாட்களில் தப்லீகுடைய சேவையை செய்வதற்கும் அவர் அனுமதி பெற்றார். குல்தூம் தன்னுடைய இச்சேவைகளுக்காகவும் தான் கற்ற மஜாலிஸ் பாராயனத்திற்காகவும் ஆபிரிக்கக் கண்டத்தில் பல நாடுகளுக்கு சென்றார். இவருடைய சொற்பொழிவுகளையும் மஜாலிஸ்களையும் கேட்பதற்கு தூர இடங்களில் இருந்தும் பெண்கள் வரலாயினர்.

திருமதி ஹம்ஜீ எனப்பிரபலமாகி வந்த குல்தூம் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பாடுபட்டார். மேலும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து திருமணங்களையும் செய்து வைத்ததோடு கருத்து வேறுபாடு எற்பட்டு விவாக ரத்துச் செய்து கொள்ளும் நிலையை அடையும் தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்கும் சேவையையும் செய்து வந்தார் குல்தூம். இதே சமயத்தில், தனது இரண்டாவது திருமணத்தின் மூலம் மேலும்; இரண்டு பிள்ளைகளையும் பெற்றிருந்த குல்தூம், அவர்களுடன் தனது கணவனின் முந்தைய திருமணத்தின் மூலம் அவர் பெற்றிருந்த பிள்ளைகளையும் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிறகு அவருக்கு ஏற்பட்ட முதுகு உபாதையின் காரணமாக படுக்கையில் விழுந்த குல்தூம் அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாது மஜாலீஸ் பற்றியதொரு நூலை எழுதி முடித்தார். அதன் பிறகு இரண்டாவது கணவனும் இறந்து விடவே குல்தூம் மறுபடியும் விதவையானார். தனது அந்திம காலத்தில் அவர் ஸையிதா ஜைனப் (ரலி) பற்றி ஒரு நூலை எழுதினார்.

குல்தூமை தனிப்பட்ட முறையில் அறிந்து அவரால் பயன் பெற்றிருந்த ஒரு சிலரை நான் சந்தித்து குல்தூமைப பற்றிய அவர்களது கருத்தை கேட்டபோது அவர்களின் பதில்களில் பொதுவாக நான் கீழே குறிப்பிடும் 5 விடயங்கள் உட்பட்டிருந்ததை அவதானிகக்கூடியதாக இருந்தது:

'முஹர்ரம் பற்றியும் மஜாலிஸ் பற்றியும் மக்களிடையே உள்ள கருத்தை அவர் சீராக்கினார். மேலும் அவர் மிம்பரை ஒர அறிவைப் பெறும் மேடையாக ஆக்க பாடுபட்டார்'

'அவர் மார்க்கத்தை எமது வாழ்க்கைக்குள் அழைத்து வந்தார். மார்க்கம் என்பது 'இதை செய்' 'அதை செய்யாதே' என்பது மாத்திரமல்ல என்பதை அவர் எங்களுக்கு புரிய வைத்தார்'

'அவர் சரித்திறத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்தார்'

'அவர் திருக்குர்ஆனையும் அல் ஹதீஸையும் நாம் காணக்கூடிய மாணசீக பிம்பங்களாக மாற்றினார்'

சிறு பிள்ளைகளாக இருந்தபோது குல்தூமின் பேச்சுக்களுக்கு செவிமடித்து, இன்று சமூகத்தில் முக்கிய அந்தஸ்துகளில் இருக்கும் சிலரை நான் சந்தித்தபோது குல்தூம் பற்றிய அவர்களது நினைவு பசுமையாக இருந்ததோடு அவரைப் பற்றிய தங்களது கருத்துக்களை அவர்கள் இவ்வாரு முன்வைத்தனர்:

'இஸ்லாத்தை நாம் கற்க வேண்டும் என்று எங்கள் தாய்மார்கள் மூலம் ஆர்வமூட்டியவர் குல்தூம் அவர்களே'

'குல்தூமின் சொற்பொழிவொன்றிட்கு எங்கள் தாய்மார்களோ சகோதரிகளோ சென்ற விட்டு வந்தால், அவர் அங்கு குறிப்பிட்ட கருத்துக்களை பற்றி ஆர்வத்துடன் கலந்துரையாடுவதன் காரணத்தால் எங்களது வீடுகள் கோளாகலமாக இருக்கும்'

'கல்வி கற்பதை அன்பு வைக்கும் மனப்போக்கை அவர் ஏற்படுத்தினார்'

1976 செப்டெம்பர் மாதம் ரமழான் பிறை 18ல் அவர் இறைவனடி சேர்ந்த அவர் தாருஸ் ஸலாமில் அடக்கம் செய்யப்படடுள்ளார்.

கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர்கள் போன்ற பெண்களின் வாழ்க்கை சரிதையை நோக்கும்போது, இன்று நாம் கற்கும் ஆன்மிக பின்னனியற்ற விடயங்களின் மூலம் அவர்கள் போன்ற சிறந்த பெண்கள் எம்மத்தியில் தோன்றுவார்களா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இன்று எம்மை ஈர்ந்தெடுக்கும் ஒரே விடயம் உலகாதாயமும் வஸ்துக்களை அடைவதும் மாத்திரமாகவே உள்ளது. ஆனால் அவை ஏராளமாக நம்மை வந்தடைந்த பின்பும் ஒரு வெறுமையையே நாம் உணர்கின்றோம் என்றால், நாம் எங்கு சென்றுகொண்டிருக்கின்றோம்? எதை தேடிக்கொண்டிருக்கின்றோம்?

இந்த நிலையை மாற்றும் பொருப்பில் பெரும் பங்கு பெண்களின் கரத்திலேயே உள்ளது. அல்லாஹ் நமக்கு அளித்துள்ள ஆற்றள்களைக் கொண்டு நாம் எதை அடைய முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம்? இரவல் பெற்ற சித்தாந்தங்களால் எந்த பயனும் நாம் அடைய வில்லை என்பது தெளிவாகியிருக்கும் இந்த தருனத்தில் இஸ்லாத்தின் ஒப்பற்ற வழி நடத்தல்களை சிரமேற்கொண்டு வாழ நாம் தயாராக வேண்டும். பெண்களிடம் மறைந்துள்ள ஆற்றள்கள் இவ்விடயத்திற்கு மிகவும் அவசியமானவையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.