Tuesday, January 31, 2012

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்'

 

'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்',கும்மில்

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்' மன்றம்
சர்வதேச குழு: வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு எனத் தலைப்பிடப்பட்ட இஸ்லாமும் பௌத்த மதமும் மன்றத்தின் இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 18ம் திகதி, கும் நகரிலுள்ள சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.



இலங்கை, களனி பல்கலைககழக பேராசிரியர் ஞணரத்தன(Gnanaratana), பேராசிரியர் உதித்த கருசிங்க, கலாநிதி ராஜித்த குமாரா ஆகியோர் இவ்வமர்வில் கலந்து கொண்டு மன்றத்தை சிறப்பித்தனர். மற்றும் முஹம்மது ரிஸா தெஹ்ஷஹ்ரி, இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின கல்வி, ஆராய்ச்சி விவகாரத்தின் பொறுப்பாளர், மன்றத்தில் பிற மத ஆராய்ச்சி பிரிவின் பல்கலைக்கழ பேராசிரியர்களான முஹம்மது அலி ரஷ்தமியான், முஹ்மமது ஹூஸைன் முஸப்பரி, முஹம்மது அலி ஷூமாலி, செய்யது ஜவாத் மீரி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.



சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பொறுப்பாளர் முஹம்மட் ரிசா அகாயா இக்னாவுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மன்றத்தின் இரண்டாம் அமர்வு, இஸ்லாத்திற்கும் ஏனைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான உள்ளக உரையாடலை வாய்ப்பளிக்கும் மன்றத்தொடர்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது என்றார்.


இவ்வியக்கம், கல்விமான்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரினால் முன்னெடுக்கப்படுகின்ற அளவிலும் தரத்திலும் சிறந்த ஆய்வுத் தளங்களை எதிர்பார்த்து நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன், சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மன்றம், இலங்கையின் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகங்களின் கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் பலரை, இது தொடர்பான ஈரானிய வகிபாகம் குறித்து கலந்துரையாடும் பொருட்டு அழைத்து வரவேற்றுள்ளது.

இரு பகுதிகளாக இடம்பெற்ற இச்சந்திப்பு, 'வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு', மற்றும் 'பூகோள யுகத்தில் உள்ளகத் தொடர்புகளையும் நட்புறவையும் வளர்த்துக் கொள்வதில் சமயத்தின் வகிபாகம்' ஆகிய இரு கருப்பொருள்களில் கலந்துரையாடலை அமைத்துக் கொண்டது.



இச்சந்திப்பானது ஷஹ்ரக்கே பரிதீஸான் நகரில் காணப்படும் பிறமத ஆராய்ச்சி சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 9 – பிற்பகல் 18 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments:

Post a Comment