Showing posts with label Zionisation of America. Show all posts
Showing posts with label Zionisation of America. Show all posts

Tuesday, January 31, 2012

அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பதே உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும்

 
மக்கள் தங்களது உரிமைகளைக் கேட்டு நிற்பதும் அதற்காகப் போராடுவதும் அவர்கள் முன்னேறுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளில்  உள்ளதாகும் என ஈரானிய புரட்சியின் அதி உயர் தலைவர் ஆயாத்துல்லாஹ் செய்யித் அலி காமனேயி குறிப்பிட்டார்.
 
தெஹ்ரானுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி ரபாயல் கொரையா தெல்காதோவை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போதே தலைவர் காமனேயி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற போராட்டங்களில் மக்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருப்பதும் அவசியம் என்று  அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 'லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இவ்வாறான தலைவர்கள் அமைந்திருப்பது அம்மக்களின் அதிர்ஷ்டமே' என்றும் பாராட்டினார்.
 
'எம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக பொங்கி எழுவது சிறந்த ஒரு தன்மையாக இருந்து போதிலும், இன்று பெரும்பான்மை மக்கள் அச்சுறுத்தல்களைக்; கண்டு பின்வாங்குவதையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது' என்றும் தலைவர் கவலை தெரிவித்தார்.
 
தொடர்ந்த பேசிய அவர், தங்களது உரிமைகளுக்காக வீறு கொண்டு பொங்கி எழும் விடயத்தில் ஈரான் முழு உலகிற்கும் முன் உதாரணம் காட்டியுள்ளது என்பதையும் நினைவு படுத்தினார். கொடுங்கோளன் ஷா விடமிருந்து விடுதலை பெற்றதட்குப் பிறகும் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான தீய சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைக்கு எதிராகவும் ஈரான் இடை விடாது போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில வருடங்களுக்கு முன்பு அண்டை நாடாகிய ஈராக்கினால் தமது தேசதிற்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றியும், அதைத் தொடர்ந்து சுமார் ஒன்பது ஆண்டு காலமாக ஈராக்குடன் மேற்கொள்ள நேரிட்ட யுத்தம் பற்றியும் தலைவர் காமனேயி நினைவு கூர்ந்தார்.

எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி
ரபாயல் கொரையா தெல்காதோ
  
அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முன்னால் வலைந்து கொடுக்காமல் நிற்கும் பன்பை ஈரானிய மக்கள் தலைவர் இமாம் கொமேனியிடம் இருந்து கற்றதாக அவர் குறிப்பிட்டதோடு, அப் பன்பில் நிலைத்திருப்பதன் காரணமாக ஈரான் இன்று வெற்றி வாகைகள் பல சூடி வருவதையும், சர்வதேச அரங்கில்; ஈரான் ஒரு பலம் வாய்ந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளதையும் தலைவர் காமனேயி இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
'உண்மையில் இது போன்ற வெற்றிகளை அடைவதற்காக பெரும் விலை ஒன்றைக் கொடுக்க வேண்டி வரும் என்பதிலும் சந்தேகமில்லை. இருந்த போதிலும், அதைத் தொடர்ந்து அம்மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றியும் கண்ணியமும் அவர்கள் கொடுத்த அந்த விலை வீணானதல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.' என்றும் அவர் தைரியப்படுத்தினார்.
 
ஈரான் இஸ்லாமிய புரட்சிக் குடியரசு வீணான மோதல்களை என்றுமே விரும்பியதில்லை  என்றும் சுட்டிக்காட்டிய தலைவர் காமனேயி, இதை எவரும் ஈரான் தன்னுடைய உரிமைகள் பரிக்கப்படும் போது அமைதியாக இருந்துவிடும் என்பதற்கான சமிக்ஞை என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்.
 
இதன் போது கருத்துத் தெரிவித்துப் பேசிய ஜனாதிபதி ரபாயல் தெல்காதோ ஈரானின் மீது கடந்த முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகள் என்று தங்களைக் கூறி வருகின்ற தீய சக்திகள் இட்டு வருகின்ற தடைகளையும் அச்சக்திகளின் தூண்டதலினால் ஈராக் தொடுத்து, ஒன்பது ஆண்டுகள் நீடித்த பாரிய யுத்தத்தின் காரணமாகவும் ஈரான் நலிவடைந்து விடாது சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தளவு பாரிய முன்னேற்றங்களை பல துறைககளில் பெற்றிருப்பது தன்;னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய நாடு ஈரனுடன் பல துறைகளி;ல் ஒப்பந்தங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்திருப்பது தொடர்பாக தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அத்துடன் தம் இரு நாடுகளின் தலை நகரங்களில் இரு நாடுகளது தூதுவராலயங்களை  நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தன்னுடைய நாட்டில்  தொழில் திட்டங்களை ஆரம்பிக்க முன்வருமாறு ஈரானிய தொழில் அதிபர்களை கேட்டுக்கொண்டார். குறிப்பாக உல்லாசத் துறை போக்குவரத்து, விவசாயம், மர உற்பத்தி;கள், உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் போன்ற பல துறைகளில் தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எக்குவேட்டரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் சீமெந்து தேவைப்படுவதை தான் ஜனாதிபதி நெஜாத்திற்குத் தெரிவித்த போது, சீமெந்து தொழிற்சாலைகளை எக்குவெடரில் நிறுவுதற்கு தாம் ஈரானிய தொழில் அதிபர்களை ஊக்குவிப்பதாக நெஜாத் வாக்களித்தார் என்றும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அதே போன்று சுங்க சட்டங்களிலும் சில அனுகூலங்களை எக்குவெடர் விடயத்தில் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் தாம் ஆராயந்து பார்ப்பதாக நெஜாத் வாக்களித்ததையும் தெல்காதோ நன்றியுடன் குறிப்பிட்டார்.
 
இவ்விஜயத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச் சபையின் செயலாளர் நாயகம் சய்யித் ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி சந்தித்தார். அதன் போது பேசிய அவர் ஈரானுடன் தமது நாட்டிட்கு உள்ள உறவை மேம் படுத்த தாம் ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், எக்வெடர் லதின் அமரிக்க பிராந்தியத்தில் முக்கிய ஒரு நாடாக மாற வேண்டுமாயின் தமது நாட்டிட்கு ஐக்கிய அமெரிக்காவின் மூலம் ஏற்படக் கூடிய சகல இடையூறுகளுதம் நீங்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒரு நிலை எற்படுவதற்கு ஈரானைப் போன்ற, அமெரிக்காவின் சவால்களை சமாலிப்;பதில் அனுபவம் உள்ள நாடொன்றின் உறவும் துணையும் தமது நாட்டிட்கு மிகுந்த பயன் தரும் என்றும் தெரிவித்தார். மேலும் எக்வேடர் ஈரானுடன் ஏற்படுத்திக் கொள்ள என்னும் உறவு வெறும் வணிக் அடிப்படையிலானதாக மாத்திரம் இருக்காது என்றும் தெல்காதோ நம்பிக்கை தெரிவித்தார்.
 
பதில் அளித்துப் பேசிய ஜலீலீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை மேம் படுத்திக் கொள்ள ஈரான் என்றும் சித்தமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக எக்வேடருடன் பரஸ்பரம் சகல துறைகளிலும் பங்களிப்புகளை செய்து கொள்ள தெஹெரான் தயாராக இருப்பதாகவும் ஜலீலீ கூறினார்.

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச்
 சபையின் செயலாளர் நாயகம் சய்யித்
 ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி
சந்தித்தார்.
  
எக்வேடர் ஜனாதிபதி தெல்காதோ இந்த பயனத்தின் போது 'மஜ்லீஸின்' (ஈரானின் பாராளுமன்றம்) சபாநாயகர் அலீ லரிஜானியையும் சந்தித்த பேசினார். அதன் போது கருத்துத் தெரிவித்த லரிஜானீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்வதானது ஈரானின் புதிய ராஜ தந்திர வியுகங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள விடயமாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக பொருளாதார மற்றம் கலாசார பரிமாற்றங்கள் விடயங்களில் அதிக கவனத்தை ஈரான் செலுத்த உள்ளதாகவும் அவர் விவரித்தார். எக்வேடர் ஜனாதிபதியின் ஈரான் வருகை இது தொடர்பாக ஈரான் தொடர்ந்து பெற்று வரும் சாதகமான சமிஞ்சைகளில் உள்ளதமாகும் என்றும் சபாநாயகர் மகிழ்ச்சியுடன குறிப்பிட்டார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்ள 'மஜ்லிஸீன்'  பூரணு அனுமதி கிடைத்துள்ளதாகவும் லரிஜானி தெரிவித்தார்.
 
இதன் போது ஈரானின் அணு சக்தி திட்டம் பற்றியும் பேசப்பட்டதோடு, ஈரானின் எதிர்கால சந்ததியினரின் நலன் கறுதி இது போன்ற அதியுயர் தொழில் நுட்பங்களை அடைவதற்கு ஈரான் முடிவு செய்ததாக சபாநாயகர் ஜனாதிபதி தெல்காதோவுக்கு தெளிவு படுத்தினார்.
 
பதிலளித்துப் பேசிய எக்வேடர் ஜனாதிபதி, கடந்த பல ஆண்டுகாளக ஈரானுக்கு தரப்பட்ட இடையூறுகளை நோக்கும் போது ஈரான் அவைகளுக்கிடையே பல விஞ்ஞான மற்றம் அதியுயர் தொழில் நுட்பத் துறைகளில் பெற்றுள்ள வெற்றிகளும் நிலை நிறுத்தியுள்ள சாதனைகளும் மிக ஆச்சர்யமானவை என்று பாராட்டினார். மேலும் உலகில் பெருமதியான எதையும் இலகுவாகவோ தியாகங்கள் எதையும் செய்யாமலோ அடைந்து விட முடியாது என்பதற்கு ஈரான் ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெல்காதோ சுட்டிக் காட்டினார். 
 
மேலும், பல சாதனைகளை செய்திட்ட போதிலும் ஈரானியர்கள் மிகவும் பனிவுடனும் அடக்கத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் ஜனாதிபதி தெல்காதோ பாராட்டுத் தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளுக்கு முன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் நாட்டு விடயங்களில் அமெரிக்கா தலையிட்டு பெரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை நினைவு படுத்திய எக்வேடர் ஜனாதிபதி, தற்பொழுது ஈரான் விடயத்திலும் தன்னுடை மூக்கை நுழைக்கும் போக்கை சிறிதும் மாற்றாமல் அமெரிக்கா இடைஞ்சல் தந்த வருவது விடயமாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார்.
 

Friday, January 13, 2012

சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமியப் பாரம்பரிய வரலாற்றுத் தலங்கள்

சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும்

-இக்பால் சித்தீகி-

Iqbal Siddiqui is a British Muslim of Indo-Pakistani origins, born, brought in London, son of Dr Kalim Siddiqui, Founder of Muslim Institute and Muslim Parliament of Great Britain. He is a well known writer, also contributed in establishing the Institute of Contemporary Islamic Thought (ICIT). He also served as a editor of CrescentInternational

(அன்பு வாசகர்களே, சவூதி அரசின் வரலாறு குறித்த நம் பதிவுகளை பார்த்து சில வாசக நெஞ்சங்கள் புனித ஸ்தலங்கள் என்று வரும் குறிப்புகளை ஒட்டி நாம் ஷிர்க்கை ஆதரிப்பதாக தவறாக விளங்கியுள்ளனர். இறைவனால் மன்னிக்கப்பட முடியா மிகப் பெரும் பாவமான ஷிர்க்கை விட்டும் நம்மை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.)

வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதை தடுக்கும் வகையில் அவை அழிக்கப்படுவதையும், மக்கமா நகரம் என்றால் கஃபதுல்லாஹ்வும், ஹிரா குகையும், மதீனா என்றால் நபிகளார், குடும்பத்தார், தோழர்கள் வாழ்ந்த இடங்கள் நினைவுக்கு வர வேண்டுமே ஒழிய உயரமான கட்டிடங்கள் அல்ல என்பதை அனைவரும் ஒத்து கொள்வோம். ஆனால் திட்டமிட்ட முறையில் நமக்கே தெரியாமல் அவை அழிக்கப்படுவதின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் வெளிப்படுத்த வேண்டும் எனும் நன்னோக்கில் இங்கு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது)

முஸ்லிம்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஸ்தலங்களில் இஸ்தான்பூல் நகரமும் ஒன்றாகும்.

இது மொத்தத்தில், உதுமானிய கிலாபத் காலப் பாரம்பரியமும் ஏராளமான பள்ளிவாசல்களும் ஏனைய நினைவுச் சின்னங்களும் இன்னும் அங்கு காணப்படுவதன் காரணத்தால்தான் ஆகும். இவற்றின் வாயிலாக முஸ்லிம்கள், இஸ்லாமியக் கலாசாரத்தின் ஒரு பொற்காலப் பகுதியுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஸ்தலங்களுள் தென் ஸ்பெயினில் உள்ள அந்தலூஸியாவும் உள்ளடங்கும். முஸ்லிம்கள் அந்தப் பகுதியிலிருந்து பலவந்தமாக அகற்றப் பட்டு இன்று ஏறத்தாழ 500 ஆண்டுகளானாலும் அங்கு நடந்த முஸ்லிம் ஆட்சியை ஞாபகப்படுத்தும் அடையாளங்கள் அங்கு இன்னும் காணப்படு கின்றன.


கெய்ரோ, டமஸ்கஸ், பக்தாத், மஷ்ஹத் போன்ற நகரங்கள் இதுபோன்ற காரணங்களுக்காகவே பிரசித்தி பெற்றிருக்கின்றன.


 இத்தகைய நினைவுச் சின்னங்கள், இஸ்லாமிய வரலாற்றுடனும் பெரும் சாதனைகளைச் செய்து, நாம் இப்போது வாழும் உலகை உருவாக்கிய முன்னைய முஸ்லிம் சந்ததிகளுடனும், உண்மையான உறுதியான இணைப்பை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஆயினும், இஸ்லாமிய வரலாறு முழுவதிலும், முஸ்லிம்கள் மிகப் பெரும் நன்றிக்கடன் கொண்டவர்களாகவும், மாபெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பது எந்தக் காலப்பகுதிக்கு, எந்த மாமனிதர் களுக்கு என்றால், சந்தேகமில்லாமல் அது நபி (ஸல்) அவர்களின் காலப் பகுதியும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வசித்த, வாழ்க்கையைக் கொண்டு நடத்திய இடங்களுமாகத்தான் இருக்கும்.


இன்றும் எதிர்காலத்திலும் அவை விலைமதிப்பற்ற, மாற்றீடு செய்யப்பட முடியாத இடங்களாகப் பாதுகாக்கப்படுவதற்குப் பதிலாகஇ 'இரு புனிதத் தலங்களின் பாதுகாவலன்' எனத் தம்மை உரிமை கொண்டாடிக் கொள்ளும் சவூதி அரேபிய மன்னரகத்தின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அவை அழிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.



இஸ்லாமிய வருடக்கணக்கின்படி, சென்ற ஷவ்வால் மாதம்இ நபி (ஸல்) நகரமான மதீனாவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பகீ எனப்படும் அடக்க ஸ்தலம் ஹிஜ்ரி 1344 ஷவ்வாலில் தகர்க்கப்பட்டதின் 87ம் வருடப் பூர்த்தியாகும். தரைமட்டமாக்கப்பட்ட மண்ணறைகள் (கப்ருகள்), கட்டப்பட்ட கல்லறைகள் என்பனவற்றுள் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் ஆண் குழந்தை இப்ராஹீம், அவர்களின் மகள் ருகைய்யாஇ அவர்களின் பேரர் இமாம் ஹஸன் இப்னு அலி, அவர்களின் வழித்தோன்றல் களான ஷீஆ சிந்தனைப்பிரிவின் இமாம்களான ஜெய்னுல் ஆபிதீன் என அழைக்கப்படும் அலி இப்னு ஹுஸைன், முஹம்மத் அல் பாக்கிர்,  ஜவ்பர் ஸாதிக் ஆகியவர்களுடையவையும் அடங்கும்.


அவை மட்டுமல்ல, மூன்றாம் கலீபாவான உத்மான் இப்னு அஃப்பான் உட்பட ஏராளமான நபித் தோழர்கள்இ பிந்தைய கால இஸ்லாமியப் பிரமுகரான மத்திய ஆசியாவின் செசன்யாவைச் சேர்ந்த இமாம் ஷாமில் போன்றவர்களின் மண்ணறைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. இன்று ஜன்னத்துல் பகீ ஒரு வெற்று நிலப்பரப்பே தவிர வேறொன்றில்லை. அதன் முக்கியத்துவம் குறித்து மதீனாவிற்கு விஜயம் செய்யும் பலருக்குப் புலப்படுவதேயில்லை.


இரு புனித நகரங்களையும் சவூதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜன்னத்துல் பகீ தகர்க்கப்பட்டதானது, முஸ்லிம் உலகம் எங்கினும் எதிர்ப் பலைகளைத் தோற்றுவித்தது.


ஆயினும், சவூதிகளின் ஆட்சிக்காலம் நெடுகிலும் தொடர்ந்த இஸ்லாமிய இடங்களை அழித்தொழிக்கும் வேலைக்கு அது குறியீடாகவே அமைந்தது எனலாம். தரைமட்டமாக்கப்பட்ட ஏனைய தலங்களுள், பாத்திமா ஸஹ்ரா பள்ளிவாசல், இருமினாராக்கள் பள்ளிவாசல், மதீனாவில் அகழி யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்த நான்கு பள்ளிவாசல்கள், மதீனாவில் ஸல்மான் அல் ஃபார்ஸி பள்ளிவாசல், மக்காவில் பழைமை வாய்ந்த அடக்கஸ்தலம் ஜன்னத்துல் முஅல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்ப் உடைய மண்ணறை, (இது 1988ல் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது) மக்காவில் பனூ ஹாஷிம்களின் மண்ணறைகள், உஹதில் ஹம்ஸா (ரழி) மற்றும் உயிர்த் தியாகிகளின் கல்லறைகள் என்பன அடங்கும்.



Cemetery of Jannat al-Mualla in Makkah before it was
 demolished by King al-Saud
 நபி (ஸல்) அவர்களுடன் நேரடியாகத் தொடர்புள்ள ஸ்தலங்களுள் கி.பி. 570ல். முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்ததாக நம்பப் படும் வீடு, நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா நாயகியின் வீடு, (இங்குதான் நபியவர்களின் குழந்தைகள் பலர் பிறந்துள்ளனர்) ஹிஜ்ரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வசித்த மதீனாவிலுள்ள வீடு என்பனவும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது, ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு அவர்கள் அறிவு கற்பித்த தாருல் அர்கத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.


சவூதி அரேபிய ஆட்சியாளர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, அதன் செல்வாக்குக்குட்பட்ட மனிதர்களின் அழிப்பு நடவடிக்கைகளுக்கு, ஏனைய பிர தேசங்களில் (ஈராக்இ சிரியா, பலஸ்தீன்) இருந்த ஸ்தலங்கள் உள்ளாயின. சில தகவல்களின்படி, நபியவர்களினதும் ஸஹாபாக்களினதும் வாழ்க்கைக் காலப்பகுதியைச் சார்ந்த, 90 சதவீதமான அல்லது அதற்கும் அதிகமான வரலாற்றுத் தலங்கள், சவூதி அரசின் நிர்வாகத்திற்கும் கட்டுப்பாடிற்கும் கீழ் இருப்பதாகத் தெரிகிறது.

2007ல் இருந்து, மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் பாதுகாப்பைப் பற்றி வலுவான அச்சங்கள் காணப்பட்டு வருகின்றன. 1926ல் ஜன்னதுல் பகீ அழிக்கப்பட்டபோது, இந்தப் பள்ளிவாசலும் சேதத்துக் குள்ளாகியது. இங்குதான் நபி (ஸல்) அவர்களும் முதலிரண்டு கலீபாக் களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2007ல் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, நபியவர்களின் பள்ளிவாசலை (மஸ்ஜிதுன் னபவி)  இடித்து அடியோடு அழித்துப்போடுவதற்குரிய திட்டமொன்றை வகுத்ததாகவும், அதற்கு தற்போதைய சவூதி அரேபிய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்க் சம்மதித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.  நபி (ஸல்) அவர்களின் மண்ணறையும் பள்ளிவாசலும் அழிக்கப்படுவதென்பது பெரும்பான்மையான முஸ்லிம்களின் கற்பனைக்கும்கூட அப்பாற்பட்டது. ஆயினும், தற்போதைய ஹிஜாஸ்(அரேபிய) ஆட்சியாளர்களின் கீழ் உண்மையில் அது நடாத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

வரலாற்றுச் சின்னங்களுக்கும் பாரம்பரியத்திற்குமுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி விஷேசமாக சவூதிகள், முற்றாக மறந்து போய்விடுகின்றவர்களல்லர் என்பதால், அவர்களின் இந்த நடத்தையைப் பற்றி விளக்குவதற்கு முடியாமலிருக்கிறது. சென்ற ஆண்டு, சவூதி சுற்றுலா மற்றும் பழங்காலச் சின்னங்களுக்கான பொதுக் கமிஷன், நாடெங்கிலுமுள்ள 200 வரலாற்றுத் தலங்களை அவற்றின் பழைய நிலைக்கு செம்மைப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. இவற்றுள், இஸ்லாத்துக்கு முந்தைய கால மதியன் ஸாலிஹ் ஸ்தலம், சவூதி அரச குடும்பத்துடன் தொடர்புடைய திரிய்யாவிலுள்ள ஏனைய கட்டடங்கள் ஆகியவையும் அடங்கும். (நபியவர்களின் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட யூதர்களின் கைபர் கோட்டையும் இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது என்பதும் கவனத்திற்குரியது – ஆசிரியர்)



யூதர்களின் கைபர் கோட்டை
 இஸ்லாமியத் தலங்களைவிட மேற்சொன்னவை மகத்தான பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படுவதானது, உலகின் மூலை முடுக்கிலும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழமாகப் புண்படுத்துவதாயிருக்கின்றது.

இந்த விஷயம் அதற்குரிய விதத்தில் கவனத்திற் கொள்ளப்படாமலிருப்ப தற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றிலொன்றாக, கடந்த சில தசாப்தங்களாக உலகெங்கிலும் பல இஸ்லாமிய அமைப்புகள், சவூதிகளின் ஆதரவில் நடத்தப்படுவதை சந்தேகமில்லாமல் குறிப்பிடலாம். மற்றொன்று, முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற ஏனைய பிரச்சினைகள் மிக ஏராளமாகக் காணப்படுகின்றன. பல நாடுகளில் முஸ்லிம் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்படுவதும்இ பெரும்பாலும் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் இஸ்லாமியச் செயற்பாடுகள் அடக்கியொடுக்கப்படுவதும் எந்த வகையிலும் குறைந்ததல்ல. இவற்றோடு ஒப்பிடும்போது, வாதத்தின் அடிப்படையில், ஒரு கட்டடம் அழித்தொழிக்கப்படுவது முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதப்படலாம். எது எவ்வாறிருந்தபோதிலும், இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சான்றுகளாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சத்தையாவது சவூதிகள் அழித்தொழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது முக்கியமான விஷயமாகும்.

ஏனென்றால், பெரும்பாலும் இத்தகைய நினைவுச் சின்னங்களின் ஊடாகவே, மக்களின் வரலாற்று நினைவுகள் தூண்டப்படுகின்றன – தக்க வைக்கப்படுகின்றன. மேலும், இந்த நினைவுகள் அழிக்கப்படுவதானது, எதிர்காலச் சந்ததியினர் இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்வதறகும் கூட ஆழமான சிக்கலை ஏற்படுத்தும்.

உம்மத்தின் நடுவில் இடம்பெற்று வரும் அரசியல் போராட்டங்களுக்கான முயற்சிகளில், முஸ்லிம்கள் தமது முழுக் கவனத்தையும் குவிக்க வேண்டும் என்பது சரியானதுதான். அதேநேரத்தில், இஸ்லாமிய இயக்கம் ஏனைய துறைகளில் -தளங்களில் செய்யப்படும் பிரயத்தனங்களின் கடுமையான முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடியுமாயிருக்க வேண்டும். வீரம் கொண்ட சில மனிதர்கள் - ஹிஜாஸிலும்கூட அப்படிப்பட்டவர்களுக்குக் குறைவில்லை- சவூதிகளின் அடாவடித்தனமான செயல்களைச் சுட்டிக் காட்டுவதற்கும், அந்தப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதறகும் தம்மாலானவற்றைச் செய்து வருகின்றனர்.

பலஸ்தீன்இ செசன்யா, காஷ்மீர் போன்ற இடங்களிலுள்ள முஜாஹிதீன்களும் அவர்களின் முயற்சிகளும், பிரச்சினைகளும் இஸ்லாத்துக்கான உலகளாவிய போராட்டத்தில் முன்னிலை வகிப்பது போன்று, இவர்களுக்கும் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.