Showing posts with label Lawrence of Arabia. Show all posts
Showing posts with label Lawrence of Arabia. Show all posts

Wednesday, January 18, 2012

பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

 


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இஸ்ரேல் என்று கூறப்படும் யூதர்கள் கைப்பற்றியுள்ள பகுதியும் சேர்ந்திருந்த பலஸ்தீனத்தில், ஏறத்தாழ நுற்றுக்கு நுறு அரபிகளே வாழ்ந்து வந்ததுடன் சிறு சத வீதமே யூதர்கள் அங்கு இருந்தனர். ஆகையால் அது மிக அமைதியான நாடொன்றாகவே இருந்தது.



பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!







இக்காலகட்டத்தில் யூதர்கள் உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், சோவியட் யூனியனிலும், அமெரிக்காவிலும், வேண்டாத விருந்தாளிகளாக, அந்தந்த நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.


 இதற்குக் காரணம் யூதர்கள் செல்லுமிடமெல்லாம் ஏதாவது சதி செய்பவர்களாகவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்ததே. இவ்வாறு தங்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் இருந்த யூதர்கள், தமது 'சர்வதேச யூதர் சம்மேளனத்தை' 1897 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாஸல் நகரத்தில் ஒன்று கூட்டியபோது, பண்டைய காலத்தில் தாம் வாழ்ந்து வந்த பலஸ்தீனத்தில் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் யூதர்களை குடியேற்றி, பிறகு அங்குள்ள அரபிகளோடு பிரச்சினையை ஏற்படுத்தி, பலஸ்தீனர்களை பலமான சில நாடுகளுடன் சிண்டு முடியச் செய்து, பகைமை ஏற்படுத்தி அந்த குழப்பங்களை பயன்படுத்தி தமக்கென்று ஒரு தனி நாடை பலஸ்தீனத்தில் பிரித்தெடுப்பதற்கு முயற்சி செய்வது என முடிவெடுத்தனர்.


இதே வேளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கில் தம்முடைய ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு அப்பிராந்தியத்தில் ஒரு குழப்ப நிலையை சதாவும் வைத்திருப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிற்கு 1904 ம் ஆண்டு ஒரு மாநாட்டின்போது பிரிட்டன் வந்தது.
மேற்படி இரு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதமான தீர்வொன்று இருப்பதை யூதர்களும் ஆங்கிலேயர்களும் கண்டனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக உலகில் சிதறி வாழும் யூதர்களை சிறுகச் சிறுக பலஸ்தீனத்;தில் குடியேற்றுவது என்று இரு சதிகாரக் கும்பல்களும் முடிவு செய்தன.
இக்காலகட்டத்தில் பலஸ்தீனம், துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தின் போது, 1917 ல் துருக்கி தோற்கடிக்கப்பட்டைத் தொடர்து ஆங்கிலேய-யூதச் சதியின் முதல் கட்டத்தை செயற்படுத்துவதற்கான வசதி அச்சதிகாரர்களுக்குக் கிடைத்தது. பலஸ்தீனமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பலஸ்தீனதத்தின் அமைதியும் பலஸ்தீனர்களுடைய நிம்மிதியும் முற்றாகவே தொலைந்தே போயின. அதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை நிர்வகித்து வந்த பிரிட்டனின் படைகளுடன் இணைந்த யூதர்கள், பலஸ்தீன மக்களுக்கு பல வித கொடுமைகளைச் செய்யலாயினர். பலஸ்தீன வாலிபர்களும் தம்மால் இயன்ற விதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி வந்தனர். ஆனால் ஆயுத பலமோ, வெளி உதவிகளோ இன்றி மேற்கொள்ளப்பட்ட அப்போராட்டங்கள் அவர்களுக்கு சாதகமற்றவைகளாகவே இருந்து வந்தன. ஆனால் யூதர்களின் தாக்குதல்களோ பன்மடங்கு பயங்கரமாகின. 'ஹகானா' 'ஸ்டர்ன் இர்குன்' 'ஸ்வாயீ லியாம்' என்ற பெயர்களில் இயங்கி வந்த யூதப்படைகள் பலஸ்தீன மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களுக்குல்; புகுந்து அங்கிருந்த ஆண்கள், பெண்கள், கற்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மட்டுமன்றி கைக்குழந்தைகளையும் படுகொலை செய்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலமைச்சர்களாக ஆன மெனாகெம் பெகின், யிட்சக் ஷமீர், ஏரியல் nஷரோன் போன்றோரே இக்கொலைப்படைகளின் தலைவர்களாக அன்று இருந்தனர். ஜெரூஸசத்திற்கு அருகில் அமைந்துள்ள டயர் யாசீன் கிராமத்தில் யூத அரக்கர்கள் நடத்திய பேயாட்டத்தின் போது சில மணி நேரங்களில் இரு நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் உலகில் நடைபெற்ற மிருகத்தனமான மனித வேட்டைகள்; வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்;றது. யூதர்கள் அவ்வாறு வெறியாட்டம் நடத்தும் போது, பலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அவற்றைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி யூத அரக்கர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பாதுகாப்பையும் செய்தும் கொடுத்தனர். இக்கால கட்டத்தில், இந்த அக்கிரமங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் சில பலஸ்தீனக் குடும்பங்கள் தங்களுடைய உயிர்களை காத்துக்கொள்ளும் பொருட்டு பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. அவ்வாறு அன்று சென்றவர்கள் அந்நாடுகளில் அகதிகாளக வாழ்ந்து வந்தததுடன், அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் அதிகமானோர் இன்றளவிலும் அகதிகள் அந்தஸ்த்திலேயே அவமானத்துடன் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.





இதற்கிடையில் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களில் அதிகமானோர் அவசர அவரசமாக பலஸ்தீனத்திற்கு வந்து குவியலாயினர். தங்கள் தேசத்தை சூறையாடுவதற்கு யூதர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதியை கண்கூடாக கண்டு வந்தாலும் அதற்கு எதிராக போதுமான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பலஸ்தீன மக்கள் தவித்தனர். யூதர்களும் தங்களுடைய அக்கரமங்களை எந்தத் தடையுமின்றி தொடர்ந்துக் கட்டவிழ்த்து வந்தனர்.


1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி.
நவீன உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரமான மோசடி அன்று தான் நடைபெற்றது. ஆம். அந்நாளில் தான் பலஸ்தீனத்தில் ஒரு பகுதியை 'இஸ்ரவேல்' என்று ஐநா சட்ட விரோதமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த இஸ்ரவேலின் அஸ்திவாரத்தை தோண்டிப்பார்க்கும் எவரும்;, அதில் பெண்களின், வயோதிபர்களின், கற்பிணிகளின், சிசுக்களின் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையே கான்பார்.
ஆனால் அன்று வேறாக்கப்பட்ட இஸ்ரேலிலும் யூதர்களை விட பலஸ்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து இலட்சமாக அத்தருணத்தில் இருந்த இஸ்ரேலின் சனத்தொகையில் சுமார் இருபதுனாயிரம் பலஸ்தீனர்கள் அதிகமாகவே இருந்தனர்.


அது முதல் அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வரசாங்கம் யூதக்கொலைக்காரர்களுக்கு சார்பாகவே செயற்படும் படி யூதர்கள் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக பல துணிகர அக்கிரமங்களை தொடர்வதற்கு யூத வெறியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, சிறு தாக்குதல்கள் தவிர, பலஸ்தீன மக்களை அழிப்பதற்கு யூதர்கள் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அறுபதையும் விட அதிகமாகும். அதைத் தொடர்ந்து 1967 ல் எகிப்தின் கோலான் குன்றுப் பகுதியையும், அதன் பிறகு லெபனானின் தென் திசையில் அமைந்துள்ள காசாப் பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் யூதர்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டனர்.


 பக்கத்து நாடுகளின் பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை கைவிட்டுவிடுவதாலும், நிறந்தர எல்லைகள் இல்லாத உலகின் ஒரே நாடாக யூதர்களின் இப்பேய் ராஜ்ஜியமே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த வெறியாட்டங்களுக்குத் தலைமை தந்தக் கொலைகாரர்களை ஒருவர் பின் ஒருவராக தமது பிரதமர்களாக தேர்நதெடுப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக திகழ்வதிலும் யூதர்கள் தன்னிகரற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
நவீன யுகத்தில் பல நாடுகள் உலக சட்டங்கள், உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் எனப் பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, பன்பாலும் மனித நேய விழுமியங்காளலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ள போதிலும், யூதர்கள் இச்சகல உடன்பாடுகளையும் பொதுவான சட்டங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்.


ஒரு யூதனின் விரலில் உள்ள நகத்துண்டிற்கு ஒரு மில்லியன் அரபிகள் கூட சமமாக மாட்டார்கள் என ஒரு யூதப் பாதிரி பகிரங்கமாக இணவாதத்தை வெளிப்படுத்திவிட்டு, அதற்காக எந்த விமரிசனத்திற்கும் ஆளாகல் இருக்கும் சூழல் உள்ள ஒரே பிரதேசம் உலகில் இந்த இஸ்ரேல் மாத்திரமேயாகும். சியோனிஸம் எனப்படுவது ஒரு பயங்கரமான இணவாதம் என ஐநா அமைப்பே பிரகடனப்படுத்தி இருந்தும், யூதர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலகில் உள்ள நாடுகளில் இது வரை மிக அதிக எண்ணிக்கையிலான ஐநா எச்சரிக்கைகளை பெற்றுள்ள நாடும் இஸ்ரேலேயாகும். ஆனால் ஐநாவின் பின்னணியில் இருந்த வண்ணம் அதை ஆட்டிப்படைப்பதே இந்த யூதர்கள் தான் என்பதால் இதை எல்லாம் பார்த்து இஸ்ரேல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் அவ்வமைப்பின் மீது பல உலக நாடுகள் நம்பிக்கை இழந்து வருகின்றன. தொடரும் இந்த அநியாயங்களை பார்த்தும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத உலக நாடுகளில் வாழும் நல்லோர், அதிர்ச்சியால் உரைந்து போனவர்களாக விக்கித்து நிற்கின்றனர்.
இந்த அநியாயங்களை அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவின் நட்பை இழந்து விட்டால், பிழைப்பு நடத்த முடியாது என நினைக்கும் நாடுகள், இவைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.


இருந்த போதிலும், மெதுவாக வந்தாலும் இறைவனின் நீதி ஒரு நாள் வந்தே தீரும் என்ற மாறாத நியதியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, பலஸ்தீன மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, சோர்வடையாமல் அறை நூற்றாண்டு காலத்ததையும் விட அதிகக் காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆம். நிச்சயம் தர்மம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, January 13, 2012

எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர்


சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும் - இறுதி பகுதி
-ஸைனப் சீமா-

(About Author : Ms. Cheema has worked for Peace x Peace since 2007 — a D.C.-based non-profit devoted to connecting women over the world for direct personal communication. Previously, she worked for the Aurat Foundation, a non-profit based in Lahore, Pakistan — and devoted to the political, economic and social empowerment of women in Pakistan.

As a second-generation Pakistani-American, Ms. Cheema turned early to literature, communication and cross-cultural understanding while negotiating differences between East and West. Her love of women's literature have attuned Ms. Cheema to the creativity and strength that women tap into when confronting their challenges.)




'சவூதி அரேபியாவில் ஓவியப்பாறைகள்' என்ற எக்காள அறிவிப்பைத் தனது முகப்பட்டையில் தாங்கி சவூதி முடியாட்சியிலிருந்து கலாசார, சமூக சஞ்சிகையின் இதழொன்று வெளி வந்திருக்கின்றது. இது சவூதி அரம்கோ உலக நிறுவனத்தின் ஒரு வெளியீடாகும். அதில் இடம் பெற்றிருந்த பீட்டர் ஹெர்ரிகன் என்பவரால் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் ஒட்டகங்களினதும் பிற மிருகங்களினதும் படங்கள் கிறுக்கலாக வரையப்பட்டிருந்ததோடு அவற்றின் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்; சர்வ தேச சமூகம் நஜ்திலுள்ள புராதனப் பாறையைப் பற்றி ஏன் ஆராயாமல் இருந்துவிட்டது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 'துரதிர்ஷ்டவசமான இந்தப் புறக்கணிப்பு மிக விரைவில் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும்' என ஹெர்ரிகன் ஆர்வத்துடன் முன்னறிவிப்பு செய்திருந்தார். அரம்கோ நிறுவனம் பாலைவனத்திற்கு அடிப்புறத்திலிருந்து அகழ்ந்தெடுக்கும் கருப்புத் தங்கத்திற்கு (எண்ணெய்க்கு) சரிசமனான ஒரு மூல வளமாக இப் பழங்காலப் பாறை கருதப்படுகின்றது.


சவூதி அரேபிய மன்னராட்சியில் 'ஓவியப் பாறை'யை கடினமான முயற்சி களுடன் பத்திரமாகப் பாதுகாப்பதென்பது ஹிஜாஸ் பிரதேச இஸ்லாமிய புவியியல் வரைபடத்தில் காணப்படும் வரலாற்று சின்னங்களான கட்டிடங் களையும் புனித தலங்களையும் இடித்துத் தள்ள மேற்கொள்ளப் பட்டு வரும் வேலைகளுடன் முற்றாக முரண்படுகின்றது. சவூத் குடும்பம் அரேபியாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுடனும் வஹ்ஹாபியக் கொள்கைவாதிகளுடனும் உள்ள அதனது அடிப்படை ரீதியிலான கூட்டைத் தொடர்ந்து இளவரசர்களாகவும் வர்த்தகர்களாகவும் ஒரு சேர விளங்குபவர்கள், இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அடையாளக் கம்பங்களாக இருப்பவற்றுக்கெதிராக எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு ஒரு போரைத் தொடுத்து வருகின்றனர். இந்த சின்னங்களில் யஸீத் இப்னு முஆவியா போன்ற பிற்கால குறைஷி சர்வாதிகாரிகள் கூட கைவைக்கத் துணியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 80 ஆண்டுகளில் - வெறுமனே இது ஒரு சிறு துணுக்குதான் -கிட்டத்தட்ட 300 இஸ்லாமிய வரலாற்றுக் கட்டிடங்கள் டைனமைட் வைத்துத் தகர்க்கப் பட்டிருக்கின்றன. புல்டோஸரைக் கொண்டு இடித்துத் தள்ளப் பட்டிருக்கின்றன் பூமியோடு சரிசமனாக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாத்தின் ஆரம்ப மக்கா காலத்தைய வீடுகளும், ஏனைய தொடர்புடைய கட்டிடங்களும் மன்னர் பரம்பரையின் மாற்றங்களுக்கும் அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கும்இ பல நூற்றாண்டு காலம் தாக்குப் பிடித்து பாதுகாப்பாக நின்று கொண்டிருந்ததானது, முந்தைய முஸ்லிம்களின் பாரம்பரியத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் உயர் பண்புக்கு குறிப்பிடத்தக்க- சிறப்பான சான்றாக விளங்குகின்றது. எவற்றின் மூலம் சிறகடித்து உயரப்பறந்த இஸ்லாம், ஒரு இருப்பை வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டதோ, அந்த நெருங்கிய இணைப்புகளுக்கும் சகோதரத்துவப் பிணைப்புகளுக்கும் அடையாளச் சின்னங்களாக முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மக்கா ஹில்டன் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. மக்காவில் அபூபக்கர் உடைய வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைப் பார்ப்பதா அல்லது வசதி படைத்த முஸ்லிம்கள் தமது இரவுகளை எவ்வாறு இப்போது கழிக்கின்றனர் என்பதைப் பார்ப்பதா –எதைப் பார்ப்பது, இன்று ஹஜ் யாத்திரிகர்களுக்குச் சிறந்ததாக அமையும் என ஆகிவிட்டது?

This is how the Prophet's house [white structure on the right]
 looks at this moment

விளங்கியவை அனைத்தும், இன்று இந்தப் பிரதேசத்தின் வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளின் காரணமாகக் காணாமல் போய்விட்டன. முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு, இன்று மக்காவில் ஹில்டன் ஹோட்டலாகிவிட்டது.  நபி(ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்புடைய மண்ணறை தரைமட்டமாக்கப்பட்டதோடல்லாமல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நபியவர்களின் முதல் மனைவி கதீஜாவின் வீடு, எங்கு நபியவர்களின் குழந்தைகள் பிறந்தனரோ. அது இன்று ஒரு பொது மலசலக் கூடமாக மாறியிருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா பிந்த் குவாலித் உடைய அடக்கஸ்தலம். இப்போது அது ஒரு பொது மலசல கூடமாக மாற்றப்படுவதற்கு முன்னர் எந்த குறீயீடு களுமின்றி காணப்படுகிறது. வலைப்பின்னலின் ஊடாக இணையத்தளங்களில், பெரும்பாலும் ஒவ்வொன்றையுமே ஒளிவு மறைவில்லாமல் காணக்கூடியதாயிருக்கும் இன்றைய ஒரு கால கட்டத்தில் கூட, வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர்கள் சுற்றிவர இருக்கும் பாதுகாப்பு அரண்களையும் தாண்டிச் சென்று பெரும்பாலும் எல்லாரையும் படம் பிடிக்கக் கூடியதாயிருக்கும் இன்றைய நிலையிலும் கூட, இது போன்ற படங்களையோ, சவூதி அரண்மனைகளின் விபரமான பிரதிபிம்பங்களையோ நம்மால் காண முடிவதில்லை?



மூடப்பட்ட கதவுகளின் பின்னால் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் உலக முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த சவூதி ஆட்சியாளர்கள் அத்தனையையும் செய்கின்றனரே, அவர்கள் தமது புரவலர்களான இஸ்லாம்-முஸ்லிம் விரோத அரசுகளுடன் இது சம்பந்தமாக என்னென்ன ஒப்பந்தங்களைச் செய்துள்ளனரோ நமக்கு விளங்கவில்லை??


எஞ்சியிருப்பனவற்றினதும் மீதியிருப்பனவற்றினதும் மூலம் கடந்த கால வரலாற்றைச் சிரமங்களுடன் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கு 'வரலாற்றுக் குப்பைகள்' என்ற சொல் கிண்டலாக உபயோகப் படுத்தப்படுகின்றது.  ஆனால் இந்தப் பதப் பிரயோகம் எவ்வாறு வரலாறே ஓரு குப்பையாக மாற்றப்படுகின்றது என்பதை செவ்வொளி பாய்ச்சி புலப்படுத்துகின்றது.

Jannathul Moala in Mecca has been obliterated without a trace.

தொல் பொருள் ஆராய்ச் சியாளர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தைய கட்டிடங்களில் 20க்கும் குறைவானவையே இன்று ஹிஜாஸில் மீந்திருப்பதாக மதிப்பீடு செய்கின்றனர். ஆம், அதன் அர்த்தம் என்னவென்றால், 90 சத வீதமான இஸ்லாமியத் தலங்கள் இப்போது காணாமல் போய்விட்டன. நினைவுச்சின்னங்கள் மறைந்துவிட்டன. பலஸ்தீனம் முதல் பாகிஸ்தான் தொட்டு துருக்கி வரையிலான முஸ்லிம் நாடுகளின் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பற்றி எரிந்த போதிலும்கூட, ஹிஜாஸின் சமூகத் தோற்றத்தை வஹ்ஹாபிய மயப்படுத்தும் பணிக்கு- இடித்துத் தள்ளுவதை மேற்பார்வைசெய்ய- உள்ளுர் கொள்கை வெறியர்கள் ஒன்று திரட்டப்பட்டிருக்கின்றனர். இந்த இஸ்லாமியத் தலங்களை அழித்தொழிப்பது பயபக்தியின் ஓர் அடையாளமெனச் சுட்டும் விதத்தில் அவர்களின் வாதங்களின் ரசவாத வித்தை மாற்றிக் காட்டுகின்றது.



Jannathul Baqi before the destruction.
 புனிதமெனக் கருதி மரியாதை கொடுக்கப்படும் தலங்களுக்கு முன், வஹ்ஹாபி அல்லாத பார்வையாளர்கள், சிலை வணக்கத்தில் இறங்கிவிடும் சாத்தியக்கூறின் நிழல்தானும் பட அனுமதிக்காமல், அவற்றைப் பொதுக் குளியலறைகளாக மாற்றுவது சாலச்சிறந்தது என வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர்.


அத்தோடு நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் ஞாபகப் படுத்தும் கட்டடங்கள், சரியாகச் சொல்லப்போனால் சீறாவின் புவியியலே, முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. பத்ர் மற்றும் உஹத் போர்க் களங்களுக்கு முஸ்லிம்கள் சென்ற பாதைகள் (வழியில் ஒரு தடயமு மில்லாமல் முற்றாக) சுத்தமாக்கப்பட்டுள்ளன. ஷஹீத் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிஃபின் மண்ணறை அடியொடு மறைந்து போனது. (அகழ் யுத்ததின் போது நபியவர்கள் நின்று வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த பாறையின் மீது கட்டப்பட்ட) ஸல்மான் அல் ஃபார்ஸி, அபூபக்கர், உமர், ஃபாத்திமா, அலீ, பிலால், அல் ஃபாத் ஆகியோரின் பெயரிலான பிரசித்திபெற்ற ஏழு மஸ்ஜிதுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நபியவர்களின் மக்கா வாழ்க்கையில், முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் இடமாகத் திகழ்ந்த -உண்மையில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த முதலாவது இஸ்லாமியப் பள்ளிக்கூடமான- தாருல் அர்கம், இப்போது அடுக்கு மாடிக் கட்டிடமொன்றின் நகரும் படிகள் அமைந்திருக்கும் இடமாக இருக்கின்றது. அபூ குபைஸ் மஸ்ஜிதின் இடிபாடுகளின் மேல்தான் மன்னருடைய அரண்மனை இன்று அமைந்திருக்கிறது.


அடக்கஸ்தலங்கள் வஹ்ஹாபிகளின் கடும் கோபத்திற்கான ஒரு காந்தக் கல்லாக அமைந்திருக்கின்றன. 1806ல் மதீனாவிலுள்ள பகீ அடக்கஸ்தலம் தரைமட்டமாக் கப்பட்டது, எல்லாரும் நன்கறிந்த ஒரு சரித்திரச் சம்பவமாகும். அங்கே இடையிடையே அமைக்கப் பட்டிருந்த மாபெரும் இஸ்லாமியப் பெரியார்களுடைய மண்ணறைகளின் குவிகை மாடங்களும் அடையாளக் குறிகளும் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடம் ஓர் அநாமதேயக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. மற்ற மண்ணறை பூமிகளும் இதே விதமான முடிவைத் தான் சந்தித்தன. இதனால் தமது நற்பெயருக்கு பங்கம் வரும் என்பதைப் பற்றி அவர்கள் சிறிதளவேனும் கவலைப்படவில்லை. மக்காவிலுள்ள மக்பரா அல் முஅலா அடக்கஸ்தலமும் (இங்குதான் கதிஜா நாயகி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்) இதைப்போன்றே இடித்துத் தள்ளப்பட்டது.

இவையெல்லாம் புனித நகரங்களை மீண்டும் பொலிவான தோற்றம் பெறச் செய்யும் மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் உடைய திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான். இத்திட்டத்தை நிறைவேற்று வதற்காகஇ சிறந்த கட்டடக்கலை நிபுணர்களான நோர்மன் ஃபொஸ்டர், தேம்ஸ் பேங்கைச் சார்ந்த பிரபு ஃபொஸ்டர்இ ஸாஹா ஹதீத் போன்றவர்களை மன்னர் பணிக்கமர்த்தியிருக்கிறார். இவர்கள் இந்தப் பகுதியை உடைத்துத் தள்ளி துப்பரவு செய்து, அந்த இடத்தில் எட்டாயிரம் அமெரிக்க டொலருக்கும் அதற்கு மேலும் செலவு செய்யும் சொகுசு ஹஜ் ஏற்பாடுகளுடன் வரும் இன்னுமொரு பத்து லட்சம் யாத்ரீகர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்கள்;. ஓர் இஸ்லாமிய கட்டடக்கலை நிபுணரான சாமி அங்காவி 'நாம் இப்போது மக்காவின் வரலாற்றின் இறுதித் தருணங்கள் சிலவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உள்ளுர்வாசிகளும் இடித்துத் தள்ளும் போர் முஸ்தீபுகளினால் முழமையாகப் பாதிக்கப்படாமலில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீட்டை ஓர் அடுக்குமாடி சில்லறை விற்பனை அங்காடியின் கீழ் காணாமல் போய் விடுவதற்கு அனுமதிக்காமல் மக்காவாசிகள் அதனை ஒரு நூலகமாக மற்றியமைக்க வலியுறுத்தி ஆபத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றினர். இருந்த போதிலும்இ செப்டம்பர் 11க்குப் பின்னர் ஏற்பட்ட எண்ணெய்ச் செல்வச்செழிப்பும் அதன் பயனாகத் தொடர்ந்து வந்த அபிவிருத்தி எதிரொலியும் மீதியுள்ள இத்தகைய தலங்களுக்கும் நேரம் குறிக்கக் கூடியதாக அமைந்துவிட்டது. வானை முட்டும் ஹோட்டல்களிலிருந்தும் ஏனைய வர்த்தகத் தலங்களிலிருந்தும் ஓடி வந்து கோடிக் கணக்கில் கொட்டும் லாபங்கள், சவூதி மூலதனக்காரர்களை – முதலாளிமார்களை – மிக அதிகமாக வசீகரித்துவிட்டன. இதன் காரணமாக, இரு ஹரம்களையும் சுற்றிவர இருக்கும் பகுதிகள், முதல்தரமான நிலச்சொத்துகளாகிவிட்டன. மேலும் மெக்டொனால்ட் போன்ற சர்வதேச தொழிற்சின்னம் கொண்ட நிறுவனங்கள் வந்து கதவைத் தட்டும்போது, அவற்றுக்கு இல்லையென்று ஏன் சொல்லவேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீடு இப்போது வாகனங்கள் நிறுத்திவைக்கும் ஓர் இடமாக்கப்படுவதற்கு குறிக்கப்பட்டிருக் கிறது. தற்போது நகரில் காணப்படும் வாகனங்கள் நிறுத்திவைக்கும் இட வசதிகளினால் அசௌகரித்துக்குள்ளான சவூதி அரச குடும்ப இளவரசர்களின் மெர்ஸிடெஸ் கார்கள், அங்கு நிறுத்திவைக்கப்படலாம் என்பதை உண்மையென்று கொள்ள வேண்டியிருக்கிறது.

அல்குர்ஆனின் வார்த்தைகளை, சமூக-அரசியல் மெய்ப்பாடாக மாற்றம் காணச் செய்த, ஆண்களுடையவும் பெண்களுடையவும் நம் கண்களுக்குத் தெரிகின்ற தெளிவான தடயங்களை- அடையாளங்களை- பெருந்தீயிட்டுக் கொளுத்துவதானது, சவூதி பிரஜைகள் சிலரைக்கூட திகிலடையச் செய்ய வைத்தது. இர்ஃபான் அல் அல்லவி என்பவர், சவூதிகளினால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு தலத்தைப் பற்றியும், அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கட்டடங்களைப் பற்றியும் மிகக் கவனமாகவும் விவரமாகவும் ஆவணப்படுத்தி, 'இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கான நிறுவனம்' என்ற பெயரிலான ஓர் இணையதளத்தில் வெளியிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜிய பத்திரிகைகளில் கூட சவூதிகளை விமரிசனம் செய்து கண்டனந் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த இணையதளம் சவூதி அரசாங்கத்தினால் முடக்கப்பட்டதுடன், அல்லாவி இப்போது வீட்டுக் காவலில் (சிறை) வைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குவதென்னவென்றால், நினைவுச் சின்னங்கள் கல் வடிவிலோ அல்லது தகவல் தொடர்புகளுக்கான ஊடகப் பெருஞ்சாலையிலோ காணப்பட்டாலுங்கூட, அவையும் மிக ஆபத்தானதோர் அரசியல் மூலதனம் எனக் கருதப்பட்டு அனாவசியமான முறையில் குறுக்கீடு செய்யப்பட வேண்டியதாய் அமைந்து விடுகின்றன.



நபி (ஸல்) அவர்களின் நினைவைப் பசுமையாக வைத்திருப்பதோடு தொடர்புடைய ஏனைய தலங்கள் பலவும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளன. ஹிராக் குகை அமைந்துள்ள ஜபலுந் நூரை (ஒளி மலையை) அழித்தொழிப்பதற்கு சவூதி வஹ்ஹாபி ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மலைக்கு விஜயம் செய்யும் ஒருவர் 'நபி (ஸல்) அவர்கள் எம்மை இந்த மலையின் மீது ஏறுவதற்கோஇ இங்கு தொழுவதற்கோ, கற்களைத் தொடுவதற்கோ அனுமதிக்கவில்லை .........' என்ற ஒரு பஃத்வா பளிச்சிடும் விதத்தில் எழுதப்பட்டு ஓர் அடையாளக் கம்பம் நடப்பட்டிருப்பதை அங்கு கண்டுகொள்ளலாம். சுருங்கச் சொல்வதென்றால், முதலாவது அல்குர்ஆன் வசனங்கள் வஹி இறக்கப்பட்ட ஒரு தலத்திற்கு- உலகின் புவியியல் வரைபடத்தை மாற்றியமைப்பதற்காக நிகழ்ந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலை முதன் முதலாக சான்று பகர்ந்த ஓர் இடத்திற்கு- அருகில்கூட நெருங்காமல் தூர விலகி நில்லென இவ்வறிவித்தல் எச்சரிக்கின்றது. இந்தத் தலத்திற்கு இணையானதொன்று இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாற்றில் இருக்குமானால், அது நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமே ஆகும். ஆம்! அதுகூட அழிவுக்குள்ளாகக் குறிக்கப்பட்டுள்ளது!
Ronald Regan - King fahd, white house.
 சவூத் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் வஹ்ஹாபியப் பணியாட்களைப் பற்றியும் பேசுவதுகூட எப்போதுமே மிக ஆபத்தானதொரு விஷயமாயிருப்பது ஏன்? எந்தவோர் அழிவுப் பணியும் புனர் நிர்மாணச் செயல்முறை ஏற்பாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவே அமையும்.நபித்துவ வாழ்க்கையின் அடையாளங்களும் சுவடுகளும்

Bush Snr.-King Fahd, buddies sharing
hearty laugh.
எவற்றைக் கொண்டு நிரப்பப்படவிருக்கின்றன? வஹ்ஹாபிகள் அனைவருமே தமது தீவிரவாதக் கொள்கைளை தமது உள்ளங்களோடு உலோக வரிப்பட்டைகளைக்கொண்டு இணைத்து வைத்திருக்கும் அதே வேளைஇ சவூதி அரச குடும்பத்தினர் அதற்கு சிறிது வித்தியாசமான விஷயங்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கின்றனர். இஸ்லாமிய சரித்திரம் திட்டமிடப்பட்டு பூமியின் தளங்களிலிருந்து தகர்த் தெறியப் படுவதாயிருந்தால் அது ஒரு புதிய வரலாற்றை சுவூத் குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சியை முழுமையாக நியாயப்படுத்தி, கட்டியெழுப் புவதற்கானதொரு முன்னேடியாகவே இருக்க முடியும்!

King Faisal -Nixon,White House
 1989ல் நிவ்யோர்க்கில் நடந்தஇ 'சவூதி அரேபியாவில் கலாச்சாரத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதற்கான' ஒரு மாநாட்டில், சவூதி இராஜதந்திரிகளும் வெளிநாட்டு தூதுவர்களும் வரத்தகர்களும், வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்களையும் கலாச்சார சின்னங்களின் பாதுகாப் பிற்கான நிபுணர்களையும் சந்தித்து அளவளாவினர். சுவூத் குடும்பத்தின் நிறுவன நினைவுகளைப் பதிய வைப்பதில் தாம் பெற்ற வெற்றிகளைக் குறித்து தம்மைத் தாமே புகழ்ந்து பேசிக் கொண்டனர்.
  இதற்கான முனமாதிரியாக காலனித்துவ வில்லியம்ஸ்பேர்க் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவின் காலனித்துவக் காலப்பகுதியின் பழுதடையாத ஒரு ஞாபகச் சின்னமாக, கவர்ச்சி வாய்ந்த வெர்ஜீனியா நகரைப் பாதுகாத்து அமைக்கப்பட்டதாகும்.


Eisenhower-Saud-Nixon
 (இங்கு வரும் உல்லாசப் பயணிகள் கறுப்பர்களின் அடிமைத்துவம், செவ்விந்தியர்களின் ஒட்டுமொத்தமான இனப்படுகொலை போன்ற மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத நினைவுகளைப் பற்றிய எந்த கவலைகளுமின்றி, சுற்றி வளைத்துக் கட்டும் பழங்கால ஆடைகள், கை வினைப் பொருட்கள், காலனித்துவக் கால இசை ஆகியவற்றை அனுபவித்து சந்தோஷமடைகின்றனர்) 'அமெரிக்காவிலுள்ள நீங்கள் உங்கள் நாட்டின் நிர்மாணத்தோடு தனித்துவமிக்க முறையில் தொடர்புடைய இடங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். நாங்களும் நமது நவீன அரசாட்சியை எவ்வாறு மன்னர் அப்துல் அஸீஸ் உருவாக்கினார் என்பதைப் பற்றி சவூதி மக்கள் அறிந்துகொள்வதற்காக, ரியாதிலும் தரிய்யாவிலுமுள்ள தலங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என நிவ்யோர்க்கிலுள்ள சவூதி அரேபியாவின் கொன்ஸல் ஜெனரல் ஸஅத் நாஸர் அந்த மாநாட்டில் சொன்னார்.



King Fahad Bin Abdul Aziz Bin Saud, seated in
a wheel-chair among Royal family members, honors the heirs of
the Companions of King Abdul Aziz with commemorative medals,
January 22, 1999. The event marks the start of a week-long
celebration to commemorate the 100th anniversary of
 the Saudi kingdom. REUTERS.
Only celebrating Meelad Un Nabi is Bidah!!!
 சுருங்கச் சொல்வதென்றால், சவூதி புனர்நிர்மாணத் திட்டப்பணிகள் மக்கா விலோ மதினாவிலோ அல்லது ரியாத்திலும் ஜித்தாவிலும் தரிய்யாவிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடங்கள், சவூத் குடும்பத்தினர் தங்கத்தை வாரிக்கொள்ளும் அதிர்ஷ்டத்தை அடையும் முன்னர்இ கச்சாப் பாலைவனப் புறவிடங்களாகவே இருந்தன. இரு புனித நகரங்களின் நிர்மாணத்திற்காக, தமது கலாச்சார, மார்க்க, அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்ட உதுமானியர்கள் போன்ற முந்தைய ஆட்சியாளர் பரம்பரைகளைப் போலல்லாமல், சவூதிகள் முதல் நாளிலிருந்தே மாற்றுப் புவியியல் ஒன்றை நிர்மாணிக்க வேலை செய்கின்றனர். இது நபித்துவத்தை இரையாக்கி உருவாக்கப்படும் ஒரு மதசார்பற்ற லௌகீகப் புவியியலாகும்.; பல கோடியினரின் அன்பையும் பற்றையும் விசுவாசத்தையும் பிணைப்பையும் ரொக்கப் பணங்களாக மாற்றிஇ மிகுந்த பேராசையுடன் அவற்றை விழுங்குவதற்கு செய்யப்படும் ஓர் ஏற்பாடாகும்.  இங்கு அமெரிக்க டொலர்கள் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது.

எனவேஇ இஸ்லாம் ஹிஜாஸ் பிரதேசம் முழுவதிலும் வண்டல் போல படிந்து நிற்பதை வெறுப்போடு நோக்கும் சவூத் குடும்பம், முன்னர் எந்த முக்கியத்துவமோ பிரபல்யமோ பெற்றிருக்காத, இப்போது பாசாங்கு செய்யும் (காட்டரபிகளின்) ஒரு கோத்திரப் போட்டிக் குழுவினர்தான் என்பதை நபி(ஸல்) அவர்களின் புவியியல் நமக்கு மிகத் தெளிவாக ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்ற போது, நாம் எந்தக் கடந்த காலத்தை தகுதியானதாக ஏற்றுக்கொள்ள முடியும்?


 தேசிய ரீதியிலான நாடுகள் என்ற அமைப்புஇ நவீனமானதொரு கண்டுபிடிப்பாகும்; இஃது ஐரோப்பிய மத்திய பூமியில் வெறுமனே 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றதொன்றாகும். ஆயினும் தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், தனது இருப்பையும் தனது காலனித்துவப்படுத்தப்பட்ட வரலாற்றையும் கடந்த காலங்களின் பின்னணியில் அப்படியிருந்ததாக உருவாக்கி ஆக வேண்டியுள்ளது. நம்பமுடியாத அளவு பெருந் தொகையிலான தமது ஹஜ் வருமானங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இரு ஹரம்களின் பாதுகாவலர்களெனத் தம்மை முஸ்லிம்களின் மத்தியில் சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்த சவூதிகள், காட்டரபிகளான நாடோடிக் கோத்திரங்களின் இஸ்லாத்திற்கு முந்திய வரலாற்றுக் குறிப்புகளையும், தமது பரம்பரை மன்னர் ஆட்சியின் ஸ்தாபகத்தைப் பற்றிய சரித்திரங்களையும் மட்டுமே மக்கள் ஞாபகப்படுத்த வேண்டுமென விரும்பு கின்றனர்.


A lineup of kings from Ibn Saud to Abdullah,
at the national museum in Riyadh.From right to left: 
King Fahad, King Khalid, King Fisal, King Saud, King
Abudlaziz,King Abudallah,.
 
மக்காவினதும் மதீனாவினதும் சூழவுள்ள அடக்கஸ்தலங்களும் மஸ்ஜித்களும் அழிந்து கொண்டிருக்கும்போது ரியாத்திலும் ஜித்தாவிலும் விரிவான முறையில் புதிய கட்டிடங்கள் எழுந்து வருகின்றன. ரியாதிலுள்ள தேசிய பழங்கால அரும்பொருள் காட்சிசாலையில் ஒரு விரிவான இஸ்லாத்திற்கு முந்திய காலப் பகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல் ஊடக (மல்டி மீடியா) சாதனங்கள் நஜ்த் பிரதேச மணல் வெளியிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்ட வரலாற்றுக்கு முந்தியகால 'வரலாற்றுப் பாறை'க்கு இருபக்கங்களிலும் பொருத்தப்படடிருக்கின்றன.



"The Gift of Friendship" exhibit in Riyadh Museum.
The gift U.S. President Franklin Delano Roosevelt to
King Abdul Aziz Ibn Abdul Rahman Al-Saud
 Great Bitter Lake in the Suez Canal on February 14, 1945.
 சவூத் குடும்பத்தின் ஸ்தாபகத் தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'தராத் அல் மலிக் அப்துல் அஸீஸ்' போன்ற பலவேறுவிதமான வளவளப்பான மியூஸியத் தொடர் கட்டடங்கள், மணற் குன்றுகளின் மேல் முளைத்து நிற்கின்றன. பல கோடி டொலர் பெறுமதியான இந்த நினைவுத் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியொப்படைப்பதற்காக, உலகெங்கிலுமிருந்து புகழ் பெற்ற கட்டடக் கலைஞர்களுக்கிடையில் போட்டியொன்றை ரியாத் அபிவிருத்தி அதிகார சபை நடத்தியது.



National Museum of Saudi Arabia. How even an old desert
 oil exploration truck, is displayed.
 போட்டிக்கான குறிக்கோள், 'முழு தேசத்திற்குமான கலாச்சாரக் குவிமையத்தை' கட்டியெழுப்புவதென்றும், 'எல்லா சவூதிகளுக்குமான தொடரான நிலையையும் கண்ணியத்தையும்' உருவாக்குவதென்றும் அறிவிக்கப்பட்டது. அப்துல் அஸீஸ் ஆல சவூதையும் வரலாற்றுக்கு முந்திய மூதாதையர்களையும் நினைவு கூரும், ஒளிரும் உயர் தொழில்நுட்ப சாதனங்களால் சூழப்பட்ட, இந்த பண்டைய கால ஞாபகச் சின்னங்களின் முன்னால், தமது நாட்டுப் பிரஜைகள், விக்கிர ஆராதனை செய்யும் நிலைக்கு ஆளாகிவிடுவார்கள் என்ற அச்சம் சவூத் குடும்பத்தினருக்கு ஏற்படவில்லை என்று அப்பட்டமாக விளங்குகிறது.

King Abdul Aziz International Terminal Haj Airport Dedication Medal.
Does this border on Shirk, for the Ale Saud apologists? 

புனிதம் வாய்ந்த கட்டடங்களும் இடங்களும் மறைந்து போயின என்பது, வெறுமனே கற்களும் சிமெண்டு கலவைகளும் இல்லாமலாகி விட்டன என்ற கருத்தைத் தராது. வரலாற்று நிலப்பரப்பிலும் நினைவுகளின் சமுத்திரத்திலும் நம்மை நாம் நிலைநிறுத்திக் கொள்வதற்கு, நமக்கு உதவுகின்ற 'திசை காட்டும் கருவிகள்' அழிந்து போய்விட்டன என்றே இதனை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் இன்றுவரை உயிர் வாழ்வதற்கு, தங்கள் இரத்தத்தையும் உடைமைகளையும் விலையாகக் கொடுத்த அந்த வரலாற்றுச் சொத்தின் சொந்தக்காரர்களான – மாமனிதர்களின் சுவடுகள் முற்றாகவே இம்மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டதாகவே நாம் இதனைக் கொள்ள வேண்டும். நமது நினைவை ஊட்டப்படுத்தும் முக்கியமான – பௌதீக வடிவிலான சாசனமான - கல்வெட்டுகள் மட்டுமல்ல இன்று மங்கி மறைந்து விட்டன் உண்மையில் நாம் முஸ்லிம்கள் என்ற நிலையில் உயிர் வாழும் உணர்வுகளும் அதன் வலிமையை இழந்துவிட்டன.

சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமியப் பாரம்பரிய வரலாற்றுத் தலங்கள்

சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும்

-இக்பால் சித்தீகி-

Iqbal Siddiqui is a British Muslim of Indo-Pakistani origins, born, brought in London, son of Dr Kalim Siddiqui, Founder of Muslim Institute and Muslim Parliament of Great Britain. He is a well known writer, also contributed in establishing the Institute of Contemporary Islamic Thought (ICIT). He also served as a editor of CrescentInternational

(அன்பு வாசகர்களே, சவூதி அரசின் வரலாறு குறித்த நம் பதிவுகளை பார்த்து சில வாசக நெஞ்சங்கள் புனித ஸ்தலங்கள் என்று வரும் குறிப்புகளை ஒட்டி நாம் ஷிர்க்கை ஆதரிப்பதாக தவறாக விளங்கியுள்ளனர். இறைவனால் மன்னிக்கப்பட முடியா மிகப் பெரும் பாவமான ஷிர்க்கை விட்டும் நம்மை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.)

வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதை தடுக்கும் வகையில் அவை அழிக்கப்படுவதையும், மக்கமா நகரம் என்றால் கஃபதுல்லாஹ்வும், ஹிரா குகையும், மதீனா என்றால் நபிகளார், குடும்பத்தார், தோழர்கள் வாழ்ந்த இடங்கள் நினைவுக்கு வர வேண்டுமே ஒழிய உயரமான கட்டிடங்கள் அல்ல என்பதை அனைவரும் ஒத்து கொள்வோம். ஆனால் திட்டமிட்ட முறையில் நமக்கே தெரியாமல் அவை அழிக்கப்படுவதின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் வெளிப்படுத்த வேண்டும் எனும் நன்னோக்கில் இங்கு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது)

முஸ்லிம்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஸ்தலங்களில் இஸ்தான்பூல் நகரமும் ஒன்றாகும்.

இது மொத்தத்தில், உதுமானிய கிலாபத் காலப் பாரம்பரியமும் ஏராளமான பள்ளிவாசல்களும் ஏனைய நினைவுச் சின்னங்களும் இன்னும் அங்கு காணப்படுவதன் காரணத்தால்தான் ஆகும். இவற்றின் வாயிலாக முஸ்லிம்கள், இஸ்லாமியக் கலாசாரத்தின் ஒரு பொற்காலப் பகுதியுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஸ்தலங்களுள் தென் ஸ்பெயினில் உள்ள அந்தலூஸியாவும் உள்ளடங்கும். முஸ்லிம்கள் அந்தப் பகுதியிலிருந்து பலவந்தமாக அகற்றப் பட்டு இன்று ஏறத்தாழ 500 ஆண்டுகளானாலும் அங்கு நடந்த முஸ்லிம் ஆட்சியை ஞாபகப்படுத்தும் அடையாளங்கள் அங்கு இன்னும் காணப்படு கின்றன.


கெய்ரோ, டமஸ்கஸ், பக்தாத், மஷ்ஹத் போன்ற நகரங்கள் இதுபோன்ற காரணங்களுக்காகவே பிரசித்தி பெற்றிருக்கின்றன.


 இத்தகைய நினைவுச் சின்னங்கள், இஸ்லாமிய வரலாற்றுடனும் பெரும் சாதனைகளைச் செய்து, நாம் இப்போது வாழும் உலகை உருவாக்கிய முன்னைய முஸ்லிம் சந்ததிகளுடனும், உண்மையான உறுதியான இணைப்பை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஆயினும், இஸ்லாமிய வரலாறு முழுவதிலும், முஸ்லிம்கள் மிகப் பெரும் நன்றிக்கடன் கொண்டவர்களாகவும், மாபெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பது எந்தக் காலப்பகுதிக்கு, எந்த மாமனிதர் களுக்கு என்றால், சந்தேகமில்லாமல் அது நபி (ஸல்) அவர்களின் காலப் பகுதியும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வசித்த, வாழ்க்கையைக் கொண்டு நடத்திய இடங்களுமாகத்தான் இருக்கும்.


இன்றும் எதிர்காலத்திலும் அவை விலைமதிப்பற்ற, மாற்றீடு செய்யப்பட முடியாத இடங்களாகப் பாதுகாக்கப்படுவதற்குப் பதிலாகஇ 'இரு புனிதத் தலங்களின் பாதுகாவலன்' எனத் தம்மை உரிமை கொண்டாடிக் கொள்ளும் சவூதி அரேபிய மன்னரகத்தின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அவை அழிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.



இஸ்லாமிய வருடக்கணக்கின்படி, சென்ற ஷவ்வால் மாதம்இ நபி (ஸல்) நகரமான மதீனாவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பகீ எனப்படும் அடக்க ஸ்தலம் ஹிஜ்ரி 1344 ஷவ்வாலில் தகர்க்கப்பட்டதின் 87ம் வருடப் பூர்த்தியாகும். தரைமட்டமாக்கப்பட்ட மண்ணறைகள் (கப்ருகள்), கட்டப்பட்ட கல்லறைகள் என்பனவற்றுள் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் ஆண் குழந்தை இப்ராஹீம், அவர்களின் மகள் ருகைய்யாஇ அவர்களின் பேரர் இமாம் ஹஸன் இப்னு அலி, அவர்களின் வழித்தோன்றல் களான ஷீஆ சிந்தனைப்பிரிவின் இமாம்களான ஜெய்னுல் ஆபிதீன் என அழைக்கப்படும் அலி இப்னு ஹுஸைன், முஹம்மத் அல் பாக்கிர்,  ஜவ்பர் ஸாதிக் ஆகியவர்களுடையவையும் அடங்கும்.


அவை மட்டுமல்ல, மூன்றாம் கலீபாவான உத்மான் இப்னு அஃப்பான் உட்பட ஏராளமான நபித் தோழர்கள்இ பிந்தைய கால இஸ்லாமியப் பிரமுகரான மத்திய ஆசியாவின் செசன்யாவைச் சேர்ந்த இமாம் ஷாமில் போன்றவர்களின் மண்ணறைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. இன்று ஜன்னத்துல் பகீ ஒரு வெற்று நிலப்பரப்பே தவிர வேறொன்றில்லை. அதன் முக்கியத்துவம் குறித்து மதீனாவிற்கு விஜயம் செய்யும் பலருக்குப் புலப்படுவதேயில்லை.


இரு புனித நகரங்களையும் சவூதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜன்னத்துல் பகீ தகர்க்கப்பட்டதானது, முஸ்லிம் உலகம் எங்கினும் எதிர்ப் பலைகளைத் தோற்றுவித்தது.


ஆயினும், சவூதிகளின் ஆட்சிக்காலம் நெடுகிலும் தொடர்ந்த இஸ்லாமிய இடங்களை அழித்தொழிக்கும் வேலைக்கு அது குறியீடாகவே அமைந்தது எனலாம். தரைமட்டமாக்கப்பட்ட ஏனைய தலங்களுள், பாத்திமா ஸஹ்ரா பள்ளிவாசல், இருமினாராக்கள் பள்ளிவாசல், மதீனாவில் அகழி யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்த நான்கு பள்ளிவாசல்கள், மதீனாவில் ஸல்மான் அல் ஃபார்ஸி பள்ளிவாசல், மக்காவில் பழைமை வாய்ந்த அடக்கஸ்தலம் ஜன்னத்துல் முஅல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்ப் உடைய மண்ணறை, (இது 1988ல் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது) மக்காவில் பனூ ஹாஷிம்களின் மண்ணறைகள், உஹதில் ஹம்ஸா (ரழி) மற்றும் உயிர்த் தியாகிகளின் கல்லறைகள் என்பன அடங்கும்.



Cemetery of Jannat al-Mualla in Makkah before it was
 demolished by King al-Saud
 நபி (ஸல்) அவர்களுடன் நேரடியாகத் தொடர்புள்ள ஸ்தலங்களுள் கி.பி. 570ல். முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்ததாக நம்பப் படும் வீடு, நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா நாயகியின் வீடு, (இங்குதான் நபியவர்களின் குழந்தைகள் பலர் பிறந்துள்ளனர்) ஹிஜ்ரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வசித்த மதீனாவிலுள்ள வீடு என்பனவும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது, ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு அவர்கள் அறிவு கற்பித்த தாருல் அர்கத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.


சவூதி அரேபிய ஆட்சியாளர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, அதன் செல்வாக்குக்குட்பட்ட மனிதர்களின் அழிப்பு நடவடிக்கைகளுக்கு, ஏனைய பிர தேசங்களில் (ஈராக்இ சிரியா, பலஸ்தீன்) இருந்த ஸ்தலங்கள் உள்ளாயின. சில தகவல்களின்படி, நபியவர்களினதும் ஸஹாபாக்களினதும் வாழ்க்கைக் காலப்பகுதியைச் சார்ந்த, 90 சதவீதமான அல்லது அதற்கும் அதிகமான வரலாற்றுத் தலங்கள், சவூதி அரசின் நிர்வாகத்திற்கும் கட்டுப்பாடிற்கும் கீழ் இருப்பதாகத் தெரிகிறது.

2007ல் இருந்து, மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் பாதுகாப்பைப் பற்றி வலுவான அச்சங்கள் காணப்பட்டு வருகின்றன. 1926ல் ஜன்னதுல் பகீ அழிக்கப்பட்டபோது, இந்தப் பள்ளிவாசலும் சேதத்துக் குள்ளாகியது. இங்குதான் நபி (ஸல்) அவர்களும் முதலிரண்டு கலீபாக் களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2007ல் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, நபியவர்களின் பள்ளிவாசலை (மஸ்ஜிதுன் னபவி)  இடித்து அடியோடு அழித்துப்போடுவதற்குரிய திட்டமொன்றை வகுத்ததாகவும், அதற்கு தற்போதைய சவூதி அரேபிய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்க் சம்மதித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.  நபி (ஸல்) அவர்களின் மண்ணறையும் பள்ளிவாசலும் அழிக்கப்படுவதென்பது பெரும்பான்மையான முஸ்லிம்களின் கற்பனைக்கும்கூட அப்பாற்பட்டது. ஆயினும், தற்போதைய ஹிஜாஸ்(அரேபிய) ஆட்சியாளர்களின் கீழ் உண்மையில் அது நடாத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

வரலாற்றுச் சின்னங்களுக்கும் பாரம்பரியத்திற்குமுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி விஷேசமாக சவூதிகள், முற்றாக மறந்து போய்விடுகின்றவர்களல்லர் என்பதால், அவர்களின் இந்த நடத்தையைப் பற்றி விளக்குவதற்கு முடியாமலிருக்கிறது. சென்ற ஆண்டு, சவூதி சுற்றுலா மற்றும் பழங்காலச் சின்னங்களுக்கான பொதுக் கமிஷன், நாடெங்கிலுமுள்ள 200 வரலாற்றுத் தலங்களை அவற்றின் பழைய நிலைக்கு செம்மைப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. இவற்றுள், இஸ்லாத்துக்கு முந்தைய கால மதியன் ஸாலிஹ் ஸ்தலம், சவூதி அரச குடும்பத்துடன் தொடர்புடைய திரிய்யாவிலுள்ள ஏனைய கட்டடங்கள் ஆகியவையும் அடங்கும். (நபியவர்களின் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட யூதர்களின் கைபர் கோட்டையும் இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது என்பதும் கவனத்திற்குரியது – ஆசிரியர்)



யூதர்களின் கைபர் கோட்டை
 இஸ்லாமியத் தலங்களைவிட மேற்சொன்னவை மகத்தான பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படுவதானது, உலகின் மூலை முடுக்கிலும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழமாகப் புண்படுத்துவதாயிருக்கின்றது.

இந்த விஷயம் அதற்குரிய விதத்தில் கவனத்திற் கொள்ளப்படாமலிருப்ப தற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றிலொன்றாக, கடந்த சில தசாப்தங்களாக உலகெங்கிலும் பல இஸ்லாமிய அமைப்புகள், சவூதிகளின் ஆதரவில் நடத்தப்படுவதை சந்தேகமில்லாமல் குறிப்பிடலாம். மற்றொன்று, முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற ஏனைய பிரச்சினைகள் மிக ஏராளமாகக் காணப்படுகின்றன. பல நாடுகளில் முஸ்லிம் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்படுவதும்இ பெரும்பாலும் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் இஸ்லாமியச் செயற்பாடுகள் அடக்கியொடுக்கப்படுவதும் எந்த வகையிலும் குறைந்ததல்ல. இவற்றோடு ஒப்பிடும்போது, வாதத்தின் அடிப்படையில், ஒரு கட்டடம் அழித்தொழிக்கப்படுவது முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதப்படலாம். எது எவ்வாறிருந்தபோதிலும், இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சான்றுகளாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சத்தையாவது சவூதிகள் அழித்தொழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது முக்கியமான விஷயமாகும்.

ஏனென்றால், பெரும்பாலும் இத்தகைய நினைவுச் சின்னங்களின் ஊடாகவே, மக்களின் வரலாற்று நினைவுகள் தூண்டப்படுகின்றன – தக்க வைக்கப்படுகின்றன. மேலும், இந்த நினைவுகள் அழிக்கப்படுவதானது, எதிர்காலச் சந்ததியினர் இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்வதறகும் கூட ஆழமான சிக்கலை ஏற்படுத்தும்.

உம்மத்தின் நடுவில் இடம்பெற்று வரும் அரசியல் போராட்டங்களுக்கான முயற்சிகளில், முஸ்லிம்கள் தமது முழுக் கவனத்தையும் குவிக்க வேண்டும் என்பது சரியானதுதான். அதேநேரத்தில், இஸ்லாமிய இயக்கம் ஏனைய துறைகளில் -தளங்களில் செய்யப்படும் பிரயத்தனங்களின் கடுமையான முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடியுமாயிருக்க வேண்டும். வீரம் கொண்ட சில மனிதர்கள் - ஹிஜாஸிலும்கூட அப்படிப்பட்டவர்களுக்குக் குறைவில்லை- சவூதிகளின் அடாவடித்தனமான செயல்களைச் சுட்டிக் காட்டுவதற்கும், அந்தப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதறகும் தம்மாலானவற்றைச் செய்து வருகின்றனர்.

பலஸ்தீன்இ செசன்யா, காஷ்மீர் போன்ற இடங்களிலுள்ள முஜாஹிதீன்களும் அவர்களின் முயற்சிகளும், பிரச்சினைகளும் இஸ்லாத்துக்கான உலகளாவிய போராட்டத்தில் முன்னிலை வகிப்பது போன்று, இவர்களுக்கும் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.

சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் உண்மை நிலையும்.


(அன்பு வாசகர்களே அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த பதிவில் பார்த்ததை போல் இத்தொடரில் முதலாவதாக ஜாபர் பங்காஷ் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம். வரலாற்றின் இன்னொரு பக்கமும் வாசகர்கள் முன்னால் வைக்கப்பட வேண்டும் எனும் உந்துதலாலேயே இக்கட்டுரையை வெளியிடுகிறோம்)
சுவூத் பரம்பரையின் ஜாஹிலியத்தான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்.

Zafar Bangash











-ஜாபர் பங்காஷ்-
 அரேபியாவின் சுவூத் குடும்பம்இ இஸ்லாத்தின் மீதும் அதன் வரலாற்றுத் தலங்களின் மீதும் இழைத்துள்ள மிகப் பெரிய அளவிலான சேதங்களுக்குப் பிறகும்இ முஸ்லிம்களுள் பலர் அவர்களின் உண்மையான தன்மையென்ன என்பதைப் பற்றியும், அவர்கள் பிரச்சாரம் செய்துவரும் விஷக் கொள்கையைப் பற்றியும், அக்கறை செலுத்த மறந்தவர்களாகக் காணப்படுகின்றனர். ஹரமைன் எனச் சொல்லப்படும் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனித நகர்களின் பரிசுத்தத்தன்மை, அரேபிய தீபகற்பத்தின் இன்றைய ஆட்சியாளர்களின்  குடும்பத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்துள்ளதெனக் கருதும் முஸ்லிம்களின் அப்பாவித்தனமான நம்பிக்கையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமிற்கும் மதீனாவில் மஸ்ஜிதுன்  நபவீக்கும் சுற்றுப் பகுதியில் நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் சமீபத்தைய நிகழ்வுகள்தான் என்ற போதிலும், முஸ்லிம்கள் சிலரின் மனங்களில் அவை வியப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் லாஸ் விகாஸ், மற்றும் நியூயோர்க்கின் மறுபிரதிபலிப்புகளாக, மக்காவையும் மதீனாவையும் இந்த பளபளப்பான புதிய கண்ணாடி மற்றும்காங்கிரீட்டிலான கோபுரங்களாக மாறி வருவதை முன்னேற்றத்தின் அடையாளங்களென்று சவூதிப் பிரச்சாரகர்கள் உலகெங்கிலும் ஆர்வத்தோடு மக்கள் முன்னெடுத்து வைக்கின்றனர்.


மக்களினால் மிகவும் குறைவாக விளங்கப்படும் விஷயம், இத்தகைய திட்டங்களினால் ஏற்படும் நஷ்டம் பற்றியதாகும். அது டாலர்களின் கூட்டுத் தொகையில் அல்லாமல், இஸ்லாமிய வரலாற்றுத் தலங்கள் மொத்தமாக அழித்தொழிக்கப்படுவதால் ஏற்படும் நிரந்தமான இழப்பைக் கொண்டு கணக்கு பார்க்கப்பட வேண்டும். இன்னுஞ் சில தசாப்தங்களில்இ இஸ்லாமிய வரலாறுஇ அதன் வரலாற்றுத் தலங்கள் அல்லது அல்லாஹ்வின் தீனைப் பூமியில் நிலை நிறுத்துவதற்காக மாநபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட கடும் பிரயத்தனங்கள் மற்றும் போராட்டங்களுடனான இரு ஹரம்களின் தொடர்பு ஆகிய எவையுமே உண்மையில் பூமியின் மீதிருந்து காணப்படாமலாகிப் போய் விடக் கூடும்.

மக்காஇ மதீனா ஆகிய இரு புனித நகரங்களும் அமைந்திருக்கும் ஹிஜாஸ் பிரதேசத்தில் அல்லாமல், மத்திய அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தின் ஓர் ஒதுக்குப்புற மூலையிலிருந்து தோன்றிய இந்த சுவூத் கோத்திரம்இஎவ்வாறு இரு புனிதத் தலங்களையும், அரேபிய தீபகற்பம் முழவதையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது? இஸ்லாத்தைத்; 'தூய்மைப்படுத்து கிறோம்;' என்ற பெயரின் கீழ் நஜ்திலிருந்து கிளம்பிய இந்த நாடோடி அரபிக் கூட்டத்தினர்இ அதற்காக இழைத்த சதிகளும் கபடச் செயல்களும்இ தந்திரங்களும்இ மோசடிகளும், வர்ணனைக்குள் அடங்காத காட்டுமிராண்டித்தனமான கொடூரச் செயல்களும் பற்றிய வரலாறு மிகவும் இழிவானதாகும். அவர்களின் இந்த குறிக்கோளுக்கும் திட்டத்திற்கும், சென்ற நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி துவக்கம்இ பிரிட்டிஷாரிடமிருந்தும் கூட அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வந்தது.

குல மற்றும் கோத்திர ஆணிவேர்களும் குறுகிய மார்க்கச் சிந்தனைக் கொள்கையும்


ரியாத்திற்கு வடக்கே இருந்த ஒரு பிற்போக்கான கோத்திரப் புறவிடமான தரிய்யாவைச் சேர்ந்த சுவூத் குடும்பம்இபாலைவன நிலப்பரப்பில் சிறு சிறு புள்ளிகளைப் போல் காணப்பட்ட பல கோத்திரங்களுள் ஒன்றாகும். அக் காலங்களில் இருந்த பல கோத்திரங்கள் மற்றும் குலங்களைப் போன்று, இவர்களும் ஏனைய கோத்திரங்களைச் சேர்ந்தவர்களையும், ஹஜ் பயணிகளின் காரவான்களையும் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். சவூதிகள் இன்று ஹஜ் பயணிகளைக் கொள்ளையடிப்பதற்கு மிகவும் புதுமையான வழி முறைகளைக் கையாண்டு வருகின்றனர். எது எவ்வாறிருந்த போதிலும்இ அவர்களின் கொள்ளையடிக்கும் நடைமுறை இன்றும் தொடர்ந்தே வருகின்றது. நாடோடி அரபிகளுக்கு மத்தியில், மக்களைக் கொலை செய்வதும், அவர்களின் பெண்களைக் கவர்ந்து கொள்வதும் சாதாரணமான நடைமுறையாகும். சவூதிகளின் பரம்பரை, பனூ ராஷித், பனூ ஹாஷிம், பனூ காலித் போன்ற பலவற்றை உள்ளடக்கியஇமிகப் பழைமை வாய்ந்த பல கோத்திரங்களுள் ஒன்றாகும். அவர்கள் எல்லாருமே ஆளும் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்காக தங்களுக்குள் போட்டி போட்டனர்.


கி.பி.1744ல் அரேபியத் தீபகற்பத்தின் மீது மட்டுமல்லாமல் முழு முஸ்லிம் உலகின் மீதும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையான நிகழ்வொன்று இடம் பெற்றது. சுயமாகத் தம்மை ஓர் இஸ்லாமியப் பிரச்சாரகராகவும் காழி(நீதிபதியாகவும்) அறிமுகப்படுத்திக் கொண்ட முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (கி.பி.1703-1792) என்பவர், தரிய்யாவுக்கு வந்து,  சுவூத் கோத்திரத்தின் தலைவரான முஹம்மது இப்னு சுவூதுடன் கூட்டுறவை, ஓர் ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம் ஏற்படுத்திக் கொண்டார். இது மிக ஆற்றல்வாய்ந்த–வலிமை பொருந்தியதோர் இணைப்பாக அமைந்தது.

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் எதனைப் பிரச்சாரம் செய்தார் என்பதை விளங்கிக் கொள்வது முக்கியமானதாகும. அல்லாஹ்வின் ஏகத்துவத்தை - தவ்ஹீதைப் பற்றிய கருத்தோட்டத்தை முன்னெடுத்துச்

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின்'தவ்ஹீத்' பற்றிய நூல்இ சிலசமயங்களில்'தவ்ஹீதைப் பற்றிய மூன்று கட்டுரைகள்' என்ற பெயரிலும் தரப்படுகிறது. 1980களில்இ சவூதி அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 'அறிவை இஸ்லாமியப்படுத்துதல்' காலப் பகுதியில்இ இதுவும் ஏனைய பாட நூல்களும்இ பாலஸ்தீனக் கல்வியாளர் இஸ்மாயீல் அல் ஃபாரூக்கியினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தன.


செல்வதை அவர் நோக்கமாக கொண்டார். ஓவ்வொரு முஸ்லிமும் தவ்ஹீதில் நம்பிக்கை கொண்டுள்ளான்; ஈமான் எனப்படும் மார்க்க நம்பிக்கை-கடப் பாட்டின் அடிப்படையான தூணாக இது இருக்கிறது. அவர் செய்தது என்ன வென்றால், அவர் ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொரு நடைமுறையையும் ஷிர்க் (அல்லாஹ்வின் இடத்தில் வேறு எவரையும் ஒப்பானவனென்றோ இணையானவனென்றோ கருதுவது)  என வெளிப்படையாகக் குற்றஞ் சாட்டினார். அவர் எந்தெந்த காரியங்கள் ஒரு முஸ்லிமைஇ ஒரு காஃபிராகவோ அல்லது முஷ்ரிக்காகவோ மாறச் செய்யும் எனக் குறிப்பிட்டுஇசெயல்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தார். (இதற்கு ஓர் உதாரணத்தைக் காண விரும்புவோர்இ முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபினால் எழுதப்பட்ட 'மஜ்முஆ அத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்து ஹமத் இப்னு அதீக் அல் நஜ்தீயினால் தொகுக்கப்பட்ட 'பயான் அந் நஜா வல் ஃபகாக் மின் முவாலாத் அல் முர்தத்தீன் வ அஹுப் அல் ஷிர்க் -ரிஸாலாஹ் அல் தானியா அஷராஹ்'வைப் பார்க்கலாம்.)

இவ்வாறாக, இறந்து போனவர்களுக்காகப் பிரார்த்திப்பதற்கு அவர்களின் அடக்கத் தலங்களுக்கு செல்லும் முஸ்லிம்கள், ஷிர்க்கைச் செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அதன் காரணமாக கொலை செய்யப்படுவதற்குரிய இலக்குகளாகக் கருதப்பட்டனர். இதனைப் போன்றே, மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களுக்கோ அல்லது ஆன்மீக நிலைகளுக்கோ மரியாதை காட்டிய முஸ்லிம்கள், முஷ்ரிக்குகள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டனர். அவர்களும் கொலை செய்யப்படுவதற்குரிய சட்டப்பூர்வமான இலக்குகளாகக் கணிக்கப்பட்டனர். அல்லாஹ்வின் மகத்தான தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பகீ அடக்கத்தலத்திற்கு விஜயம் செய்து, இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து வந்ததை ஒவ்வாததென, இந்த அறிவு மங்கலான, அதிதீவிர கொள்கை வெறியர்கள் புறந்தள்ளினர். இன்றும் அதனைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களைப் பொறுத்த வரையில், 'ஸஹாபாக்கள் (நபித் தோழர்கள்), தாபியீன்கள் (ஸஹாபாக்களை அடுத்து வந்தவர்கள்), அதனைத் தொடர்ந்து வந்த சந்ததியினர்கள், திருநபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து 1,100 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்கள் ஆகியோர், இஸ்லாத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மாத்திரமே இறுதியாக உண்மையான இஸ்லாத்தைக் கண்டுபிடித்துத் தந்தார்.  எனவே,  இந்த வஹ்ஹாபி கொள்கை ஒன்று மட்டுமே தூய்மையானதும் சரியானயானதுமான கொள்கையாகும்!'


இந்த அசாதாரணமான கொள்கை பொதுவாகவே'வஹ்ஹாபியத்' எனக் குறிப்பிடப்பட்டாலுங் கூட அதுவொரு துரதிர்ஷ்டவசமான பெயர் சீட்டாகும். அவரது தந்தை அப்துல் வஹ்ஹாபும்,  சகோதரர் சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாபும் நல்ல முஸ்லிம்களாவர்.  முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாபின் அர்த்தமற்ற உளறல்களையும் இஸ்லாத்தின் குறுகிய விளக்கங்களையும் அவர்களிருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால், சுலைமான் தனது சகோதரரின் மிக மோசமான முற்றிலுங் கடூரமான கருத்துக்களை 'அல் ஸவாய்க் அல் இலாஹிய்யாஹ்' எனும் ஆய்வு நூலில் தவறானவையென எடுத்துக் காட்டியிருக்கிறார். வஹ்ஹாபிகளை அவர்களின் அறிவுக்குப் பொருந்தாத நிலைப்பாடுகளுக்காக சுலைமான் கடிந்து எழுதுகின்ற போது பக்கம் 54-ல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:  'மக்களின் மார்க்க நம்பிக்கையை, எந்தளவுக்கு அவர்கள் உங்களுடன் உடன்பட்டிருக் கின்றனர் என்பதைக் கொண்டும், அம்மக்களின் மார்க்க அவநம்பிக்கையை, எந்தளவுக்கு அவர்கள் உங்களுடன் உடன்படாமலிருக்கின்றனர் என்பதைக் கொண்டும் மட்டுமே நீங்கள் கணிக்கின்றீர்கள் அல்லது அளவிடுகின்றீர்கள்!'


சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாப் எழுதிய இந்த நூல் இன்று உலகிலுள்ள பல முக்கிய முஸ்லிம் நகரங்களில் கிடைக்கப் பெறுவதில்லை என்பது நமது கவனத்திற்குரிய ஒரு செய்தியாகும். சவூதிகள், தமது கணிசமான செல்வம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அத்தகைய நூல் பிரதிகள் எங்காவது விற்பனைக்கு வந்தவுடனேயே, அவற்றைக் காணாமல் போய் விடச் செய்வதை எப்போதும் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றும் அதனையே செய்து வருகின்றனர். இதற்கு எதிரிடையாக, இஸ்லாத்திற்கான குறுகிய விளக்கங்களை மக்கள் முன்னெடுத்துச் செல்லும் சவூதிகளின் நூற்களை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டு, அவற்றைப் பரவலாகக் கிடைக்கச் செய்தும்இ தமது சம்பளத்தில் வேலை பார்க்கும் ஏஜெண்ட்கள் மற்றும் தாஇக்கள் எனப்படும் பிரச்சாரகர்கள் ஆகியோர் மூலம் இலவசமாக விநியோகம் செய்தும் வருகின்றனர்.

பெரும்பாலான நாடோடி அரபிகளைப் போலவேஇமுஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாபும் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தார். ஆனால், ஏனையவர்களைப் போலல்லாமல், வெறுமனே உணவை அல்லது தண்ணீரைத் தேடிப் போகவில்லை.  இவர் அறிவைத் தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கிழக்கை நோக்கி திரிந்து, இவர் பாரசீக வளைகுடாவிற்கு சென்றிருக்கிறார். இவருடைய பிறந்த பூமியான நஜ்தைப் போலல்லாமல், இந்தப் பிரதேசம் வெளியுலகுடன் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக, பல்வேறு இனங்களையும் இடங்களையும் சார்ந்த மக்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சில காலத்திற்கு முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் சூபித்துவத்தில் ஈடுபாடு காட்டினார்.   ஆயினும் இவர் இறுதியில், இவரோடு தொடர்புபடுத்தப்படும் ஒரு குறுகிய (வஹ்ஹாபி) கொள்கையின் மிகக் கடூரமான விளக்கங்களைச் செயல்படுத்தத் துவங்கினார். பொதுவாகவே, 14ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞரான இமாம் இப்னு தைமிய்யாவின் செல்வாக்கினாற்றான் இவருடைய கருத்தியல் உருப்பெற்றது எனக் கருதப்பட்டாலும், அது தவறானதோர் ஊகமாகும். இந்த வஹ்ஹாபிகள், தமது குறுகலான சிந்தனைக்கு உடன்படக் கூடிய இப்னு தைமிய்யாவின் மார்க்கத் தீர்ப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.  அதேவேளை,  மற்றவற்றைப் புறக்கணிக்கின்றனர், இவர்கள் தமது தீவிரவாதக் கருத்துக்களுக்குச்  சட்டப்பூர்வமான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்காக இப்னு தைமிய்யாவின் பெயரை உபயோகப்படுத்துகின்றனர். மேலும் இவர்கள், தக்லீத்(மார்க்க விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட அறிஞரின் அபிப்பிராயத்தைப் பின்பற்றுவது) கூடாது எனக் கண்டனஞ் செய்யும் அதே நேரத்தில், எல்லா முஸ்லிம்களும் தமது தீவிரவாத விளக்கங்களைப் பின்பற்ற வேண்டுமென்றும், அவ்வாறில்லையென்றால் அவர்கள் காஃபிர்கள் என்பதால்இகொல்லப்பட வேண்டுமென்றும் மிக அழுத்தமாக கூறி வருகின்றனர்.

ரியாதையும் நஜ்த் பிரதேசத்தின் பெருவாரியான பகுதிகளையும் சார்ந்த அறிஞர்கள் பலர்இ முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபுடைய கருத்துக்களை மார்க்கத்திற்கு மாறானவையென்றும் இஸ்லாத்திற்குப் புறம்பானவையென்றும் ஒதுக்கித் தள்ளினர். ரியாதைச்;சேர்ந்த    ஆலிம்களினால் வெளிப்படையாகக் கண்டனத்திற்குள்ளானதை அடுத்துஇ இவர் தரிய்யாவுக்கு தனது ஜாகையை மாற்றிக் கொள்ள வேண்டி நேர்ந்தது. இங்கு இவருடைய கருத்துக்களுக்கு காது கொடுப்பதற்கு முஹம்மது இப்னு சுவூத் இருப்பதைக் கண்டு கொண்டார்.


இவர்களிருவரும் ஒரு கூட்டணியைத் தமக்கிடையில் அமைத்தனர். அது முழு உம்மத்திற்குமே ஆபத்து விளைவிப்பதாக அமைந்து விட்டது. 

சுவூத் கோத்திரத்தின் தலைவரான முஹம்மது இப்னு சுவூதிற்கு எதிரி கோத்திரங்கள் மற்றும் இனங்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அவர்களை அடக்கியாள்வதற்கான தனது குறிக்கோளையும் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு ஒரு மார்க்க ரீதியான ஊன்றுகோல் தேவைப்பட்டது. அதே வேளைஇபிரச்சாரகர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கு தனது குறுகலான கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதற்கு ஒரு கூட்டமும் வாள்களும் தேவைப்பட்டது. இந்த சுவூத் நாடோடிக் கோத்திரத்தினர், இப்போது ஒரு தீவிரவாதக் கொள்கையை உள்ளீர்த்துக் கொண்டு தரிய்யாவிலிருந்து கி.பி.1745-ல் திடீரென வெளிக்கிளம்பி, வெகு சீக்கிரத்தில் ரியாதைக் கைப்பற்றினர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை எதிர்த்து வந்த, ரியாதிலும் ஏனைய இடங்களிலுமிருந்த இஸ்லாமிய அறிஞர்கள் எவ் வித விசாரணையுமின்றி மரண தண்டனைக்குள்ளாகினர். இவர்களின் அசலான வாழையடி வாழையான கொடூரமும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் விரைவில் நஜ்த் பிரதேசம் முழுவதையும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த சுவூத்-வஹ்ஹாபி கூட்டணிஇ அதன் பின்னர் மேற்கே ஹிஜாஸை நோக்கியும்இ கிழக்கே கர்பலா, கூஃபாஇபக்தாத் ஆகிய நகரங்களை நோக்கியும் பரவிச் செல்லத் தலைப்பட்டது.

கி.பி.1762-ல் முஹம்மது இப்னு சுவூத் மரணமடைந்தார்.அவருடைய மகன் அப்துர்ரஹ்மான் அவரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். ஆயினும், பிரச்சாரகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், இன்னும்  30ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். 1803 மற்றும் 1804-ல், கர்பலாவிலும் கூஃபா விலும் ஆயிரக்கணக்கான ஷீஆக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இமாம் ஹுஸைன் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் பள்ளிவாசலையும் கூட இடித்துத் தள்ளினர். இந்த சுவூத்-வஹ்ஹாபி வெறியர்கள், தமது தீவிரவாதக் கருத்துக் களுக்கு இணக்கமில்லாத- உருச்சிதைந்த- திரிக்கப்பட்ட ஓர் இஸ்லாமியத் தூதைப் பரப்புகிறார்கள் எனக் குற்றஞ் சுமத்தி, பக்தாதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்களைக் கூட கொன்று குவித்தனர். அந்த அறிஞர்களின் குழந்தைகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.  ஏனென்றால்இ அவர்கள் வளர்ந்து தம் பெற்றோர்களைப் போன்று 'மார்க்கத்தை மறுப்பவர்கள்'ஆகி விடுவார்களாம்!

மக்காவிலும் மதீனாவிலும் இதே போன்ற அழிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த சுவூத் - வஹ்ஹாபி வெறியர்களைப் பொறுத்த வரைஇ தமது குறுகலான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு முஸ்லிமும் 'இஸ்லாத்தை மறுப்பவன்' (காஃபிர்) ஆவான்.எனவேஇ அவனைக் கொல்வது நியாயப்பூர்வமானது மட்டுமன்றி கட்டாயக் கடமையுமாகும்.
கி.பி.1802-ல்இ மக்காவிற்கு தென்கிழக்கில் 40 கி.மீ. தூரத்திலிருக்கும் ஒரு நகரான தாயிஃபைத் தாக்கினர். அங்குள்ள மக்கள் அதனை எதிர்த்த போதுஇ இந்த கொள்ளைக்கார-சூறையாடும் கூட்டம்இ தன்னால் கைப்பற்ற முடிந்த ஒவ்வொரு நகரவாசியையும் கொன்றது. தாயிஃப் படுகொலைப் படலம் பற்றிய செய்தி மக்காவையும் மதீனாவையும் சென்றடைந்த போது, அம்மக்கள் இந்தக் காட்டுமிராண்டி முரடர்களுக்கு தம் கதவுகளைத் திறந்து கொடுத்தனர். இதன் மூலம்இ தாயிஃப் வாசிகளுக்கு நிகழ்ந்த விதிப் பலனிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என அவர்கள் நம்பினர். ஆனால், நஜ்தைச் சேர்ந்த  இந்த காட்டுமிராண்டிகளை அத்தகைய சைகைகள் கவரவில்லை. மக்காவையும் மதீனாவையும் சேர்ந்த 'காஃபிர்'களுக்கு எதிராக தம் இரத்தத் தாகத்தைத் தணித்துக் கொண்ட பின்னர்இ இவர்களின் கவனம்  மார்க்கப் புனிதத்தலங்களின் மீதும், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுத் தலங்களின் மீதும் திரும்பியது. 'ஜன்னத்துல் பகீ' அடக்கஸ்தலம் குறிப்பாக அவர்களின் சீற்றத்திற்கான ஓர் இலக்காக ஆனது.
உதுமானியத் துருக்கியர்கள்இ முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் என்ற வகையில்இ இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். இலகுவாக அடையாளங் காண்பதற்காகஇ  நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் நபியவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், இன்னும் உம்மஹாத்துல் முஃமினீன் (விசுவாசி களின் தாய்மார்) எனப்படும் நபியவர்களின் மனைவியர் ஆகியவர்களின் மண்ணறைகளுக்கு மேலால் குவிகை மாடங்களை அவர்கள் கட்டியிருந்தனர். ஆயினும்இ இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினர்இ 'இவை ஷிர்க்கிற்கு இட்டுச்செல்லும்' என கூறிஇஅத்தனையையும் இடித்துத் தள்ளினர். மேலும்இ 'ஜன்னத்துல் பகீ' அடக்கஸ்தலத்தையும் நாசப்படுத்தினர். பகீ அடக்க ஸ்தலத்தையோ அல்லது உஹது யுத்தத்தில் ஷஹீதான வர்களின் கப்றுகளையோ முஸ்லிம்கள் தரிசிப்பதனால் அவர்கள் முஷ்ரிக்குகளாக ஆகும் அபாயம் இருக்கிறதென இவர்கள் கூறினர்!


சுவூத் - வஹ்ஹாபிக் கூட்டத்தினருடனான நடப்புகள்


தாயிஃப்இ மக்காஇ மதீனாப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமியத் தலங்களின் மீதான இந்த சுவூத்- வஹ்ஹாபி கூட்டணியின் நாச வேலைகள்இ அசிங்கமான நடத்தைகள் பற்றிய செய்திகள்இ இஸ்தன்பூலில் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதின் காதுகளுக்கு எட்டிய போதுஇ அவர் மிகுந்த கோபம் கொண்டார். அவர் உடனடியாகஇ எகிப்திலிருந்த தனது இராஜப் பிரதிநிதி முஹம்மது அலிக்குஇ இந்த கொள்ளைக் கோஷ்டி மீது தகுந்த நடவடிக்கை எடுத்துஇ முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காகவும்  இஸ்லாமியத் தலங்களை அசிங்கியப்படுத்தியதற்காகவும் இவர்களைத் தணடிக்குமாறு ஆணை பிறப்பித்தார். இதன் பிறகுஇ 1813-ல் மக்காவும் மதீனாவும்  இவர்களின் பிடிகளிலிருந்து விடுவிக்கப்பட்டன. ஆனால்இ தரிய்யாவைக் கைப்பற்றுவது மிகவும் கடினமானதாயிருந்தது. முஹம்மது அலியின் மகன் இப்ராஹிம் பாஷாஇ இவர்களை வெற்றி கொண்டுஇ அங்கிருந்து இந்த சுவூத்-வஹ்ஹாபி கூட்டத்தினரைத் துரத்தியடிப்பதற்கு ஆறு ஆண்டுகள் பிடித்தன. இவர்களின் படுபாதகங்களுக்குரிய தண்டனையாகஇ தரிய்யா முற்றாக இடித்து நொறுக்கப் பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இவர்களின் குற்றங்களுக்கு இது போதுமான தண்டனை என இப்ராஹிம் பாஷா கருதியததனால்இ இவர்களைப் பின் தொடர்ந்து செல்லவில்லை. இவ்வாறு இவர்களை விட்டு வைத்ததுஇ பிற்காலச் சந்ததியினருக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது.
அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது இப்னு சுவூத்இமனமொடிந்து போன தனது கோத்திரத்தினரைக் கூட்டிக் கொண்டுஇ வாதி ஹனீஃபாவினூடாக றியாதைச் சென்றடைந்தார்.  தரிய்யாவிலிருந்து முதன் முதலில் கொந்தளித்துக் கொண்டு கிளம்பிய போது, ஏற்கனவே ஏனைய கோத்திரங்களை வெற்றி கொண்டு, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்திருந்ததன் காரணமாக, றியாதை தமது கட்டுப்பாட்டின் கீழ் நிலை நிறுத்திக் கொள்வதொன்றும் கடினமானதாயிருக்கவில்லை. ஆனால்இதரிய்யாவிலிருந்து துரத்தப்பட்ட பனூ ராஷித்கள், தம்மை அங்கிருந்து வெளியேற்றியதற்கு பழி வாங்க 1891-ல் திரும்பி வந்து தாக்கிய போதுஇ சுவூத் குடும்பத்தினர் தோல்வியை அரவணைத்துக் கொண்டனர். பனூ ராஷித்கள்இ பிற கோத்திரங்களுடனும் குலங் களுடனும் நட்புறவு கொண்டதன் மூலமாக நஜ்த் பிரதேசத்தின் பெரும் பகுதியில் தமது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டனர்.

அப்துல் அஸீஸ் இப்னு சுவூத்

அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது இப்னு சுவூத்இ கிழக்குப் பக்கமாக ஓடிப் போய்இ இன்று குவைத் என அழைக்கப்படும் பிரதேசத்தில் முபாரக் அல் சபாஹ்விடம் அடைக்கலம் தேடினார். அவர் றியாதை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டு தொங்கிய முகத்துடன் தனது கூடாரத்தில் இருந்த அதே சமயம், அவரது பதின்ம வயது மகன்களுள் ஒருவரான அப்துல் அஸீஸ் (அப்துல் அஸீஸ் இப்னு  அப்துர் ரஹ்மான் ஆல சுவூத் என அறியப்பட்ட இவர்தான் சவூதி முடியாட்சியின் ஸ்தாபகர் ஆவார்), ஹஜ் பயணிகளின் காரவன்களை திடீர் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிப்பதில் சிறந்து விளங்கினார். அவர் மிக விரைவில் ஈவிரக்கமற்ற கொடூரங்களுக்கும் தந்திரங்கள்-மோசடிகளுக்கும் பிரசித்தி பெற்றவராகக் கருதப்பட்டார். 1902 ஜனவரியில், றியாதில் பனூ ராஷித்களின் மிஸ்மார்க் கோட்டையின் மீது விடியற்காலைக்கு முன்பாகவே திடீர் தாக்குதலொன்றைத் தொடுத்தார். றியாத் ஆளுநர் ஷெய்க் அஜ்லான் கொல்லப்பட்டார். மிகச் சுருக்கமானதொரு சண்டைக்குப் பிறகு, பனூ ராஷித்களின் படைப் பிரிவுகள் சரணடைந்தன. இன்னும் பல சிறு சிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. அவற்றில்,அப்துல் அஸீஸ், 1903-ல் அல் திலாமில் நடந்த சண்டையில் போன்று ஒன்றில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டார் அல்லது .ஏனைய கோத்திரங்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை பனூ ராஷித்களுக்கு துரோக மிழைக்கச் செய்தார். அப்துல் அஸீஸ், இஸ்தன்பூலில் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதிற்குக் கூட தனது விசுவாசத்தைத் தெரிவித்து உறுதிமொழி கொடுத்திருந்தார்.  ஆயினும்இ சுல்தானுடைய அதிகாரத்தைப் பலவீனப்படுத்த தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார்.  1906 ஏப்ரலில், ரவ்தா அல் முஹன்னாவில் ஆல சுவூத்களும் பனூ ராஷிதாக் களும் மோதிக் கொண்டனர். பனூ ராஷித்களின் தலைவர் (இவரும் அப்துல் அஸீஸ் என்றே பெயருடையவர்) கொல்லப்பட்டுப் போனார். இது பனூ ராஷித்களுக்கு ஏற்பட்ட ஓர் இழப்பு மட்டுமல்லாமல்இ பனூ ராஷித்களுக்கு ஆதரவு கொடுத்த உதுமானியர்களுக்கு நிகழ்ந்த ஒரு பெரும் பின்னடைவு மாகும்.
பாலைவனப் பூமியில் கோத்திரங்களுக்கிடையே அடிக்கடி மாறி வரும் விசுவாசங்களைப் பற்றிய மற்றுமொரு வாழ்வு சம்பந்தப்பட்ட உண்மையை அப்துல் அஸீஸ் ஆல சுவூத் நன்கு விளங்கிக் கொண்டார். ஏனென்றால், பெரும்பாலான கோத்திரங்களும் (ஏன், இனங்களும் கூட) சரிசமமான வலிமையையே உண்மையில் பெற்றிருந்ததால் அவர்களை வெளியிலிருந்து வரும் உதவியைக் கொண்டு தோற்கடிப்பதுதான் சாத்தியமான ஒரே வழி யாகத் தென்பட்டது. உதுமானியத் துருக்கியர்கள் தமது ஆளுநர்கள் மூலமாக இந்த நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வந்த அதே வேளைஇ பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் உள் நுழைந்ததன் காரணமாக அவர்களின் அதிகாரம் வீழச்சியடைந்து கொண்டு வந்தது. அப்துல் அஸீஸ் இதனை நன்கு அறிந்திருந்தார். ஏனெனில், பிரிட்டிஷார் ஏற்கனவே சபாஹ் குடும்பத்தை குவைத்தில் (ஆட்சியில்) அமர்த்தியிருந்தனர். உதுமானியர்களுக்கெதிராக தனது சேவையை வழங்கினால் அப்துல் அஸீஸுக்கும் அம்மாதிரியான உதவியைச் செய்யக் கூடும். இருந்த போதிலும்இ பிரிட்டன் அந்நேரத்தில் ஹிஜாஸின் மீதே அதிக அக்கறை கொண்டிருந்தது. பாரசீக வளைகுடாவைப் போன்றல்லாமல் ஹிஜாஸின் மீதான பிரிட்டனின் அக்கறை வெறுமனே வியாபாரரீதியில் மட்டுமன்று. செங்கடல் துறைமுகமான ஜித்தா முக்கியமானதென்பது உண்மைதான். ஆனால்இ அதன் உண்மையான முக்கியத்துவம் அரசியல் ரீதியானதாகும். ஏனென்றால்இ இரு ஹரம்களும் (மக்காவும் மதீனாவும்) ஹிஜாஸ் பிரதேசத்தில்தான் இருக்கின்றன. இவற்றை உதுமானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வென்றெடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் சதி நடவடிக்கை

ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கெப்டன் ஆர். எஃப். பேர்ட்டன் (பின்னர் சர் றிசர்ட் பேர்ட்டன்) என்பவர்இஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போர்வையில்இ   மக்காவுக்கும் மதீனாவுக்கும் பல முறைகள் சென்று வந்ததைத் தொடர்ந்து, 1850களின் தொடக்கத்தில் இத்தகைய கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்திருந்தார். 1881-ல் ஜித்தாவிலிருந்த பிரிட்டிஷ் கொன்ஸுல் ஜெனரல் ஜொஹ்ராப்இ ஹிஜாஸினதும் ஹஜ்ஜினதும் முக்கியத்துவத்தைப் பற்றி, இதை விட மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருந்தார். அவர் லண்டனுக்கு எழுதிய கடிதத்தில், '(சில மனிதர்கள்) அரசியல் காரணங்களுக்காக  ஹஜ்ஜுக்குப் போகின்றனர் என்பதை நான் இணங்க வேண்டியுள்ளது. ஐரோப்பியத் தலையீடின்றி மக்கா சுதந்திரமாயிருப்பதால், கூட்டங்கள் நடத்துவதற்கும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஏற்ற பாதுகாப்பான இடமாக இருக்கிறது. இன்று வரை அங்கு வந்து போகிறவர்களின் மீது நாம் விழிப்புடன் எந்த கண்காணிப்பும் செய்யவில்லை.  இவ்வாறாக, நமக்கு எதிரான இணைப்புகளை உருவாக்கும் விதத்தில் மக்காவில் கூட்டங்கள் நடத்தப்படலாம். இவை, நம் மத்தியில் குமுறி வெடிக்கும் வரை, நமக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியா மலிருக்கும்' எனக் குறிப்பிடுகின்றார்.
ஹிஜாஸ் 1840-ல் உதுமானிய அரசின் ஒரு வலாயத் (மாகாணம்) ஆனது. மக்காவிற்கான ஷெரீஃப் (ஆளுநர்-நிர்வாகி)ஐ நியமிக்கும் உரிமை இஸ்தன்பூலிலிருந்த சுல்தானிடமிருந்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வாக்கில்இதுருக்கியர்களின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாகஇ  பிரிட்டன் ஷெரீஃப் உடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை வளர்த்து கொண்டது.

பிரிட்டிஷாரின் திட்டங்களைப் பற்றி நன்குணர்ந்து கொண்ட துருக்கியர்கள்,  மக்காவிலிருந்து வெளி வந்த 'ஹிஜாஸ்'பத்திரிகையில் (இல.1896இ ஸஃபர் 25இ  ஹி.1;333-கி.பி.1914இ பக். 1)இந்த சதித் திட்டத்தைச் சுட்டிக் காட்டி, அது 'மிகக் கொடியது'என வர்ணித்து விமர்சனமொன்றை வெளியிட்டனர். பிரிட்டனின் திட்டம் அதனது பல முகவர்(ஏஜெண்ட்)களான டி.ஈ.லோரன்ஸ், கெப்டன் ஷேக்ஸ்பியர், சர் ஹென்றி மெக்மஹோன், சர் பெர்ஸி கொக்ஸ், மற்றும் பலர் ஊடாக, அரேபியத் தலைவர்களுக்கு கட்டுக்கட்டாக பண இலஞ்சம் கொடுத்தும், உதுமானியர்களைத் தோற்கடிப்பதற்கு பிரிட்டனுக்கு அவர்கள் உதவுவார்களாயிருந்தால் அவர்களை அரேபியத் தீபகற்பத்தின் ஆட்சியாளர்களாக்குவதாக வாக்குறுதிகளைச் செய்தும் மிக வேகமாக முன்னேறிச் சென்றது. (ஹாஷிமி கோத்திரத்தைச் சேர்ந்த) ஷெரீஃப் ஹுசைன்,  அப்துல் அஸீஸ் ஆல சுவூத்     போன்ற பலரை, அவர்கள் தமது திட்டத்திற்குத் துணைவர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்களாயிருக்கின்றனர் எனக் கண்டு கொண்டனர். இவர்களனைவரும்  பிரிட்டிஷாரின் சம்பளப் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றனர். அரேபியத் தீபகற்பத்தில் துருக்கியத் துருப்புக்களைத் தாக்குவதற்கான துப்பாக்கிகளும் ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் பவுண்ட் பணமும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில்இதற்போது பெரும் வெறுப்புக்கும் அபகீர்த்திக்கும் உள்ளாயிருக்கும் 1917 நவம்பர் பல்ஃபார் பிரகடனத்தின் கீழ்இபாலஸ்தீனில் யூதர்களுக்காக ஒரு தாயகத்தை உருவாக்குவதற்கு பிரிட்டிஷார் உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

இந்த பாமர அரபுத் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மதித்து நடக்கும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு அறவே இருக்கவில்லை. ரஷ்யாவில் ஜார் மன்னன் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து இது வெட்டவெளிச்சமானது. பிரிட்டனும் ஃபிரான்ஸும்இ மத்திய கிழக்கை தத்தம்; செல்வாக்கிற்கு உட்பட்ட நிலப்பகுதி களாகப் பிரித்துக் கொள்வதற்குச் சம்மதித்துஇ தமக்கிடையே செய்திருந்த ஸைக்ஸ்-பிகொட் ஒப்பந்தத்தைப் பற்றிஇ 1917நவம்பரில் போல்ஷேவிக்(எனப்படும் ரஷ்ய கம்யூனிஸ்ட்)கள் எதிர்பாராதவிதமாகத் தெரிந்து கொண்டனர். பல்வேறு கோத்திரத் தலைவர்களுக்குக் கொடுக்கப் பட்ட வாக்குறுதிகளை முற்றாகவே பொருட்படுத்தாதுஇ மத்திய கிழக்கைப் பிரித்துக் கொள்வதற்காக பிரிட்டனின்  ; மார்க் ஸைக்ஸும் ஃபிரான்ஸின் ஜோர்ஜ் பிகொட்டும் 1916பிப்ரவரியில் இரகசியமாக உடன்பட்டிருந்தனர்.

முதலாம் உலக மகாயுத்தத்தில், துருக்கி (அவர்களது இராணுவத்தில் ஏற்கனவே பிரிட்டிஷ் ஏஜெண்ட்கள் பலர் ஊடுருவியிருந்தனர்.  மேலும் துருக்கிய அதிகாரிகள் பலர் ஸியனிஸ அமைப்பான ஃபிரீமேஸனில் இணைந்திருந்தனர்) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷார், தாம் அரேபியத் தலைவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்தனர். இந்தத் துரோகத்தைக் கண்டு ஹுசைன் இப்னு அலீ வெகுண்டார்.  அரேபியத் தீபகற்பம் முழுவதற்கும்  மன்னராக அவர் கனவு கண்டு கொண்டிருந்தார்.
பிரிட்டனுக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையிலான ஸைக்ஸ்-பிகொட் ஒப்பந்தத்தின் பிரகாரம்  முதலாம் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு உதுமானியர்களின் ஆளுகையின் கீழிருந்த இஸ்லாமியக் கிழக்கிலுள்ள நிலப்பரப்பை ஐந்து பகுதிகளாகப் பிரிக்க நாடினர். இரண்டு பகுதிகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்கும் 'செல்வாக்கிற்கும்' கீழும்இ இரண்டு பகுதிகள் ஃபிரான்ஸின் கட்டுப்பாட்டிற்கும் 'செல்வாக்கிற்கும்'கீழும் புனித பூமி ஒரு சர்வதேசப் பகுதியாகவும் இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இறுதியாக வட ஆப்பிரிக்காவிலும் பிறவிடங்களிலுமிருந்த உதுமானியர்களின் பிரதேசங்கள்இ பிரிட்டனுக்கும் ஃபிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. சவூதி அரேபியா மட்டுமே ஒரு 'சுதந்திரமான' நாடாக மேலெழுந்தது.

அவரைத் திருப்திப்படுத்துவதற்காக பிரிட்டிஷார், அவருடைய மகன்களுள் ஒருவரான அப்துல்லாஹ்வை, (பாலஸ்தீனிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட) டிரான்ஸ் ஜோர்தானின் அமீராக அமர்த்தினர்.  மேலும், அவருடைய மற்ற மகனான ஃபைஸலை, சிரியாவின் மன்னராக்கினர். பைஸல், வெகு விரைவில் சிரியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட போது, அவரை ஈராக்கின் மன்னராக பதவியில் அமர்த்தினர். (1958-ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் மூலம் ஈராக்கில் முடியாட்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த ஆட்சியாளரும் கொல்லப்பட்டார்.)

இதே நேரத்தில், அப்துல் அஸீஸ் தனது சொந்த இருப்பிடத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்வதற்கு மிகக் கடுமையாகப் பாடுபட்டார். அதுவரை அவருடைய அக்கறையெல்லாம் தமது தாயகமான நஜ்தோடு மட்டும்தான் வரையறுக்கப்பட்டதாக இருந்ததெனத் தெரிகிறது. அத்தோடு, ஹிஜாஸிற்கு உதுமானியர்களினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவர் ஏற்கனவே இருந்தார். அவருக்கு பிரிட்டிஷாரின் ஆதரவும் கூட கிடைத்திருந்தது. இதன் பிறகு, அப்துல் அஸீஸ் வழிவழியாக வந்த தனது தந்திரத்தைப் பயன்படுத்தி, அல் அர்தவிய்யாவைச் சுற்றிலும் வாழ்ந்து வந்த வஹ்ஹாபிகளை (இப்போது அவர்கள் இக்ஹ்வான்கள் என அழைக்கப்படுகின்றனர்) பதப்படுத்துவதற்கு முனைந்தார். இவர், அவர்களை றியாதிற்கு அருகில், விசேஷமாக குடியமர்வதற்கு உற்சாகப்படுத்தினார்.  இவர், வஹ்ஹாபி கோத்திரங்களான உதைபாஹ், முதையிர், அஜ்மான் போன்றவற்றை அங்கு குடியமர்வதற்கு பிறவிடங்களிலிருந்து கொண்டு வந்தார். அவர்கள், நஜ்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு இவருக்கு உதவிய உடனேயே, ஷரீஆ வை (அவர்களின் குறுகலான விளங்குதலுக்கு இணங்க) அமுல்படுத்துவதாக வாக்குக் கொடுத்தார்.

அப்துல் அஸீஸ், பிரிட்டிஷாருடனும் தனது தொடர்புகளை தொடர்ந்து வைத்து வந்தார். வஹ்ஹாபி இக்ஹ்வான்கள், இதனைப் பற்றி அறிந்திருந்தார்களென்றால், இவரை ஒரு காஃபிர் எனப் பிரகடனஞ் செய்து, கொன்று போட்டிருப்பர். அவர்கள் அதனைக் கண்டு பிடித்த போது, காலம் கடந்து விட்டது. 1928-ல் இருந்து 1931 வரை, அவர்கள் அப்துல் அஸீஸிற்கு எதிராக கிளர்ந்தெழுந்து கலகஞ் செய்தனர். ஆனால், பிரிட்டிஷ் விமானங்களும் துப்பாக்கிகளும், பணமும் இராணுவ ஆலோசனைகளும் இக்ஹ்வான்களின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு அப்துல் அஸீஸுக்கு உதவின.  அப்துல் அஸீஸு க்கும் அவரது குடும்பத்திற்கும், அவாகளது ஆரம்ப காலப் போராட்டங்களில் உதவிய- பின்னர் இவர் தனது பிடியை மேலும் நஜ்தின் மீது கெட்டிப் படுத்திக் கொள்வதற்கு இவருக்கு உதவிய- அதே மக்கள், இப்போது துரோகமிழைக்கப்பட்டு, பிரிட்டிஷ் காஃபிர்களின் உதவியுடன் இவரால் கொன்று குவிக்கப்பட்டனர்!

கிலாஃபத்தின் முடிவு


இந்த சமயத்தில் தான்  துருக்கியில் ஒரு ஃபிரீமேஸனான முஸ்தஃபா கமால் அதிகாரத்திற்கு வந்தார். அவர் 1922 நவம்பரில் முதலில் சுல்தானிய ஆட்சியை நீக்கினார். அதன் பின்இ 1924 மார்ச் 3-ந் திகதி கிலாஃபத்தையும் அகற்றுவதாக அறிவித்தார். இதன் காரணமாகஇ முஸ்லிம்களின் பெயரளவிலான கடைசி கலீஃபாவான இரண்டாம் அப்துல் மஜீத் நாடு கடத்தப்படும் கட்டாயத்திற்குள்ளானார். ஏறத்தாழ 1,300ஆண்டுகளுக்கு முன்னர்இ மதீனாவில்
1945 பிப்ரவரி 17-ந் திகதி, எகிப்திலுள்ள காரூன் ஏரியில் நடந்த உத்தியோகப்பூர்வ இரவு போசன விருந்தில், மன்னர் அப்துல் அஸீஸ் ஆல சுவூத்இ பிரிட்டிஷ்; பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலுடன் கலந்து கொள்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய அரசுடன் இருந்த கடைசிப் பிணைப்பு –அது எத்துணை பலவீனமானதாயிருந்த போதிலும் சரி- இத்தோடு அறுந்து போனது. அந்த நேரத்தில், டிரான்ஸ் ஜோர்தானில் வாழ்ந்து வந்த ஹுசைன் இப்னு அலீஇ உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னைத் தானே கலீஃபாவாகப் பிரகடனஞ் செய்தார்.
இதன் காரணமாக, தனக்குச் சார்பாக முஸ்லிம்களின் ஆதரவு ஒன்று குவியும் என்றும், அரபுகள் எல்லாரினதும் ஆட்சியாளராக பிரிட்டிஷார் தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும் என அவர் எதிர்பார்த்தார். இந்திய முஸ்லிம்கள், 1922-1924 காலப் பகுதியில், கிலாஃபத் அமைப்பை அழிந்து போகாமல் காப்பாற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்புகளுடன் ஒரு கிலாஃபத் இயக்கத்தை முன்னின்று நடத்தினர். ஆயினும், ஹுசைன் இப்னு அலீயுடைய பிரகடனத்தை முஸ்லிம்கள் வரவேற்கவில்லை. ஏனென்றால், உதுமானியர்களைத் தோற்கடிப்பதற்கு உதவிய, அரபுகளின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டாக அவர் ஏற்கனவே அறியப்பட்டிருந்தார். மறுபுறத்தில், இது கிலாஃபத் முழுமையாக அழிந்து போவதற்கு வழிகோலியது.
எப்போதுமே முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் அப்துல் அஸீஸ், காயை நகர்த்துவதற்கு இது தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு என உணர்ந்து கொண்டார். பரந்து விரிந்த முஸ்லிம் உலகின் பார்வையில், இவர் நன்கு பிரபல்யம் வாய்ந்தவராக இல்லாதிருந்ததால், பிரிட்டிஷாருடனான இவருடைய தொடர்புகளைப் பற்றி பரவலாக அறியப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கா ஷெரீஃபுக்கு எதிராக தன்னால் செயல்பட முடியும் என்றும், முஸ்லிம்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் இவர் நினைத்தார். விசேஷமாக, அரபுகள் எல்லாரினதும் ஆட்சியாளராக ஹுசைன் இப்னு அலீயை அமர்த்த பிரிட்டிஷார் மறுத்து விட்டதன் பிறகு, அவர் தொல்லை தருபவராகக் காணப்பட்டதால், பிரிட்டிஷாருக்கும் இது பொருத்தமானதாகத் தென்பட்டது. மக்காவின் மீதான அப்துல் அஸீஸின் தாக்குதலுக்கு பிரிட்டன் சம்மதித்தது. இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டம் மக்கா மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரேஇ 1923 ஜூலையில் வந்த ஐயாயிரம் ஹஜ் யாத்திரிகர்களைப் படுகொலை செய்தது. மற்றும் 1924 செப்டம்பரில், தாயிஃப் மீது தாக்குதல் நடத்தி, மஸ்ஜித்களில் தஞ்சம் புகுந்த பலர் உட்பட எண்ணிக்கையில் 600க்கும் 900க்கும் இடையிலான தாயிஃப்வாசிகளை ஈவிரக்கமில்லாமல் அறுத்துத் தள்ளியது ஆகிய இரு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. மஸ்ஜித்களின் புனிதத் தன்மை கூட, இவ்வெறியர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முடியாது போனது. இந்த சுவூத்-வஹ்ஹாபி படுபாதகர்கள், முதலில் மஸ்ஜித்களினுள் வைத்து மக்களின் கழுத்தை அறுத்தனர். பின்னர், கட்டடங்களுக்குத் தீயிட்டு அவற்றைக் கொளுத்தினர். இவை எல்லாமே 'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துகிறோம்' என்ற பெயரின் கீழ்தான் மேற்கொள்ளப்பட்டன.

ஹிஜாஸில் சவூதிகளின் அழிவு வேலைகள்

தாயிஃப் படுகொலைப் படலத்தைப் பற்றிய செய்திகள் வந்தடைந்த உடனேயே பீதிக்குள்ளான மக்கள், சுவூத்-வஹ்ஹாபிக் கொலைக் கோஷ்டியினர் வருவதற்கு முன்னரே மக்காவிலிருந்து ஜித்தாவுக்கு வெருண்டோடி, தம் வீடுகளுக்குள்ளே தாழிட்டுக் கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்தனர். சவூதிகள் மக்காவைச் சுற்றிவரச் சூழ்ந்து பலமான தாக்கு தலுக்குள்ளாக்கினர். 1802-ல் சவூதிகள் அங்கு அரங்கேற்றிய படுகொலைப் படலத்தின் மறுபிறவி(?) போல் இது அமைந்தது. ஷெரீஃப் ஹுசைன் கூடஇ இந்த கொலை வெறியர்கள் நகரினுள் நுழைய முன்பே, மக்காவிலிருந்து ஜித்தாவுக்கு ஓடிப் போனார். சவூதிகளின் தாக்குதலை அவர், பிரிட்டிஷாரின் உதவியில்லாமல் எதிர்த்து நிற்க முடியாது. பிரிட்டிஷார் அவரை ஒரு பழைய நீராவிக் கப்பலில் ஏற்றிஇ சைப்பிரஸுக்கு நாடு கடத்தினர்.

1945 பிப்ரவரி 14-ந் திகதிஇ எகிப்திலுள்ள மாபெரும் உவர்ப்பு ஏரியில் அமெரிக்கக் கப்பலான 'குயின்ஸி'யில்இ அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் டி. ரூஸ்வெல்ட் (வலது)இ மன்னர் அப்துல் அஸீஸ் ஆல சுவூதைச் சந்திக்கிறார். மன்னர்இ மொழி பெயர்ப்பாளர் கெர்னல் வில்லியம் ஏ. எட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
 அப்துல் அஸீஸின் தலைமையிலான இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினர், தமது வழமையான மிருகத்தனத்தையும் அக்கிரமத்தையும், புனிதத் தலங்களின் அழிவு வேலைகளையும் மேற்கொண்டனர். பலர் இஹ்ராம் உடை அணிந்து கொண்டு, எல்லாருக்கும் அபயம் வழங்கும் புனிதம் வாய்ந்த மஸ்ஜிதுல் ஹராமின் எல்லைகளுக்குள் பிரவேசித்தனர். அதே சமயத்தில் அவர்கள், பிரிட்டிஷார் வழங்கிய துப்பாக்கிகளுடன் ஆயுதபாணிகளாகவே உள்ளே நுழைந்தனர். சுவூத்-வஹ்ஹாபிக் கோஷ்டியினரின் மக்களை ஒன்று திரட்டும் கூக்குரல் எப்போதுமே, 'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துகிறோம்' என்பதுதான்.  ஆயினும், அவர்களோ இஸ்லாத்தின் ஒவ்வொரு விதிமுறையையும் மீறக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஹரம் உடைய புனிதத்தன்மையைப் பாதுகாத்தல்இ ஆயுதம் ஏந்தக்கூடாது, மக்காவில் வாய்த் தாக்கமோ இரத்தஞ் சிந்துவதோ தடுக்கப்பட்டுள்ளது, யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்பன இந்த விதிமுறைகளுள் சிலவாகும். திருநபி (ஸல்) அவர்களின் காலத்தில், இஸ்லாத்தின் பரம விரோதிகளான முஷ்ரிக்குகள் கூட, இந்த விதிமுறைகளுக்கு மதிப்பளித்து வந்தனர். ஆனால்இ தம்மை உண்மை முஸ்லிம்களென உரிமை பாராட்டிக் கொள்ளும் இந்த சவூதிகளோ, அவற்றைப் பகிரங்கமாக அவமதிக்கின்றனர்.

அப்துல் அஸீஸ், தனது கொலைகாரக் கோஷ்டியின் கைகளில் மக்கா வீழ்ந்த போது, தான் ஹிஜாஸினுடைய ஆட்சிக்கோ அல்லது கிலாஃபத்துக்கோ எந்த உரிமையும் கோருவதினின்றும் தவிர்ந்து கொள்வதாக ஓர் உரிமைத் துறப்புப் பிரகடனத்தைச் செய்தார். நஜ்தின் உடைமையுடன் தான் திருப்தியடைவதாக இவர் அழுத்திச் சொன்னார். ஆயினும், 'ஷெரீஃபுடைய கொடுமையிலிருந்து ஹிஜாஸையும் எனது மக்களையும் விடுவிக்க விரும்பியதாக' அறிவித்தார். இஃது அப்பட்டமான ஒரு பொய்யாகும். ஷெரீஃப் ஹுசைன் கொடுமைக்காரராக இருந்திருக்கலாம். அதே நேரத்தில், அவருடைய கொடுமை எந்த வகையிலும் இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினரது கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் முன்னால் நிற்க முடியாது. அது மட்டுமல்ல, அப்துல் அஸீஸ் ஏற்கனவே மதீனாவைத் தாக்குவதற்குத் திட்டம் தீட்டியிருந்தார். அதன் பிரகாரம், 1925 டிசம்பர் 5ந் திகதி மதீனா கைப்பற்றப்பட்டது.

அப்துல் அஸீஸ் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனஞ் செய்தல்


இது நிகழ்ந்து ஒரு சில வாரங்களுக்குள்ளாகவேஇ 1926 ஜனவரியில்இ அப்துல் அஸீஸ் அல் மஸ்ஜிதுல் ஹராமின் இமாமுடன் இணைந்து வந்துஇ தன்னைத் தானே 'ஹிஜாஸின் மன்னராக'ப் பிரகடனஞ் செய்தார். அதன் பிறகும் கூட அவர்இ பொய்இ பித்தலாட்டங்களஇ வஞ்சகம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். ;அல்லாஹ் பரிசுத்த குர்ஆனிலே (3:61)இ பொய்யர்களை வன்மையாகக் கண்டிப்பதுடன்இ அவர்கள் மீது தனது சாபம் இறங்குமென எச்சரிக்கிறான். புனிதத்தலங்களின் பரிபாலனத்தைக் குறித்து தான் திரும்பத் திரும்ப பலமுறை ஆலோசனையை வேண்டியதாகவும்இ ஆயினும் 'வெளிநாட்டு முஸ்லிம்களின் அலட்சியத்தன்மை'யின் காரணமாகவே தன்னைத் தானே மன்னராகப் பிரகடனஞ் செய்யும் கட்டாயத்திற்குள்ளானதாகவும் இவர் அறிவித்தார். அத்தோடுஇ ஜித்தாவைச் சேர்ந்த வர்த்தகர்களும் முக்கியப் பிரமுகர்களும் தன்னை மன்னராகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரி வித்தார்.
'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும்;' பணிக்குத் தலைமையேற்று நடத்தும் எவருமே இதுவரையில்இ மன்னராட்சி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதுதானா என்ற கேள்விக்கு விளக்கமளிக்க முன்வரவில்லை சுவூத் குடும்பத்தினரும்இ அவர்களின் அரசவை ஆலிம்களும் 'பித்ஆ உற்பத்தி நிலைய'மொன்றைத் திறந்து வைத்துஇ தாம் விரும்பாதவை ஒவ்வொன்றையும் 'குற்றம்' எனச் சொல்லி வருகின்றனர். ஆனாலும்இ தாம் மிகப் பெரிய பித்அத்தைச் செய்த குற்றவாளிகள் என்ற விஷயத்தைச் சாமர்த்தியமாக மறந்து விடுகின்றனர். அவர்களுடைய சம்பளம் பெறும் ஏஜெண்ட்களும் இந்த விஷயத்தைத் தொட்டும் பார்ப்பதில்லை.
இரண்டாம் உலகப் போர் வரை அப்துல் அஸீஸ்இ ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டாகவே செயல்பட்டார். அமெரிக்கா ஓர் உலக வல்லரசாகத் தலையெடுத்ததுடன்இ அப்துல் அஸீஸ் தன்னை அமெரிக்காவின் விசுவாசமுள்ள ஓர் ஊழியனாக- தாசனாக- அடிவருடியாக மாற்றிக் கொண்டார். இந்த உறவு இன்று வரைத் தொடர்ந்து வருகின்றது. சுவூத் குடும்பத்தை ஆட்சியதிகாரத்தில் வைத்திருப்பதற்காகஇ அமெரிக்கர்கள் விரும்புகின்ற எதனையும் -எண்ணெய்இ இராணுவத் தளங்கள்இ ஆயிரக்கணக்கான கோடி டொலர்களில் ரொக்கப் பணம்இ இன்ன பிறவற்றை- கொடுக்கின்றனர். சுவூத் குடும்பம்இ அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களுடன்- எல்லா ஜனாதிபதி களுடனும்இ அவர்களது குடும்பங்களுடனும்- நெருங்கிய தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டிருக்கிறது.
அப்துல் அஸீஸ்இ பற்பல மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்களின் மூலம் ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இன்று சுவூத் குடும்பம்இ சுமார் 40இ000 இளவரசர்களைக் கொண்டதாக விரிவடைந்திருக்கிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிரஇ அவர்களுள் மிகப் பெரும்பாலோர்இ கேடு கெட்ட தீய செயல்களுக்குச் சொந்தக்காரர்களாயிருக்கின்றனர். அவர்கள்இ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள தீமைகள் அனைத்திலும் உண்மையாகவே ஈடுபடுபவர்களாயிருக்கின்றனர். குடிப்பழக்கம்இ விபச்சாரம்இ சூதாட்டம்இ நாட்டின் எண்ணெய்ச் செல்வத்தைத் திருடுவதுஇ இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அடிமைகளாகச் சேவை புரிவது என இத்தீமைகளை அடுக்கிக் கொண்டு போகலாம். அவர்கள் எதற்கும்இ எவருக்கும் உடன்படுவர்இ இணங்குவர் - அல்லாஹ்வைத் தவிர. (அல்லாஹ்விடம் பிழை பொறுக்கக் கோருவோம்!)
உத்தியோகப்பூர்வமாகஇ அல்குர்ஆன் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமாகப் பிரகடனஞ் செய்யப்பட்டுள்ளது. ஆனால்இ அரசு அமைப்பு பரம்பரை ஆட்சியைத் தொடர்கிறது. ஒரு மன்னர் இறந்து விட்டால்இ வரிசையிலுள்ள அவரது அடுத்த சகோதரர் அரசுரிமைக்கு வாரிசுதாரர் ஆகிறார். இந்த இடத்தில்இ ஒவ்வொருவருக்கும் கேட்க மனதில் தோன்றுகின்ற கேள்விகள் இவைதான்: சவூதி முடியாட்சியின் அமைப்புச் சட்டம்இ அல்குர்ஆனாக இருக்குமானால்இ இந்த அரச வாரிசுரிமைக்கோ அல்லது இஸ்லாத்தில் பிரதி நிதித்துவத்திற்கான சட்டப்பூர்வ முறைமை பரம்பரை மன்னர் ஆட்சிமுறைதான் எனவோஇ எந்த அல்குர்ஆன் வசனம் அனுமதி வழங்கியிருக்கிறது? அல்லாஹ் வின் திருத்தூதர்(ஸல்) அவர்களோஇ அவர்களைப் பின்தொடர்ந்த அல் கிலாஃபாஹ் அல் ராஷிதா என்ற நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களோஇ தங்களை மன்னர்கள் எனப் பிரகடனஞ் செய்திருக்கின்றார்களா? அவ்வாறில்லை யென்றால்இ சவூதிகள் தமது பரம்பரை மன்னர் ஆட்சி முறையைஇ எந்த அடிப்படையில் மக்கள் மீது சுமத்தியிருக்கிறனர்?
சவூதியின் முரண்பாடுகள்
சித்தாந்தரீதியாக சவூதி முடியாட்சிஇ ஷரீஆ எனும் இஸ்லாமியச் சட்டக் கோவையின்படிதான் ஆளப்படுகின்றதுஇ ஆனால்இ எல்லாவிதமான தீமைகளுக்கும் உறைவிடமாகத் திகழும் பல்வேறு அரண்மனைகளின் நான்கு சுவர்களுக்குள் இந்த சட்டங்கள் பொருந்துவதில்லை. ஷரீஆவை அமுல் படுத்தும் போர்வையின் கீழ், சாதாரண மக்களின் மீது - விசேஷமாக, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த எளிய, ஏழ்மையான வேலைக்காரர்கள் மற்றும் பணியாட்கள் மீது- கற்பனைக்குள்ளடங்காத மிகக் கீழ்த்தரமான கொடுமைகள்,  சவூதிகளினால் இழைக்கப்படுகின்றன. றியாதில் பொது மக்களின் முன்னிலையில், மரண தண்டனைக்குள்ளானவர்களின் தலைகள் சீவியெறியப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவங்களாகும். மக்களின் மனங்களில் பயத்தை யும் பயங்கரத்தையும் அதிகரிப்பதற்காக, இம்மாதிரி நிகழ்வுகள் ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெறுகின்றன. ஒரு சில கிராம்கள் ஹிரொய்ன் போதைப்பொருளை வைத்திருந்ததாகவோ, வரவழைத்ததற்காகவோ குற்றவாளி களாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இவர்கள், பெரும்பாலும் ஏழைத் தொழிலாளர்கள் ஆவர்.
'
அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல நூறு கோடி டொலர்கள் பணத்தைத் திருடி, அவற்றை நாட்டுக்கு வெளியே கடத்திச் செல்கின்றனர். மதுபானவகைகளை நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வருகின்றனர். நாட்டின் கிழக்குப் பகுதியிலிருக்கும் மாஃபியாக் குழுக்களிடமிருந்தான போதைப் பொருட்களின் வியாபாரத்தை நிர்வகிக்கின்றனர். தமது மிருக இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகஇ உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஏழை இளம் பெண்களை இழிவான வகையில் நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். ஆயினும், இவர்களை சட்டம் ஒரு போதுமே தொட்டுப் பார்த்ததில்லை. ஷரீஆ சரிசமமாக அமுல்படுத்தப்படுமென்றால், பெரும்பாலான சவூதி இளவரசர்கள் தனது ஒரு ஜோடிக் கைகளைக் கொண்டிருக்கமாட்டான். மேலும், விபச்சாரத்திற்கான தண்டனை நேர்மையாகவும் சீராகவும் நிலைநாட்டப்படுமென்றால், இந்த சவூதி அரசக் குடும்பப் படுபாதகர்களுக்கு உரிய நீதியை வழங்குவதற்கு சவூதி அரேபியாவில் போதுமான கற்கள் இல்லாமலிருக்கும்.
சவூதிகள், குறைந்தபட்சம் 8,700 கோடி அமெரிக்க டொலர்களை, கடந்த இரண்டு தசாப்த காலப் பகுதியில் வெளிநாடுகளில் 'வஹ்ஹாபியத்'தைப் பரப்புவதற்காகச் செலவு செய்துள்ளனர். சென்ற இரண்டு ஆண்டுகளில் இந்த நிதிச் செலவு அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிதிச் செலவில் பெருந் தொகை, மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், 'வஹ்ஹாபியத்'தைப் பிரச்சாரம் செய்யும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும் நடத்திச் செல்வதற்குமான செலவினங்களாகும். இமாம்களின் பயிற்சி, மக்கள் தொடர்பு ஊடகங்கள், வெளியீட்டகங்கள், பாடநூற்கள் மற்றும் ஏனைய நூற்களின் விநியோகம், (இஸ்லாமிய அறிஞர்களின் நியமனம் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு பரிவர்த்தனையாக) பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் ஆகியவற்றுக்கும் கூட இந்நிதி உதவுகின்றது. சவூதி அரேபியாவிலும் பாரசீக வளைகுடாவிலும் வசிக்கும் சவூதிகள் அல்லாத பல லட்சக்கணக்கானோர், வஹ்ஹாபியத்தால் வசீகரிக்கப்பட்டு, தாம் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று, வஹ்ஹாபியத்தின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. சவூதியில் பணி புரியும் முஸ்லிமல்லாதார்களைச் சென்றடைவதற்கு, சவூதி முடியாட்சியின் இஸ்லாமிய விவகார, வக்ஃப், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சின் கீழ் இயங்கும் பல முகவர் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
சவூதி அரேபியாவிலுள்ள முஸ்லிம்களுக்குக் கூட, அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு வஹ்ஹாபியக் கொள்கை மறுக்கிறது. 1744-ல் சாதாரணப் பிரச்சாரகரான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபினால் வடிவமைக்கப்பட்ட விதத்தில்இ சவூதி; அரசு, முதவ்வி அல்லது முதவ்வியூன் எனப்படும் பயங்கரமான 'செயல்பாட்டுக் காவலர்'களை நியமித்திருக்கிறது. எல்லாரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்றார்களா என இவர்கள் கண்காணிப்பர். மார்க்கப் பொலிஸ்காரர்களான இந்த முதவ்வியூன் இப்பொழுது,  'நன்மையை ஏவிஇ தீமையைத் தடுக்கும் பணி'யைச் செய்வதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் 03-11-2002 அன்று, ஒரு பாடசாலையின் உறங்கு விடுதியில் தீப் பற்றிக் கொண்ட போது, 15 பெண் பிள்ளைகளை தீயில் கருகி இறந்து போகச் செய்தனர். எரியும் கட்டடத்திலிருந்து தப்பிப்பதற்கு பெண் பிள்ளைகள் பலர் முயற்சித்தனர். ஆயினும், அப்பெண் பிள்ளைகள் உரிய ஆடைகளை அணிநதிருக்காததைக் கண்ட முதவ்வியூன் சிலர், அவர்களைத் தடியால் அடித்து கொழுந்து விட்டெரியும் நெருப்புக்குள் திரும்பவும் செல்ல வைத்தனர். கொடூர உள்ளம் கொண்ட இந்த முதவ்வியூன்கள், தீயை அணைக்க வந்த தீயணைப்புப் படை வீரர்களைக் கூட அருகில் நெருங்க விடவில்லை!

2006 மே மாதத்தில், முதவ்வியூன்களின் அதிகாரம் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது. ஆயினும், அவர்களின் அடக்குதலும் ஒடுக்குதலும் தொடர்ந்தே வருகின்றது. 06-06-2006 அன்று, 70 வயதான ஒரு வயோதிகப் பெண்மணி சிறைக்கு அனுப்பப்பட்டார். அதற்கான காரணம், ஓர் ஆண் கடைக்காரர் மட்டுமே இருந்த ஒரு கடைக்கு அவர் சென்றார் என்பதுதான். இந்த மூத்தஇ வலுவிழந்த பெண்மணி, 'கல்வத்' எனப்படும் 'ஓர் ஆணுடன் மிக நெருக்கமாக இருந்தார்' என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே முதவ்வியூ னால் கைது செய்யப்பட்டிருக்கிறார்!

நபி(ஸல்)  அவர்கள் காலத்திலிருந்து நிலைபாடாயிருந்து வந்த தேசியச் சின்னங்களை அழித்தொழிப்பதில் இந்த முதவ்வியூன்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவை தரிசிப்பதற்குரிய இடங்களாகி விடும் என்ற ஒரு காரணம் காட்டப் பட்டது. 1988-ல் நபி(ஸல்)அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்புடைய மண்ணறை அழிக்கப்பட்டது. நபி(ஸல்)அவர்களின் முதல் மனைவி கதீஜா நாயகியின் வீடு இருந்த இடத்தில் இப்போது பொது மலசலக் கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இறுதி நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்த கட்டடங்களுள் வெறும் 20 மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன.

இத்தகைய மிகக் கீழ்த்தரமான நடத்தைகளையுடைய மனிதர்களின் கைகளில் இரு ஹரம் ஷரீஃபுகளும் விட்டு வைக்கப்பட வேண்டுமா என முஸ்லிம்கள் மிகுந்த அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். இரு ஹரம்கள், முஸ்லிம் உம்மத்தின் பொதுப் பாரம்பரிய உடைமையா அல்லது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் படுபாதகமான குற்றங்களை இழைத்த குற்றவாளிகளான இந்த சவூதி; கொலைகாரக் கூட்டத்தின் உடைமையா?

நமது பிரார்த்தனைகள் ஏன் அல்லாஹ்வினால் பதிலளிக்கப்படுவதில்லை என்பதைப் பற்றியும் ஆற அமர நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய மனிதர்கள், இஸ்லாத்தின் மிகப் புனிதத் தலங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நாம் அனுமதித்திருப்பதன் காரணமாகவே, நமது சமுதாயம் (முஸ்லிம் உம்மத்) எண்ணற்ற இன்னல்களையும் இடுக்கண்களையும் சந்தித்து வருகிறது.
இரு ஹரம்களான மக்காவும் மதீனாவும், ஈவிரக்கமற்ற, இந்த கொலைகார, கொள்ளைக்கார, கொடிய, ஒழுக்கங் கெட்ட கோஷ்டியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படாத பட்சத்தில், அல்லாஹ் சுபுஹானஹுத் தஆலாவின் பெருங் கருணையும் பேரருளும் நமது வாழ்வை வந்தடையாது. எனவே, நாம் இவ்விஷயம் பற்றி ஆழமாக ஆராய்ந்து, நமது சிந்தனையில் சிறந்ததொரு முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

(இத்துடன் ஜாபர் பங்காஷ் எழுதிய 'சுவூத் பரம்பரையின் ஜாஹிலிய்யதான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்' எனும் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.)
(Zafar Bangash  is a noted Islamic movement journalist and commentator and a leader of the Muslim community in TorontoCanada, and a strong advocate of Muslim unity.
Bangash is Director of the Institute of Contemporary Islamic Thought (ICIT), and president of the Islamic Society of York Region, a suburb of Toronto. He is Imam at the Islamic Society of York Region's Mosque and community centre in Richmond Hill, Ontario. He is a former editor of Crescent Internationalnewsmagazine, and a Trustee and formerly assistant director of the 1Muslim InstituteLondon, where he worked with Dr Kalim Siddiqui (1931–1996), the founder of the Muslim Institute and Leader of the Muslim Parliament of Great Britain. Bangash is also co-founder of the 1Muslim Unity Group