Showing posts with label Palestine. Show all posts
Showing posts with label Palestine. Show all posts

Friday, August 2, 2013

சர்வதேச 'குத்ஸ்' தினம்

புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.




ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.




குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர். 
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர். 
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன.  ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.  கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின்  நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.    


வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.

 


சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.



ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில்,  அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
 
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.













Wednesday, January 18, 2012

பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

 


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இஸ்ரேல் என்று கூறப்படும் யூதர்கள் கைப்பற்றியுள்ள பகுதியும் சேர்ந்திருந்த பலஸ்தீனத்தில், ஏறத்தாழ நுற்றுக்கு நுறு அரபிகளே வாழ்ந்து வந்ததுடன் சிறு சத வீதமே யூதர்கள் அங்கு இருந்தனர். ஆகையால் அது மிக அமைதியான நாடொன்றாகவே இருந்தது.



பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!







இக்காலகட்டத்தில் யூதர்கள் உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், சோவியட் யூனியனிலும், அமெரிக்காவிலும், வேண்டாத விருந்தாளிகளாக, அந்தந்த நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.


 இதற்குக் காரணம் யூதர்கள் செல்லுமிடமெல்லாம் ஏதாவது சதி செய்பவர்களாகவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்ததே. இவ்வாறு தங்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் இருந்த யூதர்கள், தமது 'சர்வதேச யூதர் சம்மேளனத்தை' 1897 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாஸல் நகரத்தில் ஒன்று கூட்டியபோது, பண்டைய காலத்தில் தாம் வாழ்ந்து வந்த பலஸ்தீனத்தில் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் யூதர்களை குடியேற்றி, பிறகு அங்குள்ள அரபிகளோடு பிரச்சினையை ஏற்படுத்தி, பலஸ்தீனர்களை பலமான சில நாடுகளுடன் சிண்டு முடியச் செய்து, பகைமை ஏற்படுத்தி அந்த குழப்பங்களை பயன்படுத்தி தமக்கென்று ஒரு தனி நாடை பலஸ்தீனத்தில் பிரித்தெடுப்பதற்கு முயற்சி செய்வது என முடிவெடுத்தனர்.


இதே வேளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கில் தம்முடைய ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு அப்பிராந்தியத்தில் ஒரு குழப்ப நிலையை சதாவும் வைத்திருப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிற்கு 1904 ம் ஆண்டு ஒரு மாநாட்டின்போது பிரிட்டன் வந்தது.
மேற்படி இரு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதமான தீர்வொன்று இருப்பதை யூதர்களும் ஆங்கிலேயர்களும் கண்டனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக உலகில் சிதறி வாழும் யூதர்களை சிறுகச் சிறுக பலஸ்தீனத்;தில் குடியேற்றுவது என்று இரு சதிகாரக் கும்பல்களும் முடிவு செய்தன.
இக்காலகட்டத்தில் பலஸ்தீனம், துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தின் போது, 1917 ல் துருக்கி தோற்கடிக்கப்பட்டைத் தொடர்து ஆங்கிலேய-யூதச் சதியின் முதல் கட்டத்தை செயற்படுத்துவதற்கான வசதி அச்சதிகாரர்களுக்குக் கிடைத்தது. பலஸ்தீனமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பலஸ்தீனதத்தின் அமைதியும் பலஸ்தீனர்களுடைய நிம்மிதியும் முற்றாகவே தொலைந்தே போயின. அதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை நிர்வகித்து வந்த பிரிட்டனின் படைகளுடன் இணைந்த யூதர்கள், பலஸ்தீன மக்களுக்கு பல வித கொடுமைகளைச் செய்யலாயினர். பலஸ்தீன வாலிபர்களும் தம்மால் இயன்ற விதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி வந்தனர். ஆனால் ஆயுத பலமோ, வெளி உதவிகளோ இன்றி மேற்கொள்ளப்பட்ட அப்போராட்டங்கள் அவர்களுக்கு சாதகமற்றவைகளாகவே இருந்து வந்தன. ஆனால் யூதர்களின் தாக்குதல்களோ பன்மடங்கு பயங்கரமாகின. 'ஹகானா' 'ஸ்டர்ன் இர்குன்' 'ஸ்வாயீ லியாம்' என்ற பெயர்களில் இயங்கி வந்த யூதப்படைகள் பலஸ்தீன மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களுக்குல்; புகுந்து அங்கிருந்த ஆண்கள், பெண்கள், கற்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மட்டுமன்றி கைக்குழந்தைகளையும் படுகொலை செய்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலமைச்சர்களாக ஆன மெனாகெம் பெகின், யிட்சக் ஷமீர், ஏரியல் nஷரோன் போன்றோரே இக்கொலைப்படைகளின் தலைவர்களாக அன்று இருந்தனர். ஜெரூஸசத்திற்கு அருகில் அமைந்துள்ள டயர் யாசீன் கிராமத்தில் யூத அரக்கர்கள் நடத்திய பேயாட்டத்தின் போது சில மணி நேரங்களில் இரு நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் உலகில் நடைபெற்ற மிருகத்தனமான மனித வேட்டைகள்; வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்;றது. யூதர்கள் அவ்வாறு வெறியாட்டம் நடத்தும் போது, பலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அவற்றைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி யூத அரக்கர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பாதுகாப்பையும் செய்தும் கொடுத்தனர். இக்கால கட்டத்தில், இந்த அக்கிரமங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் சில பலஸ்தீனக் குடும்பங்கள் தங்களுடைய உயிர்களை காத்துக்கொள்ளும் பொருட்டு பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. அவ்வாறு அன்று சென்றவர்கள் அந்நாடுகளில் அகதிகாளக வாழ்ந்து வந்தததுடன், அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் அதிகமானோர் இன்றளவிலும் அகதிகள் அந்தஸ்த்திலேயே அவமானத்துடன் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.





இதற்கிடையில் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களில் அதிகமானோர் அவசர அவரசமாக பலஸ்தீனத்திற்கு வந்து குவியலாயினர். தங்கள் தேசத்தை சூறையாடுவதற்கு யூதர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதியை கண்கூடாக கண்டு வந்தாலும் அதற்கு எதிராக போதுமான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பலஸ்தீன மக்கள் தவித்தனர். யூதர்களும் தங்களுடைய அக்கரமங்களை எந்தத் தடையுமின்றி தொடர்ந்துக் கட்டவிழ்த்து வந்தனர்.


1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி.
நவீன உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரமான மோசடி அன்று தான் நடைபெற்றது. ஆம். அந்நாளில் தான் பலஸ்தீனத்தில் ஒரு பகுதியை 'இஸ்ரவேல்' என்று ஐநா சட்ட விரோதமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த இஸ்ரவேலின் அஸ்திவாரத்தை தோண்டிப்பார்க்கும் எவரும்;, அதில் பெண்களின், வயோதிபர்களின், கற்பிணிகளின், சிசுக்களின் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையே கான்பார்.
ஆனால் அன்று வேறாக்கப்பட்ட இஸ்ரேலிலும் யூதர்களை விட பலஸ்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து இலட்சமாக அத்தருணத்தில் இருந்த இஸ்ரேலின் சனத்தொகையில் சுமார் இருபதுனாயிரம் பலஸ்தீனர்கள் அதிகமாகவே இருந்தனர்.


அது முதல் அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வரசாங்கம் யூதக்கொலைக்காரர்களுக்கு சார்பாகவே செயற்படும் படி யூதர்கள் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக பல துணிகர அக்கிரமங்களை தொடர்வதற்கு யூத வெறியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, சிறு தாக்குதல்கள் தவிர, பலஸ்தீன மக்களை அழிப்பதற்கு யூதர்கள் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அறுபதையும் விட அதிகமாகும். அதைத் தொடர்ந்து 1967 ல் எகிப்தின் கோலான் குன்றுப் பகுதியையும், அதன் பிறகு லெபனானின் தென் திசையில் அமைந்துள்ள காசாப் பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் யூதர்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டனர்.


 பக்கத்து நாடுகளின் பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை கைவிட்டுவிடுவதாலும், நிறந்தர எல்லைகள் இல்லாத உலகின் ஒரே நாடாக யூதர்களின் இப்பேய் ராஜ்ஜியமே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த வெறியாட்டங்களுக்குத் தலைமை தந்தக் கொலைகாரர்களை ஒருவர் பின் ஒருவராக தமது பிரதமர்களாக தேர்நதெடுப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக திகழ்வதிலும் யூதர்கள் தன்னிகரற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
நவீன யுகத்தில் பல நாடுகள் உலக சட்டங்கள், உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் எனப் பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, பன்பாலும் மனித நேய விழுமியங்காளலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ள போதிலும், யூதர்கள் இச்சகல உடன்பாடுகளையும் பொதுவான சட்டங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்.


ஒரு யூதனின் விரலில் உள்ள நகத்துண்டிற்கு ஒரு மில்லியன் அரபிகள் கூட சமமாக மாட்டார்கள் என ஒரு யூதப் பாதிரி பகிரங்கமாக இணவாதத்தை வெளிப்படுத்திவிட்டு, அதற்காக எந்த விமரிசனத்திற்கும் ஆளாகல் இருக்கும் சூழல் உள்ள ஒரே பிரதேசம் உலகில் இந்த இஸ்ரேல் மாத்திரமேயாகும். சியோனிஸம் எனப்படுவது ஒரு பயங்கரமான இணவாதம் என ஐநா அமைப்பே பிரகடனப்படுத்தி இருந்தும், யூதர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலகில் உள்ள நாடுகளில் இது வரை மிக அதிக எண்ணிக்கையிலான ஐநா எச்சரிக்கைகளை பெற்றுள்ள நாடும் இஸ்ரேலேயாகும். ஆனால் ஐநாவின் பின்னணியில் இருந்த வண்ணம் அதை ஆட்டிப்படைப்பதே இந்த யூதர்கள் தான் என்பதால் இதை எல்லாம் பார்த்து இஸ்ரேல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் அவ்வமைப்பின் மீது பல உலக நாடுகள் நம்பிக்கை இழந்து வருகின்றன. தொடரும் இந்த அநியாயங்களை பார்த்தும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத உலக நாடுகளில் வாழும் நல்லோர், அதிர்ச்சியால் உரைந்து போனவர்களாக விக்கித்து நிற்கின்றனர்.
இந்த அநியாயங்களை அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவின் நட்பை இழந்து விட்டால், பிழைப்பு நடத்த முடியாது என நினைக்கும் நாடுகள், இவைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.


இருந்த போதிலும், மெதுவாக வந்தாலும் இறைவனின் நீதி ஒரு நாள் வந்தே தீரும் என்ற மாறாத நியதியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, பலஸ்தீன மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, சோர்வடையாமல் அறை நூற்றாண்டு காலத்ததையும் விட அதிகக் காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆம். நிச்சயம் தர்மம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.