Showing posts with label saudi arabia. Show all posts
Showing posts with label saudi arabia. Show all posts

Wednesday, October 14, 2015

Putin at Moscow’s Grand Mosque opening ceremony



Mosques have become battlegrounds in more places than one can imagine. In the West, regimes are refusing permission for Muslims to open new mosques. In the US, there were planned protests against mosques in many cities last weekend. They fizzled out when few people showed up. In Russia, meanwhile, a grand mosque was opened in Moscow by Russian President Vladimir Putin. Now that is an interesting turnaround.
September 23, 2015. President Vladimir Putin, front third right, during the visit to the Moscow Cathedral Mosque after the ceremonial opening. Third left: Ravil Gainutdin, Chairman of the Russian Mufti Council. Second right: President of Turkey Recep Tayyip Erdogan.

Moscow, Crescent-online

While western governments have imposed restrictions on the opening of mosques in their countries, Russia is forging ahead welcoming them.

This is quite a turnaround in the attitude of various regimes. For decades, the West painted Russia as a “totalitarian state” that did not allow religious freedoms. The West touted its plurality and openness. No more. Muslims are under attack everywhere.

Last month, Russian President Vladimir Putin opened one of Europe’s biggest mosques in Moscow, warning against the lure of extremists.

Also present were Turkish President Recep Tayyip Erdogan and Palestinian President Mahmoud Abbas as the 20,000-square metre mosque was opened in the Russian capital.

“This mosque will become an extremely important spiritual centre for Muslims in Moscow and the whole Russia,” Putin said in a speech that was broadcast on television.

“It will be a source for education, spreading humanist ideas and the true values of Islam.”

Putin lashed out at extremist groups for their “attempts to cynically exploit religious feelings for political ends,” referring to the takfiri terrorists rampaging through Syria and Iraq.

“We see what is happening in the Middle East where terrorists from the so-called ISIL group are compromising a great world religion, compromising Islam, in order to sow hate,” he said.


The takfiri terrorists are backed by the US, Israel, Saudi Arabia, Qatar and Turkey. Last month, Russia launched air strikes against these takfiri terrorists who are now on the run.

The mosque has turquoise-domes reviving Central Asian architecture that has made its mark in places like Samarqand and Bukhara. The mosque can accommodate more than 10,000 worshippers built at a cost of $170 million.

Taking more than a decade to complete it will help to serve Russia’s estimated 20 million Muslims. These are local Muslims as well as those that have come from places like Chechnya and Azerbaijan and are working in Moscow.

Thursday, July 11, 2013

உண்மையான எகிப்திய வசந்தம்.



-கலாநிதி எலியஸ் அக்லே

ஜூன் 28 வெள்ளிக் கிழமை ஆரம்பமான, மில்லியன் கணக்கான எகிப்திய பிரஜைகளை (37 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது) உள்ளடக்கிய அதிபர் முஹம்மத் முர்ஸிக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரும் பிரவாகமெடுத்து பிரதான வீதிகளையும் எகிப்திய மாகாணங்களின் முக்கிய நகர சதுக்கங்களையும் நிறைத்து நாட்டையே ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் முர்ஸி பதவி விலக வேண்டும் எனவும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்து ஆவண செய்ய முர்ஸிக்கு 48 மணி நேரக் காலக்கெடுவை இராணுவத்தினர் விதித்தனர். முர்ஸி அதனை உதாசீனம் செய்ததால் அவர் உடனடியாக இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதோடு புதிய அரசியல் யாப்பும் ரத்து செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் நிறுவியுள்ளது.


இந்தப் புரட்சி 2011ல் முன்னைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்க்க வைத்த புரட்சியைவிட வித்தியாசமானது. சீ.ஐ.ஏ. அணுசரனையுடனான 'சுதந்திர இல்ல நிறுவனம்'(Freedom House Organization) எனப்படும் நிறுவனத்தினூடாகவே 2011 புரட்சி திட்டமிடப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதன் 43 உறுப்பினர் அன்று எகிப்திய பொலீஸாரினால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 17 மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக அவர்கள் சாதுர்யமாக இஸ்ரவேலுக்கு நாடுகடத்தப்பட்டு பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்தனர். என்றாலும் 2013 ஜனவரி 4ம் திகதி எகிப்திய நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. கடந்த காலங்களில் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பல லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை இவ்வாறு பதவி கவிழ்த்துள்ளமை கவனிக்கத்தக்கது. எகிப்தில் ஜனாதிபதி முபாரக் முதுமையடைந்து நோயாளியாக இருந்ததோடு அவரது அராஜகக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியும் ஆரம்பமானது. அதேநேரம் அவரது மகன் கமலை அவ்விடத்துக்கு பதிலீடு செய்வதும் கடினமானதொன்றாக இருந்தது.
தற்போதைய புரட்சி பல கோணங்களில் மிக வித்தியாசமானது. இது விரக்தியடைந்த இளம் எகிப்தியர்களினால் திட்டமிடப்பட்டு, ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டது. முதலாவது புரட்சியில் தடைகள் உடைத்தெரியப்பட்டபோது மக்கள் அஞ்சினர். முதலாவது புரட்சியில் பங்கெடுக்க அஞ்சிய இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட மில்லியன் கணக்கான எகிப்தியர் போராளிகளுடன் கைகோர்த்தனர். முதலாவது புரட்சியிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பாடம் கற்ற முன்னணி இளைஞர்கள் தற்போது போராளிகளுக்கான முறையான திட்டங்களுடனும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றைக் கவனத்திலெடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கான தூரநோக்குடனும் களமிறங்கினர். இதுவே அவர்களின் உண்மையான எகிப்திய வசந்தமாகும்.


இந்தப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கியது இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட தமர்ரத் (கிளர்ச்சி) இயக்கமாகும். அவர்கள் முர்ஸியின் வெளியேற்றத்தை நாடி 25 மில்லியன் கையெழுத்தை சேகரித்தனர். முர்ஸி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடத்தின்பின் அதாவது, ஜூன் 3ம் திகதி தேசிய மீட்பு முன்னணி என்ற கட்சியோடு இணைந்து வீதியிலிறங்கி உடனடியான ஜனாதிபதி தேர்தலை முன்வைத்துப் போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு எகிப்திய சமூக அமைப்புகள் வீதிகளிலிறங்கினர். இதில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகரவாசிகள், அலுவலகப் பணியாளர், தொழிற்சங்கங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில்சார் ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள், இல்லத்தரசிகள், சிவில் நிறுவனங்களின் உறுப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பொலிஸ் படை,இராணுவத்தினர் மற்றும் பல்வேறு கூட்டத்தினர் இதில் பங்கேற்றனர். முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் தோளோடு தோள் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல் யாப்பு சபை உறுப்பினர் மற்றும் அமைச்சர்களும் தமது ரஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். மொத்தம் 13,000 நீதிபதிகள் அரசியல் யாப்பை மீறியமைக்காக முர்ஸிமீது வழக்குத் தொடர்ந்தனர். 'நாம் பொது மக்களின் பாதுகாவலரேயன்றி அரசாங்கத்தின் பாதுகாவலரல்ல' எனக் கூறி பொலிஸ் படை அவருக்கெதிராகக் கிளம்பியது. இராணுவமும் தனது முதற்பணி பொது மக்களைப் பாதுகாப்பதே எனக் கூறி மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கும்படி முர்ஸிக்கு 48 மணிநேரக் காலக்கெடு விதித்தனர். முர்ஸி தமது மக்களின் குரலுக்கு மதிப்பளிக்வில்லை.முஹம்மது முர்ஸி 1948, 1954, 1965 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர். எகிப்தில் மிக மோசமாகப் பெருகிவரும் மேற்கத்திய செல்வாக்கையும் ஆக்கிரமிப்பையும் நிராகரித்து அடிப்படை இஸ்லாமிய போதனைகளை எழுச்சியடையச் செய்யும் நோக்கில் 1928ல் ஹஸன் அல் பன்னா அவர்களால் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.

 இவ்வமைப்பு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதப் போராட்டங்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் அன்று எகிப்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 1952ல் கமால் அப்துல் நஸார் தலைமையிலான முடியாட்சிக்கு எதிரான புரட்சியையும் ஆதரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி தமது பாணியிலான ஒரு போலி ஷரீஆ சட்டத்தினடிப்படையிலான ஆட்சியொன்றை அமைக்கத்துடித்த தீவிரவாதிகள் சிலரால் இந்த இயக்கம், கைப்பற்றப்பட்டது. எனவே, சமயப்பற்றற்ற சோவியத் யூனியனுடன் நஸாரின் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதை சாக்காகக் காட்டி நஸாரைஎதிர்க்கத் தலைப்பட்டனர்.


 அவர்கள் நஸாரைக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே 1954ல் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டு பலர் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனாலும் 1981ல் இஸ்ரவேல் சென்று இஸ்ரவேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எகிப்திய அதிபர்அன்வர் சதாத்தைப் படுகொலை செய்வதில் வெற்றி கண்டது. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹொஸ்னி முபாரக் மிகக் கொடூரமான முறையில் சகோதரத்துவ அமைப்பை அடக்கி ஒடுக்கி அனேகரைச் சிறையில் தள்ளியதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார். 2011 ஜனவரி 30ல் கிளர்ச்சிக் கும்பல் ஒன்று வாடி அல் நெட்ரோன் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுவிக்கும்வரை முஹம்மது முர்ஸியும் அவரது சகாக்கள் பலரும் சிறையிலேயே இருந்தனர். 2011 புரட்சிக்குப் பின் சகோதரத்துவ அமைப்புக்கு முர்ஸியைத் தலைவராகக்கொண்ட 'விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி'(Freedom and Justice Party)என்ற அரசியல் கட்சியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.


2011 புரட்சியின் பின் ஏற்பட்ட ஒரு கலவரமான நிலையில், அரசியல் யாப்பு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக முறைமையற்ற ஒரு சூழலில் 2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முஹம்மது முர்ஸியுடன் முபாரக்குடைய ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்தவரும் முன்னைநாள் விமானப் படைத் தளபதியுமான அஹமத் ஷபீக் போட்டியிட்டார். திருப்தியற்ற இரண்டு சுற்று வாக்கெடுப்பின் பின் மிகவும் குறைந்த 2மூ பெரும்பான்மையுடனும் இராணுவ அதிகார சபையின் உதவியுடனும் முர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரவேலுடனான உடன்படிக்கைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்ற நிபந்தனையின்பேரில் சீ.ஐ.ஏ நிதியுதவியுடன் விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி (FJP)வாக்குகளை வாங்கியதாக வாந்திகள் உலாவிய நிலையில் முர்ஸி தனது வெற்றிப் பேருரையின்போது எகிப்து தனது எல்லா சர்வதேச உடன்படிக்கைகளையும் மதித்து நடக்கும் என உறுதி கூறினார். இதில் இஸ்ரவேலுடனான உடனபடிக்கைகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே, சிவில் அரசியல் முறைமையை மீள் அறிமுகம் செய்து தமது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வன்முறை வடிவத்தை சீரமைத்துக்கொள்வதற்கு முர்ஸிக்கு அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் அவராலேயே மண்ணாக்கப்பட்டது. ஐந்து வருடங்களாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு பொறியியலாளரான முர்ஸி ஒரு ஜனாதிபதிக்கு அவசியமான அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் புதிய அரசியல் அரங்கத்தை அவர் தவறாகவே விளங்கியிருந்தார்;. சகோதரத்துவ அமைப்பு மீதான அவரது குருட்டுத்தனமான அபிமானம் அவரது அரசியல் நோக்கை வரையரைக்குட்படுத்தியது. அதாவது, நாட்டு நலனைவிட அவரது இயக்கத்தின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார்.

முர்ஸி 2012 நவம்பரில் எவ்வித சட்ட ஞானமுமின்றி,  வரையரையற்ற சட்டவாக்க அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து, டிஸம்பரில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அதனை மக்கள்மீது திணிக்க முற்பட்டார். முக்கிய அரசாங்கப் பதவிகளுக்காகத் தமது சகோதரத்துவ சகாக்களை நியமிக்கும் வரை அவர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தட்டிக்கழித்ததோடு பாராளுமன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையும் அரசாங்கத்தையும் மதப்பிரிவினைவாதப் போக்கில் மீளக்கட்டமைக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டார்.


முர்ஸி தனது சகோதரத்துவ அமைப்பின் மீது அதிகாரத்தைக் குவித்ததன் காரணமாக எகிப்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பிரஜைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலிருந்து அவர் தூரமாக்கப்பட்டிருந்தார்.இது பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது. லிபியாவின் 2 பில்லியன் அமெரிக்க டாலர், சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் ஒவ்வொரு பில்லியன் அமெரிக்க டாலர், 3.5மூ வட்டியுடனான எகிப்திய திரைசேரி உண்டியல் மீதான 3 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உட்பட கட்டாரின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எதனாலும் எகிப்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. முர்ஸி நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நிலவிய தொடர்ச்சியான பவுனின் மதிப்பிறக்கம், வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு குறைவடைந்தமை,உல்லாசப் பயணத்துறை வருமானம் சுருங்கியமை என்பன எகிப்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வரிச் சலுகைகள், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குப் பதிலாக எகிப்தில் தேசியக் கடன் சுமையையே அதிகரிக்கச் செய்தது. இறுதியில் முர்ஸியின் சகோதரத்துவ அமைப்பால் 'தெய்வ குற்றம்' என வர்ணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்(IMF) கடனுக்குக் கையேந்தும் நிலையே அவருக்கு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் பொருளாதாரப் பிரச்சினை மக்களை வெகுவாக வாட்டி வதைத்தது. அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்தால் மக்கள் நீண்ட கியூ வரிசைகளில்நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதையுமே பெறாது வெறுங்கையோடு வீடு திரும்பினர். எகிப்து கோதுமையை இறக்குமதி செய்யும் பிரதான நாடாக மாறியுள்ளது. எகிப்து தொடர்ந்தும் உலக சந்தையைவிட மிகக் குறைந்த விலையில் இஸ்ரவேலுக்கான வாயு விற்பனையை மேற்கொள்வதால் உள்ளுரில் சமையல் வாயுவுக்கான தட்டுப்பாடு பெருகி வருகின்றது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எவ்வித கல்வித்தகைமையும் பாராது உத்தியோகங்கள் வழங்கப்படுவதால் ஆயிரக் கணக்கான உயர்கல்வித் தகைமை பெற்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உத்தியோகமின்றி அலைந்து திரிகின்றனர். தனது தேர்தல் பரப்புரையின்போது முர்ஸி வாக்களித்த எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதோடு எவ்வித பொருளாதார அல்லது சீர்திருத்த திட்டங்களோ முன்னெடுக்கப்படவுமில்லை.
முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் மதப்பிரிவினைவாதமே மேலோங்கிக் காணப்பட்டது. தேவாலயங்களையும் வீடுகளையும் கொளுத்துவது உட்பட கொப்டிக் கிருஸ்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதோடு மெஸ்பெரோ படுகொலை பேன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவர்களது சட்டரீதியான போராட்டங்களும் தாக்குதல்களுக்குள்ளானது. மேலும் திரையிடாத முஸ்லிம் பெண்களும் அடிக்கடி முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

முர்ஸி தனது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியையே தழுவியுள்ளார். எகிப்திய மக்கள் பலஸ்தீனப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி, இஸ்ரவேலர்களைத் தமது பிராந்திய எதிரிகளாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் இஸ்ரவேலுடனான அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் இஸ்ரவேல் தூதரகத்தை மூடிவிடுமாறும் இஸ்ரவேலுக்கான வாயு ஏற்றுமதியை நிறுத்துமாறும் எல்லாவற்றுக்கும் மேலாக காஸாவுடனான ரபா எல்லையைத் திறந்து தமது ரத்த உறவுகளுக்கு எதிரான இஸ்ரவேலிய இராணுவ, பொருளாதார முற்றுகையைத் தளர்த்த உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் முர்ஸி இதற்கு செவிசாய்க்காது அதற்கு முற்றிலும் மாறான கொள்கைகளையே கடைபிடித்து வந்தார். சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா பலஸ்தீனப் பிரச்சினையை ஒரு பிரதான விவகாரமாக முன்னெடுத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தோர், அதனை ஓரம்கட்டி வெறும் கோஷமாக மட்டும் அதனை மாற்றிவிட்டனர். இஸ்ரவேலிய முற்றுகையை பராமரிப்பதன் மூலம் காஸா மீதான அழுத்தத்தை முர்ஸி அதிகரித்தார். எல்லாவற்றையும்விட அவரது மோசமான செயல் என்னவென்றால் 1.5 மில்லியன் பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான காஸா சுரங்க வழிப்பாதைகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்கியமையாகும்.




 அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலிருந்து கசிந்துள்ள கடிதங்களின்படி முர்ஸி முபாரக்கைவிட மோசமானவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எகிப்திய எல்லையூடாக காஸாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் போன்றவற்றைத் தடைசெய்தல், சினாயில் இஸ்ரவேலிய பாதுகாப்பை அதிகரித்தல், காஸாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இஸ்ரவேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவி செய்தல், சுயஸ் கால்வாய் மூலமாக அமெரிக்க ஊடுகடத்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்காக எகிப்திய வான்வெளியைத் திறந்துவிடல் போன்றவை அமெரிக்க இராணுவ நிதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக முர்ஸி செய்து வரும் துரோகங்களாகும்.
2010 செப்டமபரில் இஸ்ரவேலர்களை இரத்தக் காட்டேரிகள், போர் வெறியர்கள் என்றும் மனிதக் குரங்குகளினதும் பன்றிகளினம் சந்தியினர் என்றும் சாடிய முர்ஸி, 2012 அக்டோபரில் இஸ்ரவேல் ஜனாதிபதி சீமன் பெரஸுக்கு எமுதிய கடிதத்தில்,'எனது அன்புக்குரிய மாபெரும் நண்பா,' என விளித்து 'எமது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் மகிழ்ச்சிகரமான நட்புறவைப் பலப்படுத்திப் பராமரிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடு எகிப்திய மக்களின் கவனத்திலிருந்து ஒருபோதும் தப்பிவிடாது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸாவையும் ஜெரூஸலமையும் விடுவிப்பதற்காக ஜிஹாத் செய்யவேண்டும் எனக் கூறிவரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, கடந்த மாதம் முர்ஸியும் சில தீவிரவாத சலபி அரசியல் மதவாதிகளும் இணைந்து தமது ஜிஹாதை இன்னொரு முஸ்லிம் அரபு நாடான சிரியா மீது திருப்பிவிட்டுள்ளனர். இஸ்ரவேலிய எதிரிகளுடனான நட்புறவைத் துண்டித்து கெய்ரோவில் அவர்களது தூதரகத்தை மூடி பலஸ்தீன விடுதலைக்கு அரைகூவல் விடுவதை விட்டு முர்ஸி தற்போது சிரியாவுடனான நட்புறவைத் துண்டித்து அவர்களது தூதரகத்தை மூடி அவர்களுடன் ஜிஹாத் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். பலஸ்தீனுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிரான எண்ணற்ற குற்றச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதை விடுத்து சிரியாவுக்கு மேலாக விமானத் தடை வலையமொன்றை ஏற்படுத்த வேண்டுமென முர்ஸி ஐ.நா.வைக் கேட்டுள்ளார்.

முர்ஸியின் சாயம்வெளுத்துவிட்டதுளூ முபாரக்கைப் போன்று இவரும் ஒரு அமெரிக்க-ஸியோனிஸ அடிவருடியே! இவரது ஒரு வருட ஆட்சி காலத்தில் எகிப்திய மக்கள், பலமுறை வீதிகளில் இறங்கி சீர்திருத்தங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் எச்சரிக்கையினையும் முர்ஸிக்கு வழங்கினர். அவற்றையெல்லாம் முர்ஸி உதாசீனம் செய்தமையால் இளம் எகிப்தியர் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவையும் புதிய தேர்தலையும் வேண்டி மீண்டும் விதிகளில் இறங்கினர். இதன் மூலம் முர்ஸிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தோல்வியும் மக்களுக்கு வெற்றியும் கிடைத்தது.
மக்கள் முர்ஸிக்கு நாட்டை வழிநடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரத்தைக் கையளித்தனர். ஆனால் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்தமையால் மக்கள் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றனர். இதுவே மக்கள் விருப்புக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத்தின் உயர் நிலையாகும்.
தமிழில்: றஹ்மத் அலி

Thursday, June 6, 2013

சிரிய மோதல்: வன்முறைகளைத் தூண்டும் கர்ளாவி






-கலாநிதி சந்திரா முஸாபிர்

2013 ஜூலை முதலாம் திகதி பிரபல மார்க்க அறிஞர் யூசுப் கர்ளாவி 
வெளி யிட்ட  சில கருத்துகளைக் கேட்டுவன்முறைகளையும் ரத்தம் சிந்தலையும் வெறுத்தொதுக்கும் எந்த ஒரு மனிதனும் 
அதிர்ச்சியடையாமல் இருந்திருக்க முடியாதுதோஹாவில் 
நடைபெற்ற ஒரு கூட்டத்தில்
சிரியா சென்று பஸர் அல் அஸாத் அரசாங்கத்துக்கும் அதன் ஆதரவாளர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் என்பவற்றுக்கும் 
எதிராகப் போராடுமாறு அப்பிராந்தியத்திலுள்ள சுன்னி முஸ்லிம்களை 
அவர் உசுப்பிவிட்டுள்ளார்அதனை ஒரு 'ஜிஹாத்என்றும் அவர் வர்ணித்துள்ளார்ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் சுன்னிகளை விழுங்க பசிவெறியுடன் காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.        ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையே எந்தவித பொதுத் 
தன்மைகளும் கிடையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



சிரிய அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே,
 கேந்திர எல்லைக் கிராமமான கஸைரைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நடைபெறும் உக்கிரமான போருக்கு மத்தியிலேயே கர்ளாவி மேற்கண்ட கருத்து வெளியாகி உள்ளதுலெபனானைத் தளமாகக்கொண்ட ஹிஸ்புல்லாஹ் அரசாங்கப் படைகளுக்கு உதவி வருகின்றது
கிளர்ச்சியாளர் பக்கமாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் போராளிகள் போரிடுகின்றனர்.
ஷியாக்களுடன் போரிடுமாறு சுன்னிகளைத் தூண்டுவதானது
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்தக் 
கொடூர  யுத்தத்தின் தீவிரத்தன்மையை அதிகரிக்கவே  வழிகோலும்
மார்க்க அறிஞர்கள் தமது ஒழுக்கரீதியிலான அணுகுமுறையைஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் பிரயோகிக்க வேண்டும்இரு சாராரையும் உடனடியாக ஒரு யுத்த நிறுத்துக்கு 
வருமாறு வினயமாக வேண்டிக்கொள்வதே அவர்கள் மேற்கொள்ள
வேண்டிய பணியாகும்.

மேலும்சிரியாவில் உள்ள முரண்பாடு வெறும் ஷியா-சுன்னி மோதல் 
அல்ல என்பதை முதலில் கர்ளாவி உணர வேண்டும்பிராந்தியத்தில் மேற்கத்திய அடிவருடிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டி மற்றும் இஸ்ரவேல் போன்ற பெரும்  அரசியல் மேலாதிக்கத்தில் அது 
வேறூன்றி உள்ளது. 2011 மார்ச்சில் அஸாதின் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான அமைதிப் போராட்டமாகவே அது ஆரம்பமானது
அஸாத் அதற்கெதிராகக் கடும் போக்கைக் கடைபிடித்தார்இரண்டொரு வாரங்களில்பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்துக்கும் 
கட்டுப்பாட்டுக்கும் சவாலாக இருக்கும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்பவற்றுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருக்கும் அஸாத் 
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்திருக்கும் மேற்கத்திய 
மற்றும் இஸ்வேலிய அதிகார மையத்தின் ஆணைகளை சிரமேற்கொண்ட சில அண்டை நாட்டுக் குழுக்களும் தனிப்பட்ட சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பகுதியினருக்கு ஆயுதங்கள் வினியோகிக்க ஆரம்பித்தனர்உண்மையிலேயேஈரான்ஹிஸ்புல்லாஹ் மற்றும் 
அஸாத் அரசாங்கம் என்பனவே வட ஆபிரிக்கா மற்றும் மேற்காசியா 
போன்ற பிரதேசங்களில் தமது மேலாதிக்கத்தை நீடித்துக்கொள்ளஅமெரிக்காபிரிட்டன்பிரான்ஸ் மற்றும் இஸ்ரவேல் போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகத் துணிந்து 
நின்று எதிர்ப்பைக் காட்டும் அமைப்பு ரீதியிலான ஒரே கூட்டாகும். 2000த்திலும் 2006லும் மிகக் கொடூரமான முறையில் லெபனானில் தமது கட்டுப்பாட்டை நிறுவ இஸ்ரவேல் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கி அவர்ளைத் துரத்தியடித்தது இந்த ஹிஸ்புல்லாஹ்தான் என்பது நினைவு கூரத்தக்கதுஹிஸ்புல்லாஹ் (இறைவனின் கட்சிஎன்ற இக்கட்சியையே
'ஷைத்தானின் கட்சிஎன தோஹா கூட்டத்தில் கர்ளாவி வர்ணித்துள்ளார்.
ஏனெனில்இந்த எதிர்ப்பு சக்திகள் ஷீயாவாக இருப்பதாலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள கட்டார்
சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற மேற்கத்திய அடிவருடிகள் சுன்னிகளாக இருப்பதாலும்அவர்களின் போராட்டத்தை
பிராந்தியத்தில் ஷீயா ஆதிக்கத்துக்கான முயற்சி என நிறுவ அரும்பாடுபடுகின்றன.


இதன் விளைவாகமேற்கத்திய மேலாதிக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்கள்மேற்காசியவட ஆபிரிக்க நாடுகளுக்குள்ளே 
தலைகாட்டும் போராட்டங்கள் மற்றும் சிரியாவின் கோலான் 
குன்றுகள் மீதான இஸ்ரவேலின் தொடர்ந்து செல்லும் ஆதிக்கம் 
போன்றவை அவர்கள் அரிதாகக் கண்டுபிடித்துள்ள ஷீயா-சுன்னி பிரச்சினைகள் மூலம் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.  
ஷீயா-சுன்னி வேறுபாடுகள் நீண்ட காலம் நிலவி வந்த ஒன்றாயினும்கூட மேற்கத்திய மேலாதிக்கத்துக்கும் இஸ்ரவேலிய நலன்களுக்கும் சவாலாக எழுந்த 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்தே ஷீயாக்களையும் சுன்னிகளையும் பிரிப்பதற்காகஇந்த வேறுபாடுகள்குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவினால்
பூதாகரமாக்கப்பட்டு பெருமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கர்ளாவியின் கருத்தை நாம் இந்தக் கோணத்தில்தான் நோக்க
 வேண்டும்ஷீயா சுன்னிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை 
எட்டுவதில்கர்ளாவிஒரு அணுகூலமான கருத்தைக் கொண்டிருந்த
 ஒரு காலமும் இருந்ததுஆனால்சில மேற்கு நாடுகள் அரபு வசந்தத்தின்போதுமேற்காசிய வட ஆபிரிக்க விவகாரங்களில் 
மூக்கை நுழைத்தபோதுகர்ளவி  அதனை நியாயப்படுத்தினார்
லிபியா மீதான நேட்டோ விமானத் தாக்கதலை அங்கீகரித்த ஆரம்பப் பிரமுகர்களில் கர்ளாவி முதன்மையானவராக இருந்தார்
இதற்குமேலாககடந்த வருட நடுப்பகுதியில், 'இன்று இறைதூதர் 
திரும்பி வந்தால் அவர் நேட்டோவுக்கே ஆதரவளிப்பார்என்றும் 
கருத்து தெரிவித்தார்இதன்காரணமாகஇவர் சில அரபு 
விமரிசகர்களால் 'நேட்டோ முப்திஎன்று கேலியாக அழைக்கப்பட்டார்.

மத அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து அதன் மூலமாக 
மேற்கத்திய மேலாதிக்கத்தை சட்டபூர்வமாக்கிய கர்ளாவியின்
 செயலேஅவரது நிலைப்பாட்டில் மக்கள் நம்பிக்கையிழக்க 
ஏதுவாயிற்றுஇதைவிட மோசமான விடயம் என்னவென்றால்
உலகளாவிய தீய சக்திகள் மற்றும் பிராந்திய அடிவருடிகள் 
என்போரின் நலன்களை நீடிக்கும் நோக்குடன்பாரியளவிலான 
அழிவுக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும்முஸ்லிம்களும் முஸ்லிம்களும் இடையேயான நேரடி மோதலை ஏற்படுத்தும் பிரிவினைவாதத்துக்குத் தூபமிட்டமையாகும்இதுமதபோதகரின்
அங்கியை அணிந்த ஒருவர் தமது மதத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்தமைக்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.

*கலாநிதி சந்திரா முஸாபிர் மலேஷியதார்மீக உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் தலைவராவார்.

 தமிழில்றஹ்மத் அலி   

Friday, November 2, 2012

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!



 - செல்வம்.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா குறிவைக்கப்பட்டுள்ளது. வடக்கே துருக்கியையும், கிழக்கே ஈராக்கையும், மேற்கே இஸ்ரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹாபிஸ் அல் அஸாத் சிரியாவின் அதிபரானார். அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார்.
பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது. பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது. மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெறும் துருக்கி, மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சி, ஜிஹாதிகள் உள்ளிட்ட ஒரு கும்பல்தான் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த கும்பல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்கும் பொம்மையாட்சியொன்றை நிறுவ வேண்டும் என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு வேறு நோக்கமும் கிடையாது.
சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் உள்ள அரசு, ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்தே அந்நாட்டினை ஆதரித்து வருவதோடு, ஈரானுடன் நெருக்கமான அரசியல், இராணுவ உறவுகளைப் பேணி வருகிறது. இன்னொருபுறம், இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும் பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸ் குழுவையும் ஆதரித்து வருகிறது. சிரியாவின் பாரம்பரியப் பகுதியான கோலான் மலைக் குன்றின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், இஸ்ரேலுடன் சமாதானமாகச் செல்லுவதற்கும் அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.
இந்தக் காரணங்களால்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றன. மேலும், மேற்காசியாவில் ஈரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகின்றன. சிரியாவும் ஈரானும் வீழ்ந்தால், எண்ணெய் வளம் நிறைந்த மேற்காசியா தொடங்கி மத்திய ஆசியா வரை தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, அப்பகுதியிலிருந்து ரஷ்யா சீனாவின் செல்வாக்கையும் அப்புறப்படுத்திவிடலாம் என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
அமெரிக்கா, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல திரைமறைவு வேலைகளைச் செய்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா  தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தத் தொடங்கிய சமயத்திலேயே, அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சிரியாவைத் தீய நாடுகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் இலக்குகளுள் ஒன்றாக வைத்தார். ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தி வந்த சமயத்தில் நேடோ படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் வெஸ்லி கிளார்க், 'ஈராக் போர் முடிந்த பிறகு அமெரிக்கா ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் ஏழு நாடுகளுள் சிரியாவும் ஒன்று' எனக் குறிப்பிட்டார். '2009ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சிரியாவின் எதிர்தரப்பிற்கு உளவு பார்க்கும் தொலைதொடர்புச் சாதனங்களைக் கொடுத்ததை' விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வீசுவதாகச் சொல்லப்படும் 'அரபு வசந்தம்' அமெரிக்காவிற்கு சிரியாவில் நேரடியாகத் தலையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிரியாவின் டேரா பகுதியில் அதிபர் பஷாருக்கு எதிராக ஒரு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தவுடனேயே, சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற ஜிஹாதிகள், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆயுதந்தாங்கிய எதிர்த்தரப்பு நடத்தும் தாக்குதல்கள் சிரியாவில் வசிக்கும் சிறுபான்மை மத, இன பிரிவினருக்கு எதிரான வன்முறையாகயும், அரசின் நிலைகளைத் தாக்கி விட்டு ஓடும் பயங்கரவாத நடவடிக்கையாகவும்தான் இருந்து வருகின்றன.
சிரிய அதிபரை எதிர்த்து இன்று ஆயுதத் தாக்குதல்களை நடத்தி வரும் கூட்டணியில் உள்ள குழுக்களிலேயே முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிதான் ஓரளவு பெரியதும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும். இது, சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் ஆதரவைப்  பெற்றுள்ள, அடிப்படைவாத அமைப்பாகும். இந்தக் கட்சியையும், அஸாத்துடன் நடந்த பதவி அதிகாரத்திற்கான போட்டியில் தோற்று நாட்டைவிட்டு ஓடிப்போய் துருக்கியிலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் ஒன்றிணைத்துதான் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் 'சிரியா தேசிய கவுன்சில்' என்ற பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியையும், 'சுதந்திர சிரிய இராணுவ'த்தையும் அமைத்துள்ளன.
அரபு வசந்தம் பற்றிய நூலொன்றை எழுதிவரும் மும்பையைச் சேர்ந்த அலியா அல்லானா என்ற பத்திரிகையாளர், 'சிரியா தேசிய கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கும் சிரிய மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவர்கள் அனைவரும் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் உட்கார்ந்துகொண்டு, தமது எஜமானர்கள் வீசியெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வதாக' அம்பலப்படுத்துகிறார் (தி ஹிந்து, 24.07.2012, பக்.9). மேலும், சுதந்திர சிரிய இராணுவம் அமெரிக்காவுக்கு நெருக்கமான அல் காய்தா பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகளையும் லிபியாவிலிருந்து கொண்டுவரப்படும் கூலிப்படையினரையும் கொண்டு கட்டப்பட்டிருப்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த டைம்ஸ் இதழின் நிருபர் ஜாஃப்ரி கேட்டல்மேனும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.
சிரியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அலெப்போவில் மட்டும் ஏறத்தாழ 12,000 சுதந்திர சிரிய இராணுவத்தினர் ஊடுருவியிருப்பதாகவும், இவர்களுள் சரிபாதிப்பேர் ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜிஹாதிகள் எனக் குறிப்பிடுகிறார், பிரேம் சங்கர் ஜா என்ற இந்தியப் பத்திரிகையாளர். (தி ஹிந்து, ஆக்.7, பக்.8)
அமெரிக்க, இஸ்ரேலின் கூலிப்படையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய இராணுவம், 'ஷியா பிரிவு அலாவி முஸ்லீம்களைக் கல்லறைக்கும் கிறித்தவர்களை பெய்ரூட்டுக்கும் அனுப்புவோம்' என வெளிப்படையாகவே மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இக்கூலிப்பட்டாளத்திற்கான பயிற்சியினை துருக்கி வழங்குகிறது. இதற்குத் தேவைப்படும் நிதியை சவூதி அரேபியாவும் கத்தாரும் வழங்குகின்றன. இவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை அமெரிக்கா கொடுக்கிறது. இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாகத்தான் கருதமுடியுமே தவிர, அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டமாகவோ, மக்கள் இயக்கமாகவோ கருதமுடியாது.
•••
மார்ச் 2011க்குப் பின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அஸாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பல்வேறு சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதையடுத்து, அதிபர் அஸாத், 'அவரச நிலைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, எதிர்க்கட்சிகளின் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது, புதிய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கி, அதனைப் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடுவது, புதிய அதிபர் தேர்தலை 2014 இல் நடத்துவது' உள்ளிட்டுப் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்ததோடு, அவற்றைச் செயல்படுத்தவும் முனைந்தார். மேலும், .நா.வின் முன்னாள் தலைவர் கோஃபி அன்னான் அளித்த அமைதி திட்டத்தின்படி 300 .நா. பார்வையாளர்கள் நாட்டு நடப்புகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர். அரபு லீக் கூட்டமைப்பு கோரியபடி, சிறிய நகரங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டது.
இந்த அரசியல் சீர்திருத்தங்களும் சலுகைகளும், 'தான் ஆட்சியில் தொடருவதற்கு அமெரிக்காவின் சம்மதத்தைப் பெற்றுத் தரும்' என எதிர்பார்த்தார், பஷார் அல் அஸாத். ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆட்சி மாற்றத்திற்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன. அது மட்டுமின்றி, கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் சதிகளிலும், சிரிய அதிபருக்குப் பல்வேறு முனைகளில் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கின.
அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும், முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும் சிரியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது. அரபு நாடுகளின் கூட்டமைப்பும் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என .நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை தீர்மானங்களைக் கொண்டு வந்தன. அதிபர் பஷார் அல் அஸாத்தை ஆதரிக்கும் சீனாவும், ரஷ்யாவும் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானங்களைத் தோற்கடித்தன. மூன்றாவது முறையாகவும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டவுடனேயே, 'நாங்கள் .நா.விற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவோம்' என அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய யூனியனும், துருக்கியும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை சிரியா மீது விதித்தன.
இந்த அரசியல் நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, 'சுதந்திர சிரிய இராணுவத்தினருக்கு அமெரிக்காவின் உளவு அமைப்புகள் பயிற்சி அளிக்கும்' என அமெரிக்க அரசு வெளிப்படையான உத்தரவை வெளியிட்டது. சிரியாவின் பிரதமர் உள்ளிட்டு, பல இராணுவ உயர் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டு, சிரிய அரசிலும் இராணுவத்திலும் பிளவை உண்டாக்கும் சதிகள் அரங்கேற்றப்பட்டன. ஹோம்ஸ் மற்றம் ஹெளலா நகரங்களில் பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்தது எந்தத்தரப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மேற்குலக ஊடகங்கள் அஸாத் அரசின் மீது பழியைப் போட்டு, இந்த மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. எனினும் அந்நகரங்களில் இப்படுகொலையை நடத்தியது சுதந்திர சிரிய இராணுவத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதும், கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் ஹெளலா படுகொலை நடத்தப்பட்டது என்பதும் பின்னர் அம்பலமானது.
சுதந்திர சிரிய இராணுவத்துக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்கள் மற்றும் ஜிஹாதிகள் நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, இதுவரை ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களுள் கணிசமான பேர் சிறுபான்மையினரான அலாவி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தானென்றும் கூறப்படுகிறது. சுதந்திர சிரிய இராணுவக் கும்பல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோம்ஸ் நகரிலிருந்து மட்டும் 50,000 கிறித்தவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இப்பொழுது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ, மிடன் நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. டமாஸ்கஸிலும், அலெப்போவிலும் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் அல் காய்தா அமைப்பின் ஒரு பிரிவான அல் நுஸ்ரா வெளிப்படையாகவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற பலவீனங்கள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்துவருகிறது. பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் மத இன மோதல்கள் நடந்ததில்லை என அரசியல் வல்லுனர்கள்; குறிப்பிடுகிறனர்;.
சிரியாவின் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப இராணுவத்தை ஒதுக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடேயே ஒத்த கருத்து ஏற்படாததால், ரஷ்யாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால், பிரித்தாளும் சூழ்ச்சியினையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் அல் அஸாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட முயன்று வருகின்றன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள். சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டால், அவர்கள் கூறுவதுபோல, அங்கு ஜனநாயகம் மலர்ந்துவிடப் போவதில்லை. மாறாக, மத இனரீதியாக நாடு துண்டாடப்படும். தனது மேலாதிக்க நலன்களுக்காக ஜிஹாதிகளை, முஸ்லீம் பயங்கரவாதிகளை அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் தயங்காது என்பதற்கு சிரியா இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது. பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.