Tuesday, June 9, 2015

எகிப்தின் செல்வாக்கும் புகழும் மிக்க இஸ்லாமிய கற்றறிவாளர் ஷெய்க் கஸ்ஸாலியுடன் நடத்திய பேட்டி.

 இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளையும் பகைமைகளையும் ஏற்படுத்த பல சக்திகள் இயங்குகின்றது. ஆனால் துரசிர்டவசமாக முஸ்லிம்கள் மத்தியில் விவேகமுள்ள ஒரு தலைமைத்துவம் இல்லாததின் காரணமாக இன்று முஸ்லிம் உலகம் அதி வேகமாக அதர பாதாளத்தை நோக்கி பயனிதுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் உம்மஹ்வின் மத்தியில் என்றுமே இல்லாத அளவு ஷீயா-சுன்னாஹ் வேற்றுமை இன்று புரையோடிப்போய்  இருக்கின்றது. யஹூதி நசார ஆதிக்க சக்திகளின் அடிமைகளாக இயங்கும் முஸ்லிம் மன்னர்கள் இந்தப்பிரிவினை வாத சக்திகளுக்கு துனை பொய் பல இலச்சக்கணக்கான முஸ்லிம்களை தினமும் கொன்றோளித்தும்  அகதிகளாக்கியும் வருகின்றனர். 

முஸ்லிம் உலகின் அறியாமையை போக்க அண்மையில் இறையடி சேர்ந்த பேரறிஞர் முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஒரு செவ்வியை,  முஸ்லிம்கல் மத்தியில் ஏதேனும் சிந்தனை தெளிவு ஏற்ப்படுத்த இது உதவுமென எதிர்பார்த்து உங்களுடன் பகிர்கின்றோம். 
ஷெய்க் அல் கஸ்ஸாலியுடன் ஒரு பேட்டி
எகிப்தின் செல்வாக்கும் புகழும் மிக்க இஸ்லாமிய கற்றறிவாளர் ஷெய்க் கஸ்ஸாலியுடன்  நடத்திய பேட்டி.
கே: பேரறிஜர் கஸ்ஸாலி அவர்களே! அண்மையில் தெஹ்ரானில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய சிந்தனை மகாநாட்டில் தாங்களும் பங்கு கொண்டீர்கள். அம்மகாநாடு பற்றி தங்களது மதிப்பீடு என்ன?

ப: பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா நிர்ரஹீம். அண்மையில் தெஹ்ரானில் நடைபெற்ற இஸ்லாமிய மகாநாட்டின் பொது பல்வேறுபட்ட பிரச்சினைகள் அளஷி ஆராயப்பட்டன. நானும் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்ப்பித்ததோடு ஏராளமான ஆய்வுகளுக்கும் செவி மடுத்தேன். மகாநாட்டில் எனது கவனத்தை ஈர்ந்த மிக முக்கிய அம்சம் என்னவெனில், மகாநாட்டில் உரை நிகழ்த்திய பொறுப்பு வாய்ந்தவர்கள், அனைவரும் அரசியல் நிர்வாக துறைகளில் பேரிடம் வகிப்பவர்கள் என்பதுவாகும். ஏனெனில் நிர்வாக, அரசியல் பீடங்களில் உயர் பதவி வகிக்கின்றவர்கள்; இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பதிளிருந்தும்; இஸ்லாமிய ஞானத்திளிருந்தும் தம்மை விலக்களித்து வைத்திருக்கின்ற; இஸ்லாத்தின் தூது பற்றி பேச்சில் ; இறங்குவதிலிருந்து தம்மை ஒதிக்கி வைத்து கொள்கின்ற இஸ்லாமிய உலகின் தற்போது பொதுவில் காணப்படுகின்ற நிலைமைக்கு இது முற்றிலும் முரணான ஒன்றாகும். அந்நிலைக்கு மாறாக, ஈரானில் பெரும் பெரும் பதவிகளை வகிப்பவர்கள் எல்லாம் இஸ்லாமிய தஹ்வாவில்  சிறப்புரை செய்தவர்கள் போன்று ஆதர்சங்களை குறிப்பிட்டு , அதற்குரிய பாதையை வாகுதுக்காட்டி இஸ்லாம் பற்றி உரை  நிகழ்த்தினார்கள். மார்க்கநெறிப் பயிற்சிக்கும் அரசியல் நடவடிக்கை கற்கும் இடையிலான இணைப்பு பாலமாக இருக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். இது தவிர்ந்த; இந்த விடயம் தவிர்ந்த ஏனைய எதுவுமே அங்கு இல்லாமல் இருந்தாலும் கூட; இது மட்டுமே பெருமைப்பட போதுமானதாகும்.
கே: ஈரானில் குழப்ப நிலை காணப்படுவதாக உலக அகம்பாவ சக்திகள் பிரசாரம் செய்து வருகின்றன. அத்தகைய ஏதும் குழப்பங்கள் இருப்பதை நீங்கள் அவதானித்தீர்களா?


ப: குழப்பங்களா? நிச்சயமாக இல்லை. ஈரான் இஸ்லாமிய புரட்சி பற்றி அமரிக்காவும் ரஷ்யாவும் அவ்வாறு சொல்வது ஆச்சரியமானாதல்ல. அவர்கள் அத்தோடு நின்று விடவும் மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பது வெறுமனே ஈரான் என்பதுக்காக அன்றி, அங்கு இஸ்லாமிய அரசு நிலை பெற்றிருப்பதனாலாகும். இறந்து போன ஷா;  ஜாஹிளிய்யதினதும், மஜூசிகளினதும் 'வஹி'(ஞானோதயம்) பெற்று ஆட்சி நடாத்திய காளை அவர்கள் தான் அவரது உதவியாளர்களாகவும் எவலாலர்களாகவும் கருமமாற்றினார்கள். ஷா நரகேதிய பின்னர் இஸ்லாமிய ஆட்சி நடாத்துபவர்கள் வந்ததோடு கிறிஸ்தவர்களினதும் நாஸ்திகதினதும் துவேச உணர்வுகள் செயர்ப்படலாயின. எனவே ஈரானின் இஸ்லாமிய அரசை அணைத்து வழிகளிலும் எதிர்க்க துவங்கினர். உண்மையில் போரிடுவது சத்தாமல்ல. அமரிக்காவும், ரஷ்யாவுமே புரட்சிக்கு எதிராக போராடுகின்றன.
  கே: ஈரான் இஸ்லாமிய புரட்சியில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு காணப்படுகிறது என்று சொல்ல முடியுமா?


ப: இங்கு பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி இஸ்லாத்துக்கு சிறப்பளின்கிறது. பெண்கள் வெறுமனே உணர்சிகளை தீர்துக்கொ ள்வாதற்காகப் படைக்கப்பட்டவள், அவள் வீட்டில் அடைபட்டே இருக்க வேண்டும், பரம்பரைகளை உருவாக்கி வளர்ப்பதிலோ பயிற்சி வழங்குவதிலோ அவர்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை  என்பன போன்ற வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய சமூகத்துக்கு நாசம் விளைவித்த வாதங்களை சுமந்திருந்த குருட்டுத்தனமானோரது கருத்துக்களை அப்புறப்படுதியிருக்கிறார்கள்.

இன்னொரு சக்தி இருக்கிறது. அது பெண்களை வீட்டிலிரிருந்து வெளியேற்றி வீதிக்கு அனுப்பியுள்ளது. "அதாவது ஆடையிலிருந்து அவளை வெளியேற்றினார்கள்"; "அவள் இப்பொழுது இயல்பூக்கங்களைத் தூண்டிவிடுகின்ற 'பித்னா'வாக மாறினாள், என்று சொல்வார்களே அந்த நிலைக்கு பெண்களை அது ஆக்கியது.

ஆனால், ஈரானில் கையாளப்பட்டுள்ள வழிமுறை இவ்விரு வழிமுறை யினரையும் விட மிக சிறந்த முறையில் பெண்களது கற்பையும் அவர்களது, மார்க்க, நாகரீக, ஆத்மீக,நடவடிக்கைகளையும் பேணுகிறது என்பதில் ஐயமில்லை. இது மிகவும் சிறந்தது.

பெண்களை வீட்டில் அடைத்து வைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்ற அதே வேளை வீதிக்கு துரத்துகின்றனர் இன்னொரு சாரார். இவர்கள் இரு சாராரும் இஸ்லாம் பற்றி அறியாதவர்கள். பெண்கள் விடயத்தில் இத்தகைய தேக்க நிலையையும், அதி தீவிரப் போக்கையும் நான் தனிப்பட்ட முறையில் எனது நூல்களிநூடாக எதிர்த்து வருகின்றேன்.
 மஸ்ஜிதுகள், கலைக்கூடங்களாகவும், பாசறைகளாகவும், ஜிஹாதின் தளங்களாகவும் மிளிர்ந்து ஆரம்ப காலத்திலிருந்த பெண்களை போன்று ஈரானியப் பெண்களும் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்களுக்கு உள்ள அத்தனை கடமைகளிலும் ஈரானியப் பெண்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர். '....பித்னா' வாக மாறாமல் நன்மையை ஏவி, தீமையை விலக்குவதில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதுவே போதுமானது.உண்மையில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி தொடர்ந்தும் நிலைத்திருப்பதில் அவளது பங்கு மகத்தானது.
  கே: இஸ்லாமிய ஐக்கியத்துக்கு முட்டுக்கட்டையாகவுள்ள காரணிகள் என்னவென்று கருதுகிறீர்கள்?

ப: இஸ்லாமிய உலகில் காணப்படும் தேசியவாத உணர்வு மிக முக்கிய காரணியாகும். நவீன ஐரோப்பிய வரலாற்றிலிருந்தே இவ்வுணர்வு எம்மிடம் வந்துள்ளது. ஆரம்பத்தில் முழு ஐரோப்பாவும் திருச்சபையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலாவது சிலுவை யுத்தம் நடைபெறும் போதிலெல்லாம் முழு ஐரோப்பாவும் ஒரே ராச்சியம் போன்றே காணப்பட்டது.இப்போதிருக்கின்ற நாடுகள் அனைத்தும் மாகாணங்களாகவோ அல்லது மானிலங்களாகவோ  தான் இருந்தன.  19ம் நூற்றாண்டில் இத்தாலிய அரசு உருவாகியது. தொடர்ந்து ஜெர்மனியும், பிரான்சும், ஸ்பெயினும், போர்துகல்லும், இங்கிலாந்தும் படிப்படியாக தோன்றின. முதலாம் உலக மகா யுத்தத்தை தொடர்ந்து யுகோஸ்லாவிய,செகொச்லவேகிய, போன்ற புது தேசங்களும் தோற்றம் பெற்றன. அதன் பிறகும் புதுப்புது தேசியங்கள் உருவாகின.

இஸ்லாமிய உம்மாஹ், பொதுவாக ஒன்றோடொன்று இணைந்தே அமைந்திருந்தது. தற்போது சிறு சிறு ஆட்சிகளாக பிரிந்து இஸ்லாமிய சமூகத்தை துண்டாடுகிறது. இத்தகைய சிறு அரசுகள் ஐரோப்பிய முறையை தழுவியதாகும்.

இந்தப்பழமை வாய்ந்த (இன) உணர்வுதான் புதுத் தோற்றம் பெற்றுள்ளது.

கே: முஸ்லிம்கள் ஐயிக்கியத்தை குலைப்பதில் சியோனிசதுக்கு பங்குண்டு என கருதுகிறீர்களா?


ப: இந்த பிரிவினைக்குப் பின்னணியில் சியோனிஸ்ட்டுகளும் நசாராக்களும் நாஸ்திகர்களும் நிச்சயமாக பங்கு வகிக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் இவர்களது பங்களிப்பு பகிரங்கமாகவும், இன்னும் சில வேளைகளில் மறைமுகமாகவும் காணப்படும், விசேடமாக இத்தகைய நடவடிக்கைகள் பற்றி முஸ்லிம் வரலாற்று ஆசியர்களும் ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய ஐக்கியத்தின் மீதும் பலத்த அடியாக இஸ்ரவேலை நிறுவிய உலக சிலுவை வாதம் அத்தோடு நின்று விடவில்லை. இஸ்லாமிய ஐக்கியத்தை  குலைப்பதற்காக காதியானிசம், பஹாயிசம் போன்ற புது மார்க்கங்களையும், மத சார்பின்மை, பிரீமேசன், ஹெடோனிசம், போன்ற காரனிகலையும் உருவாக்கி விட்டது. இஸ்லாமிய ஐக்கியத்தை துண்டாடுவதே இவற்றின் நோக்கமாகும்.
கே: ஈரானிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் ஜும்மாஹ் தொழுகையின் பங்களிப்பு பற்றிய தங்கள் மதிப்பீடு என்ன? இதற்கும் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயும் இவ்விடயத்தில் ஏதும் வித்தியாசமான பண்புகள் உண்டா?

ப: ஈரானில் நடைபெறும் ஜும்மாஹ் தொழுகை, உண்மையில் தற்காலத்தில் ஹஜ்ஜ் தவிர்ந்த ஒப்புவமையற்ற இஸ்லாமிய மக்கள் கூட்டமாகும். இருபது இலச்சதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே இடத்தில கூடுவது என்பது மிக பெரிய விடயமாகும். இதன் சக்தியை அதிகரிக்க செய்கின்ற இன்னொரு விடயம் என்னவெனில் இந்த கூட்டத்தின் பொது பேச வருபவர், மக்கள் கூட்டத்தை சிறப்பாக அணுகி அதன் பிரச்சினைகட்கு நிவாரணமளிக்கும் பாணியிலும் உம்மத்துக்கு அவசியமானவற்றையும் பேசுவதாகும்.

மக்களை ஒன்று திரட்டுவதல்ல முக்கியம்; அவர்களை ஒன்றிணைத்து அவர்களது இதயங்களில் சத்தியத்தை விதைப்பதே முக்கியமானது. மிகவும் வெற்றி கண்ட ஓர் அனுபவமே இது என்பது எனது நம்பிக்கை.
அல்-அஸ்ஹரிலும், அம்ரிப்னு ஆஸ் மஸ்ஜிதிலும் நான் 'குத்பா' நிகழ்த்தி  வந்தேன். எனது ஜும்மஹ்விக்கு சுமார் 30,000 பேர் கலந்து கொள்வார்கள். எனது பின்னால் நின்று தொழுவோரின் தொகை அதிகமானது என்பதால் இரண்டு மச்ஜிதுகளிளுருந்தும் வெளியேற்றப்பட்டேன். தற்போது ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதியின் பின்னால் நின்று தொழுவோரின், பத்துப் பேர் மாத்திரமே ஷாஹ்வின் ஆட்சி காலத்தில் கூடியிருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது. இது இஸ்லாமியப்  புரட்சி தோன்றி தடைகள் எல்லாம் நீக்கியதன் விளைவாகும். அதற்காக நீங்கள் பாராட்டப்பட வேண்டியயவர்கள். இந்தப்பெரும் ஜனத்திரள் தொடர வேண்டும் என்றும்; வளர்ந்து மார்க்கத்தை முன்வைக்கும் அதன் சக்தியும் வளர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

இறுதியாக இஸ்லாமியப் புரட்சியை நடாத்தி முடிதமைக்காக ஈரானிய முஸ்லிம் மக்களை பாராட்டுகிறேன். இங்கு நடைபெற்ற நிகழ்சிகள் வழமையான பின்னணிகளிலேயே நடை பெற்றன என்று சொல்வதற்கில்லை. பிரான்சில் அஞ்ஞாவாசம் புரிந்த ஒரு தனி மனிதர், அவரது இரச்சகனோடும் மக்களோடும் அவருக்கிருந்த தொடர்புகளின் விலைவாக இதனை சாதித்து முடித்தார் என்று எவரும் சொல்ல முடியாது. நிச்சயமாக இறைவனது விருப்பத்தில் இது ஏற்க்கனவே இருந்திருக்கின்றது. இந்த மாபெரும் வெற்றியை அவருக்கு எழுதி வைத்திருக்கின்றான். அவரது பாதையில் இந்த விதிகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தான். இந்த வெற்றியை பேணி பாது காப்பது உங்கள் (ஈரானிய மக்கள்) மீது எஞ்சியுள்ள கடமையாகும்.

உங்களுக்கு எதிரிகள் அதிகம் என்பதை மறந்து விட வேண்டாம். ஆயிரம் தந்திரங்களோடு, உபாயங்களோடும் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல் படுகிறார்கள். வெற்றி கண்ட இந்த இஸ்லாமிய புரட்சி தொடர்ந்தும் ஸ்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எப்பொழுதும் விழிப்போடு இருங்கள். நீங்கள் அல்லாஹ்வோடு இருக்கும் காலமெல்லாம் அவனும் உங்களுடனேயே இருப்பான் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.  

நன்றி: அல் இஸ்லாம் -ஜனவரி 1989

Wednesday, April 29, 2015

யெமன் மீதான சவூதியின் ஆக்கிரமிப்பு

அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம்

யெமனில் என்ன நடக்கிறது?


 சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆதிபத்திய வல்லரசுகளினால் 1948ல் பலஸ்தீன் பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட் இஸ்ரேல் ஸியோனிஸ ஆட்சி, சென்ற ஆண்டு காஸா நிலக்கூறில் விமானத் தாக்குதல்கள் நடாத்தி, நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை  ஈவிரக்கமின்றி கொன்று குவித்த நிகழ்ச்சி நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அரபுலகமும், ஏன் சர்வதேச சமூகமும் பலஸ்தீனர்களைப் பாதுகாக்க  எந்தவித உருப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் நமக்குத்தெரியும். 


இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதிலிருந்து அவதானித்தால், படுமோசமான மனிதாபிமான நெருக்கடி நிலை இதுவாகும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வருணித்திருக்கும் சிரியாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல் லப்பட்டும், பல இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துமுள்ளனர். ஆனால் அரபு நாடுகளோ,  யுத்த உக்கிரத்தைத் தணிக்க எந்தத் துணிவும் கொள்ளாது, உருப்படி யான  எந்த கூட்டு முயற்சிகளிலும் இறங்காது, அரசியல் சதுரங்கமாடி, ஆயுதக் குழுக்கள் ஏதாவதொன்றிற்கு முழு ஆதரவு வழங்கி, சிரிய நெருக்கடி நிலைமையை மேலும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளன.
இது இவ்வாறு இருக்க, இப்போது சவூதி அரேபியா திடீரெனத் தீரம் கொண்டு, தனது இராணுவ பலத்தைக் காட்டுவதில்  முனைந்திருக்கிறது, 


இது முஸ்லிம் களின் பொது எதிரியான இஸ்ரேலுக்கு எதிராக என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஏனென்றால் அவை இரண்டும் ஏற்கனவே ஈரானுக்கும் சிரியா வுக்கும் எதிரான செயல்பாடுகளில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விஷயம் வெட்டவெளிச்சமாகி விட்டதுளூ உதாரணமாக, அண்மையில் ஈரானிய அணு உலைகளைத் தாக்க தனது வான்பரப்பைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியதைக் குறிப்பிடலாம், ஆனால் தற்போது சவூதி அரேபியா யெமனின் ஹவ்தி போராளிகளுக்கெதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு, தனது இராணுவ பலத்தைக் காட்டி, 100க்கும் அதிகமான போர் விமானங்களைக் கொண்டு குண்டு வீசி, இரண்டாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி யெமனியக் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு இஸ்லாமிய புனிதத் தலங்களின் காவலனாகத் தன்னைதானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் சவூதி ஆட்சியாளர்;, மனிதாபிமானமற்ற விதத்திலும், நீதி நியாயத்திற்கும் அப்பாற்பட்டும் சக இஸ்லாமி யர்களை எல்லை மீறிச்சென்று  தாக்கி அழிக்கின்ற கயமையை நாம் இன்று காண் கிறோம். 


யெமன் நாட்டையும் அதன்  ஹவ்தி புரட்சியாளர்களையும் பற்றியும், அங்கு சவூதி அரசினால் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புப் பற்றியும் இணையத் தளங்களிலிருந்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்திப் பத்திரிக்கைகளி லிருந்தும் சில தகவல்களைத் திரட்டித் தருவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

ஹவ்திப் புரட்சியாளர்கள்
யெமன் ஜனாதிபதி அப்துல் மன்சூர் அல ஹாதியை பதவியை விட்டு விரண்டோடச் செய்த, 10 நாடுகளை  இணைத்துக் கொண்டு சவூதி அரேபியா விமானத் தாக்குதல் மேற்கொண்டும் கூட, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முன்னேறிச் சென்று அவற்றை தம் கைவசப்படுத்தும், இந்த ஹவ்திப் புரட்சியாளர்கள் யார்? ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஜும்ஆத் தொழுகைகளின் போது யெமனின் இரு பள்ளிவாசல்களில் தக்ஃபீரி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் குண்டு வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானோரை ஷஹீதாக்கியிருக்கும் நிலையில், அரபுத்தீபகற்ப அல்-காயிதாவின் தாய்த்  தளமாக யெமன் அமைந்திருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளைத் தாக்கி அழிக்கா மல், சவூதி அரசு, யெமன் பூமியை ஆக்கிரமித்து குண்டு வீச்சு நடாத்தி மார்ச்26 முதல் இன்று(ஏப்ரல்20)வரை 2600க்கும் அதிகமான அப்பாவி பிரஜைகளைக் கொன்று குவித்து வருவதற்கான காரணம் என்ன?


ஹவ்திகள் ஸைதி இமாமிய வழிமுறையைப் பின்பற்றும் ஷீஆ முஸ்லிம்களாவர். இவர்கள் ஈரானிலிருக்கும் ஜஅஃபரி ஷீஆக்களிலிருந்து வேறுபட்டவர்கள்ளூ ஸுன்னி இஸ்லாத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்ளூ நாட்டின் ஜனத்தொகையில் ஏறக் குறைய அரைப்பங்கினர். ஆனால் யெமனில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை, சவூதிகள் சொல்வது போல் ஸைதிகளுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையிலான தகராறு ஒன்றன்று.
ஹவ்தி என்ற பெயர், 2004ல் யெமன் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஹுஸைன் பத்ருதீன் அல் ஹவ்தி யெமன் இராணுவத்தால் கொல்லப்பட்டதால், அவரது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகும். இப்போது அந்த இயக்கம் அப்துல் மலிக் ஹவ்தி என்பவரின் தலைமையின் கீழ் செயற் படுகிறது. 2009ல் எல்லைப்புற சண்டையொன்றில் ஹவ்திகளிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து சவூதிகள் கடும் வைராக்கியம் கொண்டு பகைமை காட்டி வருகின்றனர். புரட்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் திராணி யில்லாத, சவூதி கொலைகாரர்கள், யெமன் மக்களின் குடியிருப்புகளையும் பள்ளி வாசல்களையும் பள்ளிக்கூடங்களையும் அங்காடிகளையும் மருத்துவமனைகளையும்  குண்டு வீசி அழித்து வருகின்றனர். நாட்டை சர்வநாசம் செய்ய கங்கணம் கட்டியிருக்கின்றனர்.
வடயெமனை 1978முதல் 1990வரைக்கும், பின் 1990யிலிருந்து 2012ல் பதவி யிறங்கும் வரைக்கும் ஒன்றுபட்ட  யெமனையும் ஆட்சி செய்த ஜனாதிபதி அலீ அப்துல்லாஹ் சாலெஹ்வும்  ஒரு ஸைதி ஷீஆ முஸ்லிம்தான். சவூதிதான் அவரது அரசாங்கத்திற்கு பெருமளவில் அனுசரணை வழங்கி வந்தது. அவருக்கு எதிராக ஜனநாயகக் கோரிக்கையுடன் மக்கள் மாதக் கணக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியதால்தான், வளைகுடா கூட்டுறவு நாடுகள் வகுத்த ஒரு திட்டத்தின் கீழ் அவர் அகற்றப்பட்டு, துணை ஜனாதிபதியாகவிருந்த ஹாதி அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.
ஹாதி கூட ஒரு ஸைதி ஷீஆ முஸ்லிம்தான். ஆயினும் அவர் சவூதி அரேபியாவினது விருப்பத்திற்கேற்ப நடப்பவராகவும், அமெரிக்காவின் கட்டளைகளை நிறைவேறற்றுபவராகவும் இருந்து வந்தார். நாட்டின் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன் னெடுத்துச் செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.


1960 களில் வடயெமன் உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டிருந்த போது, சவூதி அரசு யெமனின் ஸைதி ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. அதே வேளை எகிப் தும், சோஷலிஸ முகாமும் இராணுவப் புரட்சியாளர்களை ஆதரித்தது. அச்சமயத் தில், ஸுன்னிகள் பெரும்பான்மையாக வாழும் தென்யெமன், பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்பகுதி 1967ல்தான் விடுதலை பெற்றது. 1989 இறுதியில் தான், வடயெமன் மற்றும் தென்யெமன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டரசை அமைத்துக் கொண்டன. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதே இக்கூட்டமைப்புக்கு முக்கியத் தூண்டுகோலாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.
ஹவ்திகள் ஜனாதிபதி ஹாதி மீதான நம்பிக்கையை இழந்ததனாலேயே இப் போதைய  நிலைமை உருவானது. அன்சாருல்லாஹ் (அல்லாஹ்வின் உதவியாளர் கள்) என்றழைக்கப்படும் ஹவ்திகள், சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தலை நகர் சனாவைக் கைப்பற்றி, ஹவ்திகளுடனும் ஏனைய கோத்திரங்களுடனும் அதிகா ரத்தை பகிர்ந்து கொள்ள ஹாதியைக் கட்டாயப்படுத்தினர். ஹாதி அதற்கு உடன் பட்டாலும், யாருமறியாமல் தந்திரமாக சவூதி மற்றும் அமெரிக்காவின் உதவியுடன், ஹவ்திகளின் புரட்சிக்கு இராணுவரீதியான பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார். ஹவ்தி களின் வெற்றிக்கான காரணமாக முன்னைய ஜனாதிபதி சாலெஹ்விற்கு விசுவாசமான அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இராணுவத்தின் ஆதரவையும் குறிப்பிடலாம். ஹவ்திகள், ஹாதியை கொன்றிருக்கவோ சிறையிலடைக்கவோ செய் திருக்கலாம். ஹாதியின் திட்டங்கள் பற்றிய சந்தேகங்கள் ஊர்ஜிதமான போது, ஹவ்தி தலைவர்கள் அவரை இராஜிநாமா செய்ய வைத்தனர்;. மேலும், அவர் ஏடனுக்கு செல்வதற்கும், அதன் பின்னர் சவூதி அரேபியாவுக்கு தப்பி ஓடுவதற்கும் வழிவிட்டனர்.
யெமன் அரசியல் அவதானிகளின் தகவல்களின்படி, ஹவ்தி புரட்சியானது பெரும் பான்மை யெமனியர்களால் -அதாவது, ஸைதிகளைப் போலவே ஸுன்னிகளினாலும்- ஆதரிக்கப்படுகிறது. ஹாதியுடைய் சொந்த கட்சியான யெமன் பொதுமக்கள் கொங்கிரஸ் கூட அவரைத் தலைமைப் பதவியிலிருந்து  நீக்கிவிட்டது. ஹாதி இராஜிநாமா செய்ததன் பின்னர், சென்ற ஃபெப்ரவரியில் ஹவ்திகள் இடைக்கால அரசங்கமொன்றை நிறுவினர்.


இந்த அர்சியல் நெருக்கடிக்கு, பிராந்திய அரசியல் போட்டியும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இதனாற்றான், ஹவ்தி புரட்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக போலியான  ஒரு காரணத்தைச் சோடித்துக் கொண்டு சவூதி அரேபியா களத்தில் இறங்கியிருக்கிறது. ஏற்கனவே, சவூதி அரசு, ஈரான் இஸ்லாமியக் குடியரசை வெறுக்கிறதுளூ அதன் தென் எல்லையில் ஈரானுக்கு ஆதரவான ஒரு  நாடு நிர்மாணம் பெறுவதை கண்டு பயப்படுகின்றது. சவூதி அரேபியாவினால் அமெரிக்க உதவியுடன்  உருவாக்கப்பட்ட அல் காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய தக்ஃபீரி அமைப்புகளை எதிர்த்து சிரியாவிலும், ஈராக்கிலும்  இராணுவரீதியாக வியூகம் வகுத்து, ஈரான் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதைக் கண்டு, சவூதி;களும், அமெரிக்கர்களும் கதிகலங்கிப் போயிருக்கின்றனர். மறுபுறத்தில் ஹவ்திகள் முழு யெமனையும் தமது அதிகாரத்திற்குள் கொண்டு வருவார்களேயானால், யெமனில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் போர் ஆயுத அமைப்பு முறைகளைப் பற்றிய அதன் இரகசியங்களையும் தகவல்களையும் ஈரான் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்கா அஞ்சுகிறது. 


இதுதவிர, துறைமுக நகரான ஏடன், ஹவ்திகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், அவர்களினால் செங்கடலைச் சூழடைப்பு  செய்து, அதனூடாக கப்பற் போக்குவரத்தைத் தடை செய்துவிட ஏதுவாய் போய்விடும் என சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் பயப்படுகின்றன.
ஆனாலும், தற்போது அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் சவூதி அரேபியா, யெமன் மீது தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு-அழிச்சாட்டிய யுத்தம், நெருக்கடியை மென் மேலும் கிளறி விட்டு கொழுந்து விட்டெரியச் செய்ய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
விமானத்தாக்குதல்கள் போர் வெற்றியைக் கொண்டு வருவதில்லை. தரைப் படையினால்தான் அதனைச் சாதிக்க முடியும். அதற்குரிய வல்லமை சவூதி அரசிடம் இல்லை, இதனால்தான் அது பாகிஸ்தானின் தரைப்படையை களத்தில் இறக்க முஸ்தீபு செய்கிறது. ஆயினும், சவூதியிடம் உதவி பெற்றுவரும் பாகிஸ்தான் அரசோ, சவூதி மற்றும் அதன் நேசஅரபு நாடுகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, இந்த நெருக்கடி நிலைமையிலும்  நடுநிலைமை வகிக்கின்றது. யெமன் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசியல் தீர்வு காணக் கோருவதாக அது பிரகடனஞ் செய்துள்ளது, மேலும், யெமன் நாட்டின் எல்லையைத் தாண்டி சவூதியின் தலைமையில் கூட்டணியின் தரைப்படை உள்நுழைந்தால், அவர் களை எதிர்த்து நின்று முறியடிப்பதற்காக எவ்வளவு காலமும் போராடத் தாம் தயாராயிருப்பதாக ஹவ்திகள் அறிவித்திருக்கின்றனர்.
யெமனின் வரலாற்றை ஆராய்ந்தால், அது ஆப்கானிஸ்தானைப் போன்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு புதைகுழியாக அமைந்திருப்பதைக் கண்டு கொள்ள முடிகின்றது, உதுமானியர்களும் பிரிட்டிஷாரும் யெமனில் மிகவும் கசப்பான பாடங்களைப் படித்துக் கொண்டார்கள். 1960களில் உள்நாட்டுப் போரின் போது, எகிப்து அனுப்பிய 70ஆயிரம் துருப்புகள் சுவடு தெரியாமல் போய் விட்ட துர்ப்பாக்கியத்தையும் இங்கு நினைவு கூரலாம்.


அதுமட்டுமல்ல, சவூதி தலைமையிலான இந்த யெமன் ஆக்கிரமிப்பு, சர்வதேசச் சட்டங்களுக்கும், ஐ.நா.சாஸனத்திற்கும் முரணானதாகும். அதாவது, இராஜினாமா செய்த அல்லது பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி இன்னொரு நாட்டுக்கு தப்பிச் சென்று, சர்வதேச இராணுவ உதவியைக் கோரித் தலையிடச் சொல்வதற்கான உரிமை கிடையாது.. அமெரிக்காவின்  முன்னைய  ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உடைய சண்டித்தனமான -ஐ.நா.சபையை மதிக்காத- மரபைப் பின்பற்றித்தான் சவூதி அரசு, இப்போது செயல்படுகிறது. அது தவறான முன்னுதாரணம் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உக்ரேன் நெருக்கடியில் ரஷ்யா தலையிட்டதற்கு அமெரிக்காவும் மேற்குலகமும் எத்துணை கண்டனக் கணைகளையும் தடைகளையும் தொடுத்திருக்கின்றன என்பது எமக்குத் தெரியும். ஆயினும், சவூதியின் யெமன் ஆக்கிரமிப்பு யுத்தம் பற்றி, அவை மௌனம் சாதித்து வருவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
பயங்கரவாதிகளுக்கும் வம்பர்களுக்கும் ஆக்கிரமிப்பளர்களுக்கும் அத்துமீறுபவர் களுக்கும் அநியாயமாக அப்பாவிகளைக் கொன்று குவிப்பவர்களுக்கும், பிறநாட்டு மக்களின் உடைமைகளை சர்வநாசம் செய்பவர்களுக்கும் சாதகமாக சர்வதேசச் சமூகம் நடந்து வருவதைப் பார்த்தால், உலகம் அழியும் நாள் நெருங்கிவிட்டதோ என நினைக்க வேண்டியுள்ளது.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி, 'உலகில் அநீதியும் அக்கிரமும் அழிச் சாட்டியமும் மேலோங்கி இருக்கும் வேளை, அந்நிலைமையை மாற்றி நீதியும், நேர்மையும் செழிப்பும் மேலோங்கச் செய்வதற்காகத் தோன்றும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை'க்காக நாம் இரு கரமேந்தி பிரார்த்திப்போமாக!


--------------------------------------------------------------------------------------------------------------------------
பின்னிணைப்பு - 1
ஷைத்தானின் கொம்பு
அபதுல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்ததாக  ஸஹீஹுல் புகாரி ஹதீத் கிரந்தத்தில் பதியப்பட்டிருக்கும் நபிமொழி, நமக்கு ஃபித்னா எனும் குழப்பங்கள் எங்கிருந்து புறப்படும் என்பதை தெட்டத் தெளிவாக விளக்குகிறது.
'நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ்வே! எங்களின் ஷாமை (இப்போதைய சிரியா, ஈராக் பிர்தேசங்களை உள்ளடக்கியது) எங்களுக்கு வளமும் நற்பேறும், புனிதமும் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ்வே! எங்களின் யெமனை எங்களுக்கு வளமும் நற்பேறும், புனிதமும் பெற்றதாக ஆக்குவாயாக!' அப்போது சபையிலிருந்த சிலர் கேட்டனர்: 'எங்களின் நஜ்துக்காக துஆ செய்யுங்கள்'. ஆயினும், நபி(ஸல்)அவர்கள் மீண்டும் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ்வே! எங்களின் ஷாமை எங்களுக்கு பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ்வே! எங்களின் யெமனை பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' மற்றவர்கள் திரும்பவும் கேட்டார்கள்: 'எங்களின் நஜ்த்!' மீண்டும் 'நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ் வே! எங்களின் ஷாமை எங்களுக்கு பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ் வே! எங்களின் யெமனை பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' மற்றவர்கள் மூன்றாவது தடைவையாகவும் 'எங்களின் நஜ்த்' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;: 'அங்குதான்(நஜ்தில்) பூமி அதிர்வுகளும், குழப்பங்களும், பித்னாக்களும் இடம்பெறும், மேலும், அங்கிருந்துதான் ஷைத்தானின் கொம்பு  (ஷைத்தானிய தலைமுறை) தோற்றம் பெறும்.' (ஹதீத் இல.846 ஸஹீஹுல் புகாரி பாகம் 2 பாடம் 17)
நஜ்த் என்பது தற்போதைய சவூதி அரேபியாவிலுள்ள றியாத் மற்றும் அதன் சூழவுள்ள பிரதேசங்களாகும். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவரின்  'வஹ்ஹாபிய தீவிரவாதக் கொள்கை'யைப் பின்பற்றும் இன்றைய சவூதி அரேபியா வின் ஆட்சியாளர்கள் இங்கிருந்துதான் தோன்றியுள்ளனர். மேலும், ஹதீதில் 'ஷைத்தானின் கொம்பு வெளிப்படும்' என்ற சொற்றொடரே பயன்படுத்தப் பட்டிருந்தாலும், ஹதீஸ் கலை அறிஞர்கள் அது 'ஷைத்தானின் சந்ததி'யையே குறிப்பிடுகின்றது என விளக்கியுள்ளனர்.
இறைவனுக்கு உருவம் உண்டு எனவும், தமது தீவிரவாத-குறுகிய கண்ணோட் டத்துடனான கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே முஸ்லிம்கள் - ஏனையோர் காஃபிர்கள் எனவும் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனவும், தக்ஃபீரி சிந்தனையோடு செயல்படும் நஜ்திய வஹ்ஹாபி கொலைகாரர்களின் பொய்ப் பிரச்சாரத்தினால் ஏமாறாத முஸ்லிம்கள், இன்று முஸ்லிம் உலகில் பித்னா எங்கிருந்து  தொடங்குகிறது என்பதையும், அவர்களுக்குப் பக்கபலமாக  இருக்கும் கொடூரமான இஸ்லாம்-முஸ்லிம் விரோதிகளையும் இனங்கண்டு கொள்வார்கள்ளூ மேலும், தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சமூகத்தையும் இந்த கோடரிக்காம்புகளின்  கோரப்பிடியில் அகப்படாமல் பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக!


--------------------------------------------------------------------------------------------------------------------------
பின்னிணைப்பு - 2

யெமன் மீதான சவூதியின் ஆக்கிரமிப்பு போர் பற்றி நடுநிலை யான அரசியல் விமர்சகர்களின் கூற்றுக்கள்
பேராசிரியர் பெர்னாட் ஹய்கல் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அண்டை கிழக்கத்திய  கற்கைத்துறை): 'யெமனிலுள்ள பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பது அல்லது குறைந்தபட்சம் எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி, அவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவில்லை என நான் நினைக்கிறேன்........ யெமனிலிருந்தும், அங்கிருந்து வெளிக்கிளம்பும்  வன்முறைகளிலிருந்தும், சவூதிகள் எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை.'
பத்திரிகையாளர் ரொபெர்ட் ஃபிஸ்க் (தி இண்டிபெண்டன் யூ.கே): 'சவூதிகள் பாக்கிஸ்தானியர்களிடம் அவர்களின் மிகப்பெரிய இராணுவத்தின் ஒரு பகுதியை, இந்த கொதித்து நிற்கும் கொப்பரைக்குள் அனுப்பக் கோருகின்றனர். அது நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதன்றுளூ மாறாக எண்ணெய்க்குள் நெருப்பை அள்ளிப் போடுவது போன்றதாகும்.... ஈரானின் துணை வெளிநாட்டமைச்சர், சவூதியின் யெமன் மீதான தாக்குதலை, 'போர்த்திறஞ் சார்ந்த ஒரு தவறு' எனக் கூறியுள்ளார், அதன் அர்த்தம்  என்னவென்றால், யெமனில் யுத்தமொன்றைத் துவங்குவது சவூதிகளுக்கு இலகுவாக இருந்திருக்கலாம்ளூ ஆனால் அதனை முடிவுக்கு கொண்டுவருவதை அவர்கள்  சாதிக்கமாட்டார்கள் ...,.......... உண்மையில் சவூதி அரேபியா ஒரு படுபாதாளத்தில்தான் பாய்ந்திருக்கிறது. யெமன் மீதான  அதன் விமானத் தாக்குதல்கள், சவூதி முடியாட்சிக்கும், ஏன் முழு மத்திய கிழக்கிற்குமே, வரலாற்று ரீதியான, நிகழச்சாத்தியமான அழிவார்ந்த ஓர் இடர் எனச் சொல்லலாம்.'
'அரபு நாடுகளுள் ஓர் ஏழ்மையான நாட்டில், இந்த வழக்கம் தவிர்ந்த, வரம்பு மீறிய யுத்தத்தை நடாத்துவதற்கு யார் முடிவு செய்தனர்;? தங்களின் மன்னர் நாட்டு விவகாரங்களில் முடிவுகள் எடுக்கத் திறமையற்றவர் என அரபுலகில்  பரவலாக  வதந்திகள் அடிபடும் நிலையிலுள்ள சவூதி ஆளும் வர்க்கத்தினரா? அல்லது தங்களின் சொந்தப் பாதுகாப்பு படைகளே முடியாட்சிக்கு விசுவாசமாயிருக்க மாட்டாது எனப் பயப்படும், சவூதி இராணுவத்தின் உயர்மட்ட இளவரசர்களா?'
அரசியல் விமர்சகர் ரொட்னி ஷேக்ஸ்ஃபியர் (லண்டன்): 'இந்த இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிகையானதுஆல சவூத் குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்திருக்க மேற்கொண்டிருக்கும், மிகவும் தீமையான, மிருகத்தனமான செயலா கும்...... சஊத் குடும்பம் சவூதி அரேபியாவில்  சர்வாதிகரமான  ஆட்சியொன்றை ஸ்தாபித்திருப்பதால், அது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரையறையற்ற முழுமையான எல்லா முயற்சிகளையும் செய்யும்....சவூதி அரேபியா, யெமனுடனான யுத்தத்தில் அமெரிக்காவுடன் பங்காளியாக இணைந்துள்ளது. இந்தத் தாக்குதல் முதன்மையாக ஜனநாயகத்தை நசுக்குவதற்காகத்தான் தொடுக்கப்பட்டுள்ளது .......சவூதிகளுக்கு தனது சொந்த மக்களின் மத்தியிலேயே உண்மையான ஆதரவில்லை. இறுதியில் இந்த ஆட்சி மண்ணைக் கவ்வுமளூ;; உலகம் அவர்களைத் துடைத்தெறிந்து விடும்.'
மனித உரிமைகள் செயல் தீரர் அஜாமா பராக்கா (கொலம்பியா): 'சவூதி அரேபியாவை இராணுவ ரீதியாக யெமனில் தலையிடுவதற்கு அனுமதிக்கும் சட்டமீறிய தன்மையை, சர்வதேச சமூகம் கண்டும் வாளாவிருப்பது ஒரு கொடுமையான நடைமுறையாகும், அமெரிக்கா சவூதிக்கு ஆயுதங்களையும், சாதனங்களையும் வழங்குகிறது என்பதால், சவூதி அரேபியாவின் தலைமை யினாலான இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்காவின் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.'
கெலன் ஃபோர்ட் ( பிளக் அஜெண்டா றிபோர்டின் நிர்வாக ஆசிரியர், அமெரிக்கா): 'இன்று நேசநாடுகளின் கூட்டணிக்கு சவூதி அரேபியா தலைமை தாங்கி அமெரிக்காவின் பங்கையே நிறைவேற்றி வருகிறது. இதே பங்கைத்தான் இதற்கு முன்பு அமெரிக்கா உலகின் அந்த பிரதேசத்தில் கடந்த பல தசாப்தங்களாகச் செய்து வந்தது. இப்போது ஜனாதிபதி ஒபாமா, பின்னாலிருந்து இயக்குவிக்கும், குறைந்த வடிவத்தை உலகிற்கு காட்ட விரும்புகிறார். ஆனாலும், பெருமளவிலான துருப்புகளையோ அல்லது போர் ஆயுதங்களையோ சுமக்கும் சக்தியற்ற பல நாடு களை ஈடுபடுத்தி, மிகப் பெரும் நடவடிக்கையொன்றை எடுப்பதென்பது இலேசான தன்றுளூ அவற்றுக்கு மீள் விநியோகம் செய்யக் கூடிய ஏகாதிபத்திய இராணுவச் சக்தியான அமெரிக்கா பின்னால்  இருப்பதுதான்..'
மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஜேம்ஸ் பெட்ராஸ் (நிவ்யோர்க், அமெரிக்கா): 'இந்த யுத்தம், அதிக விலை கொடுக்க வேண்டியதொன்றாகும். குறிப்பாக சவூதி கள் தமது தரைப்படைகளை யெமனிற்குள் அனுப்பினால், பெருத்த நஷ்டத்தை அடைய நேரிடும். சவூதி அரேபியா, இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமான நாடா கும். அது நிறைய ஆயுதங்களை கொண்டிருந்த போதிலும், பெருமளவிலான மக்கள் ஆதரவு அதற்கில்லாததால், ஒரு நீடித்த யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க அதனால் முடியாமற் போகும். யெமன் மக்களோ, வெளிநாட்டு  ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கூலிப்பட்டாளங்களுக்கும் எதிராக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இந்த நாடு(யெமன்) சவூதி முடியாட்சிக்கு. புதைகுழியாக மாறிப் போகும் வாய்ப்புள்ளது.'
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான விமர்சகர் டேனி மக்கி (லண்டன், இங்கிலாந்து): 'சவூதி அரசாட்சி இந்த பிரதேசத்திலுள்ள அரசாங்கங்களை கவிழ்ப்பதற்காக, மத்திய கிழக்கில் இயங்கிவரும்  பல தீவிரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. யெமனின் பாதியை அல்-காயிதா கைப்பற்றுவதற்கும் சவூதிதான் வழியமைத்துக் கொடுத்தது. சவூதி அரேபியா யெமனில் அல்-காயிதாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. யெமனில் ஹவ்தி இயக்கத்தின் மீது தாக்குதல் நடாத்துகின்றோம் என்ற பெயரில், அது பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் தாக்கி அழித்து வருகிறது. இந்த விமானத் தாக்குதல்களின் மூலம் யெமன் மீது தான் பலமான முறையில்  செயல்பட்டு வருவதாக ஒரு செய்தியை உலகத்திற்கு அனுப்புவதாக சவூதி அரேபியா நினைக்கிறது. ஆனால், உள்ளியல்பைப் பார்க்கப் போனால், அது அமைதியின்மையை அதிகமதிகம் உருவாக்கி வருகிறது. அது மிகக் கூடிய சீக்கிரத்தில், சவூதி அரசாட்சி மீது திரும்பித் தாக்கும்.'
ஷலோகா பியானி (உள்வாரியாக புலம் பெயர்ந்த அகதிகளுக்கான  ஐ.நா.வின் மனித உரிமைகள் விசேஷத் தொடர்பாளர்): 'சவூதிக் குண்டு  வீச்சுகளிலிருந்து சிவிலியன்கள் தப்பியோடி வருவதால், பெருமளவிலான இடம்பெயர்வும் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது, நிலைமையை சமாளிக்க சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். உடனடியாக நெ


ருக்கடி தீர்க்கப்படாவிட்டால், நடக்கும் யுத்தமும், விமானத்தாக்குதல்களும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம். சர்வதேச சமூகம் இராஜதந்திர ரீதியான தீர்வொன்றைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வது அத்தியாவசியமாகும். ஏனென்றால், கள நிலவரம் அத்துணை பயங்கரமானதாகும். அவசரமாக மனிதாபிமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும். சென்ற மார்ச் 30ம் திகதி வடயெமனிலுள்ள அகதி முகாம் மீது சவூதி விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியிருப்பது, ஏற்கனவே தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் சிவிலியன்கள் மீதான பாரதூரமான்  அத்துமீறல் சம்பவமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.'


Sunday, March 29, 2015

இஸ்லாமியப் புரட்சிக்கு வயது 36


இந்தத் தலைப்பில் கனடாவின் கிரஸன்ட் இன்டர்நெஷனல் சஞ்சிகையின் பிப்ரவரி 2015 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் ஜஃபர் பங்காஷ;, சென்ற பிப்ரவரி 11ம் திகதி 36 ஆண்டுகள் நிறைவடைந்த ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, ஏகாதிபத்திய மற்றும் ஸியனிஸ சக்திகளின் இடைவிடாத சதித்திட்டங்கள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு மத்தியிலும் எவ்வாறு 36ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றது என்பது பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையை விவரிக்கிறார். அதற்கு ஈரானிய மக்களின் இஸ்லாத்துடனான இறுகிய பிணைப்பும் அதன் முத்தகீ தலைமைத்துவத்தின் தக்வாவும்தான் காரணம் என அவர் கூறுகிறார்:

'உலகில், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் நிறைந்த மத்திய கிழக்கில், அத்துணை அமைதி குலைவுக்கு மத்தியிலும் ஒரு நாடு தீபச்சுடராகவும் நிலைபெற்றதாகவும் விளங்குகிறது என்றால் அது இஸ்லாமிய ஈரான்தான். மேற்குநாடுகளினால் பல்லாண்டுகளாக சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகள், வெளிஆக்கிரமிப்பு, பெருமளவிலான உள்நாட்டு hநச வேலைகள் என்பனவற்றை எதிர்கொண்டுங் கூட, இன்றும் இந்த இஸ்லாமிய நாடு நீடித்திருக்கின்றது என்பதல்லாமல், நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பது உண்மையில் நமது விஷேச கவனத்திற்குரியதாகும். மற்ற நாடுகளாயிருந்தால் எப்பொழுதோ வீழ்ந்து போயிருக்கும்.

ஈரானின் திடநிலைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என்ன? அதனிடம் பிரம்மாண்டமான எண்ணெய் மற்றும் வாயு வளம் இருப்பதனாற்றான் ஈரான் எல்லாச்சூறாவளியிலும் தாக்கு பிடித்து நிற்கிறது என்பது தவறான அனுமானமாகும். காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்: அது இஸ்லாம்|. ஈரான் தனது மக்களின்   ; வ த ற ; கு ம ,அடக்கியொடுக்கப்பட்டவர்களை கேடிலா ன்முறையில் கவனிப்பதற்குரிய செயலொழுங்கு முறையொன்றை ஸ்தாபிப்பதற்கும் இஸ்லாமிய வழியையே பின்தொடர்ந்து செல்கின்றது. இஸலாமிய ஈரான் முழுநிறைவானதன்று என்பது உண்மைதான். ஆயினும் அது மற்றெல்லா நாடுகளையும் விடச் சிறந்தது எனலாம். சவூதி அரேபியா அல்லது பாகிஸ்தான் போன்றல்லாமல்,  ஈரானின் இஸ்லாத்துடனான பற்றுதலும் ஒட்டுதலும் மேலெழுந்த வாரியான ஒன்றன்று. மாறாக, இஸ்லாமியக் கொள்கை கோட்பாடுகளை அடியொற்றி வாழ்வதற்கான உண்மையான ஈடுபாடு அங்கு காணப்படுகிறது. இதனை அதன் தலைவர்கள் முதல் அடிமட்டத்திலிருப்பவர்கள் வரை, வழிநெடுக கசிந்துசெல்லும் எளிமைப் போக்கிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய ஈரானின் மற்றுமிரு குறிப்பிடத்தக்க அம்சங்கள், வெளி செல்வாக்கு அல்லது தலையீட்டிலிருந்து அதன் முழுமையான சுதந்திரமும், வெளிநாட்டு கடன் இல்லாத தன்மையும் ஆகும். எந்தவொரு அளவுகோலைப் பயன் படுத்தினாலும், இவை முற்றிலும் முதன்மையான சாதனைகளாகும். எந்தவொரு நாடும் சுதந்திரமான திறனாய்வு முடிவு எடுப்பதை, சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற மேற்கத்திய சக்திகள் சகித்துக் கொள்ளாத   அவை, இணங்க மறுக்கும் நாடுகளை வழிக்கு கொண்டுவர, அவற்றின் பிரம்மாண்டமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தும். அவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஈரான் மீது அதனைப் பிரயோகித்தும், படுதோல்வியைத் தழுவிக் கொண்டன. இதேபோன்று, கொள்ளைக்காரர்களும் இரத்தம் உறிஞ்சிகளும் மேலாதிக்கம் செலுத்தும் சர்வதேச நிதியமைப்பு முறைக்குள் ஈரான் அங்கம் வகிக்காததன் காரணமாக, பிறரை ஓட்டாண்டியாக்கி ஒரு சிலரின் கைகளில் செலவத்தை குவியச் செய்யும் முதலாளித்துவ நிதிநிலை ஏய்ப்பிலிருந்து அது றமையுடன் தவிர்ந்து கொண்டது. உண்மையான இஸ்லாமிய அடிப்படைகளைப் பின்பற்றுவது மட்டுமே, மக்கள் இத்தகைய அழுத்தங்களை எதிர்த்து நிற்கச் செய்கின்றது. ஈரான் அத்தகைய மாண்புகளின் கண்கூடான பிரதிபலிப்புÉ ஏனைய முஸ்லிம்கள் தமது பிரிவு மனப்பான்மையுடன் கூடிய அரைக்கண் பார்வையை அகற்றிக்கொண்டல்  ; முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க செயல்வடிவம் அதுவாகும்.'


Friday, March 27, 2015

'தக்ஃபீரிஸம் என்பது உலகில் மிகப்பெரும் அபாயகரமான ஓர் இயக்கம்'


தீவிரவாத மற்றும் தக்ஃபீரி அமைப்புகள் பற்றிய சர்வதேச மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காமெனெய் ஆற்றிய உரை.



உலகெங்கிலுமிருந்து வந்திருந்த 83 நாடுகளைச் சார்ந்த 600க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்ட 'தீவிரவாத மற்றும் தக்ஃபீரி அமைப்புகள் பற்றிய சர்வதேச மாநாடு' ஒன்று அண்மையில் ஈரானின் கும் நகரில் சென்ற நவம்பர் 24, 25ம் திகதிகளில் நடைபெற்றது. மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காமெனெய் உரை நிகழ்த்திய போது, 'தக்ஃபீரிஸம் என்பது இஸ்லாமிய உலகில் மிகத் தீங்கு விளைவிக்கக் கூடிய, பெரும் அபாயகரமான ஓர் இயக்கமாகும். இந்த முன்னெடுப்பு புதியதொன்றன்று.  அதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. எனினும், இப்போது சில ஆண்டுகளாக அது ஆணவப் போக்கிலான சதித் திட்டங்களைக் கொண்டும், சில பிரதேச அரசுகளின் பணத்தைக் கொண்டும், இன்னும் அமெரிக்கா இங்கிலாந்து ஸியனிஸ ஆட்சி போன்ற காலனித்துவ நாடுகளின் உளவுச் சேவைகளின் சூழ்ச்சிகளைக் கொண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிட்டார். 
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு துவங்கி, இறைவனைப் புகழ்ந்து, அவனது தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) மீதும், தூய்மை வாய்ந்த அஹ்லுல்பைத் மீதும்தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய அவர், உலகின் பல பாகங்களில் இருந்தும், இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளிலிருந்தும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த அறிஞர்  பெருமக்களை வரவேற்று, அவர்களின் செயற்றிறன் வாய்ந்த- பெறுமதிமிக்க பங்களிப்பிற்காக நன்றி மொழிந்தார்.
மேலும் அவர், கும் நகரைச் சார்ந்த பெரும் உலமாக்களுக்கும் அறிஞர்களுக்கும்;, குறிப்பாக இம்மாநாட்டிற்கான கருத்தை முன் வைத்ததுடன், அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஆயத்துல்லாஹ் மகாரிம் ஷிராஸி மற்றும் ஆயத்துல்லாஹ் ஜாஃபர் ஸுப்ஹானி ஆகியோருக்கும் நன்றி நவின்றார். இருநாள் மாநாட்டில் உரையாற்றியவர்களின் பேச்சுகளின் சாராம்சத்தையும், சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடக்கத்தையும் பற்றி தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். அவருடைய உரையின் சுருக்கம் வருமாறு:


தக்ஃபீரி முன்னெடுப்புகளை ஒருங்கிணைந்த வகையில் எதிர்ப்பதை இம்மாநாடு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இந்த தீய விருட்சத்தின் ஒரு கிளையான ஐ.எஸ்.அமைப்பு, இன்று மக்களையும் சொத்துக்களையும் நிர்மூலமாக்குவதையும் அப்பாவி;களின் இரத்தத்தை ஓட்டுவதையும் உள்ளடக்கிய அழிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இஸ்லாமிய உலகில், தக்ஃபீரிஸத்தினால் இழைக்கப்படும் குற்றச்செயல்களில் இது ஒரு பகுதி மட்டுமேயாகும். இதனை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
என் இதய ஆழத்திலிருந்து மிகுந்த மன வருத்தத்துடன் சொல்கிறேன். இஸ்லாமிய உலகில், ஆணவச் சக்திகள் உருவாக்கியுள்ள பிரச்சினைகளின் பக்கம் நமது கவனத்தைக் குவிக்க வேண்டும். ஸியனிஸ ஆட்சியின் சதித் திட்டங்களையும் புனித குத்ஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதற்கும் நமது எல்லா சக்திகளையும் ஒன்று குவிக்க வேண்டும். இது முழு இஸ்லாமிய உலகையும் உணர்வு பெறுவதற்கும் உத்வேகம் கொள்வதற்கும் வைக்க வேண்டும். தக்ஃபீரிஸம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளினால் இஸ்லாமிய உலகிற்காகத் தயார் செய்யப்பட்ட ஒரு பொருளாகவும் பிரச்சினையாகவும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதனை நாம் கண்டிப்பாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு உலமாக்கள் மீதும் அறிஞர்கள் மீதும் செயல்தீரர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாகும். அதே நேரத்தில், முக்கியப் பிரச்சினையானது ஸியனிஸ ஆட்சி என்பதையும்; முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா என்பதையும்; நாம் மறந்து விடக் கூடாது.


தக்ஃபீரி முன்னெடுப்புகளும் அதனை ஆதரிக்கும் அதற்கு தோள் கொடுக்கும் அரசுகளும், ஆணவச் சக்திகளினதும் ஸியனிஸத்தினதும் இலக்குகளின் திசைகளிற்றான் முழுமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. சிற்சில அடையாளங்கள் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துகின்றன. தக்ஃபீரி முன்னெடுப்புகள் வெளியே இஸ்லாமியப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாலும், உண்மையாக செயல்வடிவில் இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆணவ அரசியல் ஆதிக்கச் சக்திகளுக்கு சேவகம் செய்பவையாகவே இருக்கின்றன. இதனை நாம் புறந் தள்ள முடியாது. இந்த அடையாளங்களுள் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.


முதலாவது அடையாளம் என்னவென்றால், தக்ஃபீரி முன்னெடுப்பானது, இஸ்லாமிய எழுச்சி இயக்கத்தை அதன் பாதையிலிருந்து விலகிச் செல்ல வைத்து விட்டது. இஸ்லாமிய எழுச்சி இயக்கம், அமெரிக்காவிற்கும், ஆணவச் சக்திகளுக்கும், அந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவினால் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களுக்கும் எதிரானதாகும். அந்த இயக்கம், வட ஆஃபிரிக்காவின் பல்வேறு நாட்டு மக்களினது உந்துதலினால் உருவானதாகும். தக்ஃபீரி முன்னெடுப்பு, அதன் சரியான திசையை மாற்றி, முஸ்லிம்களுக்கிடையிலான ஒரு யுத்தமாக, சமூகத்தினுள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் படுகொலை செய்ய வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் போர் செய்வதென்றால், அதற்கான முன்னணித் தளம் பாலஸ்தீனின் எல்லைப்புறம்தான். ஆனால், தக்ஃபீரி முன்னெடுப்பு களத்திற்கு வந்து, அதன் முன்னணி நிலையை பக்தாதின் வீதிகளாகவும் சிரியா-டமஸ்கஸின் ஜாமிஆ மஸ்ஜிதாகவும் பாகிஸ்தானின் வீதிகளாகவும் சிரியாவின் நகரங்களாகவும் மாற்றி அமைத்திருக்கிறது.


இன்றைய லிபியா, சிரியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமையை சற்று கண்ணோட்டமிடுங்கள். முஸ்லிம்களின் துப்பாக்கிகளும் வாள்களும் யாருக்கெதிராக உபயோகிக்கப் படுகின்றன என்று பாருங்கள். இந்த பலம் அனைத்தும் ஸியனிஸ ஆட்சிக்கெதிராகப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் தம்; குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் யார் மீது பிரயோகிக்கின்றனர்? இவை யெல்லாம் தக்ஃபீரிகளின் மறக்கமுடியாத மன்னிக்கமுடியாத வரலாற்றுக் குற்றங்களாகும். 

இன்னுமோர் அடையாளமாக, ஸியனிஸ ஆட்சி முஸ்லிம்களுக்கெதிரான போரைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வகையில், தக்ஃபீரி முன்னெடுப்புகளை ஆதரிப்பவர்கள் அதனோடு சமரசம் செய்து கொள்வதைக் குறிப்பிடலாம். அவர்கள் அதற்கெதிராக முகஞ் சுழிப்பது கூடக் கிடையாது. மறுபுறத்தில், அவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கும் அரசுகளுக்கும் எல்லாவிதமான தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். அவற்றிற்கெதிராக அனைத்து சூழ்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றுமோர் அடையாளம், ஈராக், சிரியா, லிபியா, லெபனான், இன்ன பிற போன்ற இஸ்லாமிய நாடுகளில் தக்ஃபீரி முன்னெடுப்பு நடத்திய துரோகத்தனமான வேலைகளாகும். இதன் காரணமாக, இந்நாடுகளின் விலைமதிப்பற்ற உள் கட்டமைப்புகள் சர்வ நாசத்தைத் தழுவிக் கொண்டுள்ளன. எததனையெத்தனை வீதிகள், பாதைகள், பெருஞ் சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள், சுரங்கங்கள், விமான நிலையங்கள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், தோட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பாருங்கள்! இந்நாடுகள் தமது பழைய நிலையை அடைவதற்கு எவ்வளவு பணம் செலவாகும், எவ்வளவு காலம் செல்லும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்னுமொரு முக்கிய அடையாளம், தக்ஃபீரி முன்னெடுப்பானது உலகில் இஸ்லாத்தின் மதிப்பைப் பங்கப் படுத்தி விட்டதாகும். அது ஓர் அசிங்கமான தோற்றத்தை இஸ்லாத்திற்கு வழங்கி விட்டது. மனிதர்களை எந்தவொரு குற்றமுஞ் சாட்டாமல், தக்ஃபீரிகள் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்யும் கோரக் காட்சிகளை தொலைக்காட்சிச் சேவைகளில் உலகிலுள்ள ஒவ்வொருவரும் கண்டனர். ஆனால்,அல்லாஹ் கூறுகின்றான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில், எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ- உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ, அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதி யுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்து வோரை நேசிக்கின்றான். அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார் களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ, மேலும் உங்களை  வெளியேற்றுவதில் ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ, அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான். அவர் களுடன் எவரேனும் நட்பு கொண்டால், அவர்களே கொடுமையாளர்கள். (அல்குர்ஆன் 60:8-9)
இவர்கள் இதற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்- செயல்படுகின்றனர். தமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களையும், அப்பாவி முஸ்லிமல்லாதாரையும் இவர்கள் கொன்றிருக்கின்றனர். முழு உலகமும் இதன் படங்களைக் கண்டது. இச்செயல்களை இவர்கள்  இஸ்லாத்தின் பெயரால் செய்திருக்கின்றனர். இஸ்லாம் என்பது அன்புக்கும் கருணைக்கும் இரக்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் நீதிநியாயத்திற்கும் உரியது. ஆனால் இவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய விதத்தைப் பார்த்தீர்;களா? இதனை விட பாரிய குற்றம் வேறு எதுவாயிருக்க முடியும்? இதனை விட தீமை பயக்கக் கூடிய ஃபித்னா வேறு எதுவாயிருக்க முடியும்? இதனைச் செய்தது தக்ஃபீரிகள்தான்!

மற்றுமோர் அடையாளம், இஸ்லாத்தின் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் அச்சுகளிலிருந்து இவர்கள் நீங்கி விட்டனர். காஸா தன்னந்தனியாக 50 நாட்கள் போராடியது. எதிரிகளின் தாக்குதலை 50 நாட்கள் எதிர்த்து நின்றது. இஸ்லாமிய அரசுகளுள் ஒன்றும் காஸாவுக்கு உதவ முன்வரவில்லை. எண்ணெய் வருமானங் களும் அமெரிக்க டொலர்களும் உதவவில்லை. மாறாக, அவை ஸியனிஸ ஆட்சியின் அடாவடித்தனங் களுக்கும் அட்டூழியங்களுக்கும் உறுதுணையாயிருந்தன.
இன்னுமோர் அடையாளம் (ஒரு பாவம் என்றுஞ் சொல்லலாம்), தக்ஃபீரி முன்னெடுப்பானது இஸ்லாமிய உலகம் பூராவிலும் காணப்படும் முஸ்லிம் இளைஞர்களின் ஆர்வத்தையும் துணிவையும் திசை மாறச் செய்ததாகும். இன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் செல்வாக்கினால் ஒரு விதமான ஆர்வமும் துணிவும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இஸ்லாத்தின் பெரும் இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்லத் தயாராயிருக்கின்றனர். ஆனால், தக்ஃபீரிகள் இவர்களின் ஆர்வத்தையும் துணிவையும் திசை திருப்பி விட்டிருக்கின்றனர். முஸ்லிம்;களின் தலைகளைக் கொய்வ தற்கும், பெண்கள், பிள்ளைகள், சிசுக்கள் ஆகியோரை ஈவிரக்கம் இல்லாமல் அறுத்துக் கொலை செய்வ தற்கும், இவர்கள் விபரமறியாத அறிவற்ற இளைஞர்களை தம் பக்கம் ஈர்த்துள்ளது மிகப் பயங்கர மானதாகும்.

இந்த அடையாளங்களையும் ஆதாரங்களையும் நாம் எளிதில் புறக்கணிக்கவோ மறக்கவோ இயலாது. இவையனைத்தும் தக்ஃபீரி அமைப்புகள், இஸ்லாத்தின் எதிரிகளான அமெரிக்கா இங்கிலாந்து ஸியனிஸ ஆட்சி ஆகிய ஆணவச் சக்திகளுக்குச் சேவகம் செய்வதை எடுத்துக் காட்டுகின்றது. நிச்சயமாக இன்னும் பல அடையாளங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன. நாங்கள் அறிய வந்தது என்னவெனில், அமெரிக்கா வின் சரக்குப் போக்குவரத்து விமானமொன்று, ஐ.எஸ்.குழுவினருக்குத் தேவையான ஆயுதங்களை நிலத்தில் விழச் செய்திருக்கின்றது அல்லது கீழே இறக்கி விட்டிருக்கிறதுளூ அக்குழுவினருக்கு உதவுவதற்காக இதனைச் செய்திருக்கிறது. 'இது ஒரு தவறுதலால் நடந்திருக்கலாம்' என நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஆனால் அவர்கள் அவ்வாறு 5 முறை தொடர்ந்து செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தவறை அவர்கள் 5 தடவை தொடர்ந்து செய்தார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்!

இவையெல்லாம் ஐ.எஸ்.க்கு எதிரான ஒரு கூட்டணியை அமைத்ததன் பின் நடந்திருக்கிறது. இஃது, அப்பட்டமானதொரு பொய்யாகும். இந்தக் கூட்டணிக்கு வேறு சில தீய நோக்கங்கள் இருக்கின்றன. இந்த ஃபித்னாவை உயிர்ப்போடு வைக்க வேண்டும், இரு பக்கங்களையும் ஒன்றோடொன்று மோத வைத்து முஸ்லிம்களுக்கிடையே உள்நாட்டுச் சண்டையைத் தொடரச் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோளாகும். உண்மையில், இவர்களினால் இதனைச் செய்ய முடியாது.

நமக்கு செயல்படுத்த வேண்டிய சில மகத்தான கடமைகள் இருக்கின்றன. கண்ணியமிக்க கனவான் களாகிய நீங்கள் சில பரிகாரங்களையும் பொறுப்புகளையும் இந்த இரு நாட்கள் ஒன்றுகூடலில் சுட்டிக் காட்டினீர்கள். புறக்கணிக்கப்படமுடியாத இரண்டு-மூன்று பணிகளை நானும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது பணி, தக்ஃபீரி முன்னெடுப்பை வேரோடு கெல்லி எறியும் நோக்கத்தோடு, இஸ்லாத்தின் எல்லா சிந்தனைப் பிரிவுகளைச் சேர்ந்த உலமாக்களினால் ஓர் அறிவுரீதியான, தர்க்கப்பூர்வமான, எல்லாவற்றை யும் உள்ளடக்கிய ஓர் இயக்கம் உருவாக்கப்படுவதாகும். இந்த இயக்கமானது, ஒரு சில பிரிவுகளினால் மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாயிருக்க வேண்டும். 

ஸலஃபுஸ் ஸாலிஹீன் எனும் நேர்வழியில் நடந்த முன்னோர்களைத் தாம் பின்பற்றுவதாகக் கூறி தக்ஃபீரி கள், போலிச் சுலோகங்களோடு கோதாவில் நுழைந்தனர். இவர்கள் செய்யக் கூடிய செயல்களும், மேற் கொள்ளும் நடவடிக்கைகளும், அந்த நேர்வழி; நடந்த முன்னோர்களின் கோபத்தையும் விரோதத்தையும் கொண்டவை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இதனை, சமயம்-சிந்தனாவாதம்-பகுத்தறிவு என்பவற்றின் மொழியில் நாம் மக்கள் முன் வைக்க வேண்டும்.

நீங்கள் நமது இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த வழிபிறழ்ந்த சிந்தனைகளினால் பாதிப்படைந்த சில மக்கள் இருக்கின்றனர். பரிதாபத்திற்குரிய இம்மனிதர்கள், தாம் நல்ல செயல்களைச் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், பின்வரும் திருக்குர்ஆன் புனித வசனங்களின் பிரதிபலிப்புகள் ஆவர்: (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர் களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால் அவர்களோ, தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தனர். இதனால் அவர் களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகி விட்டன. (அல்குர்ஆன் 18:104-105)

அல்லாஹ்வின் வழியில் போரிடுவதாக இவர்கள் வீணாகக் கற்பனை செய்கிறார்கள். இத்தகையவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனிடம் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர் களுக்கும் பெரியார்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்து விட்டனர். எங்கள் இறைவனே! இவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுப்பாயாக! மேலும் இவர் களைக் கடுமையாகச் சபிப்பாயாக! (அல்குர்ஆன் 33:67-68). இவர்கள்தான் அத்தகைய மனிதர்களாவர்.

டமஸ்கஸின் பள்ளிவாசலில் மாபெரும் இஸ்லாமிய அறிஞரொருவரைக் கொலை செய்தவர்களும் இவர்கள் மத்தியில் இருக்கின்றனர். குண்டு வெடிப்புகளை நிகழத்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனான் போன்ற நாடுகளின் பல்வேறு நகரங்களில் அப்பாவி மக்களை இரத்தஞ் சிந்தச் செய்தவர்களும் இவர்களில் இருக்கின்றனர். இவர்கள்தான் இறைவனிடம் இதனைக் கூறுவார்கள்.

இன்னோரிடத்தில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்: ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. (அல்குர்ஆன் 7:38) தலைவர்களும் அவர்களைப் பின்தொடர்பவர்களும் தண்டிக்கப்படுவர்: சந்தேகமின்றி இது உண்மையானதும் சரியானதுமாகும். நரகவாசிகளில் ஒருவர் மற்றவர்க்கிடையில் பொருத்தமானதுமாகும். (அல்குர்ஆன் 38:64) இவர்களுள் ஒருவர் மற்றவருடன் சண்டையிடுவர்.

எனவே நாம் இவர்களைக் காப்பாற்ற வேண்டும். இளைஞர்களைப் படுகுழியில் விழாமல் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு உலமாக்களின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், உலமாக்கள்தான் புத்திஜீவிகளோடும் சாதாரண மக்களோடும் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆவர். எனவே, அவர்கள் இதனைச் செய்ய முன்வர வேண்டும். மகிமைமிக்க அல்லாஹ் தீhப்பு நாளன்று, 'நீங்கள் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்பான். அதற்கு பதில் கூறுவதற்காக இப்போதே செயல்பட வேண்டும்.

இரண்டாவது பணி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ஆணவக் கொள்கைகளினால் உலகில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும். இஃது உண்மையில் அவசரமானதொரு தேவையாகும். உலகில் வாழும் ஒவ்வொருவரும் அமெரிக்கா தூவும் விஷ வித்துக்களின் பங்களிப்பைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸியனிஸ ஆட்சி ஆகியவற்றின் உளவுத் துறை ஸ்தாபனங்கள் என்னென்ன கீழறுப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும். சதித் திட்டங்கள் ஆணவச் சக்திகளினால் பின்னப்பட்டு, தக்ஃபீரி அமைப்புகள் அவற்றிடமிருந்து பூரண ஆதரவையும் பணத்தையும் பெற்று செயல்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சதித் திட்டங்கள் ஆணவச் சக்திகளினாலேயே வகுக்கப்படுகின்ற அதேவேளை பிரதேசத்திலுள்ள அவற்றின் கைப்பொம்மை ஆட்சிகளிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்கின் றனர். இதன் விளைவாக, பரிதாபத்திற்குரிய வகையில் தக்ஃபீரி அமைப்புகளில் இணையும் இளைஞர்கள் நாசமாக்கப்படுகின்றனர். இவர்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பெரும் பிரச்சினைகளை உருவாக்குபவர் களாகி விடுகின்றனர்.

மூன்றாவது பணி, பாலஸ்தீன் பிரச்சினையில் அக்கறை கொள்வதாகும். பாலஸ்தீன், புனித பைத்துல் முகத்தஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளி பற்றிய பிரச்சினை ஓரங் கட்டப்படக் கூடாது. அவர்கள் இதனைத் தான் விரும்புகின்றனர். இஸ்லாமிய உலகம், பாலஸ்தீன் பிரச்சினையைப் புறந் தள்ளிவிட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஸியனிஸ்டுகளின் அமைச்சரவை அண்மையில் பாலஸ்தீன் ஒரு யூத நாடு என அறிவித்தது. இதற்கு அவர்கள் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அதனைப் பகிரங்க மாக அறிவிக்கின்றனர். இஸ்லாமிய உலகத்தினதும், பாமர மக்களினதும், முஸ்லிம் நாடுகளினதும் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, புனித பைத்துல் முகத்தஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளிவாசலைக் கைப்பற்றியதன் பின்னர், பாலஸ்தீனர்களை முடிந்த அளவு பலவீனப்படுத்தியதன் பின்னர், இப்போது அதனைப் பிரகடனப்படுத்துகின்றனர். நாம் இதில் அக்கறை செலுத்த வேண்டும். எல்லா மக்களும், குறிப்பாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்கள் அரசாங்கங்களிடத்தில் பாலஸ்தீன் பிரச்சினை பற்றி அக்கறை கொள்ளும்படி கேட்க வேண்டும். இது முக்கியமானதும் மிகப் பெரிய பொறுப்பு மாகும்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசில் அரசும் மக்களும் இந்த நம்பிக்கையில் பங்கு கொள்கின்றார்கள். ஆரம்பத் திலிருந்தே இஸ்லாமிய அரசும், நமது மகத்தான இமாமும், பாலஸ்தீனிற்கான ஆதரவை அறிவிப்பு செய்து இருப்பதுடன், இன்றும் அந்த கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அதேபோன்று, ஸியனிஸ ஆட்சிக்கான எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள். இன்று வரை அந்த கொள்கை தொடர்ந்;து வருகின்றது. இப்போது 35 ஆண்டுகளாகின்றனளூ அதிலிருந்து நாம் விலகிச் செல்லவில்லை;. நமது மக்களும் கூட தங்களின் முழுமையான ஆர்வத்தோடு அதனை ஆதரித்து வருகின்றார்கள்.

சில சமயங்களில், இந்த வகையில் தங்களது கோரிக்கைகள் வழங்கப்படாத போது, பல இளைஞர்கள் எனக்கு கடிதம் எழுதுகின்றார்கள். 'ஸியனிஸ ஆட்சிக்கெதிராக முன்வரிசையில் இணைந்து போரிடுவதற்கு எங்களை அனுமதியுங்கள்' என வற்புறுத்தும் விதத்தில் வேண்டுகின்றார்கள். ஸியனிஸ்டுகளுக்கெதிராகப் போராட நமது மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். ஈரான் இஸ்லாமியக் குடியரசு அதனை நிரூபித்தும் காட்டியிருக்கின்றது.

அல்லாஹ்வுடைய அருளினாலும் உதவியினாலும், நாம் பிரிவுகளுக்கிடையிலான முரண்பாட்டின்; தடையைத் தாண்டி விட்டோம். ஷீஆ குழுவினரான லெபனானின் ஹிஸ்புல்லாஹ்விற்கு நாம் உதவினோம். அதே விதத்தில் நாம் சுன்னிகளான ஹமாஸுக்கும் இஸ்லாமிய ஜிஹாதுக்கும் உதவினோம். நாம் அதனைத் தொடர்ந்து செய்து வருவோம். நாம் இந்தப் பிரிவுகளின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டு கிடக்கவில்லை. ஷீஆ, சுன்னி, ஹனஃபி, ஹம்பலி, ஷாஃபிஈ, ஸைதி என்ற பிரிவினர்க்;கிடையில் நாம் பாகுபாடு காட்ட வில்லை. எல்லா பாலஸ்தீன் பகுதிகளும் ஆயுதபாணியாக வேண்டும் என்பதுதான் நமது இலட்சியமாகும்.

நமது முக்கிய குறிக்கோளை முன்னிறுத்தி நாம் உதவி வழங்கினோம். காஸாவிலுள்ள நமது பாலஸ்தீன் சகோதரர்களின் புஷ்டிகளை வலிமைப்படுத்த எம்மால் முடிந்தது. அல்லாஹ்வின் பேரருளினால் நாம் அதனைத் தொடருவோம். இன்னொன்றும் கண்டிப்பாக நடக்க வேண்டும் என நான் அறிவிக்கிறேன்.  காஸாவைப் போன்று மேற்கு கரையும் ஆயுதபாணியாக வேண்டும்ளூ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.




அன்புச் சகோதரர்களே! உங்களுக்கு நான் சொல்கிறேன்ளூ அமெரிக்காவின் மேல் மினுக்கம் உங்களைத் தடுத்து நிறுத்தக் கூடாது. எதிரி பலவீனமடைந்து விட்டான். இஸ்லாத்தின் எதிரியான ஆணவச் சக்திகள், கடந்த 100-150 ஆண்டு காலப் பகுதியில் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுஇப்போது வலிமை குன்றி விட்ட தாகவே காணப்படுகின்றன. ஐரோப்பாவிலுள்ள காலனித்துவ அரசாங்கங்களைப் பாருங்கள்!அவை பல்வேறு பொருளாதார, அரசியல், பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இன்று அவற்றின் அரசுகள் பல பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றன. அமெரிக்காவின் நிலை மற்றவற்றை விட மோசமானது. அஃது, ஒழுக்கவீழ்ச்சி, அரசியல்மோதல்கள், பயங்கரமான நிதி-பொருளாதாரச் சிக்கல்கள் என்பனவற்றுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. அதனது வல்லரசு அந்தஸ்திற்கு பங்கமும், ஆபத்தும் வரக்கூடிய விதத்தில், இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் நிகழ்வுகளை அது சந்தித்து வருகிறது.

அத்துடன், கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது, ஸியனிஸ அரசும் பலவீனமடைந்து விட்டது. 'நைல் முதல் யூப்ரடீஸ் வரை' என்ற சுலோகங்களை முழங்கி, முழுப் பிரதேசத்தையும் தங்களுக்குச் சொந்த மாக்கிக் கொள்ள அவர்கள் முயன்றனர். ஆயினும், காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களின் சுரங்கப் பாதை களை 50 நாட்கள் போராடியும் கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் 50 நாட்களாக அனைத்து சக்தி களையும் பயன்படுத்தி, பூமிக்கடியில் அமைக்கப்பட்ட சுரங்க வழிகளை நாசப்படுத்த, அழிக்க, கைப்பற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும் தோல்வியடைந்து விட்டனர். எவ்வாறு நிலைமை மாற்றமடைந்தது என்பதைப் பாருங்கள்! முழு அரபு பூமியையும் கையகப்படுத்தத் திட்டமிட்ட இந்த பயங்கரவாத ஆக்கிர மிப்பு அரசு, இப்போது எத்துணை பலவீனப்பட்டு விட்டது என்பதைப் பாருங்கள்!

எதிரிகளின் பிரச்சினைகள பலவாகும். இஸ்லாத்தின் எதிரிகள், ஈராக்கிலும்;, சிரியாவிலும், லெபனானிலும் விரக்தி கண்டிருக்கின்றனர். அவர்கள், பல்வேறு பகுதிகளிலும் தமது இலக்குகளை அடைய முடியாமல் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர். ஈரான் இஸ்லாமியக் குடியரசை அணுவாற்றல் பிரச்சினையில் எதிர் கொண்டு, தங்கள் காலடியில் விழ வைப்பதற்காக அமெரிக்காவும், ஐரோப்பாவிலுள்ள காலனித்துவ நாடுகளும் ஒன்று சேர்ந்து, தமது எல்லா சக்திகளையும் உபயோகித்தனர் என்பதை நீங்கள் கண்டீர்கள்! ஆனாலும் அவர்கள் தோல்வி கண்டு விட்டனர். தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவிக் கொள்வர்.

இதுதான் மறு தரப்பினரின் பலவீனமாகும். ஆனால் அல்லாஹ்வின் பேரருளால் நாளுக்கு நாள் நீங்கள் வலிமை பெறுவீர்கள்! எதிர்காலம் உங்களுக்குச் சொந்தமானதாகும். இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை! (அல்குர்ஆன் 12:20-22)
அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வின் பெருங் கருணையும் நல்லாசிகளும் உங்கள் மீது பொழிவதாக!

(தமிழில்: இப்னு புகாரி)