Sunday, March 29, 2015

இஸ்லாமியப் புரட்சிக்கு வயது 36


இந்தத் தலைப்பில் கனடாவின் கிரஸன்ட் இன்டர்நெஷனல் சஞ்சிகையின் பிப்ரவரி 2015 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் ஜஃபர் பங்காஷ;, சென்ற பிப்ரவரி 11ம் திகதி 36 ஆண்டுகள் நிறைவடைந்த ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, ஏகாதிபத்திய மற்றும் ஸியனிஸ சக்திகளின் இடைவிடாத சதித்திட்டங்கள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு மத்தியிலும் எவ்வாறு 36ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றது என்பது பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையை விவரிக்கிறார். அதற்கு ஈரானிய மக்களின் இஸ்லாத்துடனான இறுகிய பிணைப்பும் அதன் முத்தகீ தலைமைத்துவத்தின் தக்வாவும்தான் காரணம் என அவர் கூறுகிறார்:

'உலகில், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் நிறைந்த மத்திய கிழக்கில், அத்துணை அமைதி குலைவுக்கு மத்தியிலும் ஒரு நாடு தீபச்சுடராகவும் நிலைபெற்றதாகவும் விளங்குகிறது என்றால் அது இஸ்லாமிய ஈரான்தான். மேற்குநாடுகளினால் பல்லாண்டுகளாக சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகள், வெளிஆக்கிரமிப்பு, பெருமளவிலான உள்நாட்டு hநச வேலைகள் என்பனவற்றை எதிர்கொண்டுங் கூட, இன்றும் இந்த இஸ்லாமிய நாடு நீடித்திருக்கின்றது என்பதல்லாமல், நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பது உண்மையில் நமது விஷேச கவனத்திற்குரியதாகும். மற்ற நாடுகளாயிருந்தால் எப்பொழுதோ வீழ்ந்து போயிருக்கும்.

ஈரானின் திடநிலைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என்ன? அதனிடம் பிரம்மாண்டமான எண்ணெய் மற்றும் வாயு வளம் இருப்பதனாற்றான் ஈரான் எல்லாச்சூறாவளியிலும் தாக்கு பிடித்து நிற்கிறது என்பது தவறான அனுமானமாகும். காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்: அது இஸ்லாம்|. ஈரான் தனது மக்களின்   ; வ த ற ; கு ம ,அடக்கியொடுக்கப்பட்டவர்களை கேடிலா ன்முறையில் கவனிப்பதற்குரிய செயலொழுங்கு முறையொன்றை ஸ்தாபிப்பதற்கும் இஸ்லாமிய வழியையே பின்தொடர்ந்து செல்கின்றது. இஸலாமிய ஈரான் முழுநிறைவானதன்று என்பது உண்மைதான். ஆயினும் அது மற்றெல்லா நாடுகளையும் விடச் சிறந்தது எனலாம். சவூதி அரேபியா அல்லது பாகிஸ்தான் போன்றல்லாமல்,  ஈரானின் இஸ்லாத்துடனான பற்றுதலும் ஒட்டுதலும் மேலெழுந்த வாரியான ஒன்றன்று. மாறாக, இஸ்லாமியக் கொள்கை கோட்பாடுகளை அடியொற்றி வாழ்வதற்கான உண்மையான ஈடுபாடு அங்கு காணப்படுகிறது. இதனை அதன் தலைவர்கள் முதல் அடிமட்டத்திலிருப்பவர்கள் வரை, வழிநெடுக கசிந்துசெல்லும் எளிமைப் போக்கிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய ஈரானின் மற்றுமிரு குறிப்பிடத்தக்க அம்சங்கள், வெளி செல்வாக்கு அல்லது தலையீட்டிலிருந்து அதன் முழுமையான சுதந்திரமும், வெளிநாட்டு கடன் இல்லாத தன்மையும் ஆகும். எந்தவொரு அளவுகோலைப் பயன் படுத்தினாலும், இவை முற்றிலும் முதன்மையான சாதனைகளாகும். எந்தவொரு நாடும் சுதந்திரமான திறனாய்வு முடிவு எடுப்பதை, சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற மேற்கத்திய சக்திகள் சகித்துக் கொள்ளாத   அவை, இணங்க மறுக்கும் நாடுகளை வழிக்கு கொண்டுவர, அவற்றின் பிரம்மாண்டமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தும். அவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஈரான் மீது அதனைப் பிரயோகித்தும், படுதோல்வியைத் தழுவிக் கொண்டன. இதேபோன்று, கொள்ளைக்காரர்களும் இரத்தம் உறிஞ்சிகளும் மேலாதிக்கம் செலுத்தும் சர்வதேச நிதியமைப்பு முறைக்குள் ஈரான் அங்கம் வகிக்காததன் காரணமாக, பிறரை ஓட்டாண்டியாக்கி ஒரு சிலரின் கைகளில் செலவத்தை குவியச் செய்யும் முதலாளித்துவ நிதிநிலை ஏய்ப்பிலிருந்து அது றமையுடன் தவிர்ந்து கொண்டது. உண்மையான இஸ்லாமிய அடிப்படைகளைப் பின்பற்றுவது மட்டுமே, மக்கள் இத்தகைய அழுத்தங்களை எதிர்த்து நிற்கச் செய்கின்றது. ஈரான் அத்தகைய மாண்புகளின் கண்கூடான பிரதிபலிப்புÉ ஏனைய முஸ்லிம்கள் தமது பிரிவு மனப்பான்மையுடன் கூடிய அரைக்கண் பார்வையை அகற்றிக்கொண்டல்  ; முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க செயல்வடிவம் அதுவாகும்.'


No comments:

Post a Comment