Friday, August 8, 2014

அல் - அக்ஸா, பலஸ்தீன் விவகாரத்தில் இமாம் கொமெய்னியின் பார்வை



இமாம் கொமெய்னியின் (ரஹ்) வின் இருபத்தைந்தாவது
நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (04/06/2014) இக் கட்டுரை பிரசுரமாகின்றது. 

மர்லின் மரிக்கார் 

இஸ்லாமிய மக்கள் புரட்சியின் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசை ஸ்தாபித்தவரே இமாம் கொமெய்னி (ரஹ்) ஆவார். இவர் வபாத்தாகி இற்றைக்கு இருபது வருடங்களாகிவிட்டன.
என்றாலும் அவர் இஸ்லாமிய புரட்சியின் மூலம் இட்ட அடித்தளம் ஆழ, அகலமானது. உறுதியான பலம்மிக்கது. இதன் பயனாக ஈரான் எவரது தயவிலும் தங்கி நிற்காது சுயமாக எழுந்து நிற்கும் நாடாக விளங்குகின்றது.
அதேநேரம் வல்லரசுகளின் அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் தலை சாய்க்காத நாடாக நிமிர்ந்து நிற்கின்றது. என்னதான் அழுத்தங்களும், நெருக்குதல்களும் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது மத்திய கிழக்கில் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் நாடாகவும் திகழுகின்றது ஈரான்.
இதேவேளை இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனை, மற்றும் செயற்பாட்டுத் தாக்கம் இப்போதும் உலகில் பிரதிபலிக்கவே செய்கிறது. அவர் முஸ்லிம்களின் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் பெரிதும் வலியுறுத்தினார். அதுவே முஸ்லிம் உலகின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக அமையும் என்பதையும் அவர் பலமுறை சுட்டிக்காட்டினார்.
 
இதனடிப்படையில் முஸ்லிம்களது ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவென அவர் ஒற்றுமை வாரத்தைப் பிரகடனப்படுத்தினார். இவ்வாரம் இஸ்லாமிய வருடக் கணிப்பில் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் நடுப்பகுதியில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாரத்தில் முஸ்லிம்களது ஒற்றுமையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலான மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன. அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்கள் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருந்தார். அடக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மானசீக ரீதியாக ஆதரவும் நல்கினார்.
அந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்), அல் அக்ஸாவும், பலஸ்தீனமும் யூதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவை முஸ்லிம்களின் பூர்வீக சொத்து என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அது தொடர்பான கருத்துக்களையும் திட்டங்களையும் அவர் முன்வைத்தார். அல் - அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை, அவர் முழு முஸ்லிம்களினதும் பிரச்சினையாகவே பார்த்தார். 

 
ஏனென்றால் அல் அக்ஸா என்பது உலகில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமையான இரண்டாவது பள்ளிவாசல். இது முழு முஸ்லிம்களுக்குமான மூன்றாவது புனித தலம். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகையும் அல்லாஹ்விடத்தில் ஐநூறு தொழுகைகளுக்குச் சமமாகும்.
அதே நேரம் சர்வவல்லமை மிக்க அல்லாஹ்தஆலாவின் இறைத்தூதர்கள் பலரும், இறை விசுவாசிகளும், வாழ் ந்து வழிபட்ட புனித பிரதேசம் இது.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி ஒரே இரவில் ‘இஸ்ரா’ பயணம் மூலம் மக்காவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலமும் அதுவே. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்கான மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த இடமும் அல் - அக்ஸாவேதான்.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் அல்- அக்ஸாவும், பலஸ்தீனமும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய புனித பூமி. இதனையே யூதர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இஸ்ரேலை +(திrதிருக்கிறார்கள். பலஸ்தீனின் பூர்வீக மக்களான முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கியுள்ளார்கள். அவர்களை அடக்கி, ஒடுக்கி வருகின்றார்கள். துன்புறுத்துகின்றார்கள்.
இதனால் தான் இமாம் கொமெய்னி (ரஹ்) ஒரு முறை “அல்- அக்ஸா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினையோ, அல்லது ஒரு நாட்டுக்குரிய பிரச்சினையோ அல்ல. அது தற்கால முஸ்லிம் உலகுடன் மாத்திரம் தொடர்புபடும் பிரச்சினையுமல்ல. மாறாக அது உலகிலுள்ள ஏகத்துவவாதிகளினதும், கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இறை விசுவாசிகளினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முன்னெடுக்கப்படும் அறப் போராட்டத்திலேயே அல் - அக்ஸாவின் மீட்சியும், விடுதலையும் தங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இதே நேரம் “அல்- அக்ஸாவையும், பலஸ்தீனையும் மீட்டெடுப்பது தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் தேசமும் கவனம் செலுத்துவது அவசியம்” என்றும் அவர் பிறிதொரு சமயத்தில் வலியுறுத்தினார்.
இதேவேளை ‘அல்- அக்ஸாவிலிருந்தும், பலஸ்தீன இஸ்லாமிய பூமியிலிருந்தும் இன்ஸா அல்லாஹ் இஸ்ரேலிய யூதர்கள் விரட்டியடிக்கப்படுவர். அப்போது நாமனைவரும் ஒன்றாகச் சென்று அல் அக்ஸாவில் ஒற்றுமையாக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இவ்வாறு அல்- அக்ஸா தொடர்பாகவும், பலஸ்தீன் குறித்தும் நிறையவே கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைத்திருக்கிறார் இமாம் கொமெய்னி (ரஹ்). அவை உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக முஸ்லிம் உலகிலும் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
என்றாலும் அத்தோடு நின்றுவிடாது அல்- அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை உலகிற்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் புரியவைப்பதற்கா கவும், தெளிவுபடுத்துவதற்காகவும் அவர் சர்வதேச குத்ஸ் தினத்தையும் பிரகடனப்படுத்தினார்.
ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையிலான புரட்சி வெற்றி பெற்ற பின் வந்த முதலாவது ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையே சர்வதேச குத்ஸ் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் வருடா வருடம் ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊர்வலங்களும் மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன.
ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவரும் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மாநாடுகளில் உரையாற்றி இருக்கிறார்கள். அவ்வாறு உரையாற்றுவதற்குத் தவறிய ஈரானிய தலைவர் எவருமே இல்லை. அந்தளவுக்கு அல்-அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை உலக மயப்படுத்துவதில் ஈரான் பங்களிப்பு செய்து வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக பலஸ்தீனர்களின் விவகாரம் என்றிருந்த அல் அக்ஸா பலஸ்தீன பிரச்சினை உலக முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் பாரிய பங்களிப்பு செய்துள்ளன என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
 நன்றி: தினகரன்


Wednesday, April 16, 2014

ஓர் உரத்த சிந்தனை: ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?

தென்னாஃபிரிக்காவின் அல்-பலாக்ஹ் பத்திரிகை ஆசிரியர் வினவுகிறார்:

ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?
 

வாழ்க்கையில் வேறெதனையும் உருப்படியாகச் செய்யத் தெரியாத மவ்லவிமார்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களும், இப்போது புதியதொரு விளையாட்டை ஆடத் துவங்கி யிருக்கின்றனர். அது என்னவென்றால், நமது ஷிஆ முஸ்லிம் சகோதரர்களை 'காஃபிர்கள்' என அழைப்பது. அல்லாஹு சுபுஹானஹுத் தஆலா குர்ஆனிலே, நாம் எந்த வொரு முஸ்லிமையும் ஒரு 'காஃபிர்;' என அழைக்கக் கூடாது எனத் தெளிவாக கூறியுள்ளான். (அல்-குர்ஆன் 4:94); நமது உயிரிலும் மேலான ரசூலுலலாஹ் (ஸல்) அவர்கள், சக முஸ்லிம்களை 'காஃபிர்கள்' என அழைப்பதினின்றும் நம்மைத் திட்டவட்டமாகத் தடுத்துள்ளார்கள். ஆயினும், இந்த அற்பத்தனம் கொண்ட, சிறிய உள்ளம் படைத்த புரோகிதர்கள் - முஸ்லிம் உலகின் அறிவுக் குள்ளர்கள், முஸ்லிம் என்றால் யார், யாரில்லை என நிர்ணயிக்கும் மாபெரும் பொறுப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுப்பு என்ற அந்தஸ்திலிருந்து அல்லாஹ்வை கழற்றி எறிந்து விட்டு, அந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கின்றனர். மேலும் அதே நேரம், நமது நபியவர்களின் கண்டிப்பான உத்தரவையும் ஒதுக்கித் தள்ளுவதற்கும் மிதித்துச் செல்வதற்கும் துணிந்திருக்கின்றனர்

வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஏனைய தருணங்களிலும், ஷிஆ முஸ்லிம்களை  'காஃபிர்கள்' எனத் தாக்கி, பிரசங்கங்கள் செய்வதற்கும் (அத்துடன்;-அல்லது) தங்கள் வழமையான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதற்கும் முனைகின்றனர். அவர்களின் அர்-ரஷீத், மஜ்லிஸ், சவுத்துல் இஸ்லாம். இன்ன பிற போன்ற (தென்னாஃபிரிக்காவிலிருந்து வெளிவரும்) பத்திரிகைகளில் ஷிஆக்களை வெளிப்படையாகப் பழித்துரைக்கும் ஒரே மாதிரியான-முழுக்க வெறுப்பை உமிழும் கட்டுரைகள் நிறையவே காணப்படுகின்றன.

இமாம் குமைனி 'ஷிஆ' என அடைமொழியிட்டு கண்டிக்கப்படுகிறார். இமாம் குமைனி சாதித்ததைப் போன்ற எதனையும் இஸ்லாத்திற்காக நமது 'சுன்னி' மவ்லவிகளுள் எவராவது சாதித்திருக்கின்றாரா? இந்த சிறிய உள்ளம் படைத்த, கீழ்த்தரமாக சேற்றை அள்ளி வீசும் நமது புரோகிதர்கள், வாய்ச் சவடால்களில் மட்டுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள்; நமது தீனுல் இஸ்லாத்திற்காக செயல்ரீதியாக எதனையும் செய்ய இயலாதவர்கள். இன்றைய இளைஞர்களும், குர்ஆனையும் நபியவர்களையும் நேசிக்கும் அனைவரும், தர்க்கரீதியான வாதங்களையும் சரியான ஆதாரங்களையும் விரும்புகின்றார்கள் என்பதால், எளிதாக இந்த புரோகிதர்களுடன் சலிப்படைந்திருக்கின்றார்கள்.  

'அஹ்லுல் கிப்லா' (கிப்லாவை முன்னோக்கும் கூட்டத்தினர்)



திருநபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள்-ஃபுகஹாக்கள், (முஸ்லிம்களை 'காஃபிர்கள்என விளிக்கும்) தங்களின் தக்ஃபீர் முன்முடிபு மனப்பான்மையை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தனர்; மேலும் அவர்கள் இறுதியில், 'லா நக்ஃபுர் அஹதன் மின் அஹ்லில் கிப்லா' (அஹ்லுல் கிப்லாவான எவரையும் ஒரு 'காஃபிர்;' என நாம் தீய குறியிட முடியாது; அதாவது, தனது தொழுகையை நிறைவேற்ற எவரொருவர் -ஆணோ பெண்ணோ- கிப்லாவை முன்னோக்கிறாரோ, அவரை ஒரு  'காஃபிர்' என அழைக்க முடியாது) என்று பிரகடனஞ் செய்தார்கள்.

நீண்ட அடர்ந்த தாடிகளைக் கொண்ட  இந்த 'இறையடியார்'களிடத்தில் நாம் கீழ்க்கண்ட கேள்வியை முன்வைக்கலாமா? 'ஷிஆக்கள், ஸலாத் எனும் தங்கள் தொழுகையை நிறைவேற்ற தங்களின் கிப்லாவாக எதனை முன்னோக்கின்றார்கள்? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையையா அல்லது மக்காவிலுள்ள கறுப்பு இறை இல்லத்தையா?'

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஹதீதொன்று புகாரி கிரந்தத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: 'எவரொருவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்'. அதன்படிசுன்னிக்களைப் போன்றே இதே கலிமாவைப் பிரகடனஞ் செய்து ஏற்றுக் கொள்கின்ற ஷிஆக்கள், (இந்த ஹதீதின் பிரகாரம்,) ஜன்னத்தில் பிரவேசிப்பார்களா அல்லது மாட்டார்களா? என்பதை, மார்க்கரீதியாக ஓரக்கண்-கோணல் பார்வை கொண்ட மதகுருமார் நமக்கு சொல்லட்டும்! நமது நபி (ஸல்) அவர்கள், 'ஷிஆக்களைத் தவிர எவரொருவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்' என்று சொல்லவில்லை என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. .

பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்கள்
 
எவரெல்லாம் நமது தூய தீனுல் இஸ்லாத்தின் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்களோ, அத்தகைய முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் அல்லாஹு சுபுஹானஹுத் தஆலாவின் பெயராலும் அவனது அன்புத் தூதர் (ஸல்) பெயராலும் அழைப்பு விடுக்கின்றோம்: 'தங்களை மவ்லானாக்கள், ஷெய்குகள், இமாம்கள் என வீம்பு பேசி ஜாலம் செய்கின்ற இந்த 'மார்க்க

வியாபாரிகளை - பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்களை - நம் மத்தியிலிருந்து அகற்றி விடுவதற்கு துணிந்து செயல்படுங்கள்!

இந்த 'மார்க்க வியாபாரி'களுக்கு தவறுதலாக எந்தளவுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் வழங்குகிறோமோ அல்லது எந்தளவுக்கு அவர்கள் மீது அக்கறை செலுத்துகிறோமோ, அவர்கள் அந்தளவுக்கு நம் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்! துருக்கியின் கமால் அத்தாதுர்க் அந்தக் கால மவ்லவிமார்களுக்கு என்ன செய்தாரோ அதனை நாம் எல்லோரும் செய்வோமாக! அப்போதுதான், முஸ்லிம் சமூகத்தில் நாம் சாந்தியையும் சமாதானத்தையும் காண்போம்; இஸ்லாம் மீண்டும் ஒருமுறை செழித்தோங்கும்!

இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் உலகின் நகைப்பிற்கு உரியதொன்றாய் ஆகிவிட்டது! இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் அவமதிக்கப்படு மொன்றாய் தலை குப்புற வீழ்ந்துவிட்டது!
நமது நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கை செய்து, நமது சக முஸ்லிம்களுடன்எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி- நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டவட்டமான வழிகாட்டுதலை, நமக்கு வழங்கி இருக்கிறார்கள்: பெருமானார் (ஸல்)  கூறினார்கள்: 'மூன்று விஷயங்கள் மார்க்கத்தில் மிகவும் இன்றியமையாதவையாகும்: (1) 'அல்லாஹ்;வைத் தவிர வேறு இறைவனில்லை' என மொழியும் ஒரு மனிதனைக் கொல்வதினின்றும் தவிர்ந்து கொள்ளுங்கள்; (2) அவன்/அவள் எந்த வொரு பாவத்தைச் செய்தாலும் சரியே, அவனை/அவளை ஒரு நிராகரிப்பாளர் எனப் பிரகடனஞ் செய்யாதீர்கள்; (3) அவன்/அவள் உடைய எந்த வொரு செயலுக்காகவும், அவனை/அவளை இஸ்லாத்திலிருந்து தூர விலக்கி வைக்காதீர்கள்.' (அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீத் சுனன் அபூதாவூத் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
(நன்றி: அல்-பலாக்ஹ் பாகம் 25, இல.2 மே-ஜூன் 2000 பக்.3)
(தமிழில்: 'இப்னு புகாரி')

Wednesday, April 2, 2014

சவூத் குடும்பம் ஏன் ஈரானைப் பயப்படுகின்றது-வெறுக்கின்றது?




முதலாவது காரணம் மார்க்க ரீதியிலானது. சவூதி அரேபியாவின் உத்தியோகப்பூர்வ (முறைமைப்பட்ட) மதம் வஹ்ஹாபிஸமாகும். இந்த கடுமுனைப்பான உச்சநிலை திரிபுக் கொள்கையின்படி, ஷீஆ இஸ்லாம் என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒரு மத மாற்றமாகக் காணப்படுகிறது. இஸலாமிய 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'க் கணிக்கப்படுபவர்கள் ஷீஆக்கள் மாத்திரமல்லர். சுன்னிகள் உட்பட, வஹ்ஹாபி அடிப்படை வாதக் கோட்பாட்டிற்கு ஒத்திருக்காதவர்களெனக் கருதப்படும், எல்லா வடிவங்களைக் கொண்ட முஸ்லிம்களும், அத்தோடு கிறிஸ்தவர்களும், ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும்- அனைவரும், அவ்வாறே 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'வே கணிக்கப்படுகிறார்கள்ளூ மேலும் அவர்கள், ஈவிரக்கமில்லாமல் தாக்கப்படுகின்றார்கள்- மரணத் தறுவாய் அளவுக்குக் கூட. உருக் குலைந்த வஹ்ஹாபி நம்பிக்கையின்படி, ஷீஆ முஸ்லிம்கள் 'மத நம்பிக்;கை அற்றவர்களுள்' மிகவும் மோசமானவர்கள். இதனாற்றான், முக்கியமாக வஹ்ஹாபி கொள்கைவாதத்தினால் உந்தப்பட்ட, சிரிய அரசுக்கு எதிரான ஆயுதக் கோஷ்டிகள் (இவர்கள் தக்ஃபீரிகள் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கப்படுகின்றார்கள்), சிரியா சண்டையில், ஷீஆக்களையும் நெருங்கிய உறவுள்ள அலவிகளையும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளுக்குள் ஆட்படுத்துகின்றனர். வரலாற்றுக் காரணங்களினால் இன்று இந்த பிரதேசத்திலும் உலகிலும், ஈரான்தான் ஷீஆ இஸ்லாத்தின் மத்தியத் தலமாக விளங்குகிறது. இதனால், சவூதிகளின் பகைமைக்கு மத்தியத் தலமாக விளங்கும் தகுதியையும் ஈரான்தான் பெற்றுக் கொள்கிறது. இரண்டாவது காரணம், ஈரானின் இஸலாமியப் புரட்சியைப் பின்னோக்கிச் செல்கின்றது. 1979ல் ஈரானியப் புரட்சி வெற்றி கண்டு, அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருந்த சர்வாதிகாரி முஹம்மத் றிஸா ஷா பஹ்லவி தூக்கி எறியப்பட்ட போது, அந்தக் குழப்பம் பிரதேசத்திலிருந்த எல்லா எதேச்சதிகார ஆட்சியாளர்களையும் பீதி கொள்ளச் செய்தது. ஏனெனில், அடக்குமுறை ஆட்சிகளுக்கெதிராக மற்ற மக்களும் கிளர்ந்தெழுவதற்கான உணாவுரீதியான தாக்கத்தை அந்தப் புரடசி வழங்கியது. இதனாற்றான், சவூதி ஆட்சியாளர்கள் உடனடி பதில் நடவடிக்கையாக 1980 ஆரம்பத்தில் பாரசீக வளைகுடா பாதுகாப்பு உடன்படிக்கையை உருவாக்கினார்கள், இதில் மற்ற முடியாட்சிகளான குவைத், கதர், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பனவும் இடம் பெற்றன.


உண்மையில், ஈரானுடனான சவூதி ஆட்சியாளர்களின் விரோதப் போக்கு, ஈரானியப் புரட்சியின் பின்னர் இன்னும் தீவிரமாகியே காணப்படுகிறது. செயல் மூலம் அதிகளவுக்கு நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கும் ஈரானின் ஜனநாயக தகுதிச் சான்றுகள், தனது எதேச்சதிகாரத்திற்கு உலை வைக்கும் ஓர் அச்சுறுத்தல் என சவூத் குடும்பம் காண்கிறது. பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு வளர்கின்ற அளவுக்கு தங்கள் இருப்பிற்கான ஓர் அச்சுறுத்தல் இருப்பதாக சவூதி ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். மேற் குறிப்பிட்டவாறு, பிரதேசம் எங்குமே ஈரானின் கரம் காணப்படுகிறது எனச் சந்தேகப்படும் பிரிட்டனுக்கான சவூதித் தூதுவரின் கூற்று, (அதே நேரம் அவ்வாறில்லை யென்ற போதிலும்), ஈரான் பற்றி சவூத் குடும்பத்திற்கு இருக்கும் சித்தப் பிரமை கொண்ட மனோ பாவத்தை விளங்க வைக்கிறது. மூன்றாவது காரணம், பெருமளவுக்கு லௌகீகம் சம்பந்தப்பட்டதாகும். ஆயினும், ஒரு வேளை அதுதான் சவூத் குடும்பத்தின் இறுதியான அக்கறை யாயிருக்கலாம்: அஃது, எண்ணெய் மற்றும் வாயு பொருளாதாரம் பற்றிய அதிமுக்கிய பிரச்சினை. ஓபெக்கின் 12 உறுப்பினர் நாடுகளுள் முன்னணியில் இருக்கும் மூன்று உற்பத்தியாளர்கள் சவூதி அரேபியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளாகும். அதிக முக்கியத்துவம் வாய்;ந்தது, ஈரானின் பிரம்மாண்டமான வாயு வளம். இது இன்னும் ஒரு பொருளாதார வளமாகப் பயன்படுத்தப்படவில்லை. இயற்கை வாயு என்பது அடுத்த நூற்றாண்டில் எதிர்காலத்தைய எரிபொருளாக விளங்கப் போகிறது. குழாய்களின் மூலம் எடுத்துச் செல்வதற்கும், கிடைக்கும் சக்தி அளவைப் பொறுத்தவரையிலும், இது அதிக பயன்பாட்டுத் திறன் வாய்ந்த ஓர் ஆற்றல் வளமாகத் திகழ்கிறது. சுற்றுச் சூழலைப் பொறுத்தவரையிலும், இயற்கை வாயு எண்ணெய்யை விட மிகச் சுத்தமான எரிபொருள். இது எரிவதனால் மிக குறைந்த தீங்குகளைக் கொண்ட உபபொருட்களையே தருகிறது. பூமியின் மீது அறியப்பட்ட மிகப் பெரிய அளவிலான இயற்கை வாயு சேமிப்புத் தளம் பார்ஸ் படிநிலம்தான்ளூ இதனை ஈரான்தான் கைவசம் வைத்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது. வர்த்தகத் தடைகள் அகற்றப்படுவதன் வாயிலாக ஈரானின் சர்வதேச உறவுகள் இயல்புநிலையை அடையுமானால், அந்நாடு இப்போதை விடவும் வல்லமை மிக்க உலகளாவிய ஆற்றல் வள நாடாக மாறும் சாத்தியம் உண்டு. குறிப்பிடத்தக்க விதத்தில் வணிகத் திறனுடனான முக்கியத்துவம் என்னவென்றால், (ஓபெக் உறுப்பினர் அல்லாத) ரஷ்யாவுடன் ஈரானும் ஐரோப்பியச் சந்தைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை நிலையைப் பெற்றுக் கொள்ளும்.
அடக்கி வைக்கப்பட முடியாத மனிதத் தேவைகள் காரணமாக மாறாமல் எகிறும் இந்த முன்னேற்றத்தை, தனக்கான ஓர் அவசரமான அச்சுறுத்தலாக சவூத் குடும்பம் காண்கிறது. சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறையவே கிடைக்கின்றதுளூ இயற்கை வாயு மிகக் குறைவாகவே கிட்டுகின்றது. எனவே, ஆற்றல் உற்பத்தி நாடு என்ற வகையில், சவூதியின் வணிகத் துறை முக்கியத் தகைமை தேய்வுறுகின்ற அதே வேளை, ஈரான் அதன் விசாலமான இயற்கை வாயுப் படிவங்களின் காரணமாக மேலும் வளர்ச்சியடையும். .சவூதிக் கண்ணேட்டத்தின் பிரகாரம், எப்படியாவது ஈரான் தனது சாத்தியக் கூறான ஆற்றல் செல்வத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியாமல், எல்லா வழிகளிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபியா கடன் வாங்கிய கால எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் எண்ணெய் சேமிப்பை முடிவில் ஈரானின் வாயுச் செல்வம் விஞ்சி விடும். ஏற்கனவே, சவூதி ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அவர்கள் வேலை வாய்ப்பு அற்று இருப்பதாலும், எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாத ஜனத் தொகை 'டைம் பொம்'மின் மீது உட்கார்ந்து இருக்கிறார்கள். இது வரைக்கும், எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கும் நாட்டின் பொதுநிதிக் கொடுப்பனவுகளைக் கொண்டு அதனை ஈடு கட்டி வருகின்றார்கள். அதுவும் சொற்ப காலத்திற்குள் முற்றுப் பெற்று விடும். சவூதியின் எண்ணெய்ப் பொருளாதாரம் முற்றுப் பெற்று, ஈரான் ஒரு முன்னணி நாடாகத் திகழும் வகையில் இயற்கை வாயுக்களின் புதிய உலகளாவிய ஆற்றல் பொருளாதாரம் காரணமாக அது பின் தள்ளப்பட்டால், என்ன நடக்கும்;? பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்ளூ இறுகிய நிலையடைந்த சவூதி எதேச்சதிகாரிகளின் அதிகாரத்தின் மீதான பிடி தளர்வடைந்து விடும். அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார தலைவிதி, சவூதியினதும் ஏனைய பாரசீக வளைகுடா அரசாட்சிகளினதும் பெட்ரோ டொலர் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. வங்குரோத்து (திவால்) ஆகி;ப் போன அமெரிக்க டொலர், ஏற்கனவே பெரும்பாலும் சவூதிகளும் அவர்களுடன் தொடர்புடைய ஷெய்க்களும் தங்கள் சரக்குகளை அமெரிக்க நாணயத்தில் விற்று, இலாபத்தை அமெரிக்க நிதிக் கருவூதிலத்திற்கு சேர்ப்பித்து டொலருக்கு முட்டுக் கொடுப்பதால், இதுவரை உயிராதரவு பெற்றிருக்கிறது.
ஈரான் அதன் முழுமையான வாய்ப்பு நிலைக்கு முன்னேறி, எண்ணெய்யிலும் மிக முக்கியமாக இயற்கை வாயுவிலும் வர்த்தகம் மேற் கொண்டால், அது பெரும்பாலும் ஐரோப்பிய யூரோ, ரஷ்ய ரூபிள், ஜப்பானிய யென் அல்லது சீன யுஆன் நாணயங்களிற்றான் இருக்கும். அப்படியானால், அது அமெரிக்க டொலருக்கு பேரழிவு நாளாக அமையும்ளூ நீண்ட நாட்களாக அது வீழ்ந்து விடும் என எதிர்பார்த்தபடி நிச்சயமாக வீழ்ந்தே போகும். முடிவில், ஈரானின் தளைகள் அகற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான சவூத் குடும்பத்தின் ஆழமான கடும் எதிர்ப்பில் வொஷிங்டனும் பங்கு கொள்கிறது. அது மறைபொருளான வஹ்ஹாபி காரணங்களுக்கல்லாமல், அதிமுக்கிய பொருளாதார சுய பாதுகாப்பிற்காகத் தான். எனவேதான், இந்த வாரம் ஃபிரெஞ்ச் வியாபார தூதுகுழு வொன்று கூட்டு வாணிபத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஈரானுக்கு விஜயம் செய்த போது, வொஷிங்டனிடமிருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கலவரப்பட்டு போன அமெரி;க்காவின் உள்துறை செயலாளர் ஜோன் கெர்ரி, ஃபிரான்ஸின் உள்நாட்டமைச்சர் லோரன்ட் ஃபெபியஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தூதுகுழுவிற்கான தனது எதிர்ப்பைத் தெரிவித்ததாக அறிவிக்கப்படுகிறது. டொலரை வீசியெறிந்து விட்டு, ஈரான் ஐரோப்பியாவுடன் சுயாதீனமான வர்த்தகம் மேற் கொள்வதைக் காண அமெரிக்கா கண்டிப்பாக விரும்பவில்லை. சவூதிச் சர்வாதிகாரிகளுக்கும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களுக்கும், ஈரான் ஒரு பொருளாதாரச் சக்தியாகப் பரிணமிப்பதை அனுமதிக்க இயலாது. அது நேரடியாக சவூத் குடும்பத்தை அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அச்சுறுத்துவதாக அமைந்துவிடும்ளூ அது மறுபுறத்தில் வொஷிங்டனை அதன் அடித்தளத்திலேயே ஆட்டங் காண வைத்து விடும். மேற் சொன்ன எல்லா காரணங்களுக்காகவும், சவூதி ஆட்சியாளர்கள் அனைத்திற்கும் மேலாக ஈரானை அஞ்சுகிறார்கள். ஸியனிஸ இஸ்ரவேல் அரசையும், கிழக்கு அல் குத்ஸில் (ஜெருசலத்தில்) அது இஸ்லாமிய புனித ஸ்தலங்களைப் பாழ்படுத்தி நாசம் விளைவிப்பதையும் எதிர்த்து, தங்களை இஸ்லாத்தின் பாதுகாவலர்களென சுயமே பிரகடனப்படுத்திக் கொள்ளும் அல் சவூத் குடும்பத்தினர் ஒரு வார்த்தைதானும் பேசியது கிடையாது. அவர்களுக்கிருக்கும் பயமும் விரோதமும், ஈரானுக்கும், அதன் நேச நாடுகளான சிரியா, பஹ்ரைன் மக்கள், ஈராக், எமன், வேறு பலவற்றுக்கும் எதிராக மறைமுகமான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குத் தான் முனைப்பு கொள்ள வைத்திருக்கிறது. ஈரானை எந்த விதத்திலாவது அடக்கி வைக்க வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும், தடைகளை ஏற்படுத்தி முன்னேறாமற் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்ளூ வொஷிங்டனும் புவியியல் அரசியல் தேவைகளுக்காக சவூதியின் பக்கம் சாய்ந்துள்ளது.
ஆயினும், எதிர்வரும் தசாப்தங்களில், உலகளாவிய ஆற்றல் பொருட்களின் தேவைக்கான கட்டமைப்புத் தகடுகள் கடுமையாக நகர்கின்ற போது, சவூதி ஆட்சியாளர்களும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களும், தோல்வியை அரவணைக்கும் பக்கத்திற்றான் தாங்கள் இருப்பதைக் காண்பார்கள். சொல்லப் போனால், மிகச் சரியான வழியில் இது அல் சவூதினதும் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் இறுதி முடிவுக்கு வழி கோலும். அதன் காரணமாக, விரோதமும் தீர்ந்து போகும். பி;ன்குறிப்பு: திரு.கே எனது கட்டுரை பற்;றி ஒரு விமர்சனம் தந்துள்ளார். அதில் அவர், நான் உருவரை செய்துள்ள மூன்று காரணங்களுக்கு மேலதிகமாக நான்காவது அம்சமொன்றை (அதாவது, சட்டப்படியான நிலை குறித்து) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகிறார்: 'ஈரானிய அரசு சட்டப்படியானதாகும்ளூ அதேநேரம், அல் சவூத் சட்டப்படியானதல்ல. இஸலாமியக் குடியரசு ஒரு மக்கள் புரட்சியின் மூலம் அமைந்ததுளூ அங்கு உண்மையான தேர்தல்;கள் நடத்தப்படுகின்றனளூ அது மனிதாபிமான நிலைப்பாடொன்றைக் கொண்டிருக்கிறதுளூ அங்கு உண்மைபூர்வமான இஸ்லாமிய அறிவுப் புலமை காண்ப்படுகிறது. மறுபக்கத்தில், அல் சவூத், பிரிட்டிஷாரின் துணையுடன் பலாத்காரமாக தாம் ஆளும் பகுதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுளூ அது முற்றிலும் எதேச்சதிகாரமானதுளூ மனித சமுதாயத்தின் தீது வெறுப்பை உமிழ்கிறதுளூ மனிதர்களுக்கு தீங்கு இழைக்கின்றதுளூ அது போலி வஹ்ஹாபி 'அறிஞர்களை' தன் வசம் வைத்திருக்கிறது - இவர்கள் ஒரு விஷக் கிருமியை விட முஸ்லி;ம் உம்மத்திற்கு ஆபத்தானவர்கள். ஈரானின் வெற்றியை காண்பதற்கும், எல்லா விதத்திலுமான ஸியனனிஸப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் ஈரான் பெற்று வரும் மதிப்பு மரியாதையை உணர்ந்து கொள்வதற்கும், சட்ட விரோத அல் சவூத் அரசு தயாராயில்லை.' மேலதிகக் கருத்திற்காக நான் அவருக்கு நன்றி மொழிகிறேன். அல் சவூத் ஏன் ஈரானை இத்துணை ஆழமாக மறுதலிக்கிறது, சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது என்பதற்கு தகுந்த வாதங்களை முன் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார். அவர் கூறிய மாதிரி, சவூதி ஆட்சியின் குறைகளையும், தலை கீழான தனமையையும், அசிங்கத்தையும் காட்டும் கண்ணாடியாக ஈரான் அதன் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. கட்டுரையாளர் ஃபினியன் குன்னிங்காம் (1963ல் பிறந்தவர்) சர்வதேச விவகாரங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவர் விவசாய ரசாயனத் துறையில் முதுமானி பட்டதாரி. இவர் பத்திரிகைத் துறையில் பிரவேசிக்கும் முன்னர், இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் ரசாயனத்திற்கான அரச சங்கத்தின் விஞ்ஞான இதழ் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மேலும், சுமார் 20 ஆண்டுகள் பெரும் செய்தி ஊடக நிறுவனங்களில் ஓர் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கடமை யாற்றியுள்ளார். அயர்லாந்து பெல்ஃபாஸ்டைச் சேர்ந்த இவர், தற்போது கிழக்கு ஆஃபிரிக்காவில் ஸ்தாபனம் சாராத ஒரு பத்திரிகை யளராக நிலைபெற்றுள்ளார். அங்கிருந்து கொண்டு, இவர் பஹ்ரைனையும் அரபு வசந்தத்தையும் பற்றி, தான் பாரசீக வளைகுடாவில் ஒரு செய்தி நிருபராக இருக்கும் போது கண்ணால் கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலை எழுதி வருகிறார். பஹ்ரைன் முடியாட்சியின் ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை விமர்சித்து எழுதியதால், இவர் 2011 ஜுpனில் பஹ்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பிரஸ் டீவீயில் சர்வதேச அரசியல் பற்றி இப்போது பத்தி எழுதுகிறார். (தமிழில்: இப்னு புகாரி)

Friday, August 2, 2013

சர்வதேச 'குத்ஸ்' தினம்

புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.




ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.




குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர். 
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர். 
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன.  ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.  கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின்  நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.    


வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.

 


சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.



ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில்,  அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
 
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.













Thursday, July 11, 2013

உண்மையான எகிப்திய வசந்தம்.



-கலாநிதி எலியஸ் அக்லே

ஜூன் 28 வெள்ளிக் கிழமை ஆரம்பமான, மில்லியன் கணக்கான எகிப்திய பிரஜைகளை (37 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது) உள்ளடக்கிய அதிபர் முஹம்மத் முர்ஸிக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரும் பிரவாகமெடுத்து பிரதான வீதிகளையும் எகிப்திய மாகாணங்களின் முக்கிய நகர சதுக்கங்களையும் நிறைத்து நாட்டையே ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் முர்ஸி பதவி விலக வேண்டும் எனவும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்து ஆவண செய்ய முர்ஸிக்கு 48 மணி நேரக் காலக்கெடுவை இராணுவத்தினர் விதித்தனர். முர்ஸி அதனை உதாசீனம் செய்ததால் அவர் உடனடியாக இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதோடு புதிய அரசியல் யாப்பும் ரத்து செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் நிறுவியுள்ளது.


இந்தப் புரட்சி 2011ல் முன்னைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்க்க வைத்த புரட்சியைவிட வித்தியாசமானது. சீ.ஐ.ஏ. அணுசரனையுடனான 'சுதந்திர இல்ல நிறுவனம்'(Freedom House Organization) எனப்படும் நிறுவனத்தினூடாகவே 2011 புரட்சி திட்டமிடப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதன் 43 உறுப்பினர் அன்று எகிப்திய பொலீஸாரினால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 17 மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக அவர்கள் சாதுர்யமாக இஸ்ரவேலுக்கு நாடுகடத்தப்பட்டு பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்தனர். என்றாலும் 2013 ஜனவரி 4ம் திகதி எகிப்திய நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. கடந்த காலங்களில் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பல லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை இவ்வாறு பதவி கவிழ்த்துள்ளமை கவனிக்கத்தக்கது. எகிப்தில் ஜனாதிபதி முபாரக் முதுமையடைந்து நோயாளியாக இருந்ததோடு அவரது அராஜகக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியும் ஆரம்பமானது. அதேநேரம் அவரது மகன் கமலை அவ்விடத்துக்கு பதிலீடு செய்வதும் கடினமானதொன்றாக இருந்தது.
தற்போதைய புரட்சி பல கோணங்களில் மிக வித்தியாசமானது. இது விரக்தியடைந்த இளம் எகிப்தியர்களினால் திட்டமிடப்பட்டு, ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டது. முதலாவது புரட்சியில் தடைகள் உடைத்தெரியப்பட்டபோது மக்கள் அஞ்சினர். முதலாவது புரட்சியில் பங்கெடுக்க அஞ்சிய இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட மில்லியன் கணக்கான எகிப்தியர் போராளிகளுடன் கைகோர்த்தனர். முதலாவது புரட்சியிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பாடம் கற்ற முன்னணி இளைஞர்கள் தற்போது போராளிகளுக்கான முறையான திட்டங்களுடனும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றைக் கவனத்திலெடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கான தூரநோக்குடனும் களமிறங்கினர். இதுவே அவர்களின் உண்மையான எகிப்திய வசந்தமாகும்.


இந்தப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கியது இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட தமர்ரத் (கிளர்ச்சி) இயக்கமாகும். அவர்கள் முர்ஸியின் வெளியேற்றத்தை நாடி 25 மில்லியன் கையெழுத்தை சேகரித்தனர். முர்ஸி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடத்தின்பின் அதாவது, ஜூன் 3ம் திகதி தேசிய மீட்பு முன்னணி என்ற கட்சியோடு இணைந்து வீதியிலிறங்கி உடனடியான ஜனாதிபதி தேர்தலை முன்வைத்துப் போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு எகிப்திய சமூக அமைப்புகள் வீதிகளிலிறங்கினர். இதில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகரவாசிகள், அலுவலகப் பணியாளர், தொழிற்சங்கங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில்சார் ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள், இல்லத்தரசிகள், சிவில் நிறுவனங்களின் உறுப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பொலிஸ் படை,இராணுவத்தினர் மற்றும் பல்வேறு கூட்டத்தினர் இதில் பங்கேற்றனர். முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் தோளோடு தோள் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல் யாப்பு சபை உறுப்பினர் மற்றும் அமைச்சர்களும் தமது ரஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். மொத்தம் 13,000 நீதிபதிகள் அரசியல் யாப்பை மீறியமைக்காக முர்ஸிமீது வழக்குத் தொடர்ந்தனர். 'நாம் பொது மக்களின் பாதுகாவலரேயன்றி அரசாங்கத்தின் பாதுகாவலரல்ல' எனக் கூறி பொலிஸ் படை அவருக்கெதிராகக் கிளம்பியது. இராணுவமும் தனது முதற்பணி பொது மக்களைப் பாதுகாப்பதே எனக் கூறி மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கும்படி முர்ஸிக்கு 48 மணிநேரக் காலக்கெடு விதித்தனர். முர்ஸி தமது மக்களின் குரலுக்கு மதிப்பளிக்வில்லை.முஹம்மது முர்ஸி 1948, 1954, 1965 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர். எகிப்தில் மிக மோசமாகப் பெருகிவரும் மேற்கத்திய செல்வாக்கையும் ஆக்கிரமிப்பையும் நிராகரித்து அடிப்படை இஸ்லாமிய போதனைகளை எழுச்சியடையச் செய்யும் நோக்கில் 1928ல் ஹஸன் அல் பன்னா அவர்களால் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.

 இவ்வமைப்பு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதப் போராட்டங்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் அன்று எகிப்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 1952ல் கமால் அப்துல் நஸார் தலைமையிலான முடியாட்சிக்கு எதிரான புரட்சியையும் ஆதரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி தமது பாணியிலான ஒரு போலி ஷரீஆ சட்டத்தினடிப்படையிலான ஆட்சியொன்றை அமைக்கத்துடித்த தீவிரவாதிகள் சிலரால் இந்த இயக்கம், கைப்பற்றப்பட்டது. எனவே, சமயப்பற்றற்ற சோவியத் யூனியனுடன் நஸாரின் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதை சாக்காகக் காட்டி நஸாரைஎதிர்க்கத் தலைப்பட்டனர்.


 அவர்கள் நஸாரைக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே 1954ல் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டு பலர் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனாலும் 1981ல் இஸ்ரவேல் சென்று இஸ்ரவேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எகிப்திய அதிபர்அன்வர் சதாத்தைப் படுகொலை செய்வதில் வெற்றி கண்டது. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹொஸ்னி முபாரக் மிகக் கொடூரமான முறையில் சகோதரத்துவ அமைப்பை அடக்கி ஒடுக்கி அனேகரைச் சிறையில் தள்ளியதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார். 2011 ஜனவரி 30ல் கிளர்ச்சிக் கும்பல் ஒன்று வாடி அல் நெட்ரோன் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுவிக்கும்வரை முஹம்மது முர்ஸியும் அவரது சகாக்கள் பலரும் சிறையிலேயே இருந்தனர். 2011 புரட்சிக்குப் பின் சகோதரத்துவ அமைப்புக்கு முர்ஸியைத் தலைவராகக்கொண்ட 'விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி'(Freedom and Justice Party)என்ற அரசியல் கட்சியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.


2011 புரட்சியின் பின் ஏற்பட்ட ஒரு கலவரமான நிலையில், அரசியல் யாப்பு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக முறைமையற்ற ஒரு சூழலில் 2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முஹம்மது முர்ஸியுடன் முபாரக்குடைய ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்தவரும் முன்னைநாள் விமானப் படைத் தளபதியுமான அஹமத் ஷபீக் போட்டியிட்டார். திருப்தியற்ற இரண்டு சுற்று வாக்கெடுப்பின் பின் மிகவும் குறைந்த 2மூ பெரும்பான்மையுடனும் இராணுவ அதிகார சபையின் உதவியுடனும் முர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரவேலுடனான உடன்படிக்கைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்ற நிபந்தனையின்பேரில் சீ.ஐ.ஏ நிதியுதவியுடன் விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி (FJP)வாக்குகளை வாங்கியதாக வாந்திகள் உலாவிய நிலையில் முர்ஸி தனது வெற்றிப் பேருரையின்போது எகிப்து தனது எல்லா சர்வதேச உடன்படிக்கைகளையும் மதித்து நடக்கும் என உறுதி கூறினார். இதில் இஸ்ரவேலுடனான உடனபடிக்கைகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே, சிவில் அரசியல் முறைமையை மீள் அறிமுகம் செய்து தமது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வன்முறை வடிவத்தை சீரமைத்துக்கொள்வதற்கு முர்ஸிக்கு அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் அவராலேயே மண்ணாக்கப்பட்டது. ஐந்து வருடங்களாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு பொறியியலாளரான முர்ஸி ஒரு ஜனாதிபதிக்கு அவசியமான அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் புதிய அரசியல் அரங்கத்தை அவர் தவறாகவே விளங்கியிருந்தார்;. சகோதரத்துவ அமைப்பு மீதான அவரது குருட்டுத்தனமான அபிமானம் அவரது அரசியல் நோக்கை வரையரைக்குட்படுத்தியது. அதாவது, நாட்டு நலனைவிட அவரது இயக்கத்தின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார்.

முர்ஸி 2012 நவம்பரில் எவ்வித சட்ட ஞானமுமின்றி,  வரையரையற்ற சட்டவாக்க அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து, டிஸம்பரில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அதனை மக்கள்மீது திணிக்க முற்பட்டார். முக்கிய அரசாங்கப் பதவிகளுக்காகத் தமது சகோதரத்துவ சகாக்களை நியமிக்கும் வரை அவர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தட்டிக்கழித்ததோடு பாராளுமன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையும் அரசாங்கத்தையும் மதப்பிரிவினைவாதப் போக்கில் மீளக்கட்டமைக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டார்.


முர்ஸி தனது சகோதரத்துவ அமைப்பின் மீது அதிகாரத்தைக் குவித்ததன் காரணமாக எகிப்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பிரஜைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலிருந்து அவர் தூரமாக்கப்பட்டிருந்தார்.இது பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது. லிபியாவின் 2 பில்லியன் அமெரிக்க டாலர், சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் ஒவ்வொரு பில்லியன் அமெரிக்க டாலர், 3.5மூ வட்டியுடனான எகிப்திய திரைசேரி உண்டியல் மீதான 3 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உட்பட கட்டாரின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எதனாலும் எகிப்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. முர்ஸி நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நிலவிய தொடர்ச்சியான பவுனின் மதிப்பிறக்கம், வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு குறைவடைந்தமை,உல்லாசப் பயணத்துறை வருமானம் சுருங்கியமை என்பன எகிப்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வரிச் சலுகைகள், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குப் பதிலாக எகிப்தில் தேசியக் கடன் சுமையையே அதிகரிக்கச் செய்தது. இறுதியில் முர்ஸியின் சகோதரத்துவ அமைப்பால் 'தெய்வ குற்றம்' என வர்ணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்(IMF) கடனுக்குக் கையேந்தும் நிலையே அவருக்கு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் பொருளாதாரப் பிரச்சினை மக்களை வெகுவாக வாட்டி வதைத்தது. அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்தால் மக்கள் நீண்ட கியூ வரிசைகளில்நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதையுமே பெறாது வெறுங்கையோடு வீடு திரும்பினர். எகிப்து கோதுமையை இறக்குமதி செய்யும் பிரதான நாடாக மாறியுள்ளது. எகிப்து தொடர்ந்தும் உலக சந்தையைவிட மிகக் குறைந்த விலையில் இஸ்ரவேலுக்கான வாயு விற்பனையை மேற்கொள்வதால் உள்ளுரில் சமையல் வாயுவுக்கான தட்டுப்பாடு பெருகி வருகின்றது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எவ்வித கல்வித்தகைமையும் பாராது உத்தியோகங்கள் வழங்கப்படுவதால் ஆயிரக் கணக்கான உயர்கல்வித் தகைமை பெற்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உத்தியோகமின்றி அலைந்து திரிகின்றனர். தனது தேர்தல் பரப்புரையின்போது முர்ஸி வாக்களித்த எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதோடு எவ்வித பொருளாதார அல்லது சீர்திருத்த திட்டங்களோ முன்னெடுக்கப்படவுமில்லை.
முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் மதப்பிரிவினைவாதமே மேலோங்கிக் காணப்பட்டது. தேவாலயங்களையும் வீடுகளையும் கொளுத்துவது உட்பட கொப்டிக் கிருஸ்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதோடு மெஸ்பெரோ படுகொலை பேன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவர்களது சட்டரீதியான போராட்டங்களும் தாக்குதல்களுக்குள்ளானது. மேலும் திரையிடாத முஸ்லிம் பெண்களும் அடிக்கடி முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

முர்ஸி தனது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியையே தழுவியுள்ளார். எகிப்திய மக்கள் பலஸ்தீனப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி, இஸ்ரவேலர்களைத் தமது பிராந்திய எதிரிகளாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் இஸ்ரவேலுடனான அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் இஸ்ரவேல் தூதரகத்தை மூடிவிடுமாறும் இஸ்ரவேலுக்கான வாயு ஏற்றுமதியை நிறுத்துமாறும் எல்லாவற்றுக்கும் மேலாக காஸாவுடனான ரபா எல்லையைத் திறந்து தமது ரத்த உறவுகளுக்கு எதிரான இஸ்ரவேலிய இராணுவ, பொருளாதார முற்றுகையைத் தளர்த்த உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் முர்ஸி இதற்கு செவிசாய்க்காது அதற்கு முற்றிலும் மாறான கொள்கைகளையே கடைபிடித்து வந்தார். சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா பலஸ்தீனப் பிரச்சினையை ஒரு பிரதான விவகாரமாக முன்னெடுத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தோர், அதனை ஓரம்கட்டி வெறும் கோஷமாக மட்டும் அதனை மாற்றிவிட்டனர். இஸ்ரவேலிய முற்றுகையை பராமரிப்பதன் மூலம் காஸா மீதான அழுத்தத்தை முர்ஸி அதிகரித்தார். எல்லாவற்றையும்விட அவரது மோசமான செயல் என்னவென்றால் 1.5 மில்லியன் பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான காஸா சுரங்க வழிப்பாதைகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்கியமையாகும்.




 அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலிருந்து கசிந்துள்ள கடிதங்களின்படி முர்ஸி முபாரக்கைவிட மோசமானவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எகிப்திய எல்லையூடாக காஸாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் போன்றவற்றைத் தடைசெய்தல், சினாயில் இஸ்ரவேலிய பாதுகாப்பை அதிகரித்தல், காஸாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இஸ்ரவேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவி செய்தல், சுயஸ் கால்வாய் மூலமாக அமெரிக்க ஊடுகடத்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்காக எகிப்திய வான்வெளியைத் திறந்துவிடல் போன்றவை அமெரிக்க இராணுவ நிதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக முர்ஸி செய்து வரும் துரோகங்களாகும்.
2010 செப்டமபரில் இஸ்ரவேலர்களை இரத்தக் காட்டேரிகள், போர் வெறியர்கள் என்றும் மனிதக் குரங்குகளினதும் பன்றிகளினம் சந்தியினர் என்றும் சாடிய முர்ஸி, 2012 அக்டோபரில் இஸ்ரவேல் ஜனாதிபதி சீமன் பெரஸுக்கு எமுதிய கடிதத்தில்,'எனது அன்புக்குரிய மாபெரும் நண்பா,' என விளித்து 'எமது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் மகிழ்ச்சிகரமான நட்புறவைப் பலப்படுத்திப் பராமரிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடு எகிப்திய மக்களின் கவனத்திலிருந்து ஒருபோதும் தப்பிவிடாது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸாவையும் ஜெரூஸலமையும் விடுவிப்பதற்காக ஜிஹாத் செய்யவேண்டும் எனக் கூறிவரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, கடந்த மாதம் முர்ஸியும் சில தீவிரவாத சலபி அரசியல் மதவாதிகளும் இணைந்து தமது ஜிஹாதை இன்னொரு முஸ்லிம் அரபு நாடான சிரியா மீது திருப்பிவிட்டுள்ளனர். இஸ்ரவேலிய எதிரிகளுடனான நட்புறவைத் துண்டித்து கெய்ரோவில் அவர்களது தூதரகத்தை மூடி பலஸ்தீன விடுதலைக்கு அரைகூவல் விடுவதை விட்டு முர்ஸி தற்போது சிரியாவுடனான நட்புறவைத் துண்டித்து அவர்களது தூதரகத்தை மூடி அவர்களுடன் ஜிஹாத் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். பலஸ்தீனுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிரான எண்ணற்ற குற்றச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதை விடுத்து சிரியாவுக்கு மேலாக விமானத் தடை வலையமொன்றை ஏற்படுத்த வேண்டுமென முர்ஸி ஐ.நா.வைக் கேட்டுள்ளார்.

முர்ஸியின் சாயம்வெளுத்துவிட்டதுளூ முபாரக்கைப் போன்று இவரும் ஒரு அமெரிக்க-ஸியோனிஸ அடிவருடியே! இவரது ஒரு வருட ஆட்சி காலத்தில் எகிப்திய மக்கள், பலமுறை வீதிகளில் இறங்கி சீர்திருத்தங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் எச்சரிக்கையினையும் முர்ஸிக்கு வழங்கினர். அவற்றையெல்லாம் முர்ஸி உதாசீனம் செய்தமையால் இளம் எகிப்தியர் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவையும் புதிய தேர்தலையும் வேண்டி மீண்டும் விதிகளில் இறங்கினர். இதன் மூலம் முர்ஸிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தோல்வியும் மக்களுக்கு வெற்றியும் கிடைத்தது.
மக்கள் முர்ஸிக்கு நாட்டை வழிநடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரத்தைக் கையளித்தனர். ஆனால் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்தமையால் மக்கள் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றனர். இதுவே மக்கள் விருப்புக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத்தின் உயர் நிலையாகும்.
தமிழில்: றஹ்மத் அலி